கொஞ்ச நாளுக்கு முதல்ல... அட்வான்ஸ் லெவல் எடுத்திட்டு வெட்டியா இருந்தப்ப... அம்மா பகவானின் பூசைக்கு சென்று.. அங்கு நானும் எனது நண்பர்களும் பார்த்ததை ( கேவலங்களையும் சிறு பிள்ளைத்தனங்களையும்) எழுதி இருந்தேன்...
இன்று... அதே வெட்டியாக இருந்த நேரத்தில்... "பிரம்ம குமாரிகள்" என்ற அமைப்பினரிடம் சென்றிருந்ததைப்பற்றி இன்று கொஞ்சம் எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன்.. :)
------------------------------------------------------------------------------------------
ஒரு நாள்... மாலையில்... கிறிக்கெட் விளையாடிட்டு வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தோம்... போற றோட்ல... "பிரம்ம குமாரிகள்" தியான வகுப்பு... என்று விளம்பரம் போட்டிருந்தார்கள். எங்களுக்கும்... நீண்டகாலமாவே.. இந்த தியானத்தை செய்தா மனம் கட்டுப்பாட்டுக்கு வரும் என்றெல்லாம்... டீச்சேர்ஸ் அட்வைஸ் பண்ணுவாங்கள்...
ஆகவே, நாங்கள் அந்த வகுப்புக்கு போகலாம் என்று முடிவு செய்தோம்.அ
அடுத்த நாள்... காலைல 4.50 மணிக்கெல்லாம் கஸ்டப்பட்டு எழும்பி... குளிச்சிட்டு... 5.30 எல்லாம் செட்டாகி அவர்கள் குறிப்பிட்டிருந்த அந்த இடத்துக்கு பொய்ட்டோம்... 6 மணிக்கு தொடங்கும் என்று ஏற்கனவே விளம்பரத்தில பார்த்தம்.
வழமைக்கு மாறாமல்... அவர்களும் 6.15 எல்லாம் எங்களை ஹோலுக்குள் கூட்டிட்டு போய்... தூரத்தில நேர ஒரு லைட் எரிஞ்சு கொண்டிருந்தது... அதைப்பார்த்து தியானமிருக்குமாறு சொன்னார்கள்.
நாங்களும் ஏதோ தியானம் என்கிற பெயர்ல அதை பார்த்திட்டே அமைதியாக இருந்தோம்... ( சுற்றுப்புறம் உண்மையிலேயே அமைதியாக இருந்தது... ஆர்வமாகவும் இருந்தது.)
அந்த லைட்டின் கீழே.. ஒரு படமிருந்தது... ( நாங்கள்... அவர் தியானத்தில் பெரியவர் ஆக்கும்... அதுதான் வச்சிருக்கிறார்கள் என்று நினைத்தோம்... :)
30 நிமிடங்களின் பின்னர்... வெள்ளை புடவையுடன் ஒருவர் வந்தார்... அவர்தான் எங்களுக்கு தியானம் சொல்லித்தருபவராம்... ஒரு ஸெடியூல் தந்தார்கள்... கிழமையில் 3 நாட்கள் தியான வகுப்பு... 20 நிமிடம் தியானம்... 20 நிமிடம்... பஜனை... 20 நிமிடம் கலந்துரையாடலாம்...
இப்படி எழுதினா பதிவு நீண்டுடும்... முக்கியமானதை எழுதுறேன்...
------------------------------------------------------------------------------------------
முதல் நாள் வகுப்பு....
சில படங்களுடன் வந்து அமர்ந்தார்கள்... அதில் ஒரு படத்தில்.. பெரிதாக ஒரு வட்டம்... அதில் 4 பெரிய பிரிவுகளும்... இறுதியில்... ஒரு சின்ன பிரிவும் இருந்தது...
அவர்களின் விளக்கம்...
முதலாவது... தங்க காலமாம்... அதில் இராமர், ஜேசு (மதங்கள் கடந்தே இயங்குவதாக கூறிக்கொள்கிறார்கள்) படங்கள் போடப்பட்டிருந்தது... மிகவும் சிறந்த முறையில் ஆட்சி நடை பெற்று அனைத்து மக்களுமே சந்தோஷமாக இருந்த காலமாம் அது...
இரண்டாவது... வெள்ளி காலமாம்... இதில் முதல் காலத்தில் தவறு விட்டவர்கள் சில துண்பங்களுடனும்... பொதுவாக சந்தோஷ்மாகவும் வாழ்ந்த காலமாம்... துவார பாலகர்களின் படங்கள்...
4 ஆவ்து... இப்போது நாங்கள் இருக்கும் காலமாம்... முழுவதும் துண்பமாம்...
5 வது குறுகியகாலம்... வைரக்காலமாம்... அதறுகு எங்களை தயார்படுத்துவது தான் இந்த மைப்பின் நோக்கம்/கடமை எல்லாமேயுமாம்....
அந்த ஒவ்வொரு காலமும்... 2500 வருடங்களைக்கொண்டதாம்... கடைசி மட்டும் 100 வருடங்களைக்கொண்ட காலமாம். அப்போ நாங்கள் கேட்டோம்... இராமாயணம்/ மகாபாரதம் நடந்த யுகமெல்லாம் நீண்டகாலத்தை கொண்டிருக்கே... நீங்கள் வெறும்... 2500 என்கிறீர்களே என்று....
அதற்கு அவர்களி பதில் சுப்பரா இருக்கும்...
பதில் இதுதான்...
" நீங்கள் எல்லாம் 63 வது பிறவியின் ஆரம்ம நிலை.. அதுதான் இப்படியான கேள்விகள் கேக்கத்தோன்றுது... "
இது மட்டும்தான் எல்லா கேள்விக்கும் பொதுவான பதில்...
நாங்கள் 63 ம் பிறவி என்பதால மட்டும்தான் இவர்களிடம் வந்தோமாம்... மற்றவர்கள்... 63 அடையலயாம்... பக்குவப்படலயாம்... 63 இல் இங்கு வந்து தூய்மை அடைந்தவர்கள் 64 ஆவது பிறவியில்... வைர காலம் எனும் சந்தோஷங்கள் மட்டுமே நிரம்பிய உலகத்தில் பிறப்போமாமாம்...
நாங்கள்... லவ் பண்ண கூடாதாம்... கல்யாணம் கட்ட கூடாதாம்... அப்போதானாம்... மற்றவர்களிட பாவம் சேராமல்..தூய்மையடைந்து... 64 பிறவியின் பின்னர்... நட்சத்திரமாவமாம்... ( ரொம்ப கேவலமான அறிவியல் தத்துவம் இது.. )
பிச்ச காரர்களுக்கு பிச்சையும் போட கூடாதாம்... போட்ட அவர்களின் பாவம் தொத்திக்குமாம்... ஆனா, அன்பா பழகனும் எல்லோருடனும் என்று இன்னொரு நேரம் அட்வைஸ்....
( இடைல ஒருக்கா... போன பிறவியில பிச்சைக்காரர்களுக்கு உதவாததால தான் இவர்கள் இந்த பிறவியில் பிச்சையா என்ரார்கள்... அப்படி என்றா... நாங்கள் இந்த பிறவியில் உதவாவிட்டால்???? கேக்கல... கேட்டா அதே 63 தான் பதில்... :) :)
ஆர் மேலயும்... பற்றிருக்க கூடாது என்பது... இவர்களின் முக்கியமான கட்டளை....
ஆனால், வகுப்பு முடிந்து சில நெரங்களில்... தம்பி நீங்கள் என்ன படிக்கிறீர்கள்... என்ர பேரப்பிள்ளை அது படிக்கிறாள்... நல்ல கெட்டிக்காறி... இப்படி கனக்க சொல்லுவார்கள்... இது பற்றில்லை போல...
------------------------------------------------------------------------------------------
அது கிடக்கட்டும் ஆர் அந்த படத்திலுள்ளவர் என்றால்... அதற்கான விளக்கம்...
ஏதோ பெயர் சொன்னார்கள் நினைவில்லை... அவர்தான் 64 பிறவிகளையும் வாழ்ந்து முடித்த ஒரே ஒருவராம்... 8 வது அவதாரம் என்றுகூடி சொல்லலாமாம்...
வைர வியாபாரியா இருந்த அவருக்கு... ஒரு நாள் திடீரெண்டு ஒரு ஒளி வந்து அனைத்து பிரபஞ்ச உண்மைகளையும் சொல்லிச்சாம்... ( அவரை ஒளி சூழ்ந்து இருந்ததை அவரது மகள் பார்த்தாவாம்... + பின்ன்ர்.... அவரின் சிஷ்யர்கள் சிலரும் பார்த்தார்களாமாம்... சாட்சி இல்ல என்று நாங்கள் சொல்ல கூடாதே... )
அவருக்கு விளக்கப்பட்ட அந்த உண்மைகள்... எங்களால புருஞ்சுக்கவே முடியாதாம் இப்போது...
அவர் அந்த உண்மைகளில் சிலதை எழுதி வைத்துவிட்டு இறந்து நட்சத்திரமாகிவிட்டாராம்...
அவர் எழுதியதை தான் முரளி என்கிற பேர்ல... தியானத்தின் பின்னர்... வாசிக்கிறார்கள்...
நாங்களும் பொழுதுபோக்காக 3 நாள் போனோம்....
4அம் நாள்... இறுதியாக நாங்கள் சென்ற நாள்...
இந்தியாவிலிருந்து சில பிரம்ம முமாரிகளும்... சகோதரர்களும்... ( ஆண்களை அப்படித்தான் சொல்லுவார்களாம்)...
நாங்கள் ஹோலில் இருந்தோம்... கதைச்சிட்டு இருக்கும் போதே... எங்கள் கொஞ்சப்பேரைக்காட்டி... இவர்கள் நல்ல பிள்ளைகள்... எங்கள் குறூப்பில் சேர்துகலாம் என்றார்கள்.... எங்களுக்கு.... வடிவேலுவுக்கு சொன்ன மாதிரி..."இவன் ரொம்ப நல்லவன்டா" அப்பிடி இருந்த்து.... அன்டையோடு எஸ்கேப்....
------------------------------------------------------------------------------------------
தியானத்தை பலரும் விரும்புவார்கள் என்றகாரணத்தினால்... அதை ஒரு சாட்டாக வைத்து... இப்படி ஒரு தனிப்பட்ட மனிதனை கடவுள் என்று கூறுவதும்... அறிவியலே இல்லாமல்... முட்டால்தனமால லொஜிக்கில்லாத பின்னனிகளைக்கூறி சமுதாயத்தை ஏம்மாற்ற முனைவது கேவலமானது...
( 8 தொடக்கம் 15 வயதான பாடசாலை மாணவர்கள் பலர் உள்ளார்கள் இவர்களது வகுப்பில்... அவர்களை பற்றற்றவர்களாக்கி... சுய சிந்தனையில்லாதவர்களாக மெல்ல மெல்ல மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.)
இப்படியான... குழுக்களுக்கு... பாட சாலைகளின் முன்னால்... விளம்பரஙள் வைப்பதற்கே அனுமதியளிக்க கூடாது...
------------------------------------------------------------------------------------------
போன அம்மா பகவான் அனுபவத்தில்... ஏன் ஹிந்துக்களை பற்றி எழுதுகிறீர்கள்... மற்றைய மத்ததில் இப்படி தப்பு நடக்குது தானே... என்ற பொருளில் கொமென்ட்ஸ் வந்தது...
மற்றையவர்கள் தப்பு பண்ணுகிறார்கள் என்பதற்காக நாமும் தப்பானவர்களை வழர்க்கனுமா???
எங்களது இந்து மதம் என்ன சொல்கிறது என்பதை புரிந்தாலே எல்லாம் புரியும்... தூதர்கள் தேவையில்லை...
"ஏலியன்ஸ் பேய் கடவுள் விளங்க முடியா பரிமாணங்கள்" என்பதன் பிற்பகுதியில்... இவற்றிற்கான பதில் சொல்ல முனைவேன். :)
------------------------------------------------------------------------------------------
இங்கு குறிப்பிட்ட அனைத்துமே.... நேரடியாக பார்த்தறிந்த உண்மைகள்... தேவைப்படின்... இடம்... பெயர் குறிப்பிட முடியும். மற்ரைய இடங்களில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது.
------------------------------------------------------------------------------------------
அட நானும் 150 பதிவுகள் எழுதிட்டனே... :D
150 மெம்பேர்ஸும் இருக்காங்க... நன்றி மெம்பேர்ஸ்கும்... வருகைதரும் அனைவருக்குமே... :)
150 மெம்பேர்ஸும் இருக்காங்க... நன்றி மெம்பேர்ஸ்கும்... வருகைதரும் அனைவருக்குமே... :)
------------------------------------------------------------------------------------------