Total Pageviews

Tuesday 20 April 2010

தமிழரை இனங்கான்பது எப்படி? ( நகைச்சுவைக்கு மட்டும்.)

நகைச்சுவைக்கு 
---------------------------------------------------------------------------------
(இலங்கைத்) தமிழர் ஒருவரை இனங்காண்பது எப்படி.... என்டுறது சம்பந்தமான நகைச்சுவையான ஒரு தொகுப்பை ஃபேஸ் புக்கில் பார்த்தேன்... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
(சுட்டது அதிகம்...+ சுடாதது கொஞ்சம்... :D )
---------------------------------------------------------------------------------

1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின்
சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.

2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர்,
அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக
பத்திரமாக வைப்பார்கள்.

3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம்
வர எடுப்பார்கள்.

4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.

5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal
என்றே நினைப்பார்கள்.

6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து
வைப்பார்கள்.

7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று
இருக்கும்.

8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை
வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)

9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர்
ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.

10) 'இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது' என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட
இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.

11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து
மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.

13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new
couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.

14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று
சொல்லும் பெற்றோர்கள்; மற்ற 'Uncles And Aunties' என்ன நினைப்பார்களோ
என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.

15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.

16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும்
அதையே விரும்புவார்கள்.

17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத்
தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத்
தம் கடமையாக நினைப்பார்கள்.

18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) எடுப்பார்கள்.

19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர்
தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும்
சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.

20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால்
எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.

21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள்
அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.

22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு
வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet)
தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.

24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும்
மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்

25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு
அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு
விருப்பம் காட்டுவார்கள்.

26)புட்டை யும் சோத்தையும் நீண்டகாலமா தேசிய உணவாக வைத்திருப்பார்கள்>

27)லோங்ஸ் உடுத்துவார்கள் அதுக்கு டென்னிஸ் சப்பாத்து போடுவார்கள்.

28)விழாக்களில் தண்ணி போடுவார்கள் அதை அங்கேயே சத்தியும் எடுப்பார்கள்.

29)கூட வேலை செய்யிறவனை தனக்கு இலாபம் இல்லாட்டியும் முதலாளிக்கு போட்டுக்கொடுப்பார்கள்.

30)ஜோக் சொன்னா...  சிரிக்காமல் எங்க (லொஜிக்) மிஸ்டேக் பிடிக்கலாம் என்று பார்ப்பார்கள்.

ஹீ...ஹீ... இதில குறைந்தது ஒன்றாவது அனைவருக்கும் பொருந்தும்... :D

---------------------------------------------------------------------------------

22 comments:

  1. இது நீண்ட நாட்களா யுஆர் எ தேசி என்ற தலைபில் வளைய வந்துக்கொண்டு இருக்கிறது அதாவது ஒரு 10 ஆண்டுகளாக. இதை யாரோ மொழிபெயர்த்து தமிழில் உலவ விட்டு இருக்கிறார்கள் போலும்.....

    ReplyDelete
  2. மிகவும் ரசித்தேன். ஆனால் கடைசியில் ஒன்றை விட்டுவிட்டீர்கள் நண்பரே.

    31) என்ன வேலை இருந்தாலும், அதையெல்லாம் விட்டிட்டு, இந்தப் பதிவை நிச்சயமாகப் படித்திருப்பார்கள். (தங்களைப் பற்றி அறியத்தான்).

    நானும் ஒரு இலங்கைத் தமிழ் தானுங்கோ.....

    - நாதன்

    ReplyDelete
  3. அவ்வளவு அல்பைகளா இலங்கை தமிழர்கள்? நான் சுயநல வாதிகள் என்று நினைத்தேன்....அதைவிட மகா கேவலமாக இருக்கிறதே?

    ReplyDelete
  4. இது இந்தியர்கள் அனைவருக்குமே பொருந்தும் நண்பா ....

    ReplyDelete
  5. yaar athu chinna jhonaa

    ReplyDelete
  6. ரொம்ப சரி...!

    "13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்."

    இது தமிழ்நாட்டுத்தமிழனும் பண்ணுவான்..!

    ReplyDelete
  7. ஆகா எப்புடி சார் இப்பிடி? கலக்குறீங்க போங்க..... அப்பிடியே எக்சாட்டாநம்ம வீட்டப் பத்தியே சொல்லுறீங்க!

    ReplyDelete
  8. dear friend, exactly its our habit eppidiyaaa eppidi ???

    ReplyDelete
  9. கலக்குறீங்க sir

    ReplyDelete
  10. நன்றி...பனிமலர்...
    அப்ப 10 வருசமாகியும் நாங்க மாறவே இல்லையா?... ஹீ...ஹீ
    ----------------------
    நன்றி...Anonymous...
    நானும் தானுங்கோ... :D
    ----------------------
    நன்றி... விருச்சிக காந்த்...
    இத விட கேவலமானவங்களுமிருகாங்க...
    இந்த பதிவு ஜோக் என்று சொல்லியும் விளங்காம... :P
    ----------------------
    நன்றி...Abarajithan & s.n.ganapthi...
    இதுல பாதிக்கு மேல சுட்டது தான்...
    நானும் வாசிச்சதும் வீட்ட கமெரா பூட்டி இருப்பாங்களோ... என்று நினைச்சுட்டேனுனா பாருங்களேன்...:P
    முக்கியமா அந்த 11,19 ஆவது...:D
    ----------------------
    நன்றி...கே.ஆர்.பி.செந்தில்...
    ஹீ..ஹீ... இது பெருந்தன்மை... :)
    ----------------------
    நன்றி...chinnappayal...
    ஹீ...ஹீ...
    ----------------------
    நன்றி...கணா...
    இது நான் மட்டுமெழுதல... பாதிக்கு மேல சுட்டது... :)

    ReplyDelete
  11. tnx...alaparai...
    //Aru athu sinna Jhonaa//
    engalukku Jhona endaale yaarunnu theriyaathu...
    Cinema va patti keelungappa...
    "Sinna thalapathiyaaru... kuruni thala pathi yaaru..." apidina naanga solluvam... :D

    ReplyDelete
  12. nee en kaiyila maatnennu vacchukka, mavane chatni aakkipuduven aamaa......

    ReplyDelete
  13. tnx... tr manasey...
    he...he.. saapidurathulayee irunga... :D
    naan maadinaa chatni ready panniduvinga...
    apa edlikku yaaru??? :P

    ReplyDelete
  14. இன்னம் ஒன்டை விட்டிட்டிங்க ஐயா. பேருந்துலோ தொடருந்துலோ கிட்ட இடத்துக்கு போரது என்டாலும் கோணர் சீட்டுக்கு தன்னுடைய இனத்துடன் அடிபடுவார்கள்.பிடித்த சீட்டை சிங்களவனைக் கண்டால் வாய்போத்தி தலை சொறிந்தபடி கொடுத்து விட்டு கொடுப்புக்குள் திட்டிக் கொண்டிருப்பார்கள். இன்னும் நிறைய அடையாளம் இருக்கு.

    யாழ்.

    ReplyDelete
  15. என்ன தான் இருந்தாலும் உமது தாய் நாட்டை இப்படி கொச்சை படுத்துவது.. அநாகரிகம்... புரிந்ததா? தங்களும் இலங்கையர் என்பதை மறக்க வேண்டாம்...

    ReplyDelete
  16. lishanthmithrau23 April 2010 at 11:04

    17,25,26 super!!!!!!!!!!! true :D

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. 17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத்
    தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத்
    தம் கடமையாக நினைப்பார்கள். nice!!!!!!!!!!!

    ReplyDelete
  19. நன்றி யாழ்...
    நானும் பாத்து இருக்கிறேன்... ( அசட்டு சிரிப்பு ஒன்றுமிருக்குமே... )
    -----------------------------------
    நன்றி வில்லன்...
    என்ற நாட்டுட குறையை பற்றி நான்தானே கதைக்கனும்...
    நான் தழிழரை பற்றிய அரிய வரலாற்று தகவல்களையும் எழுதி இருக்கிறேனே...
    இது நகைச்சுவைக்கானது... கொச்சை படுத்துவதல்ல என்னுடைய நோக்கம்...
    ( இதில இருக்கிறது பொய்யின்னா... மன்னிச்சு கொள்ளுங்க....)
    -----------------------------------
    நன்றி தலைவன்...
    நிச்சயமாக இணைக்கின்றேன்... :)
    -----------------------------------
    நன்றி லிஷான் மித்றா...
    he..he... :D
    -----------------------------------
    நன்றி அஷின்...
    அனுபவமா... lol...

    ReplyDelete
  20. அடங கொக்க மக்க ... கலக்கீடீங்க போங்க .. இன்னும் எவளவோ ..

    ReplyDelete
  21. நன்றி...S.Sudharshan...
    ஹீ... ஹீ... உங்கட லிஸ்டையும் உங்கட புளொக்ல பதிவிடலாமே...

    ReplyDelete
  22. இதைவிட 100 இக்கு மேல list என்னட இருக்கு..
    அத போஸ்ட் பண்ணினா கேவலமா இருக்கும் ..
    ஆனா இத வாசிச்ச பிறகும் யாழ்ப்பாணத்தான் ஒருகதை சொல்லுவான் பாருங்க ,,, அத எழுதில கஷ்டம அனுபவிச்ச தான் புரியும்..

    : நீ தெரு நாய் எண்டா நான் நாய் வால் , நிமித முடியாது : இதுதான் நம்மவர் கொள்கை ...

    நம்மை போல ஒருசிலர் சொல்லி திருத ஏலாது..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected