Total Pageviews

Wednesday 16 February 2011

இதை கிளிக் பண்ணினா... சிரிப்பிங்க... சிரிக்கனும்... டொட் B-) ( படங்கள்)

-----------------------------------------------------------------------------
இந்த படங்களை பார்த்து கட்டாயம் சிரிக்கனும்... :D
ரசித்தா வோடனும்... :P
-----------------------------------------------------------------------------

















-----------------------------------------------------------------------------

Tuesday 15 February 2011

ஹனுமார் vs ESP :) ( மூளையும் அதிசய சக்திகளும். )

------------------------------------------------------------------------------------------
போன ESP பதிவில்... பெளதீக விதிகளை மீறி,  ESP  சக்தியுள்ள மனிதர்களால் நிகழ்த்திக்காட்டப்பட்ட மிக முக்கியமானதும், பிரசித்தமானதுமான சம்பவங்களை எழுதி இருந்தேன்.
இந்த பதிவி வாசிப்பவர்கள் ஒரு முறை அந்த பதிவை வாசித்தால்த்தான் தெளிவாக விளங்கும். :)

போனபதிவில்...
அந்தரத்தில் பறந்த மனிதர் பற்றியும்...  பாரிய நிறையை நகர்த்திக்காட்டியதுடன் மட்டுமல்லாது தனது நிறையை கூட்டிக்காட்டிய மனிதர் பற்றியும் பார்த்திருந்தோம். அப்போது.. முடிவில் கூறியிருந்தேன்... இப்படி நிகழ்த்தப்படுவது இதுவல்ல முதல் முறை என்று...
அப்படியானால்... முன்னர் யார் இப்படியான பெளதீக மீறல்களை செய்தார்கள் என்பதை இன்று எழுதுகிறேன். ( இவை எனது ஊகங்கள் தான் ESP யாக இருக்கும் என்று... பிழைகளைச்சுட்டிக்காட்டவும்.. :) )
------------------------------------------------------------------------------------------
இராமாயணம் பலருக்குத்தெரிந்திருக்கும் ( தெரியாதவர்கள் நண்பர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்..)..
அதில் குறிப்பிடப்படும் ஒரு கதாப்பாத்திரம் "ஹனுமார்"...
ஹனுமார்... பறக்கக்கூடிய சக்தி கொண்டவாரகவே காட்டப்படுகின்றார்... எனினும் அவர் அந்த சக்தியை முன்னர் உணர்ந்திருக்கவில்லை... ஒருமுறை குறிப்பிட்ட ஒருவரால் ( பெயர் மறந்துவிட்டது ) அந்த சக்தி இருப்பது உணர்த்தப்படுகிறது. அதன் பின்னரே அவர்... இலங்காபுரிக்கு பறந்து செல்வதாக காட்டப்படுகிறது.

இன்னொரு சம்பவத்தில்... இராமரின் தம்பி லக்ஷ்மனனைக்காப்பாற்ற "சஞ்சீவி" மலையில் போய் குறிப்பிட்ட ஒரு மூலிகையை கொண்டுவருமாறு ஹனுமார் பணிக்கப்படுகிறார். உடனே பறந்து சென்ற ஹனுமார்... அங்கு அந்த குறிப்பிட்ட மூலிகையை கண்டு பிடிக்க முடியாமையால்... அந்த மலையை அப்படியே தூக்கிவருவதாக காட்டப்பட்டுள்ளது.

இந்த இராமயாணம் என்பது... லெமூரியா கண்டத்தில் நடந்திருக்கத்தக்க உண்மை வரலாறே என்று.. "லெமூரிய" பதிவுகளில் பல சான்றுகளுடன் எழுதி இருந்தேன்.

எனவே இந்த கதாப்பாத்திரத்தில் குறிப்பிடப்படும்... ஹனுமார், உண்மையிலேயே ஒரு ESP  சக்தி கொண்ட மனிதராக அல்லது தனது மூளையிம் பல செல்களை பயண்படுத்தி அபூர்வ ஆற்றல்களை வெளிப்படுத்தத்தக்க மனிதராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ( எல்லாத்தையும் புணைவுகளுடன் மிகைப்படுத்தி எழுதியமையால் வரலாறுகள் கூட பொய்யாகிப்போவதுண்டு. )
இங்கு நாம் இன்னொன்றையும் கவணிக்க கூடியதாக இருக்கிறது... என்னதான் மலையை தூக்கிகொண்டு பறக்கும் ஆற்றல் மிக்கவராக இருந்தாலும்... அவரால், அந்த குறிப்பிட்ட மூலிகையை கண்டு பிடிக்க முடியவில்லை.

நவீன உலகத்தில் இனங்காண‌ப்பட்ட ESP  மனிதர்களும் அப்படித்தான்... குறிப்பிட்ட ஒரு ஆற்றலையே அவர்களால் திறம்பட வெளிப்படுத்த முடிகிறது. (மூளையின் குறிப்பிட்ட பகுதி செல்களின் ஆற்றலை மட்டுமே இவர்களால் தூண்ட முடிகிறது.)

இராமயாண உதாரணத்தை மட்டும் அவைத்துக்கொணு இந்த ESP மனிதர்கள் முன்னர் இருந்தார்கள் என்பதை சிலருக்கு ஏற்க முடியாதிருக்கும்.
எனினும்... எகிப்திய கதைகளில் வரும் தெய்வங்கள், தேவதைகளும் பறக்கும் ஆற்றலைப்பெற்றிருந்ததாக காட்டப்படுகிறது. ( இறக்கை இருந்ததாக சொல்லப்படுவது பின்னர், சாதாரண மனிதர்கள் நம்புவதற்காகவும் லொஜிக்கிற்காகவும் ஏற்படுத்தப்பட்ட‌ புணைவுகளாகவும் இருக்கலாம். )
எகிப்திய தெய்வங்களில்... ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல் இருப்பது போன்று காட்டப்படிருக்கிறது. அனைத்தும் கொண்டவர் இல்லை என்பதை இதிலிருந்தும் ஊகிக்கலாம்...
இவை இன்று அறியப்பட்டுள்ள ESP  சக்திகளுடன் திறம்பட ஒத்துப்போகின்றது.
------------------------------------------------------------------------------------------
இங்கு நான் இப்போது சொன்ன விடையங்களுக்கு... பல மாற்றுக்கருத்துக்கள் இருக்கும்... அவற்றை கொமென்ட்ஸில் சொல்லவும்...
------------------------------------------------------------------------------------------
அடுத்த பதிவுகளில்...
முன்கூட்டிய நிகழ்வுகளை சொல்லும் ESP பற்றியும்... அவற்றை ஏற்கனவே கூறிய வரலாற்று அல்லது இதிகாச சம்பவங்கள் பற்றியும்...
உயிரில்லாமல் தமது ESP  சகிதியை வெளிப்படுத்திய சடலங்கள் பற்றியும்... அது எப்படி சாத்தியமானது என்பதியும் பார்ப்போம்...
------------------------------------------------------------------------------------------
பதிவில் விஷயம் இருக்கு என்றால் ஒரு வோட்டும்... இல்லை இன்னும் எழுதனும் என்றால் குறைகளை கொமென்டிலும் போடவும்... :)
------------------------------------------------------------------------------------------

Monday 14 February 2011

காதலர்தினத்தில் சுட்ட கவிதை... :D (+ jokes)

------------------------------------------------------------------------------------------
ஹீ...ஹீ... சொந்தமாத்தான் கவிதை வரல...  காதலர் தினத்துக்கு .... ஃபேஸ்புக்கில் கனக்க கவிதைகள் இருந்தன... சிலது சுப்பர்... சிலது சப்ப... சிலது லொல்லு... :D
எனக்குப்பிடித்த சுப்பர்களையும்... லொலுக்களையும்... சுட்டு இங்க போடுகிறேன்... :D

------------------------------------------------------------------------------------------
எனக்கு பிடித்தவைகளே
உனக்கு பிடிக்கவேண்டும்
என்பதல்ல காதல் . . .
உனக்கு பிடிக்காதவைகள்
எனக்கு பிடித்திருந்தும்
என்னை பிடிக்கும் என்பாயே
அதுவே காதல் !

உன்னை பற்றி நானும்
என்னை பற்றி நீயும்
தெரிந்து கொள்வதல்ல
காதல் . . .
நம்மைப் பற்றி நமக்கே
தெரியாதவைகளை
தெரியவைப்பதே காதல் !

எல்லைகளை மீறுவதல்ல
காதல் . . .
நமக்குள் எல்லையே இல்லாமல்
இருப்பதே காதல் !

கற்பு நெறிக்கு உட்பட்டதல்ல
காதல் . . .
கற்புக்கு நெறிமுறைகளை
வகுத்ததே காதல் !

நட்பை விட உயர்ந்ததா தாழ்ந்ததா
என்பதல்ல காதல் . . .
நட்பை தன்னை விட உயர்ந்த
இடத்தில் வைத்து பெருமைப்படுத்துவதே
காதல் !

------------------------------------------------------------------------------------------
உனக்காக உயிரை விடுவனே தவிர
உயிருக்காக உன்னை விடமாட்டேன்....
I Love You....
------------------------------------------------------------------------------------------
நீ என்னை மிஸ் பண்ணி இருக்கலாம், நீ என்னை நிராகரித்து இருக்கலாம், ஏன் நீ என்னை மறந்துகூட இருக்கலாம், ஆனால் ஒரு நாள் என்னை நீ பார்க்க விரும்பினால், என்னை தேடாதே, சும்மா ஒருமுறை உந்தன் நிழலைப்பார், நான் அங்கிருப்பேன். என்னை நம்பு!!
----------------------------------------------------
மெய் வருத்தி உருகினாலும்
பொய் வருத்தி உருகினாலும்
உண்மை அன்புக்கு மட்டுமே
கட்டுண்டு காத்து கிடப்பது
உண்மை காதல் ....!
---------------------------------------------------
காதலர் தினம்
இருப்பதால்
தானோ என்னவோ
தெரியவில்லை
"பெப்ரவரி"
மாதத்துக்கும் கூட
ஆயுள் குறைவு.
------------------------------------------------------------------------------------------
அட சீ!
காது குடைவதில்
உள்ள சுகம் கூட
காதலில் இல்லை
------------------------------------------------------------------------------------------
அழகான ரெண்டு பொண்ணுங்க
போய்கிட்டு இருந்தாங்க...
பின்னாடியே ரெண்டு பசங்க
போனாங்க.
உடனே
ரெண்டு பொண்ணுங்களும்
ஆளுக்கு ஒரு பையன்
கைல ராக்கிய
கட்டிட்டு 'அண்ணா'னு
சொல்லுச்சுங்க.

பசங்க என்ன
சொல்லிருபாங்க ??
?
?
?
?
?
?
பையன்: டேய் மச்சான்!
என் தங்கச்சிய நீ கட்டிக்க.
உன் தங்கச்சிய நான்
கட்டிக்கிறேன்...!

நாங்கல்லாம்
சுனாமில ஷ்விமிங்க
போடுறவங்க...
------------------------------------------------------------------------------------------
boys love சொல்லும் போது girls சொல்லும் top 10 answers..

10. No idea
9. friends ஆக இருக்கலாம்
8. செருப்பு பிய்யும்
7. i hate love
6. i hate u
5. parents திட்டுவாங்க
4. யோசிச்சு சொல்லுரன்
3. இப்போ வேண்டாம்
2. நான் படிக்கணும்
1. sorry நான் வளாகம் றைட்டர் மாதிரி ஒரு நல்ல பையன தான் love
பண்ணுவன். :P
------------------------------------------------------------------------------------------

இதில சிலது அவர்கள் சுட்டத நான் சுட்டிருப்பேன்...
உரிமையாலர்கள் மன்னிக்கவும்.... :D
பிடித்திருந்தால் வோட் போடவும்... இல்லைனா கொமென்டில் சொல்லவும்... :)

------------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------------

Sunday 13 February 2011

14 சிம்பிளா ஒரு லவ்...:) ( நிஜம் :P)

-----------------------------------------------------------------------------------------
இன்று காதலர் தினம்... சிம்பிளா ஒரு லவ் ஸ்டோரி எழுத இருக்கிறேன்... பாருங்க.... :P 
கதை பெருசுதான் எனக்காக ஒருக்கா வாசித்து... பிடித்திருந்தா வோட்டும் போடுங்க... :D

-----------------------------------------------------------------------------------------

மிஸ்டர் y...
காலைல ஸ்கூல் போய்ட்டு... வீட்ட வந்தோன முதல்ல செய்றவேலை லப்டொப்பை ஒன் பண்ணி ஃபேஸ்புக்போறதுதான்... ஸ்கைப் தானாவே ஒன் ஆகிடும் :P... அனேகமா இரவு 12 மணிவரைக்கும் அதுதான் வேலை... ஸ்கைப்ல கொன்ஃபரன்ஸ்கோல்... ஃபேஸ்புக்ல சட்...  ஆக்களுக்கு கொமென்ட் பண்ணி கலாய்க்கிறது.... சாட்டர் ஆக்கிறது அல்லது ஆகிறது.... :P இடைல ஆரும் இல்லை என்றா புளொக் உம் எழுதுறது. கடைசி பிள்ளை... பொறுப்பு ஒன்றும் சொல்லல இன்னும்.

ஒரு முறை இப்படித்தான்... ஃபேஸ்புக் ஃபான்பேஜ் ஒன்றில இருந்த.... கேர்ல் ஒராலுக்கு ஃப்ரென்ட் றிக்குவஸ்ட் பண்ணி இருக்கார்  மிஸ்டர் y... அடுத்த நாள் பார்த்தால் அந்த கேர்ல் றிக்குவஸ்ட் ஓ.கே பண்ணிட்டு... பிறகு றிமூவ் பண்ணி இருக்கு. கடுப்பில.... "இதுக்கு றிக்குவஸ்ட அக்ஷப்ட் பண்ணி இருக்கவே தேவலை... பைய்" என்று மெஸேஜ் அனுப்பியாச்சு. அதுக்கு பதில் மெசேஜா " நான் தெரியாத ஆக்களை அட் பண்றல... ஸொறி" என்று வந்திட்டுது.
இந்த மெசேஜ் அனுப்பும் போதே... அங்காள ஃப்ரென்ட்ஸ்கூட கொண்ஃபரன்ஸ்ல  பேசிட்டு இருக்கக... "ஒருத்தி ஓவராதான் மச்சான் படம்(ஸீன்) காட்டுறாள்... அட் பண்ணிட்டு நான் பாக்க முதல் றிமூவ் பண்ணிடால்டா... கலாய்க்கனும்.." என்று ஃப்ரெண்ட்ஸ்கிட்டையும் சொல்லியாச்சு...
அடுத்ததா... "ஓ.கே அப்போ ஏன் அட் பண்ணினிங்க சிஸ்டர்..." என்று தொடங்கியாச்சு... எல்லாமே லொல்லாத்தான்.. மெசேஜ்...

இரண்டு மூன்று நாட்களின் பின்னர்....
"இனி றிக்குவஸ்ட் பண்ணினா... நான் அட் பண்ணுவன்... இப்போ தெரிஞ்சுகிட்டன்" என்று அந்த மெடம் x...  சொல்லிட்டா....
அதுக்கு மிஸ்டர் y...  " நான் அட் பண்ணுவனாமாம்... நீங்க றிமூவ் பண்ணுவிங்களாமாம்... ஏலாது... றிக்குவஸ்ட் பண்ண மாட்டன்..." என்டுட்டார்.
மெடம் x...  பிறகு தானே றிக்குவஸ் பண்ண y ம் ஓ.கே பண்ணீட்டார்.... :D... ஸ்கைப்ல ஃப்ரெண்ட்ஸ்கும் சொல்லியாச்சு... "இப்போ ஆள் தானாவே அட் பண்ணீட்டா மச்சான்..." என்று...

எதிரிடி நீ எனக்கு என்று... சொல்லி மெசேஜ்ல பேசத்தொடங்கியாச்சு... கொஞ்ச நாள்ளையே நல்ல ஃப்ரெண்டாகிற அளவுக்கு பேசியாச்சு.... நோர்மலா... மிஸ்டர் y கேர்ள்சோட சீக்கரமா குளோஸ் ஃப்ரெண்டாகிறது குறைவு... இவவோட ஆகியாச்சு... நல்ல ஃப்ரெண்லியா ஜோக்க கொஞ்சம் பாசமா... பழகினது பிடித்திருந்தது...அவவும்.... தனக்கு ஜொல்லுவிடுற ஆக்களை பற்றி எல்லாம் சொல்லி றொம்ப பெஸ்டாகிடினம்.... (என்றாலும் சில.. வேளைகளில் ஒன் லைன்ல இருந்து கொண்டே... றிப்ளை பண்ண மாட்டார்... ஹீ ஹீ... அங்கால ஸ்கைப்ல பிஸி... வேற காரணம் சொல்றது... நான் பாக்கல... நெட் வேலை செய்யல என்று... :P ஆனால், அந்த கேர்ள் கோவிக்கிறல லேட் எண்டாலும்... :) )

மிஸ்டர் y கு ஃப்ரெண்ட்ஸிப்பை பற்றி ஓவரா பில்டப் பண்றது... ஒரு பொழுதுபோக்கு... :D  இந்த கேர்ல்டையும் பில்டப் பண்ணீட்டார்.

-----------------------------------------------------------------------------------------

மெடம் x...
ஸ்கூல் முடிந்து... வீட்ட வந்ததும் அடுத்த நாள் செய்யவேண்டிய கோம்வேர்க்கை செய்திட்டு... கொம்பியூட்டரை ஒன் பண்ணி ஃபேஸ்புக்... எம்.எஸ்.என் போறது தான் வேலை....
வீட்டு வேலைகள் செய்ய விடுறல ஒரே ஒரு பொம்பிளை பிள்ளை என்று... சமைக்க கூட தெரியாது.
ஃபேஸ்புக், ஸ்கைப்பில் ஃப்ரெண்ட்ஸோட அரட்டை அடிக்கிறதுதான் வேலை 11 மணி வரைக்கும்.

ஒரே நாளில் 3 ஃப்ரெண்ட் றிக்குவெஸ்ட்... அதில ஒன்றுக்கு கொமன் ஃப்ரெண்ட்ஸே இல்லை...  ஜொல்லு விடத்தான் நிக்குது என்று நினைச்சுக்கொண்டே... படங்களை பார்த்திட்டு றிமூவ் பண்ணுவம் என்று அட் பண்ணியாச்சு.. (தெரியாத ஆக்கள் என்றால்... இப்படி அட் பண்ணி படங்களை பார்த்திட்டு கலட்டி விடுறது இவாட பொழுது போக்கு.. :P ) ஆனால், படங்களி எல்லாம் பார்க்க முடியல... பேர்சனல் படங்கள் எல்லாம் ஹைட்... ஸோ, வேஸ்ட் என்று உடனே கட் பண்ணியாச்சு.

கொஞ்ச நேரத்தில ஒரு மெஸேஜ்... "இதுக்கு றிக்குவஸ்ட அக்ஷப்ட் பண்ணி இருக்கவே தேவலை... பைய்"... இப்படித்தான் கனக்க மெஸேஜ் வாறது ஜொல்லுகள்கிட்ட இருந்து..
"நான் தெரியாத ஆக்களை அட் பண்றல... ஸொறி" என்று பதில் அனுப்பியாச்சு....
பிறகு...  "ஓ.கே அப்போ ஏன் அட் பண்ணினிங்க சிஸ்டர்..." என்று ஒரு மெசேஜ்...
அதுக்கு... " படங்கள் பார்க்கிறது என்ட ஹொபி பிறதர்..." என்று அனுப்பியாச்சு... பிறகும் லொல்லா மெசேஜ் வந்திச்சு... பேசிட்டு இருக்ககதான் தெரியும்...  ஒரே நாட்டில தான் இருக்கம் என்று... ஜொல்லு விடாம சிஸ்டர் என்று சொல்லி பேசுறானே... அட் பண்ணுவம் என்று...
"இனி றிக்குவஸ்ட் பண்ணினா... நான் அட் பண்ணுவன்... இப்போ தெரிஞ்சுகிட்டன்" என்று ஒரு மெஸேஜ் அனுப்பினால்... " நான் அட் பண்ணுவனாமாம்... நீங்க றிமூவ் பண்ணுவிங்களாமாம்... ஏலாது... றிக்குவஸ்ட் பண்ண மாட்டன்..." என்று பதில்...
நண்பனா அவன பிடிச்சதால.. பிரச்சனை வராது என்று... அட் பண்ணியாச்சு... ( பிறகு அப்படி நடக்கும் என்று நினைக்கவே இல்லை... )

கொஞ்ச நாள் போக...
அவன் ஜொலியா பேசுறதும்... பழகிறது...ட தன்னைப்போலவே இருந்ததால...
அவன லவ் பண்ணலாம என்று தோனிச்சு... அதுக்கு முதல் மெடம் x  எவ‌ரையும் லவ் பண்ணல ( அட்ராக்ஷன் இருந்திருக்கு 10, 13 வயசில... )
ஆனால், அவன் ஃப்ரெண்ட்ஸிப் தான் முக்கியம்... என்று எல்லாம் ஓவரா பேசினான்... தன்ன புறக்கணிக்கத்தானோ என்று நினைச்சு லவ் பண்ணி நல்ல ஃப்ரெண்ட விட வேனாமே என்று... நண்பியாகவே இருக்க நினைச்சிட்டா.

-----------------------------------------------------------------------------------------


ஹொலூன் பண்டிகைக்கு முதல் நாள்...
எம்.எஸ். என் ல சட் பண்ணிட்டு இருக்கக... திடீரெண்டு...
மிஸ்டர் y... "நீ என்னை லவ் பண்றியா?" என்று மெடம் x ட கேட்டார்...
(அவருக்கு இவாவ பிடிச்சிருந்துது... ஜோக்கா பேசுறது... ஃப்ரெண்டா இருக்ககவே விட்டு கொடுக்காமல் இருந்தது... அன்பா பேசினதெல்லாம் சேர்த்து 1st லவ் பத்திகிச்சு... :P ( அதுக்கு முதல்ல அட்ராக்ஷன் வந்திருக்கு 14,16,17 ல... :D)
ஜோக்கா கேக்கிற போல இருந்ததால மெடம் y " நீ பண்றியா?" என்று கேட்டுடே இருந்தா...
அதே நேரம்... மிஸ்டர் x  தன்ட பெஸ்ட் ஸிஸ்டர்ட... இதை சொல்லிடு இருந்தார்... அவா நம்பல... காரணம் ஜோக்காதான் பேசுறான் என்றுதான்...
பிறகு சட் முடிஞ்சு போற டைம் அவவும் "ஐ லவ் யூ" போட்டுட்டு உடன போய்டா...

ஹொலூன் பண்டிகை...
அன்றுதான் லவ் 2 சைட்டாலையும் கொண்ஃபோர்மாச்சு...
பிறகு 11 நாளுக்கு பிறகு 1st மீட்டிங்...
3 கிழமைக்குள்ள... மெடம் x ட அப்பா... கேட்டு இருக்கார்... " ஃப்ரெண்ட்ஸிப் தானா அல்லது லவ்வா என்று..." லவ் என்று சொல்லீட்டா மெடம்... அவையும் படங்களைப்பார்த்து நல்லம் என்று நம்பீட்டினம்... :P
1-1/2 மாசத்துல மிஸ்டர் y உம் வீட்டுக்கு கொண்ஃபோர்மா சொல்லீட்டார்.
முதல்ல அம்மா எதிர்ப்பு... காரணம், அவா... ஃபமிலி ஃப்ரெண்ட் ஒரால் ட மகளுக்கு கட்டிவைக்க விரும்பினா... பிறகு பிள்ளைட விருப்பம் முக்கியம் என்றுட்டு ஓ.கே பண்ணீட்டா... :D

பிறகி ஸ்கைப்ல 2 ஃபமிலியும் பேசிச்சு... அப்போதான் தெரியும் தூரத்து சொந்தம் என்று... மெடம் x ட பெரியப்பாவோட மிஸ்டர் y உம் அவர்ட அம்மாவும் நல்ல குளோஸ்....
பிறகென்ன சிம்பிலா... ஓ.கே சொல்லிடினம்...

ஆனால்.. இடைல கொஞ்சனால்
மிஸ்டர் x க்கு தொடர்ந்து கதைக்கக அடிக்கடி கடுப்பாகி... ஃப்ரெண்டாவே இருந்திருக்கலாமோ.... என்ற எண்ணம் வந்திருக்கு... (முதல்ல என்றால்... கனபேரோட கதைக்கக சின்ன விசயத்துக்கு கோவம் வராது... பழச சொல்லினாலும் கோவம் வாறல... )
மெடம் x இக்கும்... என்ன இவன் இப்படி கோவமாகிறானே... ஃப்ரெண்டா இருக்கக இப்படி இல்லையே என்று தோனி இருக்கு...

போக போக இப்போ... புரிஞ்சுகிட்டினம்... எஸ்.எம்.எஸ், ஸ்கைப்ல நெடுக பேசீட்டு இருக்கினம்...
2 சை ஃபமிலியும் ஓ.கே சொல்லியாச்சு... காதலுக்கே உரிய எதிர்ப்பு ஒன்றும் இன்னும் வரலை...
வாறதுக்கு ஒரு சந்தர்ப்பமும் இல்லை... முக்கியமா இவர்கள் 2 பேருகும் தங்களைதாங்கள் டவுட் படுறலை...
ஃபேஸ்புக் ல என்ன என்ன நடக்குது ஆரார் ஜொல்லு விடினம் என்கிறதெல்லாம்... பார்த்து... மாறி மாறி மறுபடியும் கலாய்ப்பது தான் இபோதைய ஹொபி..

-----------------------------------------------------------------------------------------
இதில ஒரு மெஸேஜ்ஜும் இல்லை... :D
ஆனால், லவ் பண்ணீட்டு வீட்டுக்கு மறைக்காமல் வெளிப்படையாக நடந்தால்... அவையே சம்மதிக்ககூடிய வாய்ப்புக்கள் இருக்கு... லவ் உம் தோற்காது.... பெற்றோருக்கும்/எவருக்கும் அவமான படவோ... கவலைப்படவோ தேவை இருக்காது... :) 

<3 அனைவருக்கும்... கார் தின வாழ்த்துக்கள்... Ɛ>
-----------------------------------------------------------------------------------------

Saturday 12 February 2011

விகடகவி சம்பவங்கள் :D (ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை.)

------------------------------------------------------------------------------------------
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை பற்றி பல இலங்கை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும்...
1860 ஆம் ஆண்டு மார்ச் 7ம் திகதி... வசாவிலானில் பிறந்தார்...
குறிப்பிட்ட ஈழத்து புலவர்களில் இவரும் ஒருவர்... இவரால் எழுதப்பட்ட "யாழ்ப்பாண வைபவ கெளமுதி" என்ற நூல்... யாழ்ப்பாணத்து உண்மை வரலாற்றை கூறுவதாக உள்ளது. மேலும், பல இலக்கிய படைப்புக்களையும்... உரை நடையிலான கவிகளையும் இயற்றியுள்ளார். இவரின் விகடமான கவிதைகள் இன்றளவிலும் பாவணையில் உள்ளது.

இவரைப்பற்றி பலர் ஏற்கனவே பல பதிவுகளை எழுதி இருப்பதால்.... இவர் தமிழின் நுட்பங்களை பயண்படுத்தி செய்த விகடகவித்தனங்களை மட்டும் எழுதுகின்றேன்...
இவரைப்பற்றி அறியவிரும்புபவர்கள் இந்த லிங்களில் பார்கலாம்... :)
விக்கிபீடியா
http://kanaga_sritharan.tripod.com/veluppillai.htm
http://www.thejaffna.com
PDF Book
------------------------------------------------------------------------------------------
சம்பவம் 01 :
ஒரு முறை ரெயில் கடவை அருகே சென்றுகொண்டுருந்த போது.... அங்கே இருந்த பலகையில், "கோச்சி வரும் கவணம்" என எழுதப்பட்டிருந்ததாம். ( சிங்களத்தில் இரயிலை கோச்சி என்று சொல்வார்கள். )
உடனே, அதன் கீழ் "கொப்பரும் வருவார் கவணம்" என்று எழுதிவிட்டு சென்று விட்டார்.
பின்னர், ரெயில்வே அதிகாரிகள் அதைப்பார்த்துவிட்டு.. அவர் மீது வழக்குத்தொடுத்துள்ளார்கள்... 
நீதிபதி விசாரித்த போது...
கோச்சி என்றால் தமிழில் "அம்மா" என்றும் அர்த்தமுள்ளது... அதனால்த்தான் கொப்பரும் வருவார் என்று எழுதினேன்... பிழை எனதல்ல... தமிழை பயண்படுத்தாமல் தவறாக எழுதியதுதான் பிழை என சுட்டிகாட்டினார்.
( இலங்கை பேச்சு வழக்கில் கோத்தை /கொம்மா= அம்மா, கொப்பர் = அப்பா ) 

சம்பவம் 02 :
ஒரு முறை கொடுத்த கடனை வசூலிப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அங்கு கடனை வேண்ட செட்டியாரின் வீட்டிற்கு சென்ற போது... அவர் சாப்பிட்டுகொண்டிருப்பதாக சொல்லி தாமதப்படுத்தியுள்ளார்... உடனே பலரின் முன்னிலையில்... "தட்டி உண்ணும் செட்டி " என்று கூறிவிட்டார்.
இதனால் கடுப்பாகிப்போன செட்டியார்... வழக்குத்தொடுத்தார்....
நீதிபதி விசாரித்த போது...
யாழ்ப்பாணத்தில் தட்டிக்கு (வீட்டின் குறிப்பிட்ட ஓர் பகுதி) பின்னால் இருந்தே, சாப்பிடுவது வழக்கம்... அதைத்தான் தட்டிக்கு பின்னால் இருந்து உணவருந்தும் செட்டியார் என்பதை அப்படி சொன்னேன் என்று கூறி... வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தார்.

சம்பவம் 03 :
ஒரு கலை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது... அங்கு விளம்பர பலகையில்... "கதிரை 2 ரூபா"... எனப்போடப்பட்டிருந்ததாம்... இவர் அதைக்காட்டி இது தவறு "கதிரைக்கு 2 ரூபா" என்று வரவேண்டும் என்று போட சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இவரும் 2 ரூபா கொடுத்து டிக்கட் எடுத்துவிட்டு, பாதி நிகழ்ச்சியின் போதே கதிரையுடன் சென்றுவிட்டார்... பின்னர், வழமை போலவே வழக்கில் தவறு திருத்தப்பட்டது.


சம்பவம் 04 :
ஒரு முறை ஏதோ மனக்குழப்பத்தில் வந்துகொண்டிருந்தபோது... அவரின் முன்னால்... கிறிஸ்தவ சகோதரிகள் வந்திருக்கின்றனர்... அவர்களைப்பார்த்து "தேவடியாட்கள் போகிறார்கள்" என்று சொல்லிவிட்டார்.
உடனே இந்த சம்பவம்...  நீதிமன்றத்துக்கு வந்தது...
நீதிபதி கேட்ட போது...
தான் தவறாக ஒன்றுமே சொல்லவில்லை... தேவனுக்கு அடியார்களாக இருப்பதால்... தேவ அடியாட்கள் என்றே சொன்னன் என்று கூறி நுட்பமாக வழக்கை திசை திருப்பினார்.

சம்பவம் 05 :
இவ்வாறு அடிக்கடி வழக்குக்களை திசை திருப்புவதால்... ஒரு முறை நீதிபதி... இனி உங்கட தலை கறுப்பு தெரியக்கூடாது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
அடுத்த முறை கோட்டுக்கு செல்லும் போது... தலையில் சிவப்பு மண் சட்டியை போட்டுகொண்டு போய்... நீதி பதிவிட்ட தமிழ் பிழையை சுட்டிக்காட்டினார்.
------------------------------------------------------------------------------------------
இவ்வாறு பல சுவாரஷ்யமான சம்பவங்கள் இருக்கின்றன.. நான் இங்கு எனக்கு உறுதியாக தெரிந்த 5 சம்பவங்களை குறிப்பிட்டுள்ளேன்.
இவரின் வசாவிலான் வேலுப்பிள்ளை வித்தியாசாலை மீண்டும் இயங்க ஆரம்பித்திருகிறதாம். :)
------------------------------------------------------------------------------------------

Friday 11 February 2011

மொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)

-------------------------------------------------------------------------------------------
உலகம் முழுவதும் தற்போது ஏறத்தாழ 6700 மொழிகள் பேசப்பட்டு வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இது 100% உண்மையான தகவல் என உறுதிப்படுத்த முடிவதில்லை... காரணம், எழுத்துருவற்ற பல மொழிப்பாவனைகள் இருக்கின்றமையாகும்.
உலகின் பல பாகங்களிலும் ஆங்கிலம் முதன்மையாக பேசப்படுகின்றது... அடுத்த இடத்தை பிரென்ச் பெற்றுள்ளது... இவை பல நாடுகளில் அரசகரும மொழியாக திகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. எனினும்... சீனமொழியே அதிகமானோரால் பேசப்படும் மொழியாக இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில்... இங்கில்ஸ், அரபு, சீனம் (மண்டரின்), ஸ்பானிஷ், ஃப்ரென்ச், ரஷய்ன் போன்ற 6 மொழிகளும் அலுவலக மொழிகளாக உள்ளன.

எனினும் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையை கணிப்பிடும் போது சில சிக்கல்கள் இருந்து வருகின்றன.
குறிப்பாக... பலர் பேசும் மொழிவேறாகவும்... தாய் மொழியை வேறாகவும் கொண்டிருப்பதால், எந்த வர்க்கத்தில் சேர்ப்பது என்பதில் குழப்பம் இருக்கிறது.

-------------------------------------------------------------------------------------------


அதிகமானோரால் பேசப்படும் 20 மொழிகள் இவைதான்...

மாண்டரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்
ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்
ஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்
வங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்
ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்
போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்
ரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்
ஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்
ஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்
பிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்
வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்
ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்
கொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்
வியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்
தெலுங்கு - இந்தியா - 66+ மில்லியன்
யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்
மராட்டி - இந்தியா - 64+ மில்லியன்
தமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 63+ மில்லியன்
துருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்
உருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்

-------------------------------------------------------------------------------------------


18வது மொழியாக எமது தமிழ் மொழியுள்ளது... இனி அதன் முக்கிய சிறப்புக்களை கொஞ்சம் பார்க்கலாம்...

தமிழ் திராவிட மொழிகளுள் முக்கியமான ஒரு மொழியாகும்... செம்மொழியாக்கப்பட்ட சிறப்பும் உடையது.
தென்னிந்தியா, இலங்கை, சிங்ப்பூர், மலேசியா, மொரிஸியஸ் நாடுகளில் வரலாற்று ரீதியாக பேசப்பட்டுவரும் மொழியாக உள்ளது. மேலும் தற்போது... உலகின் பல்வேறு நாடுகளில் கணிசமான அளவில் தமிழ்மொழி பேசப்படுகிறது. ( நாடு இல்லாததால் நாடு நாடாக அலைவதும் ஒரு காரணமாக இருக்கலாம்... lol :P )

சமஸ்கிரத எழுத்துக்கள் தமிழிலும் பயண்படுத்தப்படுவதனாலும்... வேறு சில காரணங்களாலும், தமிழ் மொழியானது சமஸ்கிரத மொழியிலிருந்தே தோன்றியது என்ற கருத்து உள்ளது. அது தவறான கருத்தாகும்... தமிழ்மொழியின் குழூகுக்குறியாகவே சமஸ்கிரதம் இருந்ததாக சான்றுகள் உள்ளன. ( லெமூரிய பதிவை பார்க்கவும் மேலதிக விளக்கத்துக்கு... )

2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளும், ஆத்தி சூடியும் கூட... இன்றும் புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளது மொழி நடை நீண்டகாலமாக குறிகிய மாற்றத்தையே அடைந்திருப்பதைக்காட்டுகின்றது.
இவ்வாறான இலக்கிய பேணல்கல் வேற்று மொழிகளில் குறைவானதாகவே உள்ளது.

( திருக்குறள் போன்றவை இலக்கிய நடையில் எழுதப்படாமல்... அக்கால பேச்சு நடையிலேயே எழுதப்பட்டும் இருக்கலாம்... அவை காலத்தால் இலக்கியமானதாகி இருக்க வாய்ப்புள்ளது.
எனினும், நீண்டகாலமாக குறுகிய மாற்றம் அடைந்ததாலோ என்னவோ... இன்று தமிழை தாய்மொழியாக கொண்டபோதும்.... அதை பேசுவதில் தயக்கம் காட்டுகின்றனர் பலர்... (இது ஒரு தனிப்பதிவாகவே எழுத வேண்டிய விசயம். ) )

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 100 000 கல்வெட்டுக்களில் 55 000 கல்வெட்டுக்களுக்குமேல் தமிழில் எழுதப்பட்டவை.
பிராக்மி எழுத்துக்களுடன் நெருக்கமான தொடர்பைக்கொண்டு எழுதப்பட்டுள்ளவையே அதிகம்.. :)
தமிழ் இலக்கியங்கள் நீண்டகாலமாக நிலைத்து நிண்டமைக்கு...
ஓலைச்சுவடிகளில் எழுதி... காலம் காலமாக பிரதியெடுத்து வந்தமையும்... வாய் மொழிமூலமாக அனைத்து இலக்கியங்களையும் கற்பித்ததுமே காரணமாகும்.
த்மிழ் இலக்கணங்களைக்கூறும் தொல்காப்பியமானது கி.மு.200 ம் ஆண்டளவில் எழுதப்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கியதென கருதப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------

இவ்வளவு சிறப்புக்களை கொண்டிருந்தும்... தமிழ் மொழி முன்னோக்கிய வழர்ச்சிப்பாதையில் செல்வதாக கொள்ளமுடியாது...  இன்னும் காலம் செல்ல செல்ல... தேய்வடைந்தே செல்லும்... காரணம்... இன்றைய உலக முறைக்கேற்ற போல் நாம் மாறவில்லை...
பணத்தை நோக்கமாக கொண்டே இணையத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது பல தளங்கள்... ஆனால், தமிழ் கல்வியை கற்பிக்கும் நோக்கம் இருப்பதில்லை.
அந்த குறையை போக்க வேண்டும் முதலில்... அப்போது தான் தமிழ் அழிவை தாமதப்படுத்தலாம்... :)

-------------------------------------------------------------------------------------------

Wednesday 9 February 2011

பனி மனிதன்... (மர்ம குரங்கு மனிதர்கள்? ) (01)

-----------------------------------------------------------------------------------------
ஒரு மாத இடைவெளியின் பின்னர், மீண்டும் பதிவெழுதவுள்ளேன்... ஜனவரியில் 2 பதிவுகள் மட்டுமே இட முடிந்தது... இனி வழமைபோல் மாதாந்தம் 10 இக்கு மேற்பட்ட பதிவுகளை எழுத முடியும்.

ஏலியன்ஸ்,லெமூரியா, மார்ஸ் போன்ற பல குழப்பமான தலைப்புக்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்...
அதே போல் இன்று, நாம் அனைவருக்கும் பழக்கப்பட்ட "பனி மனிதன்" சம்பந்தமாக நான் அறிந்து கொண்ட தகவல்களையும் எனது ஊகங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... :)

-----------------------------------------------------------------------------------------

சிறு வயதாக இருக்கும் போது... இந்த பனிமனிதர்கள் சம்பந்தமாக கேட்டு இருக்கிறேன்... இமைய மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும், சுமார் 9 அடி உயரமுள்ள இரண்டு கால்களில் நடக்கும் உருவங்கள் என அறிந்திருந்தேன்.
இவர்களை பெரிதாக எவரும் காணவில்லை எனவும். ஆனால், இந்த உருவங்களின் காலடையாலங்களை பலர் பார்த்திருப்பதாகவும் கூறினார்கள்.
அதேவேளை, காலடையாலங்கள் பெரிதாக இருப்பதற்கான காரணமாக நான் கருதியது, பனிப்படிவில் காலடையாலத்தை வைத்து செல்லும் போது... பனி உருகலால் பெரிதாகி இருக்கும் என பின்னர் நினத்தேன்.

இனி மேலதிகமா உறுதியாக அறிந்துகொண்ட தகவல்களையும் சம்பவங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்...

இந்த உருவங்கள் கட்டுக்கதையாக இருக்க முடியாது என்பதற்கு காரணம், இவை சம்பந்தமான தகவல்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் வரவில்லை. உலகின் பல பாகங்களில் இருந்தும் அந்த உருவங்களைப்பார்த்ததாக தகவல்கள் உள்ளனன்.
அந்த வகையில், இமையமலைப்பகுதியில் இந்த உருவங்களை எட்டி (yeti) அல்லது பனிமனிதன் என்றும் அடையாள‌ப்படுத்துகிறார்கள். கனடாவில் ஷஸ்குவாட்ச் (Sasquatchi) என்றும் அமேசன் பகுதிகளில் மெப்பிங்குவாரி (Mapinguari) என்றும் கூறுகிறார்கள்.

1900 ஆண்டுகளிலேயே இந்த உருவங்கள் தொடர்பான முதலாவது அதிகார பூர்வமான பத்திரிகை வெளியீடு இடம் பெற்றது. கொலம்பியா விக்டோரியா நகரப்பத்திரிகை ஒன்று "குரங்கு மனிதன்" என்ற தலைப்பில்...
நேரடியாக அந்த உருவங்க‌ளைக்கண்டவர்கள் என கூறியவர்களிடம் இருந்து தகவல்களைப்பெற்று வெளியிட்டது.
அதன் படி சுமார் 8 அடிக்கு மேலான உயர்முள்ளதாகவும்... 225 KG நிறை இருக்குமெனவும்... உடல் முழுவதும் முடி உடையதாகவும் அந்த உருவம் வர்ணிக்கப்பட்டது.

1951 ஆம் ஆண்டு இமயமலையில் மலையேற சென்றிருந்த எரிக்ஹிப்டன் உறை பனியில் மிகப்பெரிய கால்த்தடங்களை அவதானித்து புகைப்படமெடுத்தார். அது "மர்மமான பனிமனிதனின் கால்த்தடங்கள்" என்ற பெயரில் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

-----------------------------------------------------------------------------------------

எனினும் சில விஞ்ஞான உலகமும், அறிவியளாலர்களும்... இதை மறுக்கின்றனர்... அதற்கு அவர்கள் கூறும் காரணம்...

ஒரு உயிரினம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அவைகள் குடும்பமாக வாழ வேண்டும்... அப்படி வாழ்ந்தால்த்தான் நிலைக்க முடியும். எனினும், இதுவரை எவருமே.. பனிமனிதர்களின் குட்டிகளை கண்டதாக கூறியிருக்கவில்லை என்பது ஒரு வாதம்.
( எனினும் இதற்கு எனது கருத்துப்படி, அவ்வாறு சிறு பனிமனித குட்டிகளை கண்டிருப்பின்... காண்பவர்கள் மனிதக்குரங்கு அல்லது குரங்கினம் என அலட்சியம் செய்திருக்கக்கூடும்... காரணம், உடலமைப்பு ஒரே போன்றதாகவே வர்ணிக்கப்பட்டது கண்டவர்களால். :) )

அடுத்தது... எந்த உயிரினமும் ஒரு நாள் மரணத்தை சந்திக்கும்... அப்படி பனி மனிதர்களில் உடல்கள் இது வரை கிடைத்ததில்லை... எலும்புக்கூடுகள் கூட கிடைத்ததில்லை.
( சில வேளைகளில்... மனிதர்களைப்போல் புதைக்கும் அல்லது எரிக்கும் முறைகள் இருக்கலாம்.... ஆனால், அந்த உருவங்கள் அந்தளவுக்கு அறிவுள்ளதாக அறியப்படவில்லை.  மேலும், பனிப்பகுதிகளில் இந்த உயிரினங்களைத்தேடும் பணிகள் பெரிய அளவில் இடம் பெறவில்லை... அதனாலும்... எலும்புகள் கிடைக்காமல் போய் இருக்கலாம்.:) )

அடுத்ததாக... எந்த உயிரினமும் தாம் நடமாடும் இடத்தில், கேசங்களையும் இறந்த செல்களையும் விட்டுச்செல்லும்... ஆனால், பனி மனிதர்களின் எந்த அடையாளங்களும் கிடைக்கவில்லை.

இக்காரணங்கள் அனைத்தும் நிராகரிக்க நியாயமானதுதான்... எனினும்... இந்த அனைத்து வாதங்களையும் முறியடிக்கும் முகமாக ஒரு ஆதாரம் சிக்கியது... அது என்ன என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன். :)

-----------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected