Total Pageviews

Thursday 21 October 2010

2115 TO 0033... ( விஞ்ஞான புனைக்கதை TRY :) )

காலம்தான் மாற்றும்... அதை மாற்ற முடியாது... :)
--------------------------------------------------------------------------------------------------------------

2115 ம் ஆண்டு...
பிறேக்கிங் நியூஸ்...
" ஜிலா சிட்டியில் இன்று மதியம் நடை பெற்ற குண்டுவெடிப்பில்... சிறுவர்கள் உள்ளடங்களாக... 750 இக்கு மேற்பட்டவர்கள் உயிழந்ததுடன்... சுமார்... 2000 பேர் வரையில்... கதிர்வீச்சு தாக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த திடீர் சம்பவத்தால்... மீண்டும்... ஒரு உலகயுத்தமோ அல்லது பிராந்திய யுத்தமோ ஏற்பட வாய்ப்புள்ளதென வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்..."

ஆபிரிக்க கூட்டரசினால்... செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்டின் மத்தியிலுள்ள இயற்கை காட்டிலிருந்து... இந்த செய்தியை... 
ஹரிஸிம்... டீப்பும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இருவரினது முகத்திலும்... ஒரு வித வெறுப்புடன் கலந்த ஆத்திரம். 
டீப் : இன்னும் கொஞ்ச நாளுக்குத்தான் இதெல்லாம்...
ஹரிஸ் : ம்ம்ம்... ஒரு கிழமைக்குள் முடித்திடலாம்...

******
ஹரிஸ், டீப்... இருவருமே... அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பினால்... இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு... ஆனால், உறுதிப்படுத்தப்படாத பிரபல்ய விஞ்ஞானிகள். இன்னமும் அவர்களின் ஃபைல்கள் மூடப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்...
சீசட் அமைப்பின் சார்பில்... உருவாக்கப்பட்ட அதிவேக "கதிர்"ரொக்கெட்களின் தலைமை பொறுப்பாளிகளாக இருந்தவர்கள் இந்த ஹரீஸிம், டீப்பும்... துரதிஷ்ட வசமாக ரொக்கெட் உருவாக்கத்தின் முக்கிய அம்சங்கள்... முக்கியமான ஒரு தீவிரவாத அமைப்பிடம் சிக்கிவிட்டது. 
இந்த கதிர் வீச்சு ரொக்கெட்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டமை.. புலனாய்வுகளின் மூலம்... சி.ஐ.எ இக்கு தெரியவந்துவிட்டது. 
இதனால்... உடனடியாக ஹரீஸையும்... டீப்பையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுழுக்கு வரமுன்னரே... இருவரும் தமது நம்பிக்கைக்குரியவர்களின் உதவியுடன்... ஆபிரிக்காவுக்குத்தப்பி வந்து விட்டார்கள். வரும்போது... வேறு வளியின்றி முக்கிய குறிப்புக்களை பக்கப் எடுத்துவிட்டு... தாம் தங்கியிருந்த ஆய்வுக்கூடத்தை முற்றாக‌ அழித்துவிட்டு வந்துவிட்டார்கள்.

******

அன்று...  திங்கட் கிழமை...
இவர்களின் வாழ் நாள் போராட்டமும்... விஞ்ஞானிகளின் நீண்டகால கனவும் நிறைவேறப்போற நாள்... உலக சரித்திரத்தையே மாற்றியமைக்கப்போற நாள்...
தமக்கு பேருதவியாக இருந்த தமது சகாக்களுக்குடன்... பிரியாவிடை பார்ட்டியில் கலந்துகொண்டிருந்தார்கள். தாம்... இனி எப்போது இப்படியான விசுவாசிகளை சந்திக்கப்போகிறோம்... இனி எப்போது.. வரப்போகிறோம்... இதெல்லாம் சாத்தியமா... என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கப்போகிறோம்... என்ற எண்ண அலைகள் அவர்களின் மனதை சற்று தளர்வடையச்செய்தது.... :)

மாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது...  இவர்கள் எதிர்பார்த்தபடியே மழை கொட்ட ஆரம்பித்தது...
இருவரும்... தமக்காக உருவாக்கப்பட்ட வரலாற்று உடைகளை அணிந்து அதற்கு மேலாக பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொண்டு... தங்களின் நீண்டகால கடின உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட கால இயந்திரத்துக்குள் ஏறினார்கள்.
தமது சகாக்களை இடத்தை விட்டு நகர சொல்லிவிட்டு...
பவர் பட்டனை அமர்த்தினார்கள்... ஏற்கனவே... இவர்களின் காட்டு ஆராய்ச்சி கூடத்தின் மேல் முணையில் இறுதியாக பொருத்தப்பட்ட இடி வாங்கி கருவியில்... எதிர் பார்த்தது போன்று மின்னல் விழுகிறது...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்...
வேகம்... 4*10^8 இக்கு செட் செய்யப்படுகிறது.
கூர்போன்ற அந்த இயந்திரம் வானை நோக்கி இயங்க ஆரம்பிக்கிறது. குறுகிய நேரத்திலேயே... சுற்றுப்புறம் வெள்ளையாகிறது. சுமார்... 20 மணி நேர பயணத்தின் பின்னர்... ஏற்கனவே செட் செய்யப்பட்டதன் படி... இவர்கள் புறப்பட்ட அதே இடத்துக்கு மேல்... இயந்திரம் நிக்கிறது... கீழே... மிக அடர்ந்த இயற்கை காடு...
அங்கிருந்து மிதமான வேகத்தில் சென்று... தமது இலக்கில் இறங்குகிறார்கள்.


******
0033ம் ஆண்டு...
தமது இயந்திரத்தை ஒரு மலையடிவாரத்தில் பதுக்கிவிட்டு... நாட்டுக்குள் பயணிக்கிறார்கள்...
ஏற்கனவே... அந்த இடத்தில் அந்த நேரத்தில் பேச்சு வழக்கிலிருந்த பாசையை கற்று வந்திருந்தார்கள். (கூடவே ரான்ஸ்லேட்டர் கருவியும் கொண்டு வந்திருந்தார்கள். )
அந்த தைரியம் கை கொடுக்கவே... அங்கிருந்த... வீதியோர கடைக்காரரிடம்... கதை கொடுத்தார்கள்... அந்த கடைக்காரருக்கு பாசை புரியவில்லை... கூட இருந்தவர்கள்... இவர்கள் இருவரையும்... வித்தியாசமாக பார்த்து எழுந்து நின்றார்கள். துரதிஷ்ட வசமாக அந்த நேரம்... அங்கு... அரச பாதுகாவலர்கள் குதிரையில் வந்துவிட்டார்கள்... இருவரினதும் பாசைகள் புரியாததால்... கைது செய்து... அரச அவையில் சமர்ப்பிக்கப்பட்டனர்.
அங்கு அரசன் உட்பட‌ ஆருக்குமே... இவர்களின் பாசை புரியவில்லை..கையில் வேற விசித்திர கருவி.... வேற்று நாட்டவர்கள் நாட்டை கைப்பற்றும் நோக்குடன் அனுப்பி வைத்த உலவாளிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டு.. இருவருக்குமே குறிப்பிட்ட நாளில் மரணதண்டனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. எவ்வளவு முயன்றும் இவர்களால் இன்றுமே செய்ய முடியவில்லை.
வரலாற்று ஆய்வாலர்கள் மொழிகள் தொடர்பாக விட்ட பிழையை நினைத்து நொந்துகொண்டார்கள்.

குறிப்பிட்ட நாள் வந்தது...
இருவரும்... சிலுவையில் ஏற்றப்பட்டார்கள்...
தெய்வ நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டுடன்... மூன்றாவதாக ஜீஸஸ் சிலுவையேற்றப்பட்டார்...
இருவருக்குமே... அப்போதுதான் தெரிந்தது... நாம்... படித்த வரலாற்றில்... ஜேசு நாதரின் பின்னுக்கு... சிலுவை ஏற்றப்பட்ட இருவரும் தாங்கள்தான் என்று.
ஜீஸஸ் சிலுவை ஏற்றப்படுவதை தடுத்து...  கிறிஸ்தவ மததோற்றத்தின்... அடிப்படையை உடைத்து... உலகில்.. கிறிஸ்தவ மத பரம்பலை... தடுக்க நினைத்தது எவளவு முட்டால்தனம்... காலத்தை மாற்ற முடியாது என்ற உண்மை விளங்கியவர்களாக... ... தமது உடலை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டிருந்தார்கள்...

******

--------------------------------------------------------------------------------------------------------------

இந்த கதையின் கரு ( ஜீஸஸின் பின்னுக்கு உள்ளவர்கள் எதிர்காலத்தவர் ) என்னதல்ல... ஆருடையது என்று தெளிவாக தெரியாது... 
கருவை வைத்து கதையை எனக்கு தெரிந்தவாறு எழுதியுள்ளேன். தவறுகள் பல இருக்கும்... சுட்டிக்காட்டவும்.

( டைம் ரவல் மூலம் இறந்தகாலம் செல்வது... என்பதில் பல குழப்பங்கள் இருக்கிறது.
ஐன்ஸைனின் படி... "ஒளியின் வேகத்தை தாண்டும் போது... இறந்த காலம் செல்ல முடியும்... ஆனால்,  ஒளியின் வேகம் தாண்டுவது சாத்தியமில்லை... " என்பதே...
இருப்பினும்... ஐன்ஸைனின் கூற்று எதிர்காலத்தில் மாற வாய்ப்புள்ளது... உதாரணமாக... நியூட்டனின் கொள்கைகளை மட்டும் அவைத்து கணிக்கப்பட்ட பிரபஞ்ச இயக்கத்தை ஐன்ஸ்டைன் மாற்றியமைத்தது போல்... :) )


******
--------------------------------------------------------------------------------------------------------------


Monday 18 October 2010

ஃபோட்டோஷொப் - Halloween பூசனி :D (டியூட்டோரியல்)

ஃபோட்டோஷொப் 
------------------------------------------------------------------------------------------
பண்டிகை வருகிறது... அதற்கு நாங்களாகவே ஃபோட்டோஷொப்பில் ஏதாவது டிசைன் பண்ணினால் நன்றாக இருக்குமே... அதற்காக... இலேயே முக்கியமான உருவம் செய்வது எப்படி என்று... இங்கு எழுதி இருக்கிறேன்... மிச்சம் நீங்கதான் செய்யனும்... :)


------------------------------------------------------------------------------------------

தேவையான அளவில்... வேக் ஏரியாவை உருவாக்கிக்கொள்ளவும்.
இதற்கு... Ctrl + N ஐ பயண்படுத்தவும்.

ஒரு புதிய லேயரைப்போட்டு....
M கீயை அழுத்துவதன் மூலமாக... Eliptical Marquee  டூலை தெரிவு செய்து... ஒரு வட்டத்தை வரைந்துகொள்ளவும்.
பின்னர்... Edit -> Transform -> Warp கிளிக் பண்ணி... படத்தில் காட்டப்பட்டவாறு அல்லது உங்களுக்குதேவையானவாறு... வட்டத்தில் மாற்றம் செய்யவும்.


அடுத்து வட்டம் போடப்பட்ட லேயரை... டபிள் கிளிக் பண்ணி... லேயர் ஸ்டைலுக்குள் செல்லவும்...
அங்கு... Gradient overlay , Inner glow , Inner Shadow என்பவற்றில் மாற்றம் செய்ய வேண்டும்... கீழுள்ள படங்களின் படி செய்யவும்.

அடுத்து... வட்டத்துக்கு இஃபெக்ட்கள் போடப்பட்ட லேயரைக்கொப்பி பண்ணவும். கொப்பி பண்ணிய லேயரை படத்தில் காட்டப்பட்ட வாறு சின்னதாக்கவும்...
இதற்கு Ctrl + Tஐ பயண்படுத்தலாம்.
இவ்வாறே மேலும் 2 தடவைகள் புதிய லேயர்கலாக செய்யவும்.


இறுதி வட்ட லேயருக்கு மாத்திரம்... கீழ்ப்பகுதியை றேஸர் டூல் (E) மூலமாக அழிக்கவும் ( றேஸர் ஃபெதர் உள்ளதாக பார்த்துக்கொள்ளவும்). பின்னர் லேயரை டபிள் கிளிக் பண்ணி... லேயர் ஸ்டைலுக்கு சென்று...Gradient overlay இல்... ஒரே நிறமாக மாற்றவும். படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இப்போது இதுவரை செய்த எல்லா லேயர்களையும் மேர்ஜ் பண்ணவும்...
( Ctrl + E ) ( எதற்கும்... எல்லாத்தையும் ஒரு கொப்பி எடுத்து ஹைட் பண்ணி வைப்பது நல்லம். :) )

அடுத்து... கஸ்டம் ஷேப் டூலை (U).. எடுத்து... அதிலுள்ள முக்கோணத்தை தெரிவு செய்து... புதிய லேயர் ஒன்றில்... இரண்டு கண்கள் போன்றும் மூக்கு போன்றும் மைக்கவும். இதே போன்று வாயையும் அமைக்கவும்.
பின்னர்... இப்போது செய்த லேயர்களை மேர்ஜ் பண்ணி...
Ctrl பயண்படுத்தி அழிக்கும் முறை மூலமாக அழிக்கவும். ( இந்த முறை தெரியாதவர்கள்... இதை கிளிக் பண்ணவும்... அல்லது " http://velang.blogspot.com/ "தளத்துக்கு சென்று பார்க்கவும். )


இப்போது உங்கள் படம்... இப்படி காட்சிதர வேண்டும்.

அடிப்படை உருவம் இப்போது தயார்... இனி உங்கள் விருப்பப்படி இந்த உருவத்தை மேலும்... மெருகேற்றிக்கொள்ளுங்கள். :)
இது நான் செய்தது...

------------------------------------------------------------------------------------------

Sunday 17 October 2010

அங்க இருக்கு... இங்க இல்ல...

ஒற்றுமை / மனிதம்
------------------------------------------------------------------------------------------
இன்று தமிழ் இணையங்களிலும்... பத்திரிகைகளிலும்... "ஒற்றுமை" என்ற விடையம் பெரிதாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எல்லாம்... இலங்கை யுத்ததின் பின்னர் ஜோசித்து... உணர்ந்த இல்லாத/மறைந்து போன‌ ஒரு விடையம்.
பொதுவாக... இங்கு... வெளி நாடுகளில்... இந்த ஒற்றுமை, உணர்வு என்பது.. சும்மா பேச்சளவிலும்.. சுய நலத்துக்காகவும் மட்டும்தான் இருக்கிறது... :( உண்மையான ஒற்றுமை குறைவாகவே உள்ளது. :/
------------------------------------------------------------------------------------------
சமீபத்தில்... இணையத்தளம் நடாத்தும் ஒரு நிறுவனத்தில் நான் கேட்ட சம்பவம்...
சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில்... ஒரு பிரதேசத்தில்... குண்டு வெடிப்பொன்று இடம் பெற்றது.
உடனே அந்த செய்தியை சற்று திரிபாகவும்... பீதியை ஏற்படத்தும் வகையிலும்... இணையத்தில் பிரசுரித்து விட்டு...
தங்களுக்குள் பேசினார்கள்...
" இன்டைக்கு எப்படியும் சைட்டுக்கு கன சனம் வரும்... சண்ட நடந்தாத்தான் சனம் சைட்டுக்கு வருது... "
" அப்ப சண்ட நடந்தாத்தான் உங்களுக்கு பிளைப்பு போல... "
"போன வருசம் இப்படித்தான்... சன்ட நடக்கக்க..  10 , 15000 ம் பேருக்கு மேல வந்த‌துகள்..."
" :D " ( சிரிப்பு
------------------------------------------------------------------------------------------
இதுதான் ஒற்றுமையா? உணர்வா? தங்களது இணையம் ஃபேமஸாக இயங்க வேண்டும் என்றால்... இலங்கையில் யுத்தம் நடந்து எத்தனை பேர் செத்தாலும்... கவலை இல்லை இப்படியானவர்களுக்கு.
( அதிக வியூவர்ஸ் இருந்தால்தான் இலகுவாக கூகுள் அட்ஸ்களையும்... ஏனைய விளம்பரங்களையும் பெற்று பணம் சம்பாதிக்கலாம்... பணம்தான் முதல்... மனிதம் இல்லை... )
------------------------------------------------------------------------------------------
இப்படி மனிதர்கள் ( இன்று தமிழர்கள்) ஏங்கும் இந்த ஒற்றுமை... மிருகங்களிடம் நிறையவே இருக்கிறது... வீடியோவை முழுவதுமாக பாருங்கள்... பிளீஸ்...
------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------

இதுவும் கிட்டத்தட்ட எம்மிடமில்லாமல் போய்க்கொண்டிருக்கும்... மனிதம்தான்... (பெயர் மட்டும் மனிதமாமாம்... எருமைகள்... :P )

------------------------------------------------------------------------------------------



------------------------------------------------------------------------------------------

Thursday 14 October 2010

இன அழிப்பும் அலட்சியமும்... (01)

இன அழிப்பும் அலட்சியமும்... (01)
------------------------------------------------------------------------------------------
என்னதான் நாங்கள் நவீனப்பட்டு விட்டதாக காட்டிக்கொண்டாலும்... உலகின் ஒவ்வொரு பாகத்து மக்களின் அடி மனங்களில்... (பொதுவாக) இனம்,இடம் எனும் வெறி... இருக்கின்றது. இன்றும்.. அந்த இன இட வெறிதான் இன்றும்... தீவிரவாதமெனும் பெயரிலும்... அதை தடுக்கிறோம் என்ற பெயரிலும்... உலகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது.
இந்த செய்கைகளில் பொதுவாக தலமைப்பீடங்களே ஈடுபட்டாலும். ஒவ்வொரு குடிமகனும்...  காரணமாக அமைகின்றார்கள். அவர்கள்தானே... இந்த தலைமைப்பீடத்தை தேர்வு செய்த பொறுப்பாளிகள். (ஜன நாயக முறையை சொன்னேன். சர்வதிகார, முடியாட்சி முறைகளில் கூட ஏதோ ஒரு வகையில் மக்களே பொறுப்பாளியாக இருக்கின்றார்கள்... எல்லாம்... அடிமனதில் உறங்கிக்கொண்டிருக்கும்... "இனம்" மற்றும் "இடம்" என்ற இரண்டு விச வித்துக்களும்தான்.)

இது பற்றி... அறிவியல் ரீதியாகவும்... சமூகவியல் ரீதியாகவும் பார்க்க முதல்...  இனவெறி எப்படிப்பட்டது என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம். அனைத்துமே ஏதோ ஒரு வகையில் குற்ற உணர்வையும்... ஒரு வித பாரத்தையும் மனதில் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அதீத கற்பனை சக்கியுள்ளவர்களுக்கு மன உளைச்சலைக்கூட கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்... சோ... தவிர்ப்பவர்கள் தவிர்க்கவும். :)

------------------------------------------------------------------------------------------

டாஸ்மேனியா...
அவுஸ்ரேலியாவிலிருந்து 320 கி.லோ மீட்டர் தூரத்திலுருந்த அளகிய தீவு. நாய்கள் அற்ற தீவு.... அங்கு 5000 இக்கும் மேற்பட்ட  டோஸ்மேனியர்கள் என்ற பழங்குடி மக்கள் தனிக்கலாசாரத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.
1810 ம் ஆண்டு...
பிரித்தானியர்களின்... இடம் பிடிக்கும் ஆசையின் ஒரு அங்கமாக... இந்த தீவை வெள்ளையர்களின் இரண்டு கப்பல்கள் அடைந்தன. இதற்கு முதல் வெளி உலக‌த்தையே அறிந்திராத அந்த கருமையான மக்கள்... இந்த வெள்ளை உருவங்களை பார்த்ததும் இயல்பாகவே பயந்தார்கள். இதை உணர்ந்த வெள்ளையர்களின் பல கப்பல்கள் தீவிற்கு படையெடுத்தன.
பலர் கூட்டம் கூட்டமாக காரணமின்றி ( இடம் பிடிக்க வேண்டும்... வளங்கள் சூறையாடப்பட வேண்டும் என்ற வெள்ளையர்களின் காரணத்துக்காக) சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பை பறி கொடுத்தார்கள். சிறுவர்கள்... அடிமைகளாக்கப்பட்டு... இவர்களின் சூறையாடல்களுக்காக அமர்த்தப்பட்டனர்.
டோஸ்மேனியர்களால் எதிர்ப்பைக்காட்ட முடியவில்லை. வெளியுலக தொடர்பற்ற அவர்களுக்கு இந்த யுத்தம், ஆயுதம் எல்லாமே புதுசாகவும் ஏன் என்றும் விளங்கவில்லை. ஏன் சாகிரோம் என்பது தெரியாமலே பரிதாபமாக உயிர் நீத்தார்கள்.

1828 ஆம்... ஆண்டு வெள்ளையர்களின் அரசு நிறுவப்பட்டு... எதிரே தென்படும் எந்த ஒரு வெள்ளையரல்லாதவரையும் கொள்ளலாம்... ஒரு கறுப்பனை கொண்டால் 3 பவுண்ட்ஸ்... ஒரு குழந்தையை பிடித்து வந்தால் 1 பவுண்ட் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது.
இப்படி சட்டம் வந்ததும்... என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
5000 பேராக இருந்த சமுதாயம்... 75 ஆக்கப்பட்டது... அதில் 72 ஆண்களும்...3 பெண்களும் மிஞ்சினார்கள். இரும்பு சங்கிளிகளால் சேர்க்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இந்த காலப்பகுதியில்... ஐரோப்பியாவில் இந்த கொடூர  இன அழிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதனால்... மீதமானவர்களை கொல்ல முடியாமல்... இருள் சிறைக்குகையில் அடைத்துவைத்தார்கள். அங்கும்... நய வஞ்சகமாக... உணவு, மருத்துவம் மறுக்கப்பட்டு... கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளப்படார்கள்.

1869 ம் ஆண்டு... 2 பெண்களும்... 1 ஆணும் எஞ்சினார்கள். இறுதியாக அந்த ஒரு கருப்பு ஆணும் உணவின்றி இறந்து போக... இதைக்கேள்விப்பட்ட... ஐரோப்பிய சமுதாய விஞ்ஞானிகள்... அவர்கள் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக இருக்கலாம் என்று கூறி... அந்த உடலை கூறுபோட்டு எடுத்துக்கொண்டார்கள். (காரண்ம் ஒன்றும் பெருசில்லை... ஒரு அழிந்துபோன இனத்தின் இறுதி மனிதனின் எச்சங்கள் என்று அதை பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரே நோக்குத்தான்.)

1876 இறுதிப்பெண்... ஏற்கனவே இறந்த இருவடைய உடலையும்... கண் முன்னேயே... துண்டாக்கி எடுத்துப்போனதை பார்த்திருந்தவள். உடல் நிலை மோசமாகி... தனது பாசையில் ஏதோ முனகிக்கொண்டிருந்தாள். அது என்ன என்பதை அவுஸ்திரேலிய பழங்குடி ஒருவர் மூலம்... மொழி பெயர்க்கப்பட்டது.
"எங்கள் சம்பிரதாயப்படி... இறந்த உடலை கடலின் நடுவே சென்று மூழ்கடிக்கப்பட வேண்டும்... தயவு செய்து... என்னுடலை சின்னாபின்னமாக்காதீர்கள்... என் கடைசியாசையை ஆவது நிறைவேற்றுங்கள்...." என்று கதறினால்.

இதை கேட்டு சிரித்த வெறியர்கள்... அப் பெண் இறந்ததும்... அங்கு ஒரு பக்கத்தில் புதைத்தார்கள்.
சிறிது காலத்தில் அதை தோன்டி எடுத்து... டோஸ்மேனியா மியூஸியத்தில்... இறுதி பழங்குடி பெண் என்ற வாசகத்துடன் தொங்கப்போட்டு இருந்தார்கள். இந்த கேவலமான செயலை... பின்னர் வந்த பல வெள்ளையர்கள் எதிர்த்த போதால். 1947 இல் அந்த கூடு ஒரு தனியறையில் போட்டு மூடப்பட்டது.

1976 ம் ஆண்டு... மக்கள் கூட்டமாக நுழைந்து அந்த பெண்ணின் எலும்புக்கூட்டை அவள் விரும்பிய படி கடலில் மூழ்கடித்து அடக்கம் செய்தார்கள்.
( சம்பவ மூலம் : மனிதருள் மிருகம் என்ற மதன் சேரின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.)

------------------------------------------------------------------------------------------

இந்த சம்பவத்தில்... ஏதோ.. ஒரு இனத்தவர் தானே(கறுப்பர்)...  எங்களுக்கு இடம் வேண்டும்... என்ற ஒரே வெறிதான் காரணம். இந்த சம்பவம் நடந்துகொண்டிருப்பது தெரிந்திருந்தும்... பெரிதாக ஐரோப்பியர்களோ... வேற்று நாட்டினரோ... கொந்தளிக்க வில்லை... எல்லாம்... வேறு இனம்... அழிந்தால் நமக்கென்ன?... என்ற மனப்போக்குத்தான். இன்றும் இந்த உணர்வு... விஷம் மனித நெஞ்சை விட்டு அகழவில்லை என்பது தெரிந்த மறுக்கப்படும் உண்மை.

------------------------------------------------------------------------------------------

Tuesday 12 October 2010

சுப்பர் (ஃபோட்டோஷொப்) 3டி டெக்ஷ்ட் சொஃப்ட்வெயார்... + Photoshop CS5 Portable

------------------------------------------------------------------------------------------
நீண்ட நாளாகவே...  எனக்கு ஃபோட்டோஷொப்பில் 3டி லெட்டேர்ஸ் செய்வது கடினமானதாக இருந்தது. நோர்மலா, ஃபோட்டோஷொபில் 3டி லெட்டேர்ஸ் செய்வதற்கு கட்டாயம்... இலஸ்ரேட்டரின் உதவி தேவைப்படுகிறது. காரணம்... அதில் தான் எழுத்தை தடிமமாக்கி... 3டி திசைகளில் மாற்ற‌முடியும். பின்னர், அதை பி.என்.ஜி ஃபைலாக ஃபோட்டோஷொப் கொண்டு வர வேண்டும். இந்தப்படி முறை எனக்கு கொஞ்சம் கஷ்டமானதாக இருந்தது.

அதற்காக... இணையத்தில் தேடிய போது... ஒரு நல்ல ஷொஃப்ட் வெயார்... கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

------------------------------------------------------------------------------------------

இந்த லிங்கை கிளிக் பண்ணி டவுண்லோட் பண்ணவும். வெறும் 12 தான்.

பின்னர்... ஃபைல்லை... எக்ரக்ட் பண்ணவும். இன்ஸ்ரோல் பண்ணி ரன் பண்ணவும்.
ரன் பண்ணும் போது... டெக்ஸின் நடுவே... எழுத்துக்கள் இருக்கும். அதற்கு... டவுண் லோட் பண்ணி எக்ரக்ட் பண்ணிய ஃபோல்டருக்குள் இருக்கும் கீயன் ஃபைலை ரன் பண்ணி... சீரியல் நம்பரை கொப்பி பண்ணவும்.
பின்னர்.... இயங்கி கொண்டிருக்கும்... சொஃப்ட்வெயாரினுள் சென்று... ஹெல்ப் ஐ கிளிக் பண்ணவும். அதில் ரெஜிஸ்டர் என்கிறதை கிளிக் பண்ணி... கொப்பி பண்ணிய சீரியலை பேஸ்ட் பண்ணி ஓ.கே பண்ணவும்.

இனி என்ன செய்யனும் என்று பாக்கவே விளங்கும். விரும்பிய ஃபொன்டை... விரும்பியவாறு 3டி ஆக்கி கொள்ளவும். (தடிமமாக்குதல்... திசை செட் பண்ணுதல்...  சைட்டா திருப்புதல்... எல்லாம் செய்யலாம்.)

முக்கியமாக... ட்ரான்ஸ்பரன்ட் என்பதை கிளிக் பண்ணவும். இல்லை என்றால்... வெள்ளை பரவுண் வரும்.
பிறகு... சேவ் பண்ணும் போது.... பி.என்.ஜி யாக சேவ் பண்ணவும்.
பிறகு ஃபோட்டோஷொப்பில்... டிசைன் பண்ணவும்.

http://hotfile.com/dl/66268621/5290755/Insofta.3D.Text.Commander.3.0.2.rar.html
http://shareflare.net/download/4808.40846f05a2193a5a346d70dfbbae8447/Insofta.3D.Text.Commander.3.0.2.rar.html
http://letitbit.net/download/2381.2046e957a43fcf74a7cc380cd4f04e7b/Insofta.3D.Text.Commander.3.0.2.rar.html

நான் பண்ணியது கீளே இருக்கு.


------------------------------------------------------------------------------------------

மேலும்... ஃபோட்டோஷொப் இல்லாதவர்களுக்கு இலகுவாக பயண்படுத்தத்தக்கதாக... போர்ட்டபிள் Photoshop cs5 டவுண்லோட் லிங்கும் இருக்கு. ஆனால்... டொரன்ட் ஃபைல். அனைவருக்கும் டொரன்டில் டவுண்லோட் பண்ணும் முறை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.
http://www.torrentz.com/search?f=Adobe.Photoshop.CS5.Portable    *** 32 Bit /// 122 MB***
http://www.torrentz.com/6ce66fa3b9d0ec908f63abc7e845746112d84663  *** 86,64 BIT/// 388MB***

------------------------------------------------------------------------------------------

Monday 11 October 2010

ஸ்....ஸபா.... இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா??? :'(

டி.ஆர் VS விஜய டி.ஆர்
------------------------------------------------------------------------------------------
டி.ராஜேந்தர்....
பொதுவாக இதை வாசிக்கும் அனைவருக்குமே தெரியும் அவரைப்பற்றி.
பின்புலம் எதுவுமே இன்றி... தனது தனித்திறமை மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்து தனி இடம் பிடித்தவர்.
அடுக்கு மொழிவசனங்களாலும்...  சினிமா சார்ந்த பல கலைகளை ஒரே ஆளாக நின்று கவனிக்கத்தக்கவராகையால்  அட்டவதானியாகவும்... மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுக்கொண்ட திறமை மிக்க தன்னம்பிக்கை கலைஞர்.
------------------------------------------------------------------------------------------
விஜய டி.ராஜேந்தர்...
டி.ராஜேந்தர் என்று தெரியாவிட்டாலும்... விஜய டி.ராஜேந்தர் என்றால்... எல்லோருக்கும் இப்போது தெரியும்.
வடிவேல்... விவேக் என்னதான் ஜோக் பண்ணினாலும்... அதெல்லாம் படத்தோடதான்... இவர்தான் நேரடியாக ரியல் டைம் ஜோக் கொடுக்கும் ஒரே ஒரு சினிமா நட்சத்திரம். ( ஒரே ஒரு தமிழர் என்று சொல்லேலாது... இவரை விட அரசியல்ல செமெ கொமெடி பீஸிங்க எல்லாம் இருக்குங்க... :) )

இப்போது... உதாரணத்துக்கு... நம்மட விஜய டி.ராஜேந்தர்ட... அட்ட காசங்களை அல்லது... சாகாசங்களை பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------------
இப்படி கனக்க வீடியோஸ் இருக்கு... யூ டியூப்பில் டி.ராஜேந்தர்  என்டு அடித்தால் எல்லாமே வருது.
------------------------------------------------------------------------------------------

இதெல்லாம்... பார்க்கும் போது.. உண்மையிலேயே... இவரை மதிப்பதா அல்லது... அழுவதா என்று தெரியவில்லை.
தனக்கென தனித்துவமான மரியாதையை கட்டிப்பேணி வந்தவர்... ஏன் இன்று இந்தளவுக்கு... கிட்டத்தட்ட சுய சிந்தனையில்லாதவர் போன்று நடந்து கொள்கின்றார்.
தன்னை தனித்துவமானவன் என்று காட்டிக்கொள்வதற்காகவா???? ஓவர் தன்னம்பிக்கையா???

எது எப்படி இருந்தாலும்... இவரின் இந்த செய்கைகள் அவரது... ரசிகர் வட்டத்தை நிச்சயம் பாதிக்கும்....
இவரது ரசிகரும்... ரசிகரில்லாதவரும் பக்கத்திலிருந்து இந்த வீடியோக்காட்சிகளைப்பார்க்கும் போது... "இப்படியான ஆளுக்கா நீ ரசிகனா இருக்காய்??" என்ற கேள்வி கட்டாயம் வரும்...
உண்மையான ரசிகர் வெக்கித்தலை குனிய வேண்டியதுதான் உண்மை. ( வெட்டி வாதமெல்லாம் இந்த காட்சிகளை நியாயப்படுத்த முடியாது.)
------------------------------------------------------------------------------------------
இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்??? எனக்கு இப்போ தெரின்சாகனும்... :D :P
------------------------------------------------------------------------------------------

Saturday 9 October 2010

எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்... :)

கன்ஃபூசியஸ்
-------------------------------------------------------------------------------------------
பல சிற்றரசர்களால் ஆளப்பட்டு, பல்வேறு நாடாகச் சிதறிக்கிடந்த சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சீனம் அது....

பிரபுக்களின் ஆதிக்கத்தினால் மக்கள் சித்ரவதைகளுக்கு ஆளாகி, வரி கொடுக்க முடியாமல் வறுமையில் உழன்றுகொண்டு இருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் மக்களின் மனசாட்சியாக மாறி, ‘ஒரு நல்ல அரசாங்கம் எப்படி நடக்கேவண்டும்’ என்பது பற்றி, தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டார் கன்ஃபூசியஸ். ‘‘அதிக வரியும், அதிகத் தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால்
தேர்வு டெய்யப்பட வேண்டுமே தவிர, பரம்பரை மட்டுமே தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் அளிக்க முடியாத அரசாங்கம், ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை’’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்க அணி திரள,
அரசன் அதிர்ந்து போனான்.

கன்ஃபூசியைஸக் கைது செய்தால் அசம்பாவிதம் நேரலாம் என யோசித்த அரசன், புத்திசாலித்தனமாக அவருக்கு ‘சட்டத்துறை அமைச்சர்’ ஒரு என ஒரு பதவி கொடுத்து நாட்டின் சட்டங்களை மாற்றும்படி கேட்டான். வேலைக்கு ஆட்கள், பெரும் மாளிகை, கை நிறையச் சம்பளம் எல்லாம் கொடுக்கப்பட்டது.
மக்கள் நலனுக்காக புதிது புதிதாகச் சட்டங்களை இயற்றி மன்னனிடம்
ஒப்பைடத்தார் கன்ஃபூசியஸ். ஆனால், எதுவும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

சில வருடங்களிலேயே, இந்தப் பதவியினால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக மன்னரிடம் சொன்னார்.‘‘சீமான் போல வாழ்வதைவிட்டு, ஏன் பிச்சைக்காரனாக வீதியில் திரியவிரும்புகிறீர்கள்’’ எனக் கோபத்துடன் கேட்டார் மன்னர்.
‘‘எது வசதியானதோ ஆதைச் செய்யாதே! எது சரியானதோ அதைச் செய்! என என் மனம் தொந்தரவு செய்கிறது’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்
கன்ஃபூசியஸ்.

கிறிஸ்துவுக்கு முன், 551-ம் வருடம் செப்டம்பர் 28‍ம் தேதி கன்ஃபூசியஸ்
பிறந்தபோது, அவரது தந்தையின் வயது 70. தாய்க்கு வயது 15. பிறந்த
மூன்றாண்டுகளில் தந்தையை இழந்தார். பழைய இலக்கியங்கள், அரசியல்
சட்டங்கள், மதக்கோட்பாடுகள் என எல்லாவற்றையும் படித்து, அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், விவாதிப்பதும் கன்ஃபூசியஸின் தனிப்பெரும் குணமாக வளர்ந்தது. இளைஞர் ஆனதும், ஆர்வம் உள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்தார்.

மதங்கள் எதுவும் மக்கள் துன்பத்துக்குத் தீர்வு சொல்ல்லவில்லை என்பதால்,
அவற்ரை புறக்கணித்தார். அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், சீனாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மனதில் புரட்சிக் கருத்துகளை விதைத்தார். பல நாடுகளின் அரசுகள் அவரைத் தங்கள் எல்லைக்கோட்டுக்குள்ளேயே அனுமதிக்காமல் விரட்டி அடித்தன.

‘ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடமும் தன்மானம், பெருந்தன்மை, கபடமின்மை, உண்மையாக இருத்தல், அன்பு எனும் ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதன் இன்பமாக இருக்க முடியும். தனி மனிதன் நிம்மதியாக இருந்தால் நாடும் சிறப்பாக இருக்கும்’ என மனிதர்களின்
துன்பங்களுக்குத் தீர்வு சொன்னார் கன்ஃபூசியஸ். அதேபோல, வெற்றிபெற்ற
மனிதனாக மாறுவதற்கும் அவர் வழி சொன்னார். ‘மனிதர்கள் இயல்பாகவே
எளிதான செயல்களைச் செய்யவே ஆசைப்படுகிறார்கள். அது சரியல்ல. வெற்றி பெறேவண்டுமானால், எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள்; எது சரியானதோ அதைச் செய்யுங்கள்!’ என்றார்.

அவர் வாழ்வினை மாற்றியதே இந்த மந்திரச் சொல்தான், சீனா முழுவதும் மதம்,சமுதாயம் மற்றும் அரசியலில் பெரும் மாற்றங்கள் உண்டாக்கவும் காரணமாக இருந்தது.
-------------------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ
-------------------------------------------------------------------------------------------


Thursday 7 October 2010

இதுக்கும் காரணம் ஏலியன்ஸா? ( ஏலியன்ஸ் 6 (பரிமாணங்கள் 10))

விளங்க முடியாத பரிமாணங்கள்... (10)
-------------------------------------------------------------------------------------------
இது ஏலியன்ஸ் தொடர்பான அடுத்த பதிவு... போன பதிவில்... கூறிய படி சில முரன்பாடான தகவல்களையும்... எகிப்திய பிரமிட்டின்... ஆச்சரிய தொழில் நுட்பத்தையும் பார்ப்போம்.
இன்றுடன்... ஏலியன்ஸ் எதிர்கால நாங்கள் தான் என்ற கோனத்திலான பார்வையை தற்காலிகமாக விட்டு விட்டு... ஏலியன்ஸ் உண்மையிலேயே வேற்றுக்கிரகத்தினர்தான்... என்ற கோணத்திலான பார்வையை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.


-------------------------------------------------------------------------------------------

"சிரியஸ் பி" எனும் நட்சத்திரம்... நவீன விஞ்ஞானக்கருவிகளுனுதவியுடன்... கண்டு பிடிக்கப்பட்டது.
ஆனால்... தென்னாபிரிக்காவில் வாழும்.. டோஹான் என்ற பலங்குடி மக்கள் இதே சிரியஸ்ஸை அறிந்து வைத்துள்ளார்கள். அவர்களின்... பரம்பரை குறிப்புக்களிலும்... அவர்களுக்கென உள்ள பிரத்தியேக கலண்டரிலும்... இந்த சிரியஸ் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
சாதாரணமாக... இந்த சிரியஸ் பி நட்சத்திரம்... வெற்றுக் கண்ணுக்கு புலப்படாது. அப்படியானால்... இவர்களின் பரம்பரை குறிப்புக்களில்... எவ்வாறு அந்த நட்சத்திரம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது??? யார் சொல்லி இருப்பார்கள்??? ஏலியன்ஸா??? ( ஏற்கனவே... பண்டைய உலக வரை படத்தை உருவாக்கி கொடுத்தது நிச்சயம் ஏலியன்ஸ்தான்... என்ற கருத்து இருந்து வருகிறது. காரணம்... பூமியை விட்டு வெளியே சென்று பார்க்காமல்... கேள்வி ஞானத்தை மட்டும் வைத்து அவ்வாறான ஒரு வரை படத்தை வரைவதற்கு சந்தர்ப்பமே இல்லையாம்.)
இவற்றுக்கு இன்று வரை தெளிவான விடையில்லை...

-------------------------------------------------------------------------------------------

அடுத்து... எகிப்திய பிரமிட கட்டப்பட்ட முறையும் மிகவும் வியப்பானதே....
அதுவும் முக்கியமாக... கீஸா பிரமிட்டில் பயண்படுத்தப்பட்டுள்ள கணித முறையும்... தொழில் நுட்பமும்... எவ்வாறு பயண்படுத்தினார்கள்... என்பதில் இன்றும் குழப்பங்கள் உள்ளன.
கீஸா பிரமிட்டில் 2.3 மில்லியன்ஸ் கற்கள் பயண்படுத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றினதும் நிறை சுமார் 2.5 டன்கள்...
இவ்வளவு நிறையையும் நேர்த்தியாக பக்க நீளங்கள் 230 மீட்டராக உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. சரிவு கூட 51 பாகையாக பேணப்பட்டுள்ளது. இன்றய தொழில் நுட்பத்திலேயே சற்று சிரமமான இந்த வேலையை... அவர்கள் அவ்வாறு தனியாக செய்தார்கள்???
மேலும்...
மஹா பிரமிட் என அழைக்கப்படும் பிரமிட்டில்...
நட்சத்திரங்கள்... கோல்கள்... உப கோல்ளின் அமைப்புக்கள்... போன்றவற்றின் நிலையான‌ அமைப்பு வரையப்பட்டுள்ளதாம்.
பூமியின் சுற்றளவு, விட்டம், பூமியின் திணிவு, புவியீர்ப்பினால் உண்டாகும் வேக வளர்ச்சி எல்லாம்... அந்த பிரமிட்களைக்கொண்டு அறியத்தக்கதாக உள்ளது.
இந்தளவு அறிவையும் அவர்களுக்கு கொடுத்தது யார்???
ஏலியன்ஸா??? அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான்... பிரமிட் சுவரோவியங்களில்... ஏலியன்ஸ் உதவுவது போன்று வரையப்பட்டுள்ளதா??? அப்படி ஏலியன்ஸ் உதவி இருந்தார்களானால்... ஏன் இப்போது எமக்கு தொழில் நுட்பம் கற்றுத்தரவில்லை??? ஏற்கனவே உதவியதால்... அவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டதனாலா???
தெளிவான விடையற்ற கேள்விகள்...

எகிப்திய சாம்ராஜ்ஜத்தின் திடீர் வீழ்ச்சிக்கு... நைல் நதி வற்று மற்றும்... திடீர் பனியுகம் மட்டும்தான் காரணமா??? அல்லது அவற்றுக்கும்... ஏலியஸிக்கும் தொடர்பிருக்குமா??? சும்ம கேட்டன்... :)

-------------------------------------------------------------------------------------------

ம்ம்ம்... இதை எழுதிட்டு இருக்கும் போது இன்னும் சில சம்பவங்களும் நினைவுக்கு வருகிறது... அவை ஏற்கனவே எழுதியதுதான்.... இதை கிளிக் பண்ணி... மதம் என்பதை விடுத்து... பண்டைய அறிவு என்கிற ரீதியிலும்... இந்த அறிவு எப்படி வந்தது என்கிற ரீதியிலும்... இந்த சந்தர்ப்பத்துடன்... தொடர்பு படுத்தி பார்க்கவும். :)

-------------------------------------------------------------------------------------------

இத்துடன்... இன்னும் தகவல்களை சேகரிக்கும் வரை... " நாங்கள் தான்... ஏலியன்ஸ்" என்ற கொள்கையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு...
ஏலியன்ஸ் உண்மையிலேயே... வேற்றுக்கிரக வாசிகளாக இருப்பதற்கான... சந்தர்ப்பங்களை பார்ப்போம்...
நமது... சூரியகுடும்பம்... மற்றும் நட்சத்திரங்கள் உள்ளடங்களான... நம்து கலக்ஸியை நாங்கள் படமாகப்பாக்கிறோம்...
அது எப்படி??? நாங்கள் ஒளியின் வேகத்தில் சென்றால் கூட... கல்க்ஸிக்கு வெளியே செல்ல பல நூறாண்டுகள் எடுக்குமே... அதுவும்... நாங்கள் இன்னமும் ஒளியின் வேகத்தை கிட்ட கூட நெருங்கவில்லை... அப்படி என்றால் எப்படி... இந்த படங்கள் எடுக்கப்பட்டன???...
இதற்கான விடை பலருக்கு தெரிந்திருக்கும்... அவர்களுக்கு நான் என்ன சொல்ல போறன் என்பதும் விளங்கி இருக்கலாம்...
குழப்பமாக உள்ளவர்களுக்கு அடுத்த பதிவில்... சுவாரஷ்யமான தகவல்களுடன் சந்திப்போம்.

-------------------------------------------------------------------------------------------

கலக்ஷியை ஃபோட்டோ எடுத்தது எப்படி?
நாங்கள் அண்டத்தில் எங்கே இருக்கிறோம்...
ஏலியன்ஸ் எங்களுடன் தொடர்பு கொண்டார்களா?
ஏன் நாங்கள் ஏலியன்ஸிடன் தொடர்பு கொள்ளவில்லை... அல்லது... கொண்டோமா?...

-------------------------------------------------------------------------------------------

Wednesday 6 October 2010

எனக்கு பிடிச்சிருக்கு... :D ( ஃபோட்டோஷொப் படங்கள் )

-----------------------------------------------------------------------------------
இதெல்லாம்....எனக்கு பிடிச்சிருக்கு... உங்களுக்கு? :)















-----------------------------------------------------------------------------------

Tuesday 5 October 2010

பெயரெண் பலன்கள்... 10,19,28,37,46 ( சுட்ட நியூமராலொஜி : P)

சுட்ட நியூமராலொஜி 
------------------------------------------------------------------------------------------
நம்பிக்கையுள்ளவர்கள் படிங்க...:) நம்பிக்கை இல்லாதவர்கள்.. :D

------------------------------------------------------------------------------------------

நீண்ட நாட்களுக்கு பின்னர்... ஏற்கனவே சுட்டு எழுதிய நியூமரலொஜியை... மீண்டும்... புதிய பகுதியூடாக எழுதுகிறேன்.
போன முறை... பிறந்த திகதிக்குரிய குணங்களை சுட்டேன். இந்த முறை... உங்களது... தனித்தனி பெய்ர்களுக்குரிய பலன்களை பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

அதற்கு முதல் உங்களது பெயருக்கான... நம்பரை கண்டறியும் முறை... இதுதான்...

எண்களை பார்க்கும் போது...  உங்களது இனிசலுக்கும்... சேர்த்து பார்க்க வேண்டும்.
உதாரணமாக...
C.VALAAKAM
3+4+1+3+1+1+2+1+4 = 20
( எண்களுக்குரிய... நம்பர்கள் அருகில் தரப்பட்டுள்ளன.)


------------------------------------------------------------------------------------------

இனி... முதலாவதாக... இன்று...  கூட்டெண்... 10,19,28,37,46 வருபவர்களின்... குண‍ நலன்களை பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 10
இவ்வெண் உடையவர்கள்... கண்ணியமும், கீர்த்தியும் உடைய மனிதர்கள். வாழ்க்கையில் நிதானமும்... தன்னம்பிக்கையுமிருக்கும். வாழ்க்கையில் அதிஷ்ட மாறுதல்கள் அடிக்கடி ஏற்படும். ஒன்று 0 உடன் சேர்வதால்... சகடஜோகம்.  சக்கரம் போல் வாழ்க்கை அமையும். சுலபமாக பிரசித்தமாவார்கள். எல்லாக்காரியமும் பிரசித்தமாக கூடியதாகையால்... நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும். மன மகிழ்வான வாழ்க்கை உண்டு. பணத்தட்டுப்பாடு வராது.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 19
இவ்வெண் உதய சூரியனை குறிப்பதால் அஸ்தமனமில்லை. பொழுது ஏற‌ ஏற... அதிகப்படுத்தும் சூரிய வெளிச்சம் போல...  வாழ்க்கை மேன்மை அடைந்துகொண்டு செல்லும். ஒரு திட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் இவர்கள்... நல்ல வாழ்க்கைத்துணைவரை அடைவர் என்றும் சக்தி இவர்களை பிரியாது.
வயோதிப காலத்திலும்... இளைஞர்போல் சுறுசுறுப்பாக இருப்பர். கடைசிவரை வாலிபராக இருப்பார். சுகானுபவங்களில் நேர்மையே இவர்களுக்கு வெற்றியளிக்கும்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 28
வாழ்க்கையின் ஆரம்பத்தில்... முன்னேற்றத்தையும் சுகத்தையும் தரும் இவ்வெண் நேர்மறையான தன்மைகளையுடையது. எக்காரியமாயினும்... போட்டிகளும்.. சிரமங்களுமுண்டாகும். வாழ்க்கையை திரும்பதிரும்ப தொடங்க நேரிடும். மிக வேகமாக முன்னேற்றமடைவர்... கடைசியில் எல்லாத்தையும் இழக்க நேரிடும்.
நண்பர்களாலும்... உறவினர்களாலும்... எதிர்பாராத நஷ்டங்கள் வரும். கொடுத்த கடன் திரும்ப வருவது அபூர்வம். கஷ்டப்பட்டு சேமித்த பொருட்கள் எல்லாம் எதிர்பாராமல் இழக்க நேரிடும்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் : 37
சாதாரன நிலையில் உள்ளவர்களைக்கூட... மேன்மையான நிலைக்கு கொண்டுசெல்லும்.  வசீகரமானது. காதலில் வெற்றியைத்தரும். தன் அந்தஸ்துக்கு மேம்பட்டவரால் விரும்பப்படுவர். ஆண், பெண் இருபாலரிலும்... விசேடமான நண்பர்கள் ஏற்படுவர். நண்பர்களால் வாழ்க்கை முன்னேற்றமடையும். எதிர்பாராமல்... அதிஸ்டகரமான கூட்டாளிகள் முதலுடன் வந்து சேர்வார்கள். கலைகளில் ஈடுபாடு உண்டாகும். சுகம் நிறைந்த வசதியாக வாழ்க்கை உண்டாகும்.
கவர்ச்சிகரமாக இருப்பர்.  மிக உண்ணதமான நிலையில் உள்ளவர்களை வீண் விவகாரங்களில் ஈடுபடுத்தி வீழ்த்திவிடும். பேராசை குறைக்கப்பட வேண்டும்.

------------------------------------------------------------------------------------------

கூட்டெண் :46
எத்தொழில் புரியினும் அத்தொழிலில் சிகரத்தை அடைய உதவும் இவ்வெண். வயது ஏற ஏற செல்வமும்... அந்தஸ்தும் அதிகரிக்கும். இந்த எண் உடையவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

------------------------------------------------------------------------------------------

அடுத்து...  55,64,73,91,100 ஐ கூட்டெண்ணாக உடையவர்களுக்கு பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

நன்றி...  வி.ஏ.சிவராசா  

------------------------------------------------------------------------------------------

Monday 4 October 2010

ஃபோட்டோஷொப்... வெக்டர் டியூட்டோரியல்... + PSD File

-------------------------------------------------------------------------------------------
இன்று... சிம்பிலா... ஃபோட்டோஷொப்பில்... நாமாகவே... ஒரு வெக்டர் டைப்... படத்தை எப்படி... உருவாக்குவது என்ப‌தை... எழுதி இருக்கிறேன்...

-------------------------------------------------------------------------------------------

உங்களுக்குத்தேவையான அளவில்... வேக் ஸீட்டை உருவாக்கி கொள்ளவும்...
( Ctrl + N)

பக்ரவுண் லேயரை அன்லொக் பண்ணவும்.
இதற்கு... லேயரில் உள்ள... பக்ரவுண்ட் லேயரை இருதடவை கிளிக் பண்ணி ஓ.கே பண்ணவும்.

மீண்டும் அதே லேயரில்... டபிள் கிளிக் பண்ணவும்... லேயர் ஸ்டைல் ( Layer Style ) பனலுக்கு போகும்...
அங்கு... Gradient overlay ஐ டிக் பண்ணி... Gradient ஐ கிளிக் பண்ணவும்... பின்னர்... உங்களுக்கு தேவையான ஒரு கலரை... ஏற்கனவே வெள்ளையாக இருக்கும் இடத்தில் செலெக்ட் பண்ணவும்...  கருப்பாக இருப்பதில்... அதே கலரின்... லைட்டான கலரை செலெக்ட் பண்ணவும்...

அடுத்து பக்ரவுண்ட் லேயருக்கு மேலாக... இன்னொரு லேயரைப்போட்டு... M கீயை அழுத்தி ( வட்டம் ஏற்கனவே செற்பண்ணுங்கப்பா... எழுதுற்து ரொம்ப கஷ்டமா இருக்கு... ) வட்டம் வரைந்து கொள்ளவும்...
அடுத்து...  Ctrl + Alt + D ஐ அழுத்தி ஃபெதர்... 5 கொடுக்கவும்....
இனி... அந்த லேயரை கொப்பி பண்ணவும்... ( கொப்பி பண்ணியது... இந்த லேயருக்கு மேலாக இருக்கும்.)
இப்போது... முதலாவது வட்டலேயரில் வட்டத்தை செலக்ட் பண்ணி... Ctrl + Alt+ D ஐ அழுத்துவதன் மூலம்...40,50 ஃபெதர் கொடுத்து ஓ.கே பண்ணவும்...

அடுத்து... B ஐ அழுத்தி பிறஸ் டூலை எடுத்து... அதில்... Bursh ஐ செலெக்ட் பண்ணவும்...
பின்னர்.... இரண்டு வட்ட லேயர்களுக்கு பின்னால்.. ஒரு லேயரைப்போட்டு... அதில் பிறஸ் டூலை... கீறி/கிளிக் பண்ணி கொள்ளவும்...

அடுத்து... அனைத்து லேயருக்கு மேலாக... ஒரு புதிய லேயரை போடவும்...
அதில்... வட்டத்தின் கீழ் வளைவை வெட்டுமாறு ஒரு பெட்டி வரையவும்.. ( M ஐ அழுத்துவதன் மூலம்.)
பிறகு... விருப்பமான/பொருத்தமான கலரைக்கொடுக்கவும்...
(பிறஸ் டூலில்... ஃபெதரான... வட்ட பிறஸ்ஸை செலக்ட் பண்ணி... வெள்ளை நிறத்தால் ஒரு வட்டம் போட்டு... ஃபெதர் பண்ணினால் இன்னும் சுப்பர்... )

அடுத்து... ஒரு பி.என்.ஜி( PNG) ...  படத்தை... கொண்டுவந்து... வட்டமான 2 லேயருக்கும் மேலாக போட்டு... செட் பண்ணவும்... ( இதுவும் செய்தது தான்... செய்த முறை எழுதுவது சிரமம்... )

அடுத்து ஸடோ கொடுக்க வேண்டும்...
கடைசியாக போட்ட... லேயரை... கொப்பி பண்ணவும்... ( கொப்பி பண்ண பட்ட லேயர்... அனைத்துக்கும் மேலாக இருக்க வேண்டும்... )பிறகு...Ctrl +T  ஐ அழுத்தி... Edit--> Transform சென்று... Skew ஐ செல‌க்ட் பண்ணவும்...
பிறகு கீழுள்ளவாறு... மூலைகளை எழுத்து அமைத்துக்கொள்ளவும். ( இதற்கும் ஃபெதர் கொடுத்து... ஒப்பாஸிட்டியை குறைக்கவும்... )
(பழைய டியூட்டோரியல்களில் இருக்கிறது முறை... அல்லது இவரின்"http://velang.blogspot.com/" இல் பாக்கவும்... :) )

அதே போன்ற முறையில்...  ஏற்கனவே பிறஸ் டூலால் போட்ட டிசைன் லேயரை கொப்பி பண்ணி... ஸடோ முன்னர் செய்தது போன்று செய்யவும்.



இறுதியாக இப்படி வரனும்... :)

-------------------------------------------------------------------------------------------


PSD இக்கு... இதை கிளிக் பண்ணி டவுண்லோட் பண்ணலாம்.

-------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected