Total Pageviews

Sunday 11 April 2010

இப்படி இருக்குமோ? (இந்துமதம் + ஐடியா!!!)

இப்படி இருக்குமோ?
---------------------------------------------------------------------------------
எவ்வளவோ பேர்... என்னென்னமோ எல்லாம் ஒப்பிட்டு எழுதுறாங்க...
நாங்களும் எதாச்சும் ஒப்பிட்டு எழுதனுமே என்று தோன்றிச்சு...

இந்து மதத்தை பற்றி பலர் பல பதிவு இடுறாங்க... அதால, நானும் அது சம்பந்தமா ஒரு பதிவு இடப்போறேன்...
எல்லாம் இப்படி இருக்குமோ என்ற ஊகத்தில்தான் எழுதுகிறேன்...

இந்துமதத்தை பற்றிய விளக்கம் தேவையில்லை... அனைவருக்கும் தெரிந்து இருக்குமென நம்புகிறேன்...
இனி எனக்கு தோன்றுபவையையும், நான் அறிந்தவற்றையும் மட்டும் இப்பதிவில் எழுதுகிறேன்...
---------------------------------------------------------------------------------
முதலாவதாக...
மஹாபாரத சம்பவத்தை பார்ப்போம்...

காந்தாரி ( கெளரவரின் தாய் ) கர்ப்பம் தரித்து, பிள்ளையை பெற்றபோது... பிள்ளைக்கு பதிலாக ஒரு சதை பிண்டம் இருந்தது. இதனால் வருத்தமடைந்த காந்தாரி, அந்த சதை பிண்டத்தை பீஷ்மரிடம் (??? சரியாக தெரியாது...) கொண்டு சென்று, தனக்கு பிள்ளைபேறே இல்லையா? என வருந்தினார். அதற்கு, பீஷ்மர்... சில நிபந்தனைகளை சொல்லி, அந்த சதை பிண்டத்தை 101 ஆக வெட்டி 101 பாணைகளில் போட்டு வைத்துவந்தால்... குழந்தைபேறு கிடைக்கும் என்றார்.
இதன்படி அந்த பாணைகளிலிருந்தே... துரியோதனன் முதலான கெளரவர்கள் பிறந்தார்கள்.... என்பது மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த 101 பாணை கதை, தற்போதைய விஞ்ஞானத்தில் வேகமாக வழர்ச்சியடைந்துவரும் குளோனிங் முறையை ஒத்திருப்பதாக சொல்கிறார்கள்.
அதுக்காக, மஹாபாரததிலயே நாங்க இதெல்லாம் பாவிச்சிட்டோம் என்று கூறவில்லை.  ஆனால், சில நேரம்... அந்தகாலத்தவர்கள் இப்படி ஒரு முறையிருப்பதை அறிந்து இருபார்களோ... அல்லது வருமென எதிர்வு கூறியிருப்பார்களோ... தெரியவில்லை.
---------------------------------------------------------------------------------
அடுத்து...
அப்பர் in செயலை பார்ப்போம்...

அப்பர் ஒருவரின் வீட்டுக்கு உணவருந்த சென்றிருந்த போது... அவரது மகன் பாம்பு கடித்து இறந்து இருந்ததாகவும்... பின்னர், மாணிக்க வாசகர் காப்பாற்றியதாகவும் இந்துமத நூல்களிலுள்ளது. ( சம்பந்த பட்டவர்களின் பெயர்கள் நினைவில்லை...)

இது ரைம் ரவலுடன் தொடர்பு படுத்த கூடியது.
ரைம் ரவல் பற்றி கூறும் போது ஐன்ஸ்டைனே... "பெளதிக வளியில் அடைவது ஒரு முறை... வேறு (ஆன்மீக) வழியுமிருக்கலாம்..." என்று இருந்தார்.

இங்கும் அதேதான் நடந்து இருக்கலாம்...
அதாவது, பாம்புகடித்த சிறுவனுடன்; ரைம் ரவல் மூலமாக இறந்தகாலத்துக்கு பயணித்து...
பாம்பு கடிப்பதற்கு முன்னரான காலத்துக்கு சென்று...
பாம்பு கடிக்க முதலே சிறுவனை காப்பாற்றி மீண்டும், நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தமையே இங்கு கூறப்பட்டிருக்கலாம்.
---------------------------------------------------------------------------------
அடுத்து இராமாயணம்...
10 தலை இராவணன்...

10 தலைகளுடன் ஒரு மனுசன் படுக்க முடியுமா??? இங்கயே லொஜிக் மிஸ்ஸாகிதே...
ஆகவே, 10 தலைகள் ( மனிதர்களின்) புத்தியை கொண்ட மனிதர் என்பதை காட்டுவதற்காக கூறப்பட்டு... பின்னர் திரிபடைந்து 10 தலைகள் என்று வந்திருக்கலாம்.

இராவணனின் புஷ்பக விமானம்...

ம்ம்ம்... இது பற்றி கூறும்போது... திடீரென புறப்படக்கூடியதாகவும், திசையை மாற்றத்தக்கதாகவும் கூறப்பட்டுள்ளது...
இதை பார்க்கும் போது... வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ்) வருவதாக கூறப்படும் பறக்கும் தட்டுக்களின் இயக்கத்தை ஒத்ததாகவுள்ளது.

---------------------------------------------------------------------------------
இது நான் சும்மா இப்படி இருக்கலாமோ என்று... கேட்ட + ஐடியாவை எழுதி இருக்கிறேன்.
இதை வைத்துக்கொண்டு, நான் இந்து மதத்தை கேவலப்படுத்துகிறேன் என்று சொல்ல கூடாது.
( "ஒருவருக்கு ஒருவர் சளைக்காத சாமியார்கள் " எழுதினபோது மெயிலுக்கு மஸேஜ் போட்டாங்க...:( )
பிடித்து இருந்தா வோட் போடுங்க... பிடிக்கலனா கொமென்ட்ஸ் போடுங்க... :)
---------------------------------------------------------------------------------
எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை... என்பதற்காக எல்லாம் பொய் என்று சொல்வது என்னை பொறுத்தவரை முட்டால்தனமானது.
---------------------------------------------------------------------------------

14 comments:

  1. வாக்குப் போட்டுவிட்டேன்.

    மனதில்தோன்றியதை தைரியமாக எழுதுங்கள்.

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது .
    ஒரு சந்தேகம் . எதிர்வு கூறப்பட்டதா அல்லது இடம்பெற்றதா எண்டு .

    பல உண்டு மகாபாரத யுத்தம் இடம் பெற்ற போது பீஷ்மர்(சரியாக தெரியவில்லை ) யுத்த களத்தில் நடந்ததை அரண்மனையில் இருந்து பார்த்ததாக கூறப்படுகிறது . கிட்டத்தட்ட டி வி போல .

    ReplyDelete
  3. நீங்கள் சொன்னது தவறு... பீஷ்மர் யுத்த களத்தில் தான் இருந்தார். திருதராஷ்ட்ரன் கு சஞ்சயன் என்பவர் யுத்தத்தில் நடந்ததை அவரின் ஞான த்ரிஷ்டியால் சொன்னார். இந்த வரம் வியாசர் சஞ்சயனிற்கு அருளியது.

    ReplyDelete
  4. நீங்கள் சொன்னது தவறு... பீஷ்மர் யுத்த களத்தில் தான் இருந்தார். திருதராஷ்ட்ரன் கு சஞ்சயன் என்பவர் யுத்தத்தில் நடந்ததை அவரின் ஞான த்ரிஷ்டியால் சொன்னார். இந்த வரம் வியாசர் சஞ்சயனிற்கு அருளியது.

    ReplyDelete
  5. If a Hindu priest can bring by mantras into stone idols like cinema stars bring out cigarette from nowhere on their lips and we are thrilled at it, we believe them. If I question the veracity of it fans of the star will thrash me out of wax or Hindu bandits would do the same equally. Oh, God should save India from such fanatic of blind worship.

    ReplyDelete
  6. Reference to the Sivaite Literature is wrong. It is not Manikkavasagar it is Appar (AKA)Thirunavukkarasar.

    ReplyDelete
  7. அய்யா!!இங்கிலீசு கணவானுகளே!!கொஞ்சம் தமிழில் சொறியுங்களேன்!

    ReplyDelete
  8. tnx...சுமன், S.Sudharshan,இளையான்குடி, viruman & Anonymous... :)

    thavarai suddi kaaddiyamaikku nandri...இளையான்குடி... :)

    ReplyDelete
  9. world poster!!!!!!!!!!!!!!!14 April 2010 at 14:40

    nice name!!!!!!!!! :P

    ReplyDelete
  10. nice keep it up!!!!!!!!!!!!! :)

    ReplyDelete
  11. படமெல்லாம் எங்க புடிச்சீங்க

    ReplyDelete
  12. tnx..world poster!,wordpress.com & jaisankar jaganathan...
    ellaam Google la thaan... :)

    ReplyDelete
  13. அப்பர் என்பதே சரியானது. மாணிக்கவாசக சுவாமிகள் அல்ல. தாங்கள் திருத்திவிடுவது உத்தமமானது. திருத்தாமல் விட்டுவிடுவதிலும் திருத்திவிட்டு, பின்னூட்டத்தில் திருத்தப்பட்டுவிட்டது என்று பதிவுசெய்வீர்களானால் சிறப்புத்தானே......பிழை இருப்பது அழகல்ல.....! தாங்கள் அருமையாக சிந்திந்து எமது சைவநெறியை அழகுபடுத்தியுள்ளீர்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. நன்றி..சிவத்தமிழோன்...
    நான் இப்போதான் மாத்தினேன்... :) தாமதத்துக்கு மன்னிக்கவும்...
    நன்றி... :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected