Total Pageviews

Thursday 29 April 2010

ரசிக்கத்தக்க‌ விளம்பரங்கள்... :D (படங்கள்...)

நான் பார்த்து ரசித்த சில விளம்பரங்கள்...
உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்... :)
--------------------------------------------------------------------------------


























































































































































































































































-----------------------------------------------------------------------------
வெள்ளிக்கிழமை எல்லோரும்... (வேலை முடிந்து) CooOOOL ஆ இருக்க வேண்டிய நாள்.. அதால பதிவுனு ஒன்றும் எழுதல...  :D...
ரிலாக்ஷா இருக்கிறதுக்காக இதப்போட்டன்... :)
-----------------------------------------------------------------------------

Tuesday 27 April 2010

ஏலியன்ஸ்... பேய்...கடவுள்... 3 (விளங்க முடியா பரிமாணங்கள்...)

விளங்க முடியா பரிமாணங்கள்
-------------------------------------------------------------------------------
முன்னைய பதிவுகள்...
பதிவு 01
பதிவு 02
-------------------------------------------------------------------------------
போன பதிவுக்கு... சந்துறு என்பவர்... ஒரு சிறந்த விளக்கத்துடனான கொமென்ட்ஸினை இட்டு இருந்தார்... அதனை இங்கு ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளேன்... இவ்விளக்கத்தின் மூலம் ரைம் ரவலின் மூலமாக இறந்த காலத்துக்கு செல்ல முடியும் என்பதை இலகுவாக விளங்கி கொள்ள முடியும்.
-------------------------------------------------------------------------------

"காலம் மூலம் பின்நோக்கி செல்லுதல் சாத்தியம் என்பதை நான் விளக்குகிறேன். ஒரு பொருளை நாம் பார்க்க பயன்படுவது அதன் மேல் பட்டு வெளிப்படும் போட்டான்ஸ் (photons). பூமி போட்டான்ஸ் வெளியிடமுடியாது, ஏனெனில் இது கிரகம். சூரியனால் முடியும் , ஏன்னா அது நட்சத்திரம். இப்ப நம்மால் பார்க்க சாத்தியம் ஆவது போட்டான்ஸ் ஒரு பொருள் மேல போய் மோதுவதால் . உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் சூரியனிலிருந்து புறப்பட்டு ஒரு போட்டன்ஸ் (light) பூமியை அடைய 8 min 24 sec ஆகும். அதாவது சூரியனில் ஒளி வெளிப்பட்டுவிட்டது, செயல் நடந்து விட்டது. ஆனால் அதை நாம் பார்த்தல் மூலம் அறிய 8 min 24 sec ஆகுது. இது காலத்தால் நிகழுது. இதே நாம் இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். அதாவது ப்லூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.
இததுதான் கால பின்னோக்கி செல்லுதலை நிருபிக்கிறது. அதாவது ஆற்றல் அழிவின்மை விதிப்படி நடந்த நிகழ்ச்சிகளின் காட்ச்சிகளால் வெளிபடுத்தப்பட்ட போட்டான்கள் சென்று கொண்டே இருக்கும். நாம் ஒளியை அதாவது போட்டானை விட வேகமாக சென்று பார்த்தால் அதனை அறிய முடியும். இது தான் time travel என்கிறோம். அப்படிஎன்றால் எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே என்று நீங்கள் கேக்கலாம். அவர்கள் காட்ச்சிகளைதான் பார்க்க முடியும் செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதாவது one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம்.
அதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் டைஹோ பிராகி 1624 -ல் ஒரு நட்சத்திர வெடிப்பை பார்த்து பதிவு செய்தார். அது அந்த நிமிடம் நடந்த நிகழ்வு இல்லை. அது நடந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்தான் அறியப்பட்டது. ஏனென்றால் அந்த நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் தூரம் அதிகமாவதால் ஒளி நம்மை அடைய அவ்வளவு காலம் ஆயிற்று. இந்த நொடியே சூரியன் வெடித்து அழிந்தால் கூட அதை நாம் அறிய 8 min 24 sec ஆகும்.
இதன் மூலமா ஒளியின் வேகத்தைவிட வேகமாக பயணித்தால் இறந்த காலத்திற்குதான் செல்ல முடியும்(அறிய முடியும்), எதிர் காலத்திற்கு அல்ல.
எனக்கு time travel மூலம் எதிர் காலத்திற்கு செல்வோம் என நம்பிக்கை இல்லை. சிலர் parallel universe எனும் கோட்பாட்டின் படி இரண்டும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity ல பயனிச்சா எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம்."

///one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம். ///
இதில் இரண்டு விதமான கொள்கைகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்...

ஒன்று... உலக இயக்கம் ஒரே தொடராக நடந்து கொண்டிருக்கிறது... இதன் அடிப்படையில் பார்த்தால், எதிர்காலத்திலிருந்து வருபவர்களால் (???) இறந்த காலத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றத்தினால்... உலக இயக்கத்தின் தொடர்ச்சி மாற்றமடையும்.
அதாவது... உங்களை எதிர்காலத்திலிருந்து வந்தவர் கொன்று விட்டால்... உங்கள் மூலமாக எதிர்காலத்தில் உருவாகி இருக்கக்கூடிய ( பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்...) அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமாம்.
இந்த கொள்கையில்...
எவ்வாறு அந்த மாற்றம் நிகழும் என்பதற்கு தெளிவான விளக்கமில்லை... அதாவது, ஒருவரை இறந்த காலத்தில் கொன்றால்... நிகழ்காலத்தில் அவருடன் தொடர்புடைய நிகழ்வுகள் திடீரென அழியுமா/ மறையுமா? எனும் கேள்விக்கு சிறந்த விளக்கமில்லை. :(

அடுத்த கொள்கையின் படி...
பல ஃப்ரேம்களாக உலக இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்பதாகும். ( இதை தான் சந்துறுவும் சொல்லி இருக்கிறார்.)
இதன் படி இறந்தகாலத்தில் செய்யும் மாற்றம்... அந்த ஃப்ரேமில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்...
இது நினைத்து பார்க்கவே குழப்பமான கொள்கை.
காரணம், ஃப்ரேம் கொள்கையில்... ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் இடையிலான காலத்தை தீர்மானிப்பது கடினமானது...
ஒரு ஃப்ரேமிலிருந்து இறந்தகாலத்துக்கு சென்றால்... பின்பு எப்படி அதே ஃப்ரேமுக்கு திரும்பி வருவது? என்பது போன்ற பல கேள்விகள் உள்ளன.

சந்துறு சொன்ன படி...
சூரியனிலிருக்கும் ஒளி எம்மை வந்து சேர 8 நிமிடம் எடுக்கின்றது. எப்பவோ நடந்த நட்சத்திர வெடிப்பு தற்போது தான் தெரிகிறது.

அதே போலத்தான்... இந்த பிரபஞ்சம் தோன்றிய போது ஏற்பட்ட பெரு வெடிப்பினையும் தற்போதும் பார்க்கலாம்... இது 14.5 (??) பில்லியன்ஸ் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டது. இதை நாம் படம் பிடிக்க முடியாது... ஏன் என்றால் நம்மிடம் வேகமில்லை... :(
(இப்பிர பஞ்ஞமே சிறியதொரு அணு ( அணுக்கரு) இலிருந்து தான் உருவாந்து.... என்பதை காட்டுவதே இந்த பெரு வெடிப்பு கொள்கை.)
ரைம் ரவலில் முதலில் எழுத மறந்ததையும் இதில் எழுதி விடுகிறேன்...

நாம் ஒளியின் வேகத்தை அன்மிக்கையிலேயே... வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நமது பருமன் பூச்சியமாகிவிடும்...
(அதாவது நம்மை தெரியாது.) ரைம் ரவல் மெஸினிலிருக்கும் எங்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது... அதே போலத்தான் இருப்போம்.
-------------------------------------------------------------------------------
போன பதிவில்...
பழைய மனிதர்களுக்கும்... தற்போதைய மனிதர்களுக்கும்... இடையிலான வித்தியாசத்தை எழுதியிருந்தேன்.

தற்போது கூட...
மனிதர்களில் பரிணாம‌ வளர்ச்சி நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது...
உதாரணமாக...
முன்னர், தலைமுடி கொட்டுவது சம்பந்தமான பிரச்சனை பெரிதாக இருப்பதில்லை... ஆனால், இப்போது பெண்களிடம் கூட அந்த பிரச்சனை இருக்கிறது... இது கூட ஒரு பரிணாம‌ வளர்ச்சியின் படி தான்...
காரணம்,
எவ்வாறு... உடலிலிருந்த முடியின் தேவை முடிவுற்றதும் (உடை பாவணைக்கு வந்த பின்னர்) , அது உதிர்வடைந்ததோ.... அவ்வாறே தற்போது தலை முடியின் தேவையும் அற்றுப்போவதால்... அது உதிர்கிறது. ( மூளை அதிகமாக பாவிக்கப்படுவதும் காரணமாம்... :D )

விஞ்ஞானிகள்...  மனிதனின் அடுத்த பரிணாமம் பற்றி எதிர்வு கூறியுள்ளார்கள்...

அதில் ஒன்று...
அதிகமாக மூளையை பயன்படுத்தும் பகுதியை சார்ந்த மக்களின் தலை பெரிதாக பரிணாமமடையும் எனவும்... இயந்திரங்கள் மனிதன் செய்ய வேண்டிய பல வேலைகளை எதிர்காலத்தில் செய்யும் என்பதால்... மனிதனுடைய உடல் வலு தற்போது தேவைப்படும் அளவுக்கு தேவைப்படாது. எனவே, உடல் சிறுத்துவிடும். ( தொந்தி வயிறு இப்போது அதிகரித்து வருகிறது... பேந்து எப்படி உடல் சிறுக்கும் என்று டவுட் வரலாம்... இது இப்போது உடனே ஏற்படப்போகும் மாற்றமில்லை... சில வேளை எதிர்காலத்தில்... இப்போது, விண்வெளி வீரர்கள் பாவித்துவரும்... சத்து மாத்திரைகள், சாதாரணபாவணைக்கு வந்தால், தேவையில்லாத தொந்தி வர வாய்ப்பில்லை... )

இதற்கும்... ஏலியன்ஸிக்குமிடையிலான தொடர்பினை ஜோசித்து பாருங்கள்... ( அடுத்த பதிவில் தொடர்பினை எழுதுகிறேன்...)
-------------------------------------------------------------------------------
இனி நாம்... ஏலியன்ஸ் சம்பந்தமானதை பார்ப்போம்...

ஏலியன்ஸ் தொடர்பான பிரலமான சம்பவங்களை முதலில் பார்ப்போம்... ( சம்பவங்களில் சம்பந்த பட்டவர்களின் பெயர்கள் நினைவில்லை... :( )

அமெரிக்காவில்... ஏதோ ஒரு பிரதேசத்தில்...
ஒரு கன்னிப்பெண்னின் நடவடிக்கையில் மாற்றமேற்படவே... அவளது பெற்றோர், அவளை டொக்டரிடம் அழைத்துச்சென்றார்கள்.  அவளை பரிசோதித்த டொக்டர்ஸ் அவள் கர்ப்பம் அடைந்து இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், அப் பெண்ணோ அதனை அடியோடு மறுத்தால்... மேலும்... பெண்ணின் நடத்தையிலும் சில மாற்றங்கள் தென்படவே... டொக்டர்கள் அவளை ஹிப்னாடிஸத்துக்கு உட்படுத்த முடிவெடுத்தார்கள்.

ஹிப்னாடிஸத்தின் போது... அப்பெண் சொன்ன விடையங்கள் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது....

அவள் சொன்னதன் சுருக்கம் இது தான்....

ஒரு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தனியாக வீட்டிலிருந்த போது... ஜன்னலடியில் ஏதோ சத்தம் கேட்பதாக உணராவே, ஜன்னலோரமாக சென்று பார்த்தேன். அங்கு சில குள்ளமான...ஒல்லியான.... பெரிய தலையுடைய மனிதரை ஒத்த உருவங்கள்... வீட்டை நோக்கு வந்துகொண்டிருந்தது. நான் வீட்டை தாள்பால் போட்டு விட்டு... உள்ளேயே இருந்தேன்... அவர்கள், கதவை திறக்காமலே உள்ளே வந்து... என்னை நோக்கி ஏதோ செய்துவிட்டு... என்னை அவர்கள் வந்த வாகனத்துக்குள் அழைத்து சென்றார்கள். பின்னர்.... எனது உடலில் ஏதேதோ சோதனை நடத்தினார்கள்.
இறுதியில்... நான் எங்கு இருந்தேனோ அங்கேயே இருந்தேன்....

இது தான் அப்பபெண் சொன்னது.... உடனெ இத்தகவல்... யு.ஃப்.ஓ இக்கு அறிவிக்கப்பட்டு பதுவு செய்யப்பட்டது. 6,7 மாதங்களில்... இன்னொரு பெருமதிர்ச்சி ஏற்பட்டது... அது என்ன என்பதையும்...மேலும் சில சம்பவங்களையும்...  அடுத்த பதிவில் பார்ப்போம்... :)
-------------------------------------------------------------------------------

Saturday 24 April 2010

இரண்டு யூஸ்ஃபுல் சொவ்ட்வெயார்ஸ்...

ஸ்கிறீன் ரெக்கோடர்
---------------------------------------------------------------------------------
இன்றும் தொடர் பதிவை தொடர்ந்து எழுத முடியவில்லை...

ஆனால், இது பயனுள்ள சொஃப்ட்வெயார்( + Crack or Serial) என்று நினைக்கிறேன்...  அதனால் பகிர்ந்துகொள்கிறேன்...
---------------------------------------------------------------------------------

நாம் கொம்பியுட்டரில் செய்து கொண்டிருக்கும்... அனைத்தையும் வீடியோவாக ரெக்கோர்ட் பண்ணுவதற்கு இது ஒரு சிறந்த மென்பொருளாகும்...
இதில் இலகுவாக, மைக்றோ ஃபோன் மூலமாக சசுன்டையும் இணைக்க முடிகின்றமை ஒரு சிறப்பு.
எங்களுக்கு தேவையான ஏரியாவை மட்டும் செலக்ட் பண்ணி இலகுவாக ரெக்கோர்ட் பண்ண முடிகிறது.
மென்பொருளின் அளவும் சிறியதாகவே உள்ளது. (6.36 MB)

வீடியோ ரியூட்டோரியல்கள் தயாரிப்பவர்களுக்கு ஒரு சிறந்த மென்பொருள்.

டவுன்லோட் பண்ண இதை கிளிக் பண்ணவும்...
அல்லது...
இதை கிளிக் பண்ணவும்... 
அல்லது...
இதை...
---------------------------------------------------------------------------------
*************************************************************
---------------------------------------------------------------------------------
 Blaze Medai Pro v9.10
---------------------------------------------------------------------------------


இது சம்பந்தமான இன்னொரு... இன்னொரு மென்பொருளும் இருக்கிறது...

இது வீடியோ எடிட் பண்ணுவதற்கு ஏற்ற ஒரு சொஃப்ட்வெயார்...
அனைத்து விதமான வீடியோ ஃபோமேர்ட்களும் சப்போர்ட் பண்ணுவது இதன் சிறப்பு...
மென்பொருளின் அளவும் சிறியதுதான்...(24.49 MB)


டவுன்லோட் பண்ண இதை கிளிக் பண்ணவும்...
அல்லது...
இதை கிளிக் பண்ணவும்...
---------------------------------------------------------------------------------

Thursday 22 April 2010

பிரபல...மிஸ்டேக்ஸ்... (படங்கள்...)

மிஸ்டேக்ஸ்
---------------------------------------------------------------------------------
இன்று பதிவு எழுத முடியவில்லை... அதனால், இது...

முட்டால் தனமா...பிரபல பேப்பர்கள், விளம்பரங்கள் என்பவற்றுல பிழை விட்டு இருக்காங்க...

பிழைகண்டு பிடிக்கிறது தானே நம்ம கூட பிறந்த குணமே... ஹீ...ஹீ...  வாங்க‌ கண்டு பிடிக்கலாம்...

---------------------------------------------------------------------------------
















Tuesday 20 April 2010

தமிழரை இனங்கான்பது எப்படி? ( நகைச்சுவைக்கு மட்டும்.)

நகைச்சுவைக்கு 
---------------------------------------------------------------------------------
(இலங்கைத்) தமிழர் ஒருவரை இனங்காண்பது எப்படி.... என்டுறது சம்பந்தமான நகைச்சுவையான ஒரு தொகுப்பை ஃபேஸ் புக்கில் பார்த்தேன்... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
(சுட்டது அதிகம்...+ சுடாதது கொஞ்சம்... :D )
---------------------------------------------------------------------------------

1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின்
சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.

2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர்,
அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக
பத்திரமாக வைப்பார்கள்.

3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம்
வர எடுப்பார்கள்.

4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.

5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal
என்றே நினைப்பார்கள்.

6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து
வைப்பார்கள்.

7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று
இருக்கும்.

8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை
வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)

9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர்
ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.

10) 'இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது' என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட
இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.

11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து
மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.

13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new
couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.

14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று
சொல்லும் பெற்றோர்கள்; மற்ற 'Uncles And Aunties' என்ன நினைப்பார்களோ
என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.

15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.

16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும்
அதையே விரும்புவார்கள்.

17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத்
தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத்
தம் கடமையாக நினைப்பார்கள்.

18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) எடுப்பார்கள்.

19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர்
தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும்
சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.

20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால்
எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.

21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள்
அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.

22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு
வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet)
தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.

24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும்
மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்

25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு
அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு
விருப்பம் காட்டுவார்கள்.

26)புட்டை யும் சோத்தையும் நீண்டகாலமா தேசிய உணவாக வைத்திருப்பார்கள்>

27)லோங்ஸ் உடுத்துவார்கள் அதுக்கு டென்னிஸ் சப்பாத்து போடுவார்கள்.

28)விழாக்களில் தண்ணி போடுவார்கள் அதை அங்கேயே சத்தியும் எடுப்பார்கள்.

29)கூட வேலை செய்யிறவனை தனக்கு இலாபம் இல்லாட்டியும் முதலாளிக்கு போட்டுக்கொடுப்பார்கள்.

30)ஜோக் சொன்னா...  சிரிக்காமல் எங்க (லொஜிக்) மிஸ்டேக் பிடிக்கலாம் என்று பார்ப்பார்கள்.

ஹீ...ஹீ... இதில குறைந்தது ஒன்றாவது அனைவருக்கும் பொருந்தும்... :D

---------------------------------------------------------------------------------

Sunday 18 April 2010

ஹொசிமின் - (ஒரு பக்க வரலாறு)

ஹொசிமின் 
---------------------------------------------------------------------------------
பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டுக்கு, 1942-ம் ஆண்டில் அடிமையாக இருந்தது வியட்நாம். வியட்நாமியர்கள் கடும் துன்பம் அடைந்து, ‘‘இதற்கு மேலும் பொறுக்க வேண்டாம். உடனே போரிட்டு இரண்டு நாட்டுப் படைகளையும்
விரட்டுவோம்’’ என்று ‘வியட்நாமின் போராட்டக் குழுத்தலைவர் குயென்அய்கோக்கிடம் முறியிட்டனர்.

‘‘இது சரியான நேரம் அல்ல; இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருப்போம்’’ என்றார். ‘‘பட்டினியாலும், ராணுவ நெருக்கடியாலும் மக்கள் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கும்போது போரிடாமல் பொறுமை காப்பது கோழைத்தனம்’’ என்றார்கள்ஜனங்கள். ‘‘நீங்கள் நினைப்பது போல் பொறுமை என்பது பலவனீமல்ல; அதுவும் போராட்டமே! விரைவில் பிரான்ஸ் - ஜப்பான் இடையில் மீண்டும் மோதல் ஏற்படும். அல்லது, ஏற்பட வைப்போம். அதுவரை பொறுமை காப்போம்’’ என்றார் குயென்.

அவர் சொன்னபடியே ஜப்பான் மீண்டும் பிரெஞ்சுப் படைமீது தாக்குதல்
தொடுக்கவே, அவர்கள் ஆயுதங்களை வியட்நாம் போராட்டக் குழுவிடம்
ஒப்படைத்துவிட்டு ஓடினார்கள். ஆயுதங்களைக் கைப்பற்றிய வியட்நாம் போர்ப்படையினர் அதைக்கொண்டு ஜப்பான் படைகளை விரட்டியடித்தனர். 1945-ம்வருடம் சுதந்திர வியட்நாம் அரசின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் குயென் என்கிற ஹொசிமின்.

வியட்நாமில் சிம்லியன் என்னும் ஊரில் 1890-ம் வருடம் பிறந்தார் குயென்-
டாட்தாங். கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோதே பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மாணவர்களுடன் போராடத் தொடங்கினார். ஆனால், அந்தப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்டது. பொறுமையாக இருந்து சரியான நேரத்தில் போராடினால்தான் வெற்றி கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்ட குயென், 1911-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் சுற்றி, இறுதியாக பிரான்ஸ் நாட்டில் ‘குயென்அய்கோக்’ என்ற பெயருடன் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில்இணைந்து, வியட்நாம் விடுதலைக்காக உரிமைக்குரல் கொடுத்தார்.

அதனால் பிரான்ஸ் அரசு அவ‌ரை கைதுசெய்து தூக்கிலிட உத்தரவு பிறப்பித்ததும்,மாறுவேடத்தில் ரஷ்யாவுக்குத் தப்பியோடினார். ரஷ்யாவில் இருந்தபடியே குயென் வழிகாட்ட, வியட்நாமில் கம்யூனிஸக் கட்சி தொடங்கப்பட்டு, போரிடத் தயாராக புரட்சிக் குழுவும் உருவானது. 1942-ம் வருடம் தாய்நாடு திரும்பிய குயெனின் பொறுமையான போராட்டத்தின் பரிசாக 1945-ம் வருடம் வியட்நாமுக்கு விடுதலை கிடைத்தது.

அமெரிக்கா, 1960-ம் வருடம் வியட்நாம் மீது போர் தொடுத்தது. ‘‘இந்தப் போர் ஐந்து, பத்து... ஏன், இருபது ஆண்டுகள்கூட நீடிக்கலாம். நாட்டின் மொத்த வளங்களும் அழிய நேரிடலாம். ஆனாலும், இறுதிவரை போராடி வெற்றி
பெறுவோம். அதன் பின், இதனிலும் வலிமை வாய்ந்த நாடாக வியட்நாமை நிர்மாணிப்போம்’’ என்று வானொலியில் முழங்கினார் ஹொசிமின். கடைசி நிமிடம்வரை போர் ஆலோசனையில் இருந்த ஹொசிமின், உடல்நலம் குன்றி 79 ம் வயதில் மரணமடைந்தார். ஆனாலும் அவர் வழிகாட்டியபடி, பொறுமையாகக் காத்திருந்து எதிர்பாராத தாக்குதல் நடத்தி உலகப் பேரரசு என மார்தட்டிய அமெரிக்கப் படைகளை 1975-ம் வருடம் விரட்டியடித்து, வரலாற்றில் இடம் பிடித்தது வியட்நாம்.

---------------------------------------------------------------------------------

Saturday 17 April 2010

லெமூரிய தமிழர்கள்... (லெமூரியா 08)

 லெமூரியா
---------------------------------------------------------------------------------
குமரிக்கண்டம் தொடர்பான பதிவு எழுத முன்னர், நான் அது தொடர்பான ஒரு ஃப்லாஸ் விளம்பரம் போட்டு இருந்தேன். அதில், "தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு..." என்று ஒரு வசனத்தையும் இணைத்து இருந்தேன். அதன் நோக்கம் லெமூரியா கண்டத்துடன் தமிழரின் வரலாற்றையும் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவே.
அதன்படி இன்று அந்த ஒப்பீட்டை கொஞ்சம் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்...
இதில் எழுதப்போகும் பல விடையங்கள் நான் வாசித்து; சரியாக இருக்க‌லாமென நம்பும் விடையங்களே.... சிலது நான் இப்படி இருந்து இருக்கலாம் என்று நினைப்பவை... ஆகவே, எதுவும் நூறு வீதம் நம்பத்தக்கது இல்லை. 
நீங்களும் உங்களுக்கு தோன்றுபவற்றை கொமென்ட்ஸில் போடுங்கள். அப்போதுதான் இந்த பதிவு கொஞ்சமாவது பிரயோசனமாக இருக்கும். :) .

இந்த பதிவு எழுதும் போது பல சம்பவங்கள், இந்துக்களின் புராண நூல்களை அடிப்படையாக கொண்டே இருக்கும். ( நான் இந்து என்பதால் அவை பற்றிதான் எனக்கு தெரியும்.) இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு மத நூல்கள் அல்லது கோட்பாடுகள் தெரிந்திருந்தால் எழுதவும். :) .
---------------------------------------------------------------------------------
நூறு... இருனூறு வருடங்களுக்கு முன்னர் கூட, உலகின்...முக்கியமாக ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள், தொழில்நுட்ப நுட்பங்கள் என்பன‌ இலத்தீன் மொழியிலேயே இருந்தது. ( ஐரோப்பிய நாடுகளில் பேசப்பட்டுவரும் மொழிகள் பல கிரேக்க மொழியை அடிப்படையாக கொண்டதாகும்.)
இதற்கான காரணம்... குளூக்குறி (?) ( இரகசிய மொழி) / மறை மொழியில் சட்டங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.
காந்தியடிகள் சட்டம் படித்தபோது கூட, ஸ்பெசலாக கிரேக்க மொழியை கற்க பயிற்சி எடுத்து இருந்தாராம்.

இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,
சமஸ்கிரத மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான ஒரு தொடர்ப்பை காட்டுவதற்கே.

குமரிக்கண்டத்தில்...

தொழில் நுட்பம், ஆட்சிமுறைகள் என்பன வளர்ச்சியடைந்த போது... அதை ஒரு குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மட்டும் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருவதற்கு; அன்றைய நடைமுறையிலிருந்த மொழியைவிட இன்னொரு இரகசிய மொழி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த சமஸ்கிரத மொழியாக இருக்கலாம். ( நன்றி : குமரி மைந்தன்). ஆனால், துரதிஸ்டவசமாக வரலாற்று சம்பவங்கள் கூட சமஸ்கிரத மொழியில் மட்டுமே எழுதப்பட்டதனால் அங்கு பேசப்பட்ட மொழி தொடர்பான சான்றுகள் இல்லாமல் போய்விட்டன.  காரணம், மேல்மட்ட மக்களிடையே இந்த இரகசிய மொழி ஒரு தனி மொழியாக உருவாக தொடங்கியமையால் அவர்களால் எழுதப்படும் வரலாற்று குறிப்புகளும் அவ்மொழியிலேயே எழுதப்பட்டு விட்டது.

இன்று கூட உலகில் பேசப்பட்டு வரும் பல மொழிகளில் தமிழ் மொழியின் தன்மையும், அவ் அவ் மொழிகளின் பின்வந்த சொற்களில் சமஸ்கிரதத்தின் தன்மையும் காணப்படுகின்றனவாம்.
அடுத்து, உலகில் எழுத்து உரு இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்துவரும் மொழிகள் தமிழ் உச்சரிப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனவாம்.

அதனால், குமரிக்கண்ட வரலாற்று சம்பவங்களும், தமிழ் மொழியின் தொன்மையான வரலாறுகளும் சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்ட நூல்களிலேயே உள்ளன. முக்கியமாக வேத நூல்களாக கருதப்படும்... இருக்கு, யசூர்,சாமம் முதலிய நூல்களில் குமரிக்கண்ட வரலாறே கதைகளாக கூறப்பட்டுள்ளன என கருதப்படுகிறது.

மகாபாரதம் குமரிக்கண்டத்தில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம். ( இது சம்பந்தமாக நான் ஏற்கனவே இந்த லெமூரியா தொடர்பதிவுகளில் கூறியிருந்தேன். )

அது சம்பந்தமாக மேலதிகமாக நான் தெரிந்துகொண்ட தகவல்களை இதில் குறிப்பிடுகிறேன்...

மகாபாரதம்...
பாம்பை தமது இலட்சனையாக கொண்ட ஒரு குழுவுக்கும், பருந்தை இலட்சனையாக கொண்ட இன்னொரு குழுவுக்குமிடையே நடந்த உண்மையான ஒரு போரேயாகும். பிற்காலங்களில் இந்த வரலாற்றை பதிவு செய்யும் போது... இது போன்ற ஓர் போர் இன்னொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக பல இடைச்செருகல்களுடன் ஒரு குழுவை முதன்மையான குழுவாக காட்டி... மக்களுக்கு நீதியை/ நற்கருத்துகளை புகுத்தி ஒரு போர் வெறியற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம். ( துரதிஸ்ட வசமாக தொழில் நுட்ப முறைகளும் மறைக்கப்பட்டு இருக்கலாம். :\ )

டெனிக்கன் எனும் பிரபல ஆராச்சியாலர் தனது நூலில் (chariots of god ) கொண்டவானம் எனும் பகுதியை அழிப்பதற்கு கண்ணனும் அர்ச்சுனனும் பயன்படுத்திய சாதனங்கள் இன்றைய அணுவாயுதத்துக்கு நிகரானது என்பதை ஒப்பிட்டுக்காட்டி இருக்கிறாராம். நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுடனும் அதன் அழிவுகளுடனும் ஒப்பிட்டுள்ளாராம்.
அசுவத்தாமன் வீசிய ஒரு சாதனம் கருவிலிருந்த குழந்தைகளை கூட அழித்தது என சமஸ்கிரத நூல்களில் குறிப்புக்கள் இருக்கின்றனவாம்.

பதிவு மிக நீளமாகிவிட்டது. இந்த பதிவில் ஒப்பீடுகள் பெருசாக இல்லை. அடுத்த பதிவில் வேத வரலாற்றுடனான பல சுவாரஸ்யமான ஒப்பீடுகளை பார்ப்போம்.
---------------------------------------------------------------------------------
இந்த பதிவு இட முன்னர், நண்பன் சுதர்சஷனின் வரலாற்று பதிவை வாசித்தேன். தமிழர் வரலாறு சம்பந்தமாக சிறந்த ஒரு பதிவினை இட்டு இருந்தான். (தமிழன் - வரலாறு - வரலாற்றை அறியாதவன் இனம் நிச்சயம் அழியும்)
நண்பர்கள் என்னையும் அவ்வாறான வரலாற்று பதிவு இட சொன்னார்கள். அதனால், நானும் தமிழர் தொடர்பான ஒரு பதிவை இட்டுள்ளேன். ( ஆனால், இது உறுதிப்படுத்த தக்க வரலாற்றைக் கொண்ட‌பதிவல்ல. )
---------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected