Total Pageviews

Saturday 29 May 2010

சென்டிமென்ட் + ஃபீலிங்ஸ்ஸு +அட்வைஸ்ஸு... ( தத்துவமாமாம் :P )

---------------------------------------------------------------------------------
ஃபேஸ்புக்கில் எனக்கு வந்த தத்துவங்களும்.... நான் போட்ட தத்துவங்களும்...
உங்களோட பகிர்ந்துக்கனும் என்று தோன்றிச்சு...
சிலது ஜோசிக்க... பலது சிரிக்க...

(எப்படியும் இதில கனக்க எங்கயாவது சுட்டுபோட்டதாத்தான் இருக்கும்... உருமையாளர்கள் யாராவது இருந்தால் ரென்ஸனாகி... ரைட்ஸ் பிரசனை எடுத்திடவேண்டாம்... :P )
---------------------------------------------------------------------------------

ஸென்டிமென்ட்...

* வரம் கொடுக்கும் பிள்ளையார் எலியில் போகிறார்.
பூசை கொடுக்கும் பூசாரி Pulsarல போறார்.

* பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை உங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால் உடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்!

* அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது....
நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது!!

* நீ யாருக்காக வாழ்கிறாயோ அவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடு...
யார் உனக்காக வாழ்கிறார்களோ அவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே...

* ஒன்றை இழந்துதான் இன்னொன்றை பெறமுடியும்(மாம்)...
எதை பெற எதை இழக்கிறோம் என்றதுதான் முக்கியம்... :)

* நாங்க நதிபோல் ஓடிக்கொண்டு இருக்கனும்...
கடல் போல் காத்திருக்கும் வெற்றிக்காக...

* நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்துதான் கிடைக்கின்றனவாம்....
ஆனால், அனுபவம்... தவறான முடிவுகளிலிருந்துதான் கிடைக்கிறது...

* என்னைவிட புத்திசாலிகளுமிருக்காங்க... என்னைவி முட்டாள்களுமிருப்பாங்க... ஆனா, எனக்கு நிகரா நான்தானிருக்கேன்... lol... :P

* துன்பம் பாதி... இன்பம் பாதி... இதுதான் வாழ்க்கை...
இன்பம் குறைவாவும்... துன்பம் அதிகமாகவும் தெரியும்... இது தான் நமது பார்வை...

* வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....
தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை......
தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம்....

* நிலத்தில் வாழ் நம்மவர் முகத்தில் அவலங்கள்புலத்தில் வாழ் எம்மவர் முகத்தில் அலங்காரங்கள்!

லவ்வு... ஃபீலிங்ஸ்ஸு...

* எந்தப் பொண்னுமே உண்மையான காதல ஏத்துக்கிறதில்ல...........ஏன்னா உண்மையான காதல் அவங்ககிட்ட இல்லை...

* ஒரு நாள் நீ என்னை நினைப்ப நானும் நினைத்தேன்.
ஒரு நாள் நீ என்னை MIss பண்ணுவ நானும் MIss பண்ணினேன்.
ஒரு நாள் நீ என்னை நினைச்சு அழுவ நானும் அழுந்தேன்.
ஒரு நாள் நீ என்னை LOve பண்ணுவ அப்போது நான் உன்னை LOve பண்ண
மாட்டேன்.

* கத்தியால குத்தினா கூட கத்தி வலியை வெளிப்படுத்துவோம்,
கத்தினாலும் குறையாத இந்த காதல் வலியை கத்தாமலையே வச்சிருக்கோம்...

* ஒன்றை இழந்து தான் ஒன்றை அடைய வேண்டும் - ஆனால்
அவளோ காதலனை இழந்து கணவணை அடைந்தாள்.-
நானோ காதலியை இழந்து...மதுவினை அடைந்தேன்.!



லவ்... அட்வைஸ்ஸு...

* அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்...
அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.

* உலகில் மிகப்பெரிய பூ எது....?பெண்.உலகில் மிகவும் அழகு எது....?பெண்.உலகில் அற்புதமான விடயம் எது...?பெண்.கடவுள் எது...?பெண்.
காதலிபவனுக்கும்....காதலித்தவனுக்கும்......!!

* காதலின் சின்னம் கேட்டேன் கல்லறை என்றாள், கல்லறைக்கு வழி கேட்டேன் என்னை காதலி என்கிறாள்.

* நீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்!!!!!!!!!!

* பிகரோட பீச்ல மணல் வீடு கட்டி விளையாடினதோட அருமை அவள் அண்ணா ரவுண்டு கட்டி அடிக்கும் போது புரியும்.


* காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி… தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது...

* விண்ணுக்கு ராக்கெட் அனுப்புறது easy, ஆனா பொண்ணுக்கு bracket போடுறது ரொம்ப கஷ்டம்....!!!

* பெண்களும் இசை தான்.பழகிப்பார் சங்கு சத்தம் வரும்!

* காதலிக்கிறது கஷ்டப்படுறது. கஷ்டப்படாம இருக்க காதலிக்காம இருக்கணும். ஆனா காதலிக்காம இருக்கிறது கஷ்டம். அதுனாலே, காதலிக்கிறதும், காதலிக்காம இருக்கிறதும் ரெண்டுமே கஷ்டம் தான். கஷ்டப்படுறது கஷ்டமானது தான். சந்தோஷம்னா காதலிக்கணும். அப்படீன்னா, ஆனா, கஷ்டப்படுறது ஒருத்தரைக் கஷ்டப்படுத்தும். ஆகையினாலே, இல்லேன்னா காதலிச்சுக் கஷ்டப்படணும்

* லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி! அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி

* எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Genius.... Girls are Selfish...

* Boy : I Love You
girl : I hate you
Boy : Nalla think panni sollu
girl : sure I hate you
Boy : Waiter enakku mattum Bill Podu
...girl : hay...hay I Love You da

* பசங்க ஏன் லவ் பன்றாங்கான Friends இருக்காங்க எப்படியும் Loveva சேர்த்துவச்சுடுவாங்க ..!என்ற நம்பிக்கைலதான் ...ஆனா பொண்ணுங்க ஏன் Love பன்றாங்கான ..Parents இருக்காங்க கண்டிப்பா எப்படியாவது பிரிச்சு வச்சுடுவாங்க என்ற நம்பிக்கைலதான் ....

புலம்பல்...

* அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை....ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை....பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை....என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?

* 12B ஷாம்க்கு மட்டும் பஸ்ஸில ஏறினா சிம்ரன் ஏறாட்டி ஜோதிகா எண்டு இருக்கும்போது, எனக்கு மட்டும் ஏறினாலும் ஏறாடியும் இறங்கினாலும் தாவினாலும் குதிச்சாலும் ஓடினாலும் ஒரு சப்பை figure கூட கிடைக்க இல்ல......

* உலகத்தில் இத்தனை பெண்களிருந்தும் என்னையேன் யாரும் காதலிக்க மாட்டேங்கிறாங்க... (Fan Group)

---------------------------------------------------------------------------------

Thursday 27 May 2010

கைவரிசை... (படங்கள்)

----------------------------------------------------------------------------------------
கைய வச்சுட்டு சும்மா இருக்காட்டி இப்படித்தான்... ஐடியாக்கல் வரும்...
நான் ரசித்தேன்... நீங்களும் ரசிப்பிங்க என்று நம்புகிறேன்... :)
----------------------------------------------------------------------------------------





























































































----------------------------------------------------------------------------------------

Tuesday 25 May 2010

ஏலியன்ஸ்... பேய்... கடவுள்... (பரிமாணங்கள் - 04)

விளங்க முடியா பரிமாணங்கள்
---------------------------------------------------------------------------------
இது ஏலியன்ஸ்... பேய்... கடவுள்... விளங்க முடியா பரிமாணங்கள் தொடரின் 4ம் பகுதி... போன பதிவில்... எஸ்.எம்.எஸ் என்பவருக்கு விளக்கம் தருவதாக எழுதி இருந்தேன்... இன்னமும் அவருக்கு விளக்கம் கொடுக்க கூடிய அளவுக்கு தெளிவான விளக்கத்தை நான் பெறவில்லை... அதனால்... வரும் பதிவுகளில் நிச்சயமாக அவரின் மாற்றுக்கருத்துக்கு விளக்கம் கொடுப்பேன்... அத்தோடு இந்த தொடர் பதிவு தாமதமானதுக்கு மன்னிக்கவும்... இனி இப்படி நடக்காது... பழையபடி ஒழுங்கான பதிவுகள்... ஒரு ஒழுங்கு முறைப்படி போடுவேன் என்று நம்புகிறேன்... :)

எழுதிய பிறகுதான் பார்த்தேன் பதிவு நீளமாகிவிட்டது... பொறுமையாக வாசிங்க... :)
---------------------------------------------------------------------------------
முன்னைய பதிவுகள்...
பதிவு 01
பதிவு 02
---------------------------------------------------------------------------------

போன பதிவில்... ஒரு ஏலியன்ஸ்ஸின் சம்பவத்தை பாதியில் விட்டிருந்தேன்... இன்று அதிலிருந்து ஸ்ராட் பண்ணுகிறேன்... ( புதியவர்களுக்காக அந்த பகுதியை இணைத்துள்ளேன்... நினைவுள்ளவர்கள்... "***>>> " இக்கு  பிறகு வாசிக்கவும்....

<<<<*****
அமெரிக்காவில்... ஏதோ ஒரு பிரதேசத்தில்...
ஒரு கன்னிப்பெண்னின் நடவடிக்கையில் மாற்றமேற்படவே... அவளது பெற்றோர், அவளை டொக்டரிடம் அழைத்துச்சென்றார்கள்.  அவளை பரிசோதித்த டொக்டர்ஸ் அவள் கர்ப்பம் அடைந்து இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், அப் பெண்ணோ அதனை அடியோடு மறுத்தால்... மேலும்... பெண்ணின் நடத்தையிலும் சில மாற்றங்கள் தென்படவே... டொக்டர்கள் அவளை ஹிப்னாடிஸத்துக்கு உட்படுத்த முடிவெடுத்தார்கள்.

ஹிப்னாடிஸத்தின் போது... அப்பெண் சொன்ன விடையங்கள் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது....

ஏலியன்ஸினால் பரிசோதிக்கப்பட்டதாக நம்பப்படும் பெண் சொன்னது இதுதான்...

ஒரு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தனியாக வீட்டிலிருந்த போது... ஜன்னலடியில் ஏதோ சத்தம் கேட்பதாக உணராவே, ஜன்னலோரமாக சென்று பார்த்தேன். அங்கு சில குள்ளமான...ஒல்லியான.... பெரிய தலையுடைய மனிதரை ஒத்த உருவங்கள்... வீட்டை நோக்கு வந்துகொண்டிருந்தது. நான் வீட்டை தாள்பால் போட்டு விட்டு... உள்ளேயே இருந்தேன்... அவர்கள், கதவை திறக்காமலே உள்ளே வந்து... என்னை நோக்கி ஏதோ செய்துவிட்டு... என்னை அவர்கள் வந்த வாகனத்துக்குள் அழைத்து சென்றார்கள். பின்னர்.... எனது உடலில் ஏதேதோ சோதனை நடத்தினார்கள்.
இறுதியில்... நான் எங்கு இருந்தேனோ அங்கேயே இருந்தேன்....

*****>>>
அந்த தகவல்கள் யூ.எஃப்.ஓ இல் பதிவு செய்யப்பட்டது...

அடுத்து ஒரு 6 மாத காலத்தின் பின்னர்...

காலையில் எழுந்து பார்த்த அந்த பெண் அதிர்ச்சியுற்றாள்... காரணம் அவளது வயிறு பிள்ளை இருப்பதற்கான எந்தவித அறிகுறியுமில்லாமல் இருந்தது....
உடனே டொக்டரிடம் சென்று செக் பண்ணி பார்த்தார்கள்... என்ன ஆச்சரியம்... வயிற்றில் பிள்ளை இருந்தமைக்கான எந்தவித அறிகுறியுமே இல்லை!!!!

மீண்டும் ஹிப்னாடிஸம்...  அதே போன்ற சம்பவத்தையே பெண் மீண்டும் சொன்னால்...

அப்படியானால் என்ன நடந்து இருக்கும்????

வேற்றுக்கிரக வாசிகள் என பரவலாக நம்பப்ப‌டும் ஏலியன்ஸ் ஏன் அந்த பெண்ணின் வயிற்றில் குழந்தையை உருவாக்கி இருக்க வேண்டும்...  ஏன் மறுபடியும் அந்த கருவை கலைத்திருக்க வேண்டும்... அல்லது 6 மாதமான அந்த கருவை அவர்கள் தமது பரிசோதனைகளுக்காக கொண்டுசென்றார்களா???  பூமியிலுள்ள மனிதர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள் என்பதை அறிவதுதான் அவர்களின் நோக்கம் என்றால் அது ஏன்????

போன்ற பல கேள்விகள்... தேங்கி நிற்கின்றன.

---------------------------------------------------------------------------------

அடுத்து ஒரு இன்னொரு விசித்திர சம்பவம்...

இதுவும் பெயர்,ஊர் தெரியாதது... ( தெரிந்தவர்கள் கூறவும்...)

இரண்டு நண்பர்கள்... ஆற்றங்கரையோரமாக வந்து கொண்டிருந்தார்கள்... அப்போது... கண்ணைக்கூசச்செய்யும் வெளிச்சத்துடன்... பறக்கும் தட்டு ஒன்று வந்திறங்கியது... அந்த அதிர்ச்சியில் ஒரு நபர் மயக்கமுற்றுவிட்டார்...
மற்றவர் பார்த்தபோது ஒன்றுமே இல்லை... தனது நண்பர் மட்டும் மயக்கமுற்றிருப்பதைக்கண்டு... உடனே அவரை ஹொஸ்பிட்டலுக்கு கூட்டிச்சென்றார்... மயக்கம் தெளிந்த பின்னர் அந்த நபர்... டொக்டர்களிடம் தமக்கு நடந்தவற்றை கூறினார்...

அங்கு இருந்த யூ.எஃப்.ஓ ஆராச்சியாளர்களுக்கு தகவல் அனுபப்பட்டு... அவர்கள் இந்த நபர்களை பரிசோதிக்க முடிவெடுத்தார்கள்... இருவரையும் ஹிப்னாடிஸத்துக்கு உட்படுத்தியபோது...
ஒரு சிறிய வியப்பு காத்திருந்தது....

ஆம்...
அந்த மயக்கமுற்ற நபரிடம் ஏலியன்ஸ்கள் எந்தவிதமான சோதனைகளையும் செய்யவில்லை...
மாறாக... சுய நினைவுடனிருந்த நபர் சொன்னபடி... அவரை தமது ஓடத்துக்குள் அழைத்துச்சென்று... சில கருவிகள் மூலமாக இவரின் உடலில் துளைகள் இடாமலே ஏதேதோ ஆராச்சிகள் செய்தார்களாம்...

இதிலிருந்த சில முடிவுகளை நாங்கள் எடுக்க முடியும்...

இங்கு... மயக்கமுற்ற நபருக்கு... ஏலியன்ஸ் வந்தது தெரியும்...( அதை பார்த்த பின்னர்தான் அவர் மயக்க மடைந்தார்...) ஆனால், சுய நினைவுடனிருந்தவருக்கு அது தெரியாது... அப்படி என்றால்... ஏலியன்ஸ் ஏதோ ஒரு முறையை பயன்படுத்தி நினைவுகளை அழித்திருக்கிறார்கள். அவ்வாறு அழிப்பதற்கு மனிதன் சுய நினைவுடனிருக்க வேண்டும். இல்லை என்றால்... ஏன் அவர்கள் அந்த மயக்கமுற்ற‌ நபரின் நினைவை மட்டும் அழிக்கவில்லை...
ஆகவே... அவர்கள் எமக்கு உட்படாத தமது பரிமாணத்தை பயன்படுத்தியோ... அல்லது... எம்மைத்தாண்டிய அவர்களது அறிவை ( 7 வது அறிவு என்றும் வைத்துக்கொள்ளலாம்...) பயன்படுத்தியோ... எமது கண்கள்(????) ஊடாக தமது கட்டுப்பாட்டுக்குள் எங்களை ஆட்படுத்துகிறார்களாக இருக்கலாம். ( மயக்கமுற்றமையால் அந்த நபரை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை போலும்... )

---------------------------------------------------------------------------------

அடுத்து...

கோர்டன் குஃபெர் என்ற ஜேர்மனிய விண்வெளி வீரர்... தான் இராணுவத்தில் பணியாற்றிய போது தனக்கு நிகழ்ந்ததை விபரிக்கின்றார்...
"நான் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது... எனது விமானத்தை தாண்டி ஒரு மாறுபட்ட விமானம் பறந்தது... நான் அதை பின்தொடர்ந்து சென்றபோது... அது எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விரைவாகவும் கிட்டத்தட்ட 90 பாகையில் அதன் திசையை மாற்றி மறைந்துவிட்டது..."

இந்த சம்பவத்தில் அவர்கள் எம்மை விட எவளவு கூடிய அறிவை பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகும்... அதாவது... இவரின் கூற்றுப்படி பார்க்கும் போது அது... கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பறந்திருக்கிறது என்ற முடிவுக்குவரலாம்.... 90 பாகையில் மாறி மாறி திசை திருப்புவது என்பது நமது அறிவுக்கு இன்னமும் சாத்தியமாகாதது...

---------------------------------------------------------------------------------

சம்பவங்கள் இருக்கட்டும்... இவ்வாறான மேலும் சில முக்கிய சம்பவங்களை பிறகு பார்க்கலாம்...

அதுக்கு முதல்....

எகிப்திய சுவரோவியங்களை பார்த்தொமானால்... அதில் வேற்றுக்கிரக வாசிகள் என கருதப்படும் ஏலியன்ஸின் உருவ அமைப்புக்கள் காணப்படுகின்றன... ஆனால் என்ன குழப்பம் என்றால்... அவை மனிதனுடன் சேர்ந்து உதவுவதுபோன்று வரையப்பட்டுள்ளது. ( இது சில நேரம்... அவர்கள் இணைந்து செயற்படாவிடினும் அவர்களிடம் இருந்து பெற்ற அறிவுகளை தாம் எவ்வாறு பயன் படுத்தினோம் என்பதை காட்டுவதற்காகவும் வரையப்பட்டு இருக்கலாம்.)

மேலும்... புராதன குகைகளிலும் ஏலியன்ஸின் உருவ அமைப்பை ஒத்த உருவங்கள் வரையப்பட்டுள்ளன...

இதற்கு மேலாக... இராமாயணத்தில் இராவணனின் வாகனமான புஸ்பக (புட்பக) விமானத்தின் இயக்கமானது...  தரையிலிருந்து செங்குத்தாக கிழம்பி எங்கு வேணுமென்றாலும் குறுகிய நேரத்தில் செல்லத்தக்கது என்று கூறப்படுகிறது. இது உண்மையோ இல்லையோ... அது வேறுவிடையம் ஆனால், புராதன மக்கள் ஏலியன்ஸின் இயக்கத்தை உண்ணிப்பாக அவதானித்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

---------------------------------------------------------------------------------

அடுத்து நான் போன பதிவில்.... தற்போது மனிதனின் பரிமாணவளர்ச்சி பற்றி கூறியிருந்தேன்...
அதன்படி பார்க்கையில்... இனி... எதிர்காலத்தில்...
மனிதன் தந்து உடல் வலுவைவிட மூளையைத்தான் பயண்படுத்தப்போகிறான்... ஆகவே... நமது விஞ்ஞானிகளின் கணிப்பு படி... அடுத்த கட்டமாக...
மனிதனின் உடல் சிறுத்து... தலை பெருக்கும்... அத்தோடு பார்வைப்புலன் விரிவடையவே கண்ணும் அகலாம்... என்னதான் கருவிகள் வந்தாலும்... பெரும்பாலும் அவை கைகளாக் இயக்கப்படுபனவே... எனவே கையும் நீளகாகலாம்... (உடம்ப்பு சிறிதாகும் போது கை நீளமாகாவிடினும் ஆகியதாகத்தானே தோன்றும்... )
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்பது இப்போது விளங்கியிருக்கு... வரும் பதிவுகளில்... அதை தெளிவாக விளக்குகிறேன்....

---------------------------------------------------------------------------------
பதிவுகள் வர வர நீளமாகின்றன...
அடுத்து எஸ்.எம்.எஸ் இக்கான விளக்கத்துடன்...
வரும்பதிவுகளில்...
1000 சிப்பாய்கள் ரஷ்ய மலைப்பகுதியில் காணாமல் போனது எப்படி....
"என்னை காப்பாற்றுங்கள்..." என்று குரல் மட்டும் கேட்டது எப்படி?
நாய் இருக்கு... மற்றவர்கள் எல்லாம் எங்கே...  போன்ற வியத்தகு சம்பவங்களுடன் பதிவை தொடர்வேன்...
---------------------------------------------------------------------------------

Monday 24 May 2010

நாங்கள் (தமிழர்) ஏன் இப்படி இருக்கம்??? ( :@ )

**************
----------------------------------------------------------------------------------
ம்ம்... மற்ற தொடர் பதிவுகளை எழுத முதல்... இந்த பதிவை நான் எழுதனும்... இது கூட செய்யலனா எப்படி...

ஒவ்வொரு மனிதாபிமானமுள்ள மனிதனும்... இதனால்... நிச்சயம் பாதிக்கப்பட்டு இருப்பான் என்பது உண்மை...
அதிலும்... தமிழர்களாகிய நாம்... இதை கண்டு... பொத்திட்டு இருந்தால் அதை விட கேவலமானது ஒன்றுமில்லை... ஆனாலும் என்ன செய்ய அதைத்தான் நாங்கள் செய்துட்டு இருக்கம்...

அது எங்கட பிழை இல்லை... இதெல்லாம்... எங்கட முன்னோர்கள் காலத்திலேயே எங்க ரெத்தத்துடன் கலந்து போய்விட்ட ஒரு ரெக்னிக்கலான வீரம்...

அது எப்படி எங்களிட இரத்தத்துடன் ஒன்றித்துப்போனது என்பதை பார்க்க முதல்...
----------------------------------------------------

போன கிழமை... இலங்கை இறுதியுத்தத்தில் ஒரு இளைஞனை வெட்டி வெட்டி கொல்லும் காட்சியை லங்காசிறீ உட்பட அனைத்து பிரபல தமிழ் இணையத்தளங்களும்... பிரசுரித்திருந்தன... கூடவே... சனல் 4 ஆல் வெளியிடப்பட்ட அதிர்ச்சி மிக்க காட்சிகளும் வீடியோவா ஓடிச்சு...

அந்த இளைஞனை வெட்டி கொல்வதை பார்க்கும்போது... ******** (வார்த்தைகளால் விபரிக்க முடியாதது.)
இறக்கிறதுக்கு கொஞ்ச நேரம் முதல் வரைக்கும் எங்களது ஒட்டுமொத்த உரிமைக்காகவும் போராடிய அந்த அப்பாவி சிரித்து இருக்கார்...

(படங்களையோ... வீடியோவையோ பெருசா இணைக்க வரும்பவில்லை... பார்க்க பார்க்க... ம்ம்ம்.... என்ன சொல்றதென்டே தெரியல... )

இதெல்லாம் பாத்திட்டும்... நாங்க வழமை மாதிரி சோத்து பானையை காலி செய்றம்... டி.வி ல முக்கியமான மானாட மயிலாட போன்ற பயன்மிக்க நிகழ்ச்சிகளை பார்த்து அறிவை வளத்துக்கிறம்...
போதாததுக்கு... தூரத்தில நிக்கிறவனைப்பார்த்து சிரிச்சுக்கொண்டே பக்கத்தில இருக்கிறவனுட்ட அவனை போட்டு கொடுக்கிறம்...
இப்படி கனக்க அன்றாட நடவடிக்கைகளுக்கு மத்திலயும் ... நாங்கள் எங்கட நடிகர்களின் படங்களை ஃபெஸ்ட் ஸோ பாக்கிறதையும் மறக்காம கடைப்பிடிக்கிறம்...

இதெல்லாம்... ஒரு பிளைப்பாவே நாங்க வச்சுகிட்டிருக்கம்...

அதுக்காண்டி... சாப்பிடாம, டீ.வி பாக்காம இருக்கனும் என்று சொல்ல வரல...
குறைந்த பட்சம் ஒரு சின்ன எதிர்ப்பையாவது நாங்கள் காட்டனுமே... இப்ப இல்லாட்டியும் இனி வரப்போகும் காலங்களிலும் நாங்கள் இதுவரை விட்ட தவறை செய்யக்கூடாது...

அது தான்.... நம்மட அரசியல்ல இருக்கிற கேவலமான சில ஜென்மங்களை இனியும் நம்பக்கூடாது... அதுகளை விரட்டுவது கடினம்தான்... ஆனா... "புதுசா தேர்தல்ல நிக்கிறவனை நாங்க எப்படி நம்பிறது...??? இவரும் இப்படிதான் இப்ப இருப்பாரு பிறகு பதவி வந்தா மாறிடுவாங்க..." என்ற மொக்குத்தனமான எதிர்வுகூறல்லகளை விட்டுட்டு வர்களுக்குள் இருக்கிற நல்ல கொள்கையுள்ளவர்களை உயர்த்தனும் என்று நான் நினைக்கிறேன்...
இவ்வளவு நாளா இந்த உலகமகா நடிகர்களை ( அரசியல் புள்ளிகள்) நம்பி ஏமாந்த நாங்க ஏன் புதுசா வாறவனுக்கு ஒரு சான்ஸ் கொடுக்க கூடாது... ( இது இலங்கை விடையத்தில் தலைகீழா போனது வேற விசையம்...)

இந்திய அரசியலை பற்றி கதைக்கிற உரிமை எங்களுக்கு பெருசா இல்லை... ஆனா... நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறதுக்கு இந்தியாவும் முக்கிய காரணாம்... அதுவும் ஒரே மொழி பேசிட்டு தொப்புள் கொடி உறவு... அந்த உறவு... இந்த உறவுனு... சென்டிமென்டா மட்டும் ஃபீல்ங்கொடுத்து அரசியலை ஓட்டுற சில மனித உருவில் உலாவிக்கொண்டிருக்கிற சுயநல வாதிகளும் காரணம்...

சோனியாகாந்தி உண்மைலையே ஒரு சிறந்த பெண்மனிதான்... அதிலும் சிறந்த மனைவி... எப்படியோ... தன்ற கணவரை கொலை செய்தவர்களை பழிவாங்கிட்டா...
என்ன... இப்ப எங்கள்ளையும் கனக்க சோனியாகாந்திகள் உருவாகி இருப்பார்கள்... என்றைக்காவது ஒரு நாள் அதற்கு யாராவது பதில் சொல்லித்தான் ஆகனும்.

சரி... எங்கட நாட்டு பச்சோந்திகளை பார்த்தா...

முதல்ல தாங்களும் சேர்ந்து... தனி நாடு என்டுதுகள்... இப்ப கொஞ்சனாலுக்கு முதல்ல... தங்களுக்கு ஏதாச்சும் நடந்திட கூடாது என்ற பரந்த மனப்பாங்கோடு... ஒரே நாடு சமத்துவ தீர்வு... என்கிற இனி நடக்க சந்தர்ப்பம் மிக..மிக... குறைவான ஒரு கொள்கையை உருவாக்கிட்டு இருக்குதுகள்...

இவர்கள்தான்... போன வருடம் இலங்கையில் கொடூரமான யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது... இந்தியாவுக்கும்... வேறு சில நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் உயிருக்கு ஒரு ஆபத்தும் வராமல்... காத்துக்கொண்ட எங்கள் தலைவர்கள்....
என்ன தங்களை வோட்டு போட்டு...  வேட்டி சட்டை( சிலது கோட்டு சூட்டு) போட்டுட்டு பாராளுமன்றத்திற்கு தங்களது உருமைக்காக அனுப்பி வைத்தவங்கதான் அடிபட்டு சாகிறாங்க என்கிறத மறந்துட்டுதுகள்.

இதெல்லாம் பழசு...

இப்ப பாருங்க...
வீடியோ, ஃபோட்டோ எல்லாம் பக்காவா இருக்கு...
இப்ப தங்கட வெளி நாட்டு பயணங்களை மேற்கொண்டு ஏதாச்சும் செய்யலாமே....
ம்ம்ம்ஹீம்ம்ம் மாட்டாங்க... அதுக்கு காரணம் இருக்கு... அதை இறுதில சொல்லிறன்...

அடுத்தது... எங்கட வெளிநாட்டு தமிழ் பெருமக்கள்...
யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது... ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்தாங்கதான்.... ஆனா, இப்ப ஏன் செய்றாங்க இல்லை... பிடிபட்ட சனங்களை விடுவிக்கிறதுக்காகவாவது செய்யலாமே... அது தான் இல்லை என்றாலும்... யுத்தத்தில நடந்த கொலை குற்றங்களையாவது கண்டித்து செய்யலாமே....
மாட்டம் ஏன்னா நாங சேஃப்ஃபா இருக்கம்... இதுக்கும் காரணம் இருக்கு... அது பிறகு...
( போன முறை மாரி... ரெயினுக்கு முன்னுக்கு படுத்து ஆர்ப்பாட்டம் என்கிற பேர்ல... தஞ்சம் கொடுத்த நாடுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் இடைஞ்சல் கொடுக்காது... எங்க்ட உண்மையான பிரச்சனை என்ன என்பதை அந்த அந்த நாட்டு மக்களுக்கு சென்றடையத்தக்க முறையில வேறு வேறு மொழிகள்ள துண்டு பிரசுரங்கள் அடுத்து கொடுத்தாவது... வேற்று நாட்டு மக்களிட ஆதரவை பெற்றுக்கொண்டாலே போதும்... நாங்கள்... பாதி ஜெய்த்திடலாம்... )


இப்ப பாருங்க சுரேஷ் என்கிறவர்... படிச்சமா... உழைத்தமா... இருந்தமா... என்றில்லாமல் எங்களுக்காக... எங்களையும் மேம்படுத்தனும் என்கிறதுக்காக பாடுபட்டு... இப்ப அமெரிக்க அரசால்... 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு... வாதாடி வெளியேவர காசு இல்லாமல்... இருக்கார்...  எங்களுக்காக பாடுபட்ட இவருக்காவது நாங்கள் உதவுவமா...
ம்ம்ம்...ஹீம்ம்ம்...



கடுப்பில இதையே எழுதினா... எழுதிட்டே இருக்கலாம்... அதால... நாங்கள் ஏன் இப்படி இருக்கம் என்கிறதை கொஞ்சம் பார்ப்போம்....

----------------------------------------------------
பழைய அரசகாலத்தில்... மக்களுக்கு 72 வகையான சலுகைகளை (இவை அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான சிலதையும் கொண்டது) அரசர்கள் கொடுப்பது வழக்கம்...
ஆனால், அவர்கள் தமக்கு சார்பாக இருக்கக்கூடியவர்களுக்கே இதில் உன்னுரிமை கொடுத்தார்கள். இதை எதிர்த்து சில குழுக்கள் உருவானபோது... அதுக்குள் இருக்கும் ஒருவன்... அதை அரசரிடம் போட்டுக்கொடுத்து தான் ரொம்ப நல்லவனாகி அந்த குழுவையே அழித்துடுவான்...
இப்படி ஆரம்பத்தில எங்களுக்குள்ளயே மாறி மாறி குழிவெட்டிட்டு இருந்த நாங்கள்...
முகமதியர் படையெடுப்பின் போது... ஒரு படி மேலே போய்... அவ்ர்களுக்கு ஒட்டு மொத்தமா போட்டு கொடுத்து எங்களது நாட்டையும்... விட்டு கொடுத்து... அவர்கள் தந்த சலுகைகளை வாய் பிழந்து பெற்றுக்கிண்டு ஸேஃப்ஃபா இருந்தம்....
அதோட... வணிகத்துக்கு என்று வந்தவர்களுக்கு... எங்கட நாட்டுல அது இருக்கு... இது இருக்கு... மொத்தத்துல நாங்க இலிச்ச வாயர்கள்... என்று காட்டி... நாடு பிடிக்கும் ஐடியாவையும் கொடுத்தம்... காரணம்... அவர்களிடம் இருந்த தங்க காசை பெற்றுக்கொண்டு நாங்க ஸேஃப்ஃபா இருக்கத்தான்...

பிறகும்... அவர்களுக்கு... எங்கட நாட்டு வளங்களை அப்படியே கொடுத்து... அவர்கள் கொடுக்கும் பிச்சைக்காசை வாங்கி நாமுண்டு எங்கட பிள்ளைகள் உண்டு என்று ஸேஃப்ஃபா இருந்தம்...
இப்ப கூட இதைத்தான் மறைமுகமா ஏற்றுமதி வருமானம் என்கிற பேரல செய்றமாக்கும்...

இப்படி காலம் காலமாக... அடிமையாக இருந்தாலும் பறவாயில்லை... நாங்க ஸேஃப்ஃபா இருக்கனும் என்று எங்கட ரெத்தத்தில விதைக்கப்பட்ட அந்த அடிமைத்தனம்தான்... நாங்கள் இன்றும் இப்படி இருக்க காரணம்...

மொத்தத்தில... "எங்கள்ள தப்பில்லை.... அவங்கதான் காரணம்" என்று சொல்லி... அமைதியாக போறன்... பின்னுக்கு உலகமே கை கொட்டி சிரிச்சாலும் பறவாயில்லை... நான் ஸேஃப்ஃபா இருக்கன்...

பார்த்திங்களா... வடிவா பாருங்க... நான் இதில எழுதி இருக்கிறதில... ஒரு அர்த்தமுமே இருக்காது...
எல்லாம் சும்மா... ஜோக் இக்கு எழுதினன்...
ஏதாச்சும் பிழை இருந்தா மன்னிச்சுக்குங்க... ( ஃபுள்ளா பிழை என்றாலும் ஓ.கே)

ஓ.கே.... நான் படிக்கனு... ஒன்லைன்ன சட் பண்ணனும்... நாளைக்கு மட்ச் பாக்கனும்... பதிவை கொளோஸ் பண்ணுறன்...

ஏன்னா....

நானும் தமிழன்... ஸேஃப்ஃபா இருக்கிற தமிழன்...
----------------------------------------------------------------------------------

Saturday 22 May 2010

லெமூரியா தமிழர்களும் யூதர்களும்!!! (லெமூரியா - 09)

லெமூரியா 
--------------------------------------------------------------------------------------------
போன பதிவில்... லெமூரியா, மகாபாரதம், தமிழ், சமஸ்கிரதம் போன்றவற்றுக்கிடையில் நான் வாசித்து,ஊகித்து அறிந்து கொண்ட சில தொடர்புகளை எழுதியிருந்தேன்.
இன்றும் அவ்வாறான சில சுவார்ஷ்யமான தொடர்புகளை பார்ப்போம்...
--------------------------------------------------------------------------------------------
எகிப்திய நாகரீகத்தினை பார்த்தால்...

மிகவும் பிந்தங்கிய நிலையிலிருந்து திடீரென ஒரு மேன்மையான நிலையை எட்டியுள்ளமை விளங்குகிறது.
அவர்களின் தொழில் நுட்ப அறிவு திடீரென இவளவு வீரியம்மிக்கதாக மாறியமை... அங்கு ஒரு புதிய சமூகம் குடியேறியிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் அலெக்ஸ்ஸான்டர் கொஞ்தர்தேவ் எனும் பிரபல தொல்பொருளாராச்சியாலரும் சொல்லி இருக்கிறார். அவர் அந்த சமூகம் தென் பகுதியிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும்... அது லெமூரியா கண்டத்திலிருந்து வந்து குடியேறிய சமூகமாக இருக்க வேண்டும் என்றும் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
( கொந்த்ரதேவ்... லெமூரியா கண்டம் தொடர்பாக நீண்ட கால ஆராச்சியை மேற்கொண்டு சில உண்மைகளை உலகறியச்செய்தவர் என்பதை நான் ஏற்கனவே இந்த தொடரில் எழுதியுள்ளேன்... )

அத்தோடு... வேறு ஆய்வாலர்களும்... மொசபடேனியம்..(???) மற்ற இடங்கள் மறந்துவிட்டன... போன்ற பாதையூடாக எகிப்துக்கும்... இந்திய பகுதிக்கும்... வியாபாரம் நடந்து இருக்கிறதாம்... மேலும்... அரபிக் கடலோரங்களில் எகிப்துக்கு கொண்டுவரப்பட்ட சில பண்டங்கள் காண்டெடுக்கப்பட்டுள்ளன... ( இதில் தமிழ் சுமேரிய எழுத்துக்கள் இருக்கின்றன என இந்த தொடர் பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டேன்...)

அது இருக்கட்டும்... நாங்கள் எங்களது நூல்களில் இதுகள் சம்பந்தமாக ஏதாவது இருக்கா என்று பார்த்தா... சிலது இருக்கு...
--------------------------------------------------------------------------------------------

மகாபாரத்தில் நகலனின் மகன்... சுக்ராச்சாரியாரின் ம‌களை திருமணம் முடிக்கிறார்.
ஆனால், நகுலனின் மகன்... விடபமன்னனின் மகளின் மூலம் 3 பிள்ளைகளை பெற்றான்.
இதனால், ஆத்திரமடைந்த சுக்ராச்சாரியார் நகுலனின் மகனை வயோதிபமடையச்செய்கிறார். ( இங்கு தவ வலிமை மூலம் முதுமையடைய செய்வதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அது தவ வலிமையாகவுமிருக்கலாம்... அதைவிட முன்னர் வாழ்ந்த அந்த மேம்பட்ட சமூகம்... விரைவில் முதுமையை ஏற்படுத்துவதற்காக ஏதாவது யுக்திகளை கையாண்டதாகவும் இருக்கலாம்... அந்த யுக்திகள் மறைக்கப்பட்டதுக்கு காரணம் நான் ஏற்கனவே போன பதிவில் சொன்னமாதிரி... அனைத்து மக்களுக்கும் அந்த ரெக்னிக் சென்றடையக்கூடாது என்ற உள்னோக்கமாகவே இருக்கும்.)

பின்னர்...
நகுலனின் மகன்... மீண்டும் இளமையை பெற வேண்டுமென்றால்... தனது மகன்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என பரிகாரம் கூறப்படுகிறது. சுக்ராச்சாரியாரின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே... விடபமன்னனின் மகளின் பிள்ளைகளில் ஒருவன் ஒப்பிக்கொள்கிறான். பிறகு... இளமையைப்பெற்ற நகுலனின் மகன்...
தனக்கு உதவ மறுத்த பிள்ளைகளை நாட்டைவிட்டு துரத்துகிறான்...

இவர்களிலிருந்தே யாதவர்களும்... துரியோத‌னின் வம்சமும் உருவாகி இருக்கிறதாம். ( யார்; யார் வழி வந்தவர்கள் என்பது எனக்கு நினைவில்லை/தெரியாது... தெரிந்தவர்கள் கொமென்டில் போடவும்.)

யூதர்களின்... நூலின் படியும்...
ஆபிரஹாம் என்பவருக்கு முதலில் பிள்ளைகள் இல்லை... பின்னர் சேவகி மூலம் பிள்ளைகள் பிறக்கின்றன... நீண்ட கால்த்துக்கு பிறகு... மூத்த மனைவி மூலம் பிள்ளை பிறக்கிறது. மூத்த மகன் வெளியேறுகிறான்... அவன் வழி வந்தவர்கள் அரேபியர்கள்... இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள். என கூறப்பட்டுள்ளதாம். ( நன்றி : குமரி மைந்தன்.)

இந்த ரெண்டிலயுமே... ஒரு குழு நாட்டை விட்டு வெளியேறுகிறது...

இந்த யூதர்களின் "தோரா" நூல்...

எகிப்தில்.... அரசு உரிமை பிரச்சனை காரணமாக, ஒரு தொகை அடிமைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக கருதப்படும் மோஷே (?) வினால் எகிப்திய அரன்மனை நூல்களைப்படித்து எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரம்... மிசிரத்தானம் என்ற சொல்லிற்கு தமிழ் அகராதி... எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என கூறுகிறது.
அதற்கான விளக்கப்படியும்... நாட்டால் விரட்டப்பட்ட ஒருவன் மிலேச்சம் எனும் தேசத்துக்கு சென்று அம்மக்களுடன் கலந்து அரசனமையால் ஏற்பட்ட பெயர் என விளக்கப்படுகிறதாம்.
--------------------------------------------------------------------------------------------
ஆகவே...
இதன் படி பார்க்கும் போது...
லெமூரியா கண்டத்தில் இருந்து அங்குபோய் குடியேறிய மக்கள் கூட்டத்தாலேயே... எகிப்திய நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
(ஏற்கனவே... லெமூரியாவில் பண்டைய தமிழ் ( தற்போது வெகுவாக மாறி இருக்கிறது ) மொழியே பிரதான மொழியாக இருந்திருக்கலாம் என சில சான்றுகள் மூலம் இப்பதிவில் எழுதி இருந்தேன்... இது அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.)

ஆனால்... பின்னர் ஏற்பட்ட சுனாமி, கண்ட தாழ்வு, ( அல்லது அணு யுத்தம்(???) ) போன்ற காரணங்களால்... லெமூரியா திடீரென அழிய... எகிப்தியர்கள் முன்னெச்சரிக்கையாக வரலாற்றை திறமையாக பதிந்து வைத்தார்கள். ( அது விளங்கி கொள்ள முடியாத சித்திர எழுத்திலிருப்பது துரதிஸ்டம்.)

மேலே இருக்கும் வரலாற்று சம்பவங்களிலிருந்து இன்னொன்றும் உறுதியாகிறது...
அதாவது... யூதர்களின் தோரா... எகிப்திய நூலகத்திலிருந்து எழுதப்பட்டது என்றால்... எகிப்தை உருவாக்கிய நகுலனின் மக்களின் வம்சத்தினரால்... எகிப்தில் பதியப்பட்ட லெமூரிய (மகாபாரத) வரலாறே... தோராவிலிம் ( இதை கிறிஸ்தவர்கள் "பழைய ஏற்பாடு" என அழைப்பதும் இதைத்தான்.) சில திரிபுகளின் பின்னர் எழுதப்பட்டு இருக்கலாம்...
--------------------------------------------------------------------------------------------
ஒரு ஒப்பீட்டுக்கே பதிவு நீண்டு விட்டது...
அடுத்த பதிவில்... சேர்,சோழ,பாண்டிய நாடுகள் என்றால் என்ன...லெமூரியாவில் இறுதியாக வாழ்ந்தது யார்...
போன்ற சில நிரூபிக்க பட்ட, படாத வரலாற்று சம்பவங்களை பார்ப்போம்...
--------------------------------------------------------------------------------------------

Thursday 20 May 2010

பாப்லோ நெருடா... (ஒரு பக்க வரலாறு)

பாப்லோ நெருடா...
----------------------------------------------------------------------------------

ஏலியன்ஸ்...பேய்..கடவுள் , லெமூரியா பதிவுகள் எழுதுவேன் என்று கூறியிருந்தேன்...
சில காரணங்களால்...(கொலிஜ்) இன்று எழுதி முடிக்க முடியவில்லை...
சும்மா போடுறதில அர்த்தமே இல்லை...
சனிக்கிழமை இரவு... அந்த பதிவில் ஒன்றைப் போடுவேன்...
அதை தொடர்ந்து மற்றதும் போடுவேன்...

----------------------------------------------------------------------------------
சிலி நாட்டில் 1973-ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும்,எதிர்ப்பில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்களும் சுட்டுக்
கொல்லப்பட்டார்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், 69 வயதான புரட்சிக்கவி பாப்லோ நெருடா, ராணுவ நடவடிக்கையைக் கண்டு கொதித்தெழுந்தார். புதிய ஆட்சியை விமர்சனம் செய்ததால், பாப்லோ
நெருடாவுக்கு மருத்துவ வசதிகள் தடுக்கப்பட்டன. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படாமலே மரணமடைந்தார் பாப்லோ.

அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலந்துகொண்டனர். அவர் எழுதிய புரட்சிக் கவிதைகளுடன், ‘குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே!’ என்ற அவரது மந்திரச் சொல்லும் படிக்கப்பட்டது. அதைக் கேட்டதும்,
மக்கள் கோப‌ம் அப்படியே புதிய ஆட்சிக்கு எதிரான போராட்டமாக மாறியது.
பாப்லோவின் இறுதி ஊர்வலமே ராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறி, பெரும் புரட்சி நடந்து, நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது.

லத்தீன் அமரிக்காவில் உள்ள சிலி நாட்டின் மத்தியப் பகுதியில் இருக்கும் ‘பார்ரல்’ என்கிற சிறு கிராமத்தில் 1904-ம் ஆண்டு பிறந்தார் பாப்லோ நெருடா.
இவர் பிறந்த ஒரு மாதத்திலேயே அவரது தாய் மரணம் அடைய, வளர்ப்புத் தாயிடம் வளர்ந்தார். கவிதை எழுதுவதில் மிக ஆர்வமாக இருந்த பாப்லோ, பதினைந்தாவது வயதிலேயே ‘மழை எங்கே பிறந்ததோ..?’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 19 வயதில் வெளியிட்ட, ‘இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும்’ என்ற அவரது கவிதைத்
தொகுப்பு, அவருக்கு நாடெங்கிலுமிருந்து பெரும் புகழைக் கொண்டுவந்து சேர்த்தது.

அந்த வயதில் செக்கோஸ்லாவாக்கியா நாட்டின் புரட்சிக் கவிஞன் ‘நெருடா’
எழுதிய கட்டுரை ஒன்றில், ‘நாட்டில் குற்றம் நடப்பதைக் கண்டு ஒதுங்கி
நிற்பவர்கள், வாழ்வில் எதையும் சாதிக்கமாட்டார்கள். குற்றம் கண்டு
கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே! அவனால் நாட்டையே தட்டி எழுப்ப
முடியும்’ என்ற வரிகளைப் படித்தபோது, ரத்தத்தில் மின்சாரம் பாய்ந்தது போல
ஒரு துடிப்பும் உத்வேகமும் பெற்றார் பாப்லோ. நெருடாவின் ரசிகனாகி, அந்தக்
கவிஞனின் பெயரையே தன் பெயருடன் இணைத்துக்கொண்டு, ‘பாப்லோ நெருடா’ என்ற பெயரில் புரட்சிக் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இருபத்துமூன்றாம் வயதீலேயே பெரும் கவிஞராகப் புகழ் பெற்று, சிலி நாட்டுத் தூதுவராக நியமிக்கப்பட்டார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று, ‘குற்றம் கண்டால் கொதித்தெழ வேண்டுமென’ புரட்சி விதையை மக்கள் மனங்களில் தூவினார்.

ஸ்பெயின் நாட்டில், 1936-ம் ஆண்டு உள்நாட்டுக் கலவரம் நடந்துகொண்டு
இருந்தபோது அந்நாட்டுத் தூதராக இருந்த பாப்லோ, புரட்சிப் படையினருக்கு
கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுத்தார். புரட்சியைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டி, அவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது ஸ்பெயின். தாய்நாடு திரும்பிய பாப்லோ, அப்போதைய சிலி அதிபரின் போக்கு முதலாளித்துவத்தின் பக்கம் இருப்பதைக் கண்டு அதிர்ந்து, ‘நம் நாட்டை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டார் அதிபர்’ என்று ஆவேசமாகக் குற்றம்சாட்ட, நாட்டில் கலவரம் தூண்டுகிறார் எனக் குற்றம்சாட்டி, அவரை பொலீஸ் கைதுசெய்ய விரைந்தது. பாப்லோ உடனே நாட்டைவிட்டு வெளியேறி ரஷ்யா, கியூபா, பொலிவியா எனப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, அங்கே நடந்த புரட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பொலிவியாவில் சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவரது கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்று பாப்லோ நெருடா எழுதியது.
‘ஒரு கண்டத்தின் தலைவிதியையும், அதன் கனவுகளையும் உயிரோட்டமாகச்
சித்திரித்தவர்’ என்று பாப்லோவுக்கு 1971-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு
வழங்கப்பட்டது. ‘தனி மனித துதிபாடலை ஒழிக்க வந்திருக்கும் எனக்கு சிலை
அமைத்துவிடாதீர்கள்’ என்று தன்னைப் புகழ வந்தவர்களிடமிருந்து விலகி
ஓடினார் பாப்லோ. குற்றம் கண்டு கொதித்தெழுந்து இறுதிவரை
போராடியதால்தான் இன்றளவும் புரட்சிக் கவிஞராக மதிக்கப்படுகிறார் பாப்லோ!

----------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected