Followers (என்னுடன் என்னை நம்பி...)

Thursday, 14 June 2012

மர்மக்குழுவின் ரகசியத்திட்டங்கள்! ( இலுமினேட்டி 03 )


போன பதிவுகளில் இலுமினேட்டியென்றால் என்ன என்பதையும், அதன் ரகசியக்குறியீடுகளையும் பார்த்திருந்தோம்!
தவறவிட்டவர்கள் இங்கு பார்க்கலாம் :
  1. இலுமினேட்டி என்றால் என்ன? நோக்கம் என்ன?
  2. இலுமினேட்டி குழுமத்தின் இரகசியக்குறியீடுகள்!
இன்று போன பதிவில் கூறியதுபோன்று, கடந்த 2001 ஆம் ஆண்டு சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரின் உயிரைக்காவுகொண்ட அமெரிக்க வரத்தக நிலையம் / பென்டகன் அழிக்கப்பட்டமையின் பின்னால் உள்ள சதித்திட்டத்தைப்பார்ப்போம்!
கடந்த 2001 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அத்தாக்குதலிற்கு ஒசாமா பில்லேடன் தலைமயிலான அல் குவைதா அமைப்பு காரணமாக அறியப்பட்டது. அதன் பின்னர், ஆஃப்கானிஸ்தான் உள்ளடங்களாக சில நாடுகளில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போர்களை ஏற்படுத்தி கடந்த வருடம் அல் குவைதா தலைவர் பில்லேடனை கொன்றதன் மூலம் அந்த ஃபைலிற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவ் தாக்குதலை திட்டம் தீட்டியது யார்? ஒசாமா தானா? அல்லது இலுமினேட்டி மர்மக்குழுமமா? என்பதை உணர இவ் உலகம்/ நாம் தவறிவிட்டோம்! இன்று அவற்றைப்பார்க்கலாம்!

Wednesday, 6 June 2012

இலுமினேட்டி மர்மக்குழுவின் ரகசியகுறியீடுகள்...


இலுமினேட்டி (illuminati)! இந்த மர்மக்குழுமச் சொல்லில் புதைந்துள்ள மர்மத்தின் அடிப்படையை போன பதிவில் பார்த்திருந்தோம்.
( தவறவிட்டவர்கள் இதைசொடுகிப்பார்க்கவும்!)
இன்று இந்த மர்மக்குழு பற்றிய மேலும் சில விளக்கங்களையும், திட்டமிடல்களையும் பார்ப்போம். பின்னர், எதிர்வரும் சில மாதங்களில் நடாத்தப்பட இருக்கும் பாரிய சதித்திட்டத்தை ஆராயலாம்!
இலுமினேட்டி, உலகம் பூராவும் பல மூளைகளில் சில மர்ம நபர்களை அடிப்படையாக வைத்து இயங்கும் இவ் அமைப்பு, தமக்குள் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தமது தனித்துவத்தை காட்டவும், பல குறியீடுகளை பயண்படுத்துகிறார்கள். இக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் எண்ணத்துடன் உலகின் பல சாதாரண அறிவுஜீவிகள் இணைந்து உருவாக்கி செயற்பட்டுவரும் அன்டி இலுமினேட்டி (anti illuminati ) இக் குறியீடுகளை வெளிக்கொண்டுவருவதில் மிகுந்த பிராயச்சித்தம் மேற்கொண்டுவருகின்றது. சில குறியீடுகளை வெளிக்கொண்டுவந்தும் உள்ளனர். அதில் முதன்மை பெறுவது “ஒற்றைக்கண்” ஆகும்!

Friday, 20 April 2012

நயாகராதான் உலகில் பெரிய நீர்வீழ்ச்சியா?

உலகிலேயே உயரமான நீர்வீழ்ச்சி எது தெரியுமா? நீங்கள் நினைக்கும் நயாகரா அல்ல... அப்போ? இதை சொடுகுங்கள்... வளாகத்தின் இன்னொரு பரிமாணம்!!!

-----

உங்கள் தளங்களில் உள்ள அரிய அறிவியல் தகவல்களையும் இணைக்கலாம்... தொடர்புகொள்ளுங்கள்.


Sunday, 18 March 2012

ஐஃபோனில் பதிவான பறக்கும் தட்டு வீடியோ! ஏலியன்ஸ் நோட்டட்!


அம்ஸ்ரடாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்து தற்செயலாக எடுக்கப்பட்ட வீடியோவே இங்கு நீங்கள் பார்க்கப்போகும் வீடியோவாகும்.
ஐபோனில் எடுக்கப்பட்டுள்ள இவ் வீடியோவில் எவ்வித கிராபிக்ஸ் வேலைகளும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
அத்துடன் அக் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வானில் வேறு எந்தவித வானிலை அறிகருவிகளும் ஏவப்படவில்லை என்பதையும் விமான நிலையமும் அவ்வூர் விஞ்ஞான ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.
 
இது ஐஃபோன் கமெராவில் இருக்கக்கூடிய புள்ளி அல்லது விமான கண்ணாடியில் இருக்கக்கூடிய புள்ளி என்று கூறமுடியாது. ( காட்சிகளைப்பாருங்கள் புரியும். )
 
இங்கு பதிவாகியுள்ள உருவைப்பார்க்கும் போது, பரவலாக வேற்றுக்கிரக வாசிகள் வருவதாகக்கருதப்படும் பறக்கும் தட்டுக்களின் உருவிலேயே உள்ளது. எனவே இது ஒரு பறக்கும் தட்டாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
 
இங்கு வீடியோப்பதிவில் பறக்கும் தட்டு அசையவில்லை, எனினும்... அசையாது வானில் ஒரு இடத்தில் நின்றுவிட்டு திடீரென பறக்கும் பறக்கும் தட்டுக்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளோம்.
 
அப்படியானால், வேற்றுக்கிரக வாசிகள் எமது வானெல்லையில் தங்கியிருந்து எம்மை வேவு பார்க்கிறார்களா? ஏன்?
இதை வளாகம் வலைத்தளத்தில் விரிவாக பார்த்துள்ளோம்.

VIDEO LINK : 

UFO Caught from Plane

Friday, 24 February 2012

ஈழப்பெண்களும் ஈனக்கண்களும் - அதிர்ச்சிகர பேட்டியுடன் வீடியோ


ஈழப்பெண்களும் ஈனக்கண்களும்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைதாகி தடுப்பு முகாம்களில் இருந்து தற்போது வெளியே வந்திருக்கும் பெண்களின் நிலைதொடர்பான காணொளியை கிரவுண் வியூவ்ஸ் ஸ்தாபனத்தார் வெளியிட்டுள்ளர். அனைவரும் நிச்சயம் பார்த்துப்பகிரவேண்டிய வீடியோ இது.
யுத்தம் தொடர்பான அரசியல் பேச்சு ஒரு புறம் இருக்க, இவ்வாறு வெளியேறிய பெண்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவது எம் சமூகத்தின் சாபக்கேடே. ஈழம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட இப் பெண்கள் இராணுவ முகாம்களில் இருந்து வந்தார்கள் எனும் ஒரு காரணத்திற்காக சொந்த உறவுகளே அவர்களை ஒதுக்குவது வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான ஒரு செயல்.
மேலும், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்குபவர்களின் நடவடிக்கைகளையும் இவ் வீடியோப்பதிவில் வரும் பெண் கூறுகின்றார். இப்போது நினைத்துப்பாருங்கள் ஈழத்தமிழரின் இவ் நிலைக்குயார் காரணம்? எங்களுள் இருக்கும் சுய நலம் ஒரு முக்கிய காரணமாக இருப்பது விளங்கும்.
இராணுவத்தின் கண்கள் எப்போதும் இவர்கள் மீதே இருப்பது இவர்களின் அன்றாட வாழ்வை எவ்வளவு பாதித்துள்ளது என்பதையும் உணர முடிகிறது. :/
இப் பெண்கள் எப்போதும் திருமணம் முடிக்கப்போவதில்லை என்று கூறுவது, எமது சமுதாயத்தின் விசம் மிக்க கண்களினாலேயே என்பதை உணரமுடிகிறது. வெளி நாடுகளில் ஈழமக்களின் போராட்டத்தை பணமாக்க முனையும் சிலர் ஈழம் ஈழம் என்று கோசங்கள் எழுப்புவதுண்டு. அவர்கள் நிச்சயம் இப் பெண்களிற்கு உதவி தம் கறைகளைப்போக்கிக்கொள்ள வேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails