Total Pageviews

Thursday 31 December 2009

எங்கே லெமூரியா/ குமரிக்கண்டம் ? (லெமூரியா 02)

லெமூரியா 02
---------------------------------------------------------------------------------------
"லெமூரியா" தொடரின் முத‌லாவது பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் ந‌ல்ல வரவேற்பு கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு நாளில் 250 ஹிட்ஸ் கிடைத்தது என்னை பொறுத்தவரையில் என்க்கு கிடைத்த ஹிட்ஸ்களில் இது தான் அதிகூடியது. ( சில வலைப்பதிவர்களுக்கு நான் சொல்வது சிரிப்பா இருக்கும். அவர்களுக்கு குறைந்ததே இதுவாக இருக்கலாம்.) நான் வலைப்பதிவு ஆரம்பித்து 43 நாட்கள்தானே ஆகின்றன! ஆகவே எனக்கிது பெருசு!
---------------------------------------------------------------------------------------


போனபதிவில் லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.
ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம்.

ஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது. (மாற்றுக்கருத்துக்கள் அல்லது இந்து சமுத்திரத்தில் இருந்தமைக்கான வெறு சான்றுகள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.)



இனி "லெமூரியா" எப்படி அழிந்திருக்கும் என பார்க்கப்போனால் எனக்கு பல காரண்ங்கள் தோன்றுகின்றன...
அவ‌ற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். (இத்தொடரை நான் உடனுக்குடன் ரைப் பண்ணுவதால் சில சமையங்களில் ஒரு ஒழுங்குமுறை காணப்படாது. அதையெல்லாம் பெரிய விடையமாக எடுக்காதீர்கள்!(???))

கண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்...

அதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன (அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன.) அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விடையம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷையம் என்னவென்றால்... அத்தட்டுக்கள் சாதாரண‌மாக நகராமல் ஒரு சிறிய(!!!???) மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. ( நாங்கள் விளையாடிய "ஸீஸோ" விளையாட்டுமாதிரி) அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது.

(மேற் கூறியதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்)



இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது... ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்) இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

இந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்!
(இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக)

சுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின் முறுகல் தான்!

இன்றைய பதிவு சொல்ல வந்த விடையத்தை(எவ்வாறு அழிந்தது) சொல்லமுதலே நீள்மாகிவிட்டது.
ஒன்றை விளக்க வெளிக்கிடும் போது பல பாதைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்போது தான் நாம் சொல்லவருவது ஒரு நம்பகத்தன்மையானதாக இருக்கும். நாம் அடுத்த பதிவில் ஒரு அனிமேஷன் விளக்கத்தோடு எவ்வாறு அழிந்திருக்கும் என்பதை பார்க்கலாம். (ஒரு விஷையத்தை எழுதுவதை விட படத்தால் விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கும். என்று நம்புகிறேன்.)

இது ஒரு கலந்துரையாடல்.... உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன! ( ஏன் என்றால் நான் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை! வாசிச்சது, கேட்டது , ஜோசித்தது எல்லாம் சேர்ந்து தான் இந்த ஆக்கம். அதனால், இத்தொடரை பிரயோசனமாக்குவதற்கு உங்களது பங்களிப்பு நிச்சயம் தேவை!)
---------------------------------------------------------------------------------------

Tuesday 29 December 2009

சுட்ட எண்ஜோதிடம் - 9 (பகுதி 01)

**--9--**
-----------------------------------------------------------------------------------------------------

நாங்களும் எண்ஜோதிடத்துக்குள்ள குதிச்சிட்டமாக்கும்... நீந்துறதுக்கு முதல் ஒரு விஷயம்... வழமையா எண்ஜோதிடத்தை பிரசுரிக்கையில் முதலாம் நம்பர்ல இருந்து தான் ஆரம்பிப்பாங்க. 9 ம் நம்பர் ஈ என பார்த்துக்கொண்டு இருக்கணுமாம்! ஒரு மாறுதலுக்காக 9 ல இருந்து ஆரம்பிக்கிறேன்! (இது ஒரு நண்பரிடமிருந்து சுட்ட புத்தகம், எனக்கு உள்ள இருக்கிற விஷயம் பிடிச்சிருக்கு! உங்களுக்கு பிடிக்கும் என்டு நம்புறன்.) சரி நீந்துவோமா...?  


9ம் திகதி...
பிறந்தவர்கள் செயற்கரிய செயல்களை செய்ய வல்லவர்கள். நுட்பமான மூலையறிவு உடையவர்கள்.(!!!???) மேன்மையான இலட்சியங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்புறும். எல்லா எதிர்ப்புக்களையும் சாமர்த்தியத்துடன் வெற்றிகொள்வார்கள்.  


18ம் திகதி.. சுயனலத்தை விட்டால்தான் இவர்களுக்கு நன்மையுண்டாகும். அவசரப்பட்டு ஒரு விவகாரத்திலும் சிக்கி கொள்ளக்கூடாது. எல்லோரிடமும் மனக்கசப்பை உண்டாக்க கூடிய தினமாகையால், இவர்கள் கோபத்தையும் பிடிவாதத்தையும் குறைக்க வேண்டியது அவசியம். காதலில் அவசரப்படும் போக்கு தோல்வியைத்தரும். உணர்ச்சிகள் மனதை தூண்டிக்கொண்டே இருகும்.  


27ம் திகதி... 
நற்காரியங்களில் ஈடு பட்டு நற்பலன்களையே அடைவர். ஜோசனைகள் எல்லாம் வெற்றி பெறும். சாந்தமானவர்கள். ஆழ்ந்த ஜோசனையும் தளராத மனமுமுடைய இவர்கள் தீவிரமாக சிந்திப்பார்கள்.  


9,18,27 இக்கு அதிஷ்ட தினங்கள்... 
5,14,23,9,18,6,15,21,24,30 திகதிகள் அதிஸ்டமானவை... 1,10 ம் சாதகமானவை. 27ல் நல்ல பலன்கள் நடைபெறும்.  


துரதிஸ்ட தினங்கள்... 
2,11,19,29 நற்காரியங்கள் செய்வது நன்மையல்ல.  


நன்மை தரும் நிறம்... 
கரும் சிவப்பு, நீலம்  


தீமை தரும் நிறம்...
வெளிர் பச்சை, வெண்மை  


இரத்தினம் : பவளம் 


-----------------------------------------------------------------------------------------------------
சொன்னது - வி.எ.சிவராசா BA (நன்றி)





Sunday 27 December 2009

வொன்கா‍ - மன நோய் ஓவியர் ( ஒரு பக்க வரலாறு)

 வொன்கா
------------------------------------------------------------------------------------------------


சவரக் கத்தியையும் கண்ணாடியையும் எடுத்து வைத்துக்
கொண்டு தயாரானான். கண்ணாடியில் தன்னை இப்படியும்
அப்படியும் பார்த்துக்கொண்டவன், அடுத்த விநாடி
கொஞ்சம்கூட யோசிக்காமல், சரக்கெகன தன் காதை
முழுமையாக அறுத்து எடுத்தான். ரத்தம் பீய்ச்சியடிக்க, ஒரு
துண்டு எடுத்து, காதைச் சுற்றித் தைலயில் அழுத்தமாகக்
கட்டிக்கொண்டான். அறுந்து கிடந்த காதை எடுத்து, நீரில்
கழுவினான். பின்பு, அைத ஒரு தாளில் அழகாக மடித்து
எடுத்துக்கொண்டான். அவசர அவசரமாக, ரக்கேல் என்னும்
அழகான இளம்பெண் வீட்டுக்குச் சென்று கதைவத்
தட்டினான். வெளியே வந்தவளிடம், ‘‘இந்தா, உனக்காக என் காதல் பரிசு!’’ என நீட்டினான். வாங்கிப் பிரித்தவள், ரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்த காதைப்
பார்த்ததும் அதிர்ச்சியைடந்து மயக்கமானாள்.


‘உன் காதுகள் அழகாக இருக்கிறது’ என்று அடிக்கடி அவள் சொன்னதற்காகேவ,
தன் காதை அறுத்துக்கொண்ட அந்தக் காதலனின் பெயர் வின்சென்ட் வான்கா.
சுரங்கத் தொழிலாளிகளுக்கு மதப்பிரசாரம் செய்து நம்பிக்கை ஊட்டுவது
பெரும்தொண்டு என்று வந்தான் வான்கா. விஷப்புகையில், வெளிச்சேம இல்லாத
சுரங்கத்துள் நிமிரக்கூட முடியாமல் வேலை செய்யும் தொழிலாளர்கள்
ரொட்டியும், புளித்துப் போன வெண்ணெயும் உண்டு நோயாளிகளாகத் திரியும்
கொடுமையக் கண்டு கொதித்தான். தன்னுடைய பிரசங்கத்தால் அவர்களுக்கு
எவ்வித விடிவும் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்ததும், மதப்பணியைத்
தூக்கி எறிந்தான்.



வேலையும் இல்லாமல், கையில் காசும் இல்லாமல் அங்கிருந்த கரிக்கட்டைகளால் கண்டைதயும் கிறுக்கத் தொடங்கியேபாதுதான், தனக்குள் ஓர் ஓவியன் இருப்பைத
உணர்ந்தான் வான்கா. தன் சந்தோஷம், எதிர்காலம் எல்லாம் இனி
ஓவியத்தில்தான் இருக்கிறது என்று இரவும் பகலும் வைரயத் தொடங்கினான். ஆனால் பணம்? வழக்கம்போல் தம்பிக்கு கடிதம் எழுதினான்... ‘‘எனக்கு ஓவியங்கள் வைரயப் பிடித்திருக்கிறது, திடயோ! முடிந்தால், பாரீஸில் இருக்கும் நல்ல ஓவியர்களின் படங்களுடன் பணமும் அனுப்பு. சிரமமாக இருந்தால் சொல்... நான் மீண்டும் மதப்பிரசாரம் செய்யேவா, ஓவியக் கைடவிற்பைனயாளராகேவா மாறிவிடுகிறேன்!’’ உடேன பணத்துடன், சில ஓவியங்கைளயும் வைரெபாருட்கைளயும் வாங்கி அனுப்பினான் தம்பி தியோ. கூடேவ, ‘‘வான்கா, நான் நிறையச் சம்பாதிக்கிறேன். ஆனால், உன்னைப் போல் என்னால் எதிலும் தீவிரமாக இருக்க முடிந்ததில்லை. இந்தச் சமூகமும் குடும்பமும் என்னை அப்படி இருக்கவும் விடாது. ஆனால், உனக்குப் பிடித்தைத செய். எதிலும் தீவிரமாக இரு!’’ என்று ஒரு கடிதமும்
எழுதியிருந்தான்.


அந்தக் கடிதம்தான் வான்காவை ஒரு முழுனேர ஓவியனாக மாற்றியது. நரம்புகள் பலவனீ மாகும்வைர வெறியுடன் வைரயைவத்தது. ஆனால், அவனது ஓவியங்கள் யாராலும் கொஞ்சம்கூட மதிக்கப்படவில்லை. என்றாலும், வான்கா சற்றும்
சைளக்காமல் மேலும் மேலும் தீவிரமாக வைரந்ததற்குக் காரணம், தம்பி தியோவின் கடிதத்தில் இருந்த வைர வரிகள்தான்! 27 வயதில் வைரயத் தொடங்கிய வான்கா, 37-வது வயது முடியும் முன்பே, மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமைனயில் இருந்தேபாது, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து போனான். தன் வாழ்நாளில் ஒரு ஓவியம்கூட விற்க முடியாத வான்காவின் ஓவியங்கள்,
இன்று கோடிக்கணக்கில் விலை பேசப்படுகின்றன. வான்காவின் ஓவிய வெற்றிக்குப் பின்னால் மட்டுமல்ல, சாதைனயாளர் ஒவ்வொருவரது வெற்றிக்குப்
பின்னால் ஒளிந்திருப்பதும், ‘எதிலும் தீவிரமாக இரு’ எனும் மந்திரச் சொல்தான்!

------------------------------------------------------------------------------------------------
(நன்றி : எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன் ( அவர்களால் வெளியிடப்பட்ட (விகடன் பிரசுர ) புத்தகத்திலிருந்து எழுதப்படுகிறது)

  

Friday 25 December 2009

எங்கே லெமூரியா/ குமரிக்கண்டம் ? (லெமூரியா 01)

இன்று முதல் லெமூரியா தொடர்பான கலந்துரையாடலை பார்க்க ஆரம்பிப்போம்... ஆரம்பத்தில் லெமூரியா தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம். அதேவேளை இப் பதிவினை வாசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் லெமூரியா கண்டம் பற்றி தெரிந்திருக்கும். எனவே அவர்களும் தமக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டாக வழங்கும் பட்சத்தில் இத்தொடரானது பயன் மிக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை. 
--------------------------------------------------------------------------------------------


"லெமூரியா" என கூகிலில் தேட ஆரம்பித்ததுமே லெமூரியாவின் இருப்பிடம்( இருந்த இடம்) தொடர்பான முரண்பாடுமிக்க தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன. அதாவது "மூ" எனும் பெயருடன் பசுபிக் சமுத்திரத்தில் காணப்பட்ட கண்டமே லெமூரியா என பொருள்படும் வகையில் தகவல்கள் காணப்படுகின்றன. அதே வேளை சில படங்கள் இந்து சமுத்திரத்தில் இருந்த கண்டம்தான் "லெமூரியா" என கூறுகின்றன. இங்கு நானும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய கண்டம் பற்றியே எழுதவுள்ளேன். காரணம், உலக வரைபடத்தில் காணப்படும் வடஅமெரிக்க தென்னமெரிக்க கண்டங்கள் இலகுவாக அப்பிரிக்க ஐரொப்பிய கண்டங்களுடன் இனைக்க கூடிய வாறு காணப்படுகின்றன. (கற்பனை செய்து பாருங்கள், தென் அமெரிக்காவின் வலப்பக்கத்திலுள்ள கூர்ப்பகுதி ஆபிரிக்காவின் இடப்பக்கத்திலுள்ள குழிந்த பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். அதே வேளை ஆபிரிக்காவின் இடப்பக்க முனைப்பகுதி வட தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும்.) ஆகவே, என்னை பொறுத்த வரையில் இவ் இடைப்பட்ட பகுதியில் கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை. ( அவுஸ்ரேலியாக்கண்டத்தை ஆபிரிக்கா அல்லது ஆசியா கண்டத்துடன் பொருத்தி பார்ப்பது கச்சிதமானதாக இல்லை)


இன்னொரு காரணமாக, பூமியுடன் ஒரு பாரிய விண்கல் மோதிய போது பசுபிக் சமுத்திரத்தில் இருந்து பிளவுபட்டு போன ஒரு பகுதியே காலப்போக்கில் ஈர்ப்பு விசையின் காரண‌மாக சந்திரனாக உரு மாறியதாக விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவிவருகிறது. சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் சில கணிமங்கள் பசுபிக் சமுத்திரத்திலும் உள்ளனவாம். ( இது பூமியில் உயிரினம் தோன்ற முன்னர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இன்னொரு சாரார் இவ் மோதலே டைனோசரின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் மனித சமுதாயம் அப்போது தோன்றி இருக்கவில்லை என்பது தெளிவு.) பதிவு நீளமாகுகிறது மற்றைய ஆச்சரிய தகவல்களை பின்னர் பார்க்கலாம்.... இது ஒரு கலந்துரையாடல்.... உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன!
--------------------------------------------------------------------------------------------
இனி எவ்வாறு மறைந்தது லெமூரியா?

Monday 21 December 2009

எழுத்து பிரதி செய்யப்படும் விழைவு. - (ADOBE FLASH ரியூட்டோரியல் 11)


எழுத்து பிரதி செய்யப்படும் விழைவு.

---------------------------------------------------------------------------------------
இப்பகுதியில், நாம் ஒரு இடத்தில் எழுதுவதை இன்னோர் இடத்தில் எவ்வாறு தோன்ற செய்வது என்பதை கற்ப்போம்.


 செய்முறை-1 
தேவையான அளவில் Movie உருவாக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties -> Size  தேவையான அளவுகளை அமைக்கவும்












செய்முறை-2

முதலில், Text tool            தெரிவு செய்யவும். இப்போது Properties Panel  இல் கீழ் வரும் மாற்றங்கள் காணப்படுவதை அவதானிக்கலாம்.

Line type   Multiline ஆக மாற்றவும்.


செய்முறை-3

அடுத்து Stage  இல் அதே Text tool கொண்டு ஒரு box   வரையவும்.
இப்போது Properties Panel  இல் மேலும்  மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கலாம்.

var இல் name  என type பண்ண‌வும். வேறு பெயர்களையும் type பண்ண‌லாம்.
Var என்பதன் அருகே காணப்படும் Box ஐ Click பண்ணிவிடவும்.




செய்முறை-4

Stage இல் காணப்படும் Input text box ( நாம் உருவாக்கியது ) ஐ Click பண்ணி Copy செய்து Past செய்யவும். பின்னர் Stage இல் Input text box இன் கீழ் வரும்படி ஒழுங்குபடுத்தவும். அடுத்து Properties panel இல்… Text type   Dynamic Text ஆக மாற்றவும்Var என்பதன் அருகே காணப்படும் Box ஐ Click  எடுக்கவும்.






Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.
---------------------------------------------------------------------------------------
சொன்னது போல் விஷேட பதிவாக இனைக்க முடியவில்லை. ( ரைப்பண்ணியதை காணோம்!) அதனால், இப்பதிவு. நாம் இவளவு நாட்களாக பார்த்த ரியூட்டோரியல்களை கொண்டு உங்களது உறவுகளுக்கு "இகாட்" செய்து அனுப்புங்கள். (இது ப்லாஸ்ஸின் இறுதி ரியூட்டோரியல்) இனி எமது பெயர் எண்களின் அதிஸ்டத்தை பார்ப்போம்!!! (ஒரு நண்பர் தந்தது!)


Saturday 19 December 2009

புரூஸ்லீ - (ஒரு பக்க‌ வரலாறு)

(நன்றி : எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன் ( அவர்களால் வெளியிடப்பட்ட (விகடன் பிரசுர ) புத்தகத்திலிருந்து எழுதப்படுகிறது)
----------------------------------------------------------------------------------------


‘‘இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், உன் பள்ளியை இழுத்து மூடி விடேவண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பைத நிறுத்திக் கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ் பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கைலகைளக் கற்றுத் தரும் பள்ளியைத் திறந்திருந்த புரூஸ்ல, எவ்விதத் தயக்கமும் இன்றி, சவாலுக்குச் சம்மதித்தார். சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீ யின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது. ‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக் கொண்டீர்கள்?’’ - நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவைலயின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்ல. 25 வயதுவைர ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ்ல, உலகப் புகழ் ெபற்றது அதன் பிறேக! சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சனத் தம்பதியின் மகனாக, 1940-ல் பிறந்தார் புரூஸ்ல. குடும்பம் சனா திரும்பியதும், குழந்தை நட்சத்திரமாகப் பல நாடகங்களில் நடித்தார்.


பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக் கைலையயும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18-வது வயதிலேயே பாக்ஸிங் சாம்பியன்ஷிப் ெவற்றி. இைதயடுத்து, புரூஸ்ல அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலிஸ் பிரச்னை ஏற்படேவ, பெற்றோர் அவைர சான்பிரான்சிஸ்கோ அனுப்பினர். அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ்ல, வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் தத்துவம் படித்தார். கூடேவ, சனத் தற்காப்புக் கைலைய மற்றவர்களுக்கும் கற்றுத் தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் ல-யின் ‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சனாவில் பெரும் வரேவற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார் புரூஸ்ல. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலேம இந்தக் கலை இன்னும் பெரும் புகழைடயும்’’ என்று உறுதியுடன் சொன்னார் லீ.




1971-ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலெகங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர் வெளியான Õஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூலில் சாதைன பைடத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ்ல. ‘‘அவர் எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியாகி, அவரது உயிரைப் பறித்துவிட்டன’’ என்று டாக்டர்கள் சொன்னாலும், 33-வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின் மர்மம் இன்றுவைர விடுபடேவ இல்லை. வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகைள உருவாக்குபவர்கேள சாதைனயாளர்கள் என்பது புரூஸ்லயின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்!
----------------------------------------------------------------------------------------
இன்னொரு (விஷேட(பண்டிகையை முன்னிட்டு)) பதிவுடன் ஃப்லாஸ் ரியூட்டோரியல் முடிவுக்கு வர இருக்கிறது. அதன் பின்னர் லெமூரியா...(குமரிக்கண்டம்) தொடர்பான ஆச்சரியம் மிக்க ஆய்வை பார்க்கலாம்.


Thursday 17 December 2009

Button - (ADOBE FLASH ரியூட்டோரியல் 10)

இன்று Flash இல் Action Script எனும் பகுதி சம்பந்தமான ஒரு ரியூட்டோரியலை பார்ப்போம்
---------------------------------------------------------------------------------------
Button
---------------------------------------------------------------------------------------
Flash இல் இரண்டு வெவ்வேறு Scene களை எவ்வாறு Button மூலமாக இணைப்பது என்பதை காணவுள்ளோம்.
செய்முறை-1


தேவையான அளவில் Movie உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties ->Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்குFrame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும்












செய்முறை-2
அடுத்துMenubar ல் காணப்படும் Insert ஐ Select பண்ணி Scene Click பண்ணவும்.











இப்போது TimeLine  ற்கு கீலே காணப்படும்Bar ல் Workspace பகுதியில் காணப்படும் குறியீட்டை Select பண்ணி பார்க்கும் போது 2 Scene கள் இருப்பதை காணமுடியும்.












செய்முறை-3


Scene 1, Scene 2 இல் எதாவது உங்களுக்கு பிடித்தமான Animation களை உருவாக்கி கொள்ளவும். ( Scene 1, Scene2 ஐ Select  செய்வதற்கு Workspace பகுதியில் காணப்படும் குறியீட்டை   பயன்படுத்தவும்.)




செய்முறை-4

இச்செய்முறையில் நாம் முதல் முதலாக ஒரு சிறிய Action Scrip பயன்படுத்த உள்ளோம். அதாவது நாம் உருவாக்கியுள்ள Animation களை தொடர்ந்து மீண்டும் – மீண்டும் இயங்காது நிறுத்தப்போகிறோம்.

Scene 1 ல் Animation களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள Layer களுக்கு மேலாக ஒரு Layer   உருவாக்கி கொள்ளவும். (Insert Layer  பயன்படுத்தவும்)





Animation முடியும் இறுதி புள்ளியில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select ‌செய்து) KeyFrame இனை உருவக்கவும். அடுத்து F9 அழுத்தி Action Script Panel Open பண்ணவும். (அல்லது Right Click செய்து இறுதியாக‌ காணப்படும் Actions இனை Select ‌செய்யவும்)


வெண்மையாக உள்ள பகுதியில் stop();  எனும் Script type பண்ணவும்



இதேபோன்ற படிமுறைகளை Scene 2  ற்கும் பயன்படுத்தவும்.



செய்முறை-5
.
இனித்தான் button பகுதிக்கு வரப்போறோம்.
Scene 1 ல்  புதிய Layer இல் Oval tool (O)    மூலமாக stage இல்  ஒரு வட்டத்தை வரையவும்.
அடுத்து stage இல் உள்ள வட்டத்தினை Select செய்து விட்டு F8 ஐ அழுத்தி வரும் Menu Box ல் Type பகுதியில் Button ல் Click செய்து Ok பண்னவும். (F8 -> Button -> Ok)



இப்போது வட்டம் Button ஆக மாறி இருக்கும்.
வட்டத்தினை (Button ஐ) Select செய்து விட்டு F9 ஐ அழுத்தி; வரும் Action Scrip panel இன் வெண் பகுதியில்



on (release) {
     gotoAndPlay("Scene 2", 1);
}
ஐ Type பண்னவும். 



ஷ்ஷ்ஷ்...!!!!!!!.

அவளவுதான் Ctrl + Enter மூலமாக Test பண்ணவும்.

(மீண்டும் Scene 1  ற்கு வருவதற்கு இதே முறைகளை  Scene 2  இல் கையாளவும்.)
-----------------------------------------------------------------------------------------------
வழமை மாதிரியே டவுட் கேக்காதீர்கள்!




Tuesday 15 December 2009

ஜீலியஸ் சீஸர் - (ஒரு பக்க‌ வரலாறு)


ஒரு புதிய முயற்சி ( முன்னோட்டம்)... நன்றி : எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன் ( அவர்களால் வெளியிடப்பட்ட (விகடன் பிரசுர ) புத்தகத்திலிருந்து எழுதப்படுகிறது)
----------------------------------------------------------------------------------------

கி.மு. 75-ம் வருடம். சட்ட திட்டங்களில் நிபுணத்துவம் பெறுவதற்காக, கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இைளஞரான ஜூலியஸ் சீஸர். எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்ய‌ளயர்களால் பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபைர விடுதைல செய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத் தகவல் அனுப்பினார்கள். உடேன ஸீஸர் கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக் காசுகள்தானா?! என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’’ என்றார் தோரைணேயாடு. கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள்.


உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள். சக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி உன்னை நீயெ உயர்வாகப் பேசி கொள்கிறாய்! அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘நான் யார் என்பைத நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதி நூல்களில் சொல்லியிருப்பைதத்தான் நான் கைடப்பிடித்து வருகிறேன்’’ என்றார் சீஸர்.  


பின்னர், 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்து வெளியே வந்ததும், வரம் மிக்க ஆட்கைளத் திரட்டிக்கொண்டு போய் கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, தான் சொன்னது போலவே அவர்கள் அத்தைன பேரையும் கழுத்தை அறுத்துக் கொன்றார். இந்த வெற்றியைப் பெரும் பொருட்செலவு செய்து கொண்டாடினார். ‘‘ஏன் இப்படிச் சுய தம்பட்டம் அடிக்கிறர்கள்?’’ எனப் பிறர் கேட்டேபாது, ‘‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே!’’ என கூறினார்.  



அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை ஜூலியஸ் சீஸர். ரோம் நகர அதிகாரத்தில் இருந்த மரியஸ், சஸரின் உறவினர். எனேவ, சஸரால் மிக எளிதாக பைடத் தைலவராகி, போர்களில் பங்கேற்று வெற்றிகள் குவிக்க முடிந்தது. மரியஸுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த ‘சுல்லா’வின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டு, செனட் சைபயில் முக்கிய இடம் பிடித்தார் சஸர். மிகப் பெரரும் செலவில் பிரமாண்டமான ஸ்டேடியம் அமைத்து, ‘அடிமைகளின் மரண விளையாட்டு’ நடத்தி, மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். கி.மு.58-ல் ஐேராப்பிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் இடம்பெயர்ந்து, ‘கவுல்’ நோக்கி வருகிறார்கள் என்றதும், அவர்களால் ரோம் நகருக்கு ஆபத்து வருமெனப் பைடயுடன் கிளம்பினார் சீஸர்.  


சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்த இந்த ‘கவுல்’ போராட்டத்தில், சுமார் இருபது லட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து லட்சம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்தப் போர், சீஸ‌ருக்கு செனட் சைபயிலும், மக்கள் மனதிலும் நிரந்தர இடத்தையும், பெரும் வரன் என்கிற புகைழயும் பெற்றுத் தந்தது.  



ரோம் நகரின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகச் செயல்படத் தொடங்கினார் ஜூலியஸ் சீஸர். ரோமன் காலண்டர் மாற்றியைமக்கப்பட்டது. நகெரங்கும் சஸரின் சிலைகள் நிறுவப்பட்டன. நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது. தன் புகழ் இந்த பூமி உள்ளவைர நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரும் செலவுகள் செய்தார் சீஸர். அவைர இனியும் விட்டுவைத்தால், ரோம் சரழிந்துவிடும் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் சிலேர கொல்லத் துணிந்தார்கள்.


எல்லோரும் அவைரக் கத்தியால் குத்த, மகன் போல் தான் நினைத்திருந்த புரூட்டஸிடம் ஓடினார் சஸர். அவனும் கத்தியெடுத்துக் குத்தேவ, ‘‘யூ டூ புரூட்டஸ்’’ என்று பதறித் துடித்தபடி உயிரைவிட்டார். ஜூலியஸ் சஸர் விமர்சனத்துக்கு உரியவராக இருந்தாலும், அவைரப் புகழின் உச்சியில் ஏற்றிவைத்தது, ‘உன் தகுதியை நேய உரக்கச் சொல்ல். பிறருக்காகக் காத்திருக்காதே!’ என்கிற அவரது மந்திரச் சொல்தான்.
--------------------------------------------------------------------------------------
இப் பதிவு ஒரு முன்னோட்டமாக விடப்படுகிறது. வளாகத்திற்கு இத்தொடர் தேவை இல்லை என கருதின் உங்களது க்ருத்துகளை பதியவும். கருத்துகளுக்கேற்ப மாற்றமடையும்.

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected