Total Pageviews

Wednesday 31 March 2010

இருக்கு ஆனா... இல்லை....

----------------------------------------------------------------------------------
சுப்பரா செய்து இருக்காங்க...
நான் ரசித்தேன்... உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புறன்... :D
----------------------------------------------------------------------------------












































































































































































































































----------------------------------------------------------------------------------

அடுத்த பதிவில்...
ஏலியன்ஸ்... கடவுள்...பேய்...  2ம் பகுதியை எழுதுகிறேன்...
----------------------------------------------------------------------------------

Monday 29 March 2010

எதிர்கால ஆசியா... இந்தியா... (நோஸ்ராடாமஸ் 04)


நோஸ்ராடாமஸ் நாளைய உலகம்.


-------------------------------------------------------------------------------
இது நொஸ்ராடாமஸ் தொடர்பான நான்காம் பதிவு...
நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகின்றேன்..
-------------------------------------------------------------------------------
போன பதிவில் போட்ட இப்படத்தின் விளக்கத்தை இன்று பார்ப்போம்...

இப் படத்தில் ஒரு சக்கரம் சுலற்றப்படுவது போல் காட்டப்பட்டுள்ளது...
இது 3ம் உலக யுத்தத்தின் பின்னர், நாடுகளின் நிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்களாக கருதப்படுகின்றது.
இப்படத்தில்...
கீழ் புறத்தில்... ஒரு கிரீடம் கை நழுவி விழுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதனருகிலேயே... கழுகு ஒன்றின் உருவமும் வரையப்பட்டுள்ளது.
இப்படமானது... அமெரிக்காவின் வீழ்ச்சியை குறிப்பதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ட்ராகன் போன்ற உரு மேல் நோக்கி போவது சீனாவின் நிலையை காட்டுகிறது என கருதப்படுகிறது.
மேலும்... சக்கரத்தின் மேலுள்ள கடிகாரம் ( முன்னைய காலங்களில் மணல் மூலம் நேரத்தை கணிக்க பயண்பட்ட கடிகாரம்) இது காலத்தால் ஏற்படப்போகும் மாற்றம் என்பதை குறிக்கிறது. அடுத்து... வாணில் இருந்து வரும் கையே இச் சக்கரத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றது. இது எல்லாம் இறைவனின் செயல் என்பதை குறிப்பதாகும். ( நொஸ்ராடாமஸ் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. )

இப்படத்திலுள்ள ஏனைய உருக்களுக்கான விளக்கம் இன்னமும் தெளிவாக(??!!) விளக்கப்படவில்லை.

நொஸ்ராடாமஸின் நான்கு வரி குறிப்புக்கள் பலவற்றில் இந்த மாற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது...
பக்கத்து பக்கத்து நாடுகளினால் ஏற்படப்போகும்... 3 ம் உலக யுத்தத்தில்... பிரான்ஸ், இத்தாலி, பிறிட்டன் போன்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வியை சந்திக்கும். மொத்த ஈரோப்பே கஷ்டங்களுக்கு உள்ளாகும். அதே வேளை இதை சாதகமாக பயண்படுத்தி ஏஸியா, அஃப்ரிக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த நாடுகள் முன்னேற்றமடையும்.இன்று எவ்வாறு ஈரோப் இருக்கிறதோ... அவ்வாறானதொரு நிலையை ஏஸியா அடையும். மக்களின் வாழ்க்கைதரம் முற்றாக மாறிவிடும். எனும் பொருள் பட கூறியுள்ளாராம்.

இனி வரப்போகும் இந்திய ஜெனரேஷன்... அவர்களின் பெற்றோர் நினைச்சு பார்க்காத அளவுக்கு நுட்பம் வாய்ந்தவர்களாக உருவாகுவார்கள்... எனவும் கூறப்பட்டுள்ளதாம்.
2027ம் ஆண்டில்... உலகின் முதல் நிலை வல்லரசாக இந்தியா, சீனா திகழும் என கூறப்பட்டுள்ளதாம்.
-----------------------------




















இந்த படமும் 3 ம் உலகயுத்தத்தினால் ஏற்பட போகும் பேரவலத்தையே குறிக்கின்றது.
இந்த பேரழிவால் பிரபஞ்சத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தை குறிக்கிறது. ( கோஷ் தியரிப்படி/ பட்டர் ஃப்லை இஃபக்ட் படி).

-----------------------------
இது பழைய நிகழ்ச்சி சம்பந்தமான படம்....





பிரான்ஸிப்புரட்சியின் போது... 16 லூயி (லூயி ஒகுஸ்ட்த்) சிரச்சேதம் செய்யப்பட்டதை குறிக்கின்றது.



-------------------------------------------------------------------------------
அடுத்து...
2012 பற்றிய நொஸ்ராடாமஸின் குறிப்புக்களை...
அல்லது...
உலக முடிவு பற்றிய குறிப்புக்களை பார்ப்போம்...
-------------------------------------------------------------------------------

Saturday 27 March 2010

ஓஷோ ராஜனீஷ் (ஒருபக்க வரலாறு)

ஓஷோ ராஜனீஷ்
----------------------------------------------------------------------------------
1981-ம் ஆண்டு. மருத்துவத்துக்காக அமெரிக்கா சென்ற ரஜனீஷ் , சீடர்களின் அன்புக்கு இணங்க ஆசிரமம் தொடங்கி அங்கேயே தங்கினார். ரஜனீஷின்
புரட்சிக் கருத்துகளால் விரைவிலேயே ஆசிரமம் புகழடைந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர். ‘ரஜனீஷ்புரம்’ எனப் பெயரிடப்பட்ட ஆசிரமத்தில் வீடுகள், தியான மண்டபங்கள்,
சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் தொடங்கப்பட்டு, குட்டியாக ஒரு விமான நிலையமும் ஏற்படுத்தப்பட்டது. பரிசுகளாக வந்த 93 ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் தினம் ஒன்றைப் பயன்படுத்திய ரஜனீஷ் , ஒரு தனி ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருந்தார். (நம்ம சாமியாருங்க எல்லாருமே இப்படிதான் போல... ஹீ...ஹீ... அமெரிக்க சனமும் எங்கள மாதிரிதான்... என்டுறதுல ஒரு சந்தோஷம்... :D)

தங்களின் சொத்துக்களை ஆசிரமத்துக்கு எழுதிவைத்து ரஜனீஷிடம் தஞ்ச
மடையும் அமெரிக்கர்கள் அதிகரிக்கவே அதிர்ச்சியடைந்த அமெரிக்க அரசு,
ஆசிரமத்தை முடக்கும் வேலைகளில் இறங்கியது. ரஜனீஷின் ஆசிரமத்தில் 1984-ம் வருடம் ஆயிரக்கணக்கான சீடர்கள் தற்கொலைக்கு முயன்றதாக
பொய்க்குற்றச்சாட்டைப் பரப்பியது. அதே நேரம், ஆசிரம நிர்வாகி ஷீலா பெரும் சொத்துக்களுடன் தலைமறைவாகிவிடவே, ஆசிரமத்துக்குள் நுழைந்தது போலீஸ் ‘அமெரிக்க அரசு சதிவலை பின்னுகிறது, தப்பிச் செல்லுங்கள்’ என்று சீடர்கள் ரஜினீசிடம் கெஞ்சினார்கள். அத்தனை நாளும் சீடர்களுக்கு போதித்த ‘பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்... எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்’ என்ற மந்திரத்தையே உரக்கச் சொன்னார் ரஜனீஷ்.

ஆசிரமத்தில் ஊழலும், விசாவில் மோசடியும் இருப்பதாக ரஜனீஷை கைது செய்துவலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றியது அமெரிக்க அரசு.
(இது தான் அமெரிக்க இப்படி இருக்குது... நாம...)

1931-ம் ஆண்டு மத்தியப் பிரேதசத்தில் குச்வாடா என்ற சிறிய கிராமத்தில்
ஜெயின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ரஜனீஷ் சந்திரேமாகன். ‘ஏழாவது
வயதில் மரணமைடந்துவிடுவார்’ என ஜோசியர் கணிக்கவே, பயந்துபோன
பெற்றோர், அரை பாட்டி வீட்டுக்கு அனுப்பினர். ஏழு வயதுவரை சுதந்திரப்
பறவையாகத் திரிந்தவருக்கு இனி மரணம் வராது என ஜோதிடர்
சொன்னபிறகே படிக்கவைத்தனர்.

1953-ம் வருடம் தத்துவம் படித்தபோது, தன்னிடம் ஒரு தனித்துவம் இருப்தை
உணர்ந்தார் ரஜனீஷ். பிறகு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்ததும், சிறு கூட்டத்தினரிடம் பேசத் தொடங்கினார். அந்த வட்டம் விரிவடையவே, வேலையை விடுத்து, ‘பகவான் ரஜனீஷ் ’ ஆக மாறி மும்பையிலும் பின்னர் பூனே விலும் ஆசிரமம் அமைத்துப் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கினார். எல்லா மதமும் செக்ஸுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதித்தபோது, ‘செக்ஸை ஒரு பிரச்னையாக நினைத்து விலகி ஓடாதீர்கள். அதனை முழுமையாக அனுபவித்து வெற்றிகொள்ளுங்கள்’ என்று ரஜனீஷ் சொன்னது இந்தியாவெங்கும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. ‘செக்ஸ் சாமியார்’ என்ற பெயர் சூட்டி, கடுமையாக‌ விமர்சித்தனர்.
(ம்... அதே தனித்துவம்... இப்போது கூட இதே டெக்னிக்தான்...)

இந் நேரம் கடுமையான முதுகுவலியும் சர்க்கரை நோயும் ஏற்படவே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார், அங்கே மக்களது ஆதரவுடன்
ஆன்மிகப் புரட்சியை உண்டாக்கவே மறுபடியும் நாடு கடத்தப்பட்டார்.
செக்ஸ் புரட்சியாளர், போதை அடிமை என அமெரிக்கா திட்டமிட்டு வதந்தி
பரப்பியிருந்ததால், சுற்றுலா விசாவில் ஜேர்மனி போன ரஜனீஷ் , துப்பாக்கி
முனையில் நாடு கடத்தப்பட்டார். முதலில் குடியுரிமை வழங்கிய உருகுவே
அரசாங்கம் அமெரிக்காவின் கடன் மற்றும் பொருளாதாரத் தடை மிரட்டலால்
ரஜனீஷிக்கு வழங்கிய குடியுரிமையைத் திரும்பப் பெற்றது.
(ஆ..ஊன்டா.. பொருளாரதடையை கைல எடுத்துடுவாங்க... ஆனா... சீனாட்ட... :P )

அதனால், 1987-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி பூனே ஆசிரமத்தில் பணியைத் தொடர்ந்தார். ரஜனீஷ் என்ற பெயரை, ‘ஓஷோ’ என்று மாற்றி, ‘வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடினால் அது இன்னும் பெரிதாகும். அதனால், எதிர்த்து நின்று வெற்றி பெறுங்கள்’ என்று தினமும் பிரசங்கமும் தியானமும் நடத்தி மக்களிடம் நம்பிக்கை விதைத்தார்.

1990-ம் ஆண்டு நாடித்துடிப்பு குறையத் தொடங்கிய நேரத்தில், ‘மரணத்தில் இருந்து என்னை தப்பவைக்க நினைக்காதீர்கள், நான் அதனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்’ என்று மருத்துவ சிகிச்சயை மறுத்து மரணமடைந்தார்.
(சென்டிமென்ட் :'( இந்த டெக்னிக்கை நம்மட ஆக்கள் பின்பற்றுவாங்களா??? :\ )


----------------------------------------------------------------------------------

Thursday 25 March 2010

செவ்வாயும்... மனிதனும்... நாமும்... (பகுதி - 02)

 செவ்வாயும்... மனிதனும்... நாமும்...
--------------------------------------------------------------------------------
போன பதிவை... செவ்வாயில் உயிரின‌ங்கள் இருக்கின்றனவா? என்ற கேள்வியுடன் முடித்து இருந்தேன்.
ஒரு படமும் போட்டு இருந்தேன்.
இன்று அவை சம்பந்தமான விடையங்களை முதலில் பார்ப்போம்.
--------------------------------------------------------------------------------
இந்த படத்தில் காணப்படும் 7 குழிகளும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா அனுப்பிய செய்மதி மூலமாக கண்டு பிடிக்கப்பட்ட குழிகளாகும்... ( செய்மதியின் பெயர் நினைவில்லை... தெரிந்தவர்கள் சொல்லவும்.)

இவற்றின் அமைப்பை அவதானிக்கும் போது... சற்று வியப்பாக இருக்கிறது. காரணம்... குழியின் நுழைவாயிலானது ஏதோ... சரியான முறையில் கணிப்பிட்டு வெட்டப்பட்ட குழிகள் போன்று அமைந்துள்ளது.
உதாரணமாக... இந்த படத்திலுள்ள குழியின் விட்டம்... 150 மீட்டர்கள். ஆழம் 78 மீட்டர்களாக இருக்கலாம் என IR-Ray ( அகச்சிவப்பு கதிர்கள்) மூலமாக அறியப்பட்டுள்ளது.

இங்கு தான் நாம் பொரிக்ஷா எனும் சிறுவன் சொன்னதை கவணிக்க வேண்டும்.
( நான் பொரிக்ஷா பற்றி சில பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால், அது தொடர்பாக தனி பதிவிடவில்லை... ஆனால், வேறு பதிவர்கள் பதிவிட்டுள்ளார்கள். அச் சிறுவனை பற்றி தெரியாதவர்கள் வாசித்து கொள்ளவும். சுவாரஷ்யமாகவும் வியப்பாகவும் இருக்கும்...)
செவ்வாயில் தான் முன்னர் வாழ்ந்ததாக கூறும் இச்சிறுவனிடம்... விஞ்ஞானகள் நடத்திய பரிசோதனையின் போது...
" ஏன் பூமியில் இருந்து அனுப்பப்ப‌டும்... செய்மதிகள் பல செவ்வாயின் வளிமண்டல பகுதியை அன்மித்ததும் செயல் இழக்கின்றன? " என கேட்ட போது...
" இன்னமும் செவ்வாயில் மனிதர்கள் ( செவ்வாயில் மனிதருக்கு ஒப்பான உயிரினமாக இருக்கலாம்.) வாழ்கின்றனர். அவர்கள் தான்... சில வகையான கதிர்களை செலுத்தி செய்மதிகளை செயல் இழக்க வைக்கின்றனர்..." என பதில் அளித்து இருந்தான். மேலும் கூறுகையில்... " செவ்வாயில் ஏற்பட்ட அணு ஆயுத போரினால்... செவ்வாயின் மேற்பரப்பானது மக்கள் வாழ்வதற்கு உகந்ததாக இல்லாமல் போய் விட்டது... அதனால்... அங்குள்ளவர்கள் நிலத்தினடியி வாழ்கின்றார்கள்..." என கூறியிருக்கின்றான். ( இவை அனைத்தையும் அவன் தன்மையிலேயே கூறியிருந்தான். நான் இங்கு முன்னிலையாக எழுதியுள்ளேன்...)

இச்சிறுவனின் பேச்சு முற்று முழுதாக ஏற்க படவுமில்லை... முற்றாக புறக்கணிக்கவும் முடியவில்லை... காரணம்... 13 வயதான இச்சிறுவன்... பாவிக்கும் சொற்கள் அனைத்தும் தேர்ந்த விஞ்ஞானிகள் பாவிக்கம் சொற்கள். மேலும் சிக்கலான பல தியரிகளை இலகுவாக விளங்கப்படுத்துகின்றான்!!!

நான் இங்கு அந்த சிறுவன் குறிப்பிட்ட "நிலத்தினடியில் மனிதர்கள் வாழ்கின்றனர்." என்ற விடையத்தை எடுத்துள்ளேன்.

அச் சிறுவன் சொன்னதன் படி... இன்னமும் செவ்வாயில் நிலத்தின் கீழ் மக்கள் இருக்கின்றனர் என வைத்துகொண்டால்...
அவர்கள்... உள்ளே சென்று தமது இருப்பிடத்தை உருவாக்குவதற்கு பாதை தேவைப்பட்டு இருக்கலாம்... அதற்காக உருவாக்கப்பட்டதே இக்குழிகளாக இருக்கலாம். ( இங்கு நாம் இன்னொன்றையும் பார்க்க வேண்டும்... நாம் தற்போது அளவிட்டுள்ள குழியின் ஆழமானது... அவர்களால் உட்பக்கமாக பூட்டப்பட்ட குழியினுள்; பல ஆண்டுகளாக புழுதிபுயல் வீசியதால் ஏற்பட்ட படிவுகளின் பின்னரான... ஆழமாக இருக்கலாம்.)

ஆகவே... அச்சிறுவன் சொன்னதன் படி அங்கு அறிவுள்ள உயிரினங்கள் வாழ சந்தர்ப்பம் உண்டு.

இங்கு... சில கேள்விகள் எழும்... அவர்கள் அங்கு என்னத்தை சுவாசிப்பார்கள்? அமுக்கம் பாதிக்காத? போன்ற அடிப்படை சந்தேகங்கள் தோன்றும்.
ஆனால், நாம் இங்கும் பார்க்க வேண்டியது... பொரிக்ஷாவின் கூற்றைத்தான்...  அவன் ஒரு சந்தர்ப்பத்தில் ட்ரைம் ரவல் (கால பயணம்) பற்றி குறிப்பிட்டுள்ளான். அவனின் கருத்துப்படி... செவ்வாய் மனிதன் ரைம் ரவலை பயன்படுத்தியுள்ளான். ஆகவே... அந்தளவு அறிவு படைத்த அவர்களால்... மேற்பரப்பிலுள்ள வளியை உள்ளே கொண்டு செல்வதென்பது கடினமானதாக இருந்து இருக்க வாய்ப்பில்லை. ( மேலும், அவர்கள்... சுவாசிப்பது ஒட்சிசன் அல்ல... காபனீரொட்சைட்... இது கூட பொரிக்ஷாவின் கூற்றுத்தான்.)

ஆகவே... என்னை பொறுத்த வரையில் செவ்வாய் கிரகத்தில் அறிவில் மேம்பட்ட உயிரிங்கள் வாழ சந்தர்ப்பம் உண்டு.
ஆனால், அவர்கள் ஏன் வெளியுலகிற்கு வருவதில்லை? எனும் கேள்விக்கு எனக்கு விடைதெரியாது. சில வேளை ஏலியன்ஸ் என கூறப்படும் உருவங்கள் அவர்களுடையதாக இருக்குமோ???!!!
(ஏலியன்ஸ் தொடர்பாகவும் ஒரு பதிவு எழுதுகிறேன்... அதில் செவ்வாயை சம்பந்தப்படுத்தி எழுதவில்லை... அதில் வேறு விதமாக எழுதுகிறேன்...)

எனக்கும் இது சம்பந்தமான பல சந்தேகங்கள் இருக்கின்றன... தெளிவான விளக்கம் இருப்பவர்கள் தயவு செயது கூறவும்...

அடுத்த பதிவில்... செவ்வாயில் முன்பும், இப்போதும் உயிரினங்கள் இல்லை என்றால்... எதிர்காலத்தில் உருவாகுமா? என்பதை வேறு கோணத்தில் பார்ப்போம்...
--------------------------------------------------------------------------------

செவ்வாயும்... மனிதனும்... நாமும்... (விஞ்ஞானம் மட்டுமில்லை)

--------------------------------------------------------------------------------

ஐடியா மணிங்கட ஐடியா... ( படங்கள்)

டியா மணிங்கட ஐடியா... 
----------------------------------------------------------------------------------
4 நாட்களாக பதிவிட முடிய வில்லை... அதனால், இது...
நாளை செவ்வாயும்... மனிதனும்... நாமும்... 
 பகுதி 2 பதிவிடப்படும்.
----------------------------------------------------------------------------------























































































































































































































-----------------------------------------------------------------------------------

Sunday 21 March 2010

காட்டு மிராண்டி ஏஸியன்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)

---------------------------------------------------------------------------------------
சிறுவர்கள் இதை பார்க்க வேண்டாம்...
---------------------------------------------------------------------------------------
நேற்று பார்த்த வீடியோ காட்சியை நினைக்கவே வெறுப்பா இருக்கு. அந்த காட்சிகள் இன்னும் அப்படியே கண்ணுக்குள் நிற்கின்றன.
இப்படி பட்ட சாதி, இன வெறி பிடித்த காட்டு மிராண்டித்தனமான மக்கள் வாழும் பகுதியை சேர்ந்தவன் என்றவகையில்... நான் வெட்க்கப்படுகின்றேன்... (நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டியவர்களே.)

இந்த நித்தியானந்தா வின் கேவலமான செய்கைக‌ளை விலாவாரியாக... மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் காட்டி சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட ரி.வி சனல்களும்... அதை பற்றி பத்திரிகைகளில் ஆய்வு நடத்தியவர்களும்; இந்த மிக கொடூரமான அருவருக்கத்தக்க நடவடிக்கை பற்றி பேசாமல்... பொத்தி கொண்டு இருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.
பதிவர்கள் இதை பற்றி எழுதியதையும் என்னால் காண முடியவில்லை. ( எழுதியவர்கள் மன்னிக்கவும்.)
கேவலமான நித்தியானந்தாவின் செய்கைகளை பற்றி விரிவாக எழுதிய நாம்... இதை பற்றி எழுதாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாமல் இருக்கின்றது.

தமக்குரிய அடிப்படை உரிமைகளை கேட்டு... ஊர்வலம் சென்ற ஒரே குற்றத்துக்காக... பயங்கர விஷம் கொண்ட விலங்குகளை அடித்து கொல்வது போன்று அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர்.
( ஆடு, மாடுகளை அடிப்பதை இதனுடன் ஒப்பிட முடியாது... இந்தளவுக்கு அவற்றை அடித்ததை நான் எங்கும் பார்க்க வில்லை.)

இத்தனைக்கும் அடிக்கப்பட்டவர்கள் தம்மை ஒட்டி வாழும் சமூகத்தினர், எமது நாட்டினர் என்பதை இந்த மிருகங்கள் புரிந்து கொள்ள வில்லை. ( மனிதனாக பரிமாணம் அடையாத இந்த காட்டு மிராண்டிகளை‍  மனிதர்கள் என்று என்னால் சொல்ல முடியாது.)
இவளவுத்தையும் செய்துட்டு இதுகள் என்னென்|று நின்மதியாக தூங்குதுகள் என்று தெரியவிலை...
இதுகளின் வளி வரப்போகும் எதிர்கால மிருகங்களிலும் இந்த கொடூர எண்ணம் குடிகொள்ளாமல் பார்க்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது என்னை பொறுத்த வரைக்கும் கேள்விக்குறியே...
---------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------
இவற்றுக்கு  மேலாக இந்த கேவலமான மிருகங்களின் வெறியாட்டம் நடந்தது 2007ம் ஆண்டு. ஆனால், இன்னமும் இந்த வெறியாட்டம் தொடர்பாக எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ( இது சம்பந்த்மாக இணையத்தில் தேடி பார்த்தேன் ஒரு முடிவும் கிடைக்க வில்லை.)
முக்கியமாக...  இந்த வீடியோ பதிவில் பொலிஸ் மிருகம் ( இதுகளை குறிப்பிட்ட ஒரு விலங்கின் பெயரால் அழைக்க முடியாது. உதாரணமாக : " நாய் " என்று நான் அழைத்தால் அது நாய் இனத்தை நான் கேவலப்படுத்துவது போல் ஆகும். இதுகள் பெயரிடப்படாமல் மனித உருவில் மறைந்து வாழும் கொடிய மிருகங்கள்.) ஒன்றும் இந்த கொடூரத்தாக்குதலின் மத்தியில் உலாவருகிறது. ஏனைய மிருகங்களை விட இந்த மிருகம் இந்திய சட்டங்களை மதித்து நடப்பேன் என்று அரசு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்த விஷேட மிருகமாகும்.

வெறியாட்டத்தை அடக்க வேண்டிய அந்த ஜந்து...  மற்றைய மிருகங்களுடன் சேர்ந்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.
மற்றதுகளும் கூட்டமாக சேர்ந்து ஆயுதமே இல்லாத வலுவிழ‌ந்த அப்பாவிகளை கோலைத்தனமாக தாக்கி தமது வீரத்தை(?) காட்டுகின்றன.

இதே... ஒரு தீவிரவாத குழு வந்தால்... தங்கன்ட வால்களை சுறுட்டி வைத்துக்கொண்டு... கோலைத்தனமாக போய் ஒழிஞ்சுடுங்கள்.

ஆனால்... ஒன்று இந்தியாவில தீவிர வாதமும்... மாவோயிஸ்ட்களும் உருவாவதற்கு காரணம்... இப்படிபட்ட ஈன பிறவிகள் ஒரு இனத்தை ஒ(டு)துக்குவதுதான்.
இந்த வீடியோவை பார்த்த எமக்கே இவ்வளவு கோபம் வரும் போது... அந்த பழங்குடி மக்களிடையே எவளவு கொதிப்பு இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தமக்குரிய ஆள்பலத்தை இலகுவாக பெற்று கொள்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட அவ் இளைஞர்கள் தமக்கு சார்பாக ஒருத்தர் கருத்து தெரிவித்தாலே... அவர்களை பின்பற்றும் மனனிலையில் இருபார்கள். இது சாதாராணமானது.

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால்... முதலில் இந்த சாதி வெறியர்களையும்... மத வெறியர்களையும்... இன வெறியர்களையும் ஒழிக்க வேண்டும்... அப்போது தான் புதிய தீவிரவாதிகள் உருவாவதை தடுக்க முடியும்.

இந்த விடையத்தில் சீனாவின் கொள்கை எனக்கு பிடித்து இருக்கிறது.
அதாவது... ஜாதி இருக்கலாம், மதம் இருக்கலாம் எல்லாம் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது என்ற அவர்களின் கொள்கை சரியானது தான்.

சரி பாதிக்க பட்டவர்களுக்குதான் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. என்றாலும்... இவ்வாறு காட்டுவாசிகளாக இருக்கும் மனிதர்களை நல்வழி படுத்துவதற்காகவாவது ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
அல்லது... உலகத்தவர் மத்தியில் நாம் பிந்தங்கிய 16,17 ம் நூற்றாண்டை சார்ந்தவர்கள் போலவே நாம் வாழவேண்டும்.
 ---------------------------------------------------------------------------------------
இப்படி தான் போன வருடம் இலங்கையிலும் ஒரு பொலிஸ் மிருகம்... ஒரு மூளைசுகமில்லாத இளைஞனை கடலினுள் மூழ்கடித்து கொன்றது. அச்சம்பவம் நடக்கும் போது கூட... அந்த ஏரியாவில் 20 இக்கு மேற்பட்டவர்கள்... கூடி இருந்தார்கள். எவரும் தடுக்க எத்தனிக்கவில்லை. காரணம்... எமக்கென்ன அடிவாங்குவது நானோ... என்ற சகோதரமோ இல்லை என்ற குறுகிய மனப்பாங்கு தான்.
---------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------
ஆனால், ஒரு நிம்மதி... அந்த மிருகம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருக்கும் போதே... மாரடைப்பு வந்து இறந்து போனது.

எடுத்ததுக்கெல்லாம் ஆர்ப்பாட்டமும்.... கண்டன பேரணியும் செய்யும் தலைகள் இந்த விடையத்தை கணக்கெடுக்காதது  ஏன்? என்று எனக்கு விளங்கவில்லை. இவ்வாறான மனப்போக்கு இருக்கும் வரைக்கும் எமது தெற்காசிய பகுதி முன்னேறுவது கடினம்தான். :-(

நாங்கெல்லாம்....
அமெரிக்கன் அப்படி வாழுறான்... ஈரோப்பியன் அதை கண்டு பிடிச்சிட்டான்... சீனா அமெரிக்காவுக்கு சவால் விடுது.... என்று கதைச்சுகிட்டே எமது காலத்தை போக்காட்ட வேண்டியதுதான். :D
---------------------------------------------------------------------------------------

Friday 19 March 2010

சுட்ட எண் ஜோதிடம்.01 (பகுதி 09)

-*|...01...|*-
-----------------------------------------------------------------------------------------
இது 1 ம் நம்பர் காரங்களுக்கு...
-----------------------------------------------------------------------------------------
1ம் திகதி...
பிறர் அபிப்பிராயங்களைக் கேட்பதில் பொறுமை இருக்காது. உரத்த குரலில் மறுத்து பேசுவார்கள். மனதில் உள்ளதை அப்படியே வெளியிடுவார்கள். கவர்ச்சியாகவோ... நயமாகவோ பேசத்தெரியாது. தன்னிஷ்டப்படியே எலோரும் நடப்பதை விரும்புவார்கள். மிதமிஞ்சின தன்னம்பிக்கையுடையவர்கள். முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமிருக்கும்.

10ம் திகதி...
நிதானமிருக்கும். சாதுவாக நடந்துகொள்வார்கள். மனதில் உள்ளதை வெளியிடாமல் இருக்க தெரியும். பிரபலம் ஏற்படும். அன்பும் நேசமும் இவர்களது வாழ்க்கையில் அதிகம் காணப்படும்.  பழகுவதற்கு மனோரம்மியமானவர்கள்.

19ம் திகதி...
மிகுந்த மனோசக்தி உடையவர்கள். பார்த்தால் பசு... பாய்ந்தால் புலி... என்று இவர்களை கூறலாம். இவர்கள் எக்காரியங்களைக்கொண்டும் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். புலமை உண்டு.

28ம் திகதி...
பார்வைக்கு அழகாக இருப்பார்கள். சிரித்து பேசுவார்கள். ஸ்திரீத்தன்மைகள் காணப்படும் சூரிய ஆதிக்கம் இவர்களுக்கு குறைவாகவே இருப்பதனால் கண்ணாடி தேவையில்லை. யாரையும் சுலபமாக நம்பி விடுவார்கள். ஏமாந்து போவது சகஜமே.

அதிஷ்ட காலம்...
1,10,19 மிக அதிஷ்டமானவை.
28 அவளவு நல்லதல்ல.
கூட்டெண் 1 வரினும் நன்மையானது.

முக்கிய நாட்கள்...
4,13,22,31 அநேகமாக முக்கிய காரியங்கள் நடைபெறும்.
இந்திகதிகளின் சுபாவமே எதிர் பாராததை தருவது தான். நன்மைகள் தாமாகவே வரும். ஆனால், இவர்களாக முயற்சிகளை தொடங்காமல் இருப்பது நன்று.

துரதிஷ்ட காலம்...
8,17,26 துன்புறுத்த வல்லது.

அதிஷ்ட நிறம்...
மஞ்சள், வெளிர் சிவப்பு, வெளிர் நீலம்

துரதிஷ்ட நிறம்...
கறுப்பு, மண்ணிறம்

உலோகம்...
தங்கம்

இரத்தினம்...
மாணிக்கம் மிகச்சிறப்பானது.
டொபாஸ் சிறுவர்களுக்கு நன்மையானது.
கனகபுஸ்பராகமும் நன்மை.
-----------------------------------------------------------------------------------------
சொன்னது - வி.எ.சிவராசா BA (நன்றி)
-----------------------------------------------------------------------------------------
இத்துடன் எண் ஜோதிடம் முடிகிறது... அடுத்ததாக பெயர் எண்களை பற்றி பார்க்கலாம்....
-----------------------------------------------------------------------------------------

Thursday 18 March 2010

படுக்கை அறை படங்கள்...

படுக்கை அறை படங்கள்...
-----------------------------------------------------------------------------------------

















































































 

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected