Total Pageviews

Friday 2 September 2011

மங்காத்தா! (விமர்சனம்)

மங்காத்தா!

படத்தின் "ட்ரெய்லர்" ஆலேயே பார்க்கத்தோன்றிய படம். ( ஏற்கனவே, அஜித்தின் "ஆழ்வார்" படத்தின் ரெய்லரை பார்த்துவிட்டு ஏமாந்து அனுபவம் உண்டு :P )
மிகுந்த எதிர்பார்ப்பில் பார்க்கத்தொடங்கினேன்... இனி என்ன பார்த்தேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------
ஒரு நபரை சுடுவதற்காக நிறுத்தி வைத்துள்ளார்கள். அந்த நேரத்தில் தல அஜித் பொலிஸ் உடையில் ஜீப்பில் இருந்து இறங்கி அவரைக்காப்பாற்றுகிறார். இது தான் என்ட்ரன்ஸ்... நரைத்த முடியுடனும் சற்று சதைப்பிடிபான உடலுடனும்  இருக்கிறார் அஜித், என்றாலும் ஒரு கம்பீரம், அழகு... ஆரம்ப அறிமுகத்திற்கு கச்சிதமான எடிட்டிங். பின்னி இசை ரசிகர்களை கவரும் விதத்தில் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து எதிர்பார்த்தது போன்றே... மங்காத்தா பாடல் இடம் பெறுகிறது.  காட்சி அமைப்பில் புதுமைகள் இல்லை.

ஹீரோயின் திரிஷாவின் அறிமுகம்...
வழமை போன்ற கமெரா அசைவுகளுடனேயே இடம்பெறுகிறது. மிக அழகாகத்தெரிகிறார்.
திரிஷா, அஜித்திற்கு இடையலான காதல்... எப்படி ,ஏன் உருவானது என்பதைக்காட்டாமல்... நேரடியாகவே நெருங்கிய காதலர்களாக  கதைக்கு ஏற்றபோல் காட்டப்படுகிறார்கள்.
திரிஷா, சூதாட்ட முகவர்களிற்கு ஊடகமாக விளங்கும் பிரபல முகவரின் மகள்.
அஜித், அவருடன் திரிஷாவின் காதலராக அறிமுகம் ஆகி நம்பிக்கை மிக்கவராகிறார்.

இதற்கிடையில், ஐ.பி.எல் மட்ச் சூதாட்ட நபர்களையும் கறுப்பு பணத்தையும் தண்டிப்பதற்காக சிறப்பு அதிகாரியாக "அர்ஜுன்" நியமிக்கப்படுகிறார். அர்ஜுனின் "அக்ஷன் கிங்" அடை மொழிக்கி ஏற்றவாறு ஒரு அறிமுக காட்ச்சியை வைத்துள்ளார் இயக்குனர். பின்னைய காட்சிகளில் அவரின் மனைவியாக "அன்ட்ரியா" வந்துபோகிறார்.

Vaibhav Reddy இற்கும் ஒரு முக்கியமான பாத்திரம்.
திரிஷாவின் அப்பாவுடைய நம்பிக்கைகுரிய ஆளாக இருக்கிறார்.
பட முடிவில் மனதில் நிற்கும் கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவியாக அஞ்சலி நடித்துள்ளார். நடிப்பதற்கு அவ்வளவாக சந்தர்ப்பம் தரப்படவில்லை.

பிரேம் ஜி, ஒரு காமெடி டெக்னீஷியனாக படத்தை கலகலப்பாக்குகிறார்.
-------------------------------------------------------------------------------------------
இனி படத்தின் முக்கிய பகுதி....

ஐ.பி.எல் போட்டியில் கைமாற்றப்பட வேண்டிய பணம், திரிஷாவின் அப்பாவினூடாக அனுப்பப்பட இருக்கிறது. அதை கொள்ளையடிக்க "வைபவ்", பொலிஸ் அதிகாரி, பிரேம், பிரேமின் நண்பன் திட்டமிடுகிறார்கள்.
இதனிடையே அஜித்திடம் இதை உளறி விடுகிறார் பிரேம்.
அதே பணத்தை கொள்ளையிடவே திட்டமிடிகிறார். பின்னர், அஜித்தின் சில தந்திரங்களால் ஐவரும் சேந்து கொள்ளையிடுகிறார்கள்.
எனினும், முழுவதையும்  தானே கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் அஜித்.
( கொள்ளை அடித்த பணத்தை, மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு... அஜித் செஸ் போட்டுடன் இருந்து போடும் பிலான், ரசிக்கத்தக்க அறுவை ஐடியா.)

இறுதியில் கொள்ளை அடித்தாரா, என்பதை பல சுவாரஷ்ய திருப்பங்களுக்கு மத்தியில்... இறுதியில் ஒரு பெரிய திருப்பத்துடன் தரமான திரைக்கதையுடன் கூறியுள்ளார் இயக்குனர்.

படம் முழுவதுமே அஜித்தை நெக்கடிவ் கரக்டரில் காட்டி இருப்பது நன்று. இறுதி நேரத்தில் நல்லவராக காட்டி சென்டிமென்ட் சொதப்பல்கள் இல்லை.
-------------------------------------------------------------------------------------------
படத்தின் + :
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் அமைந்த அஜித்தின் நடிப்பு, ஸ்டைல்.
விறுவிறுப்பான திரைக்கதை.
எடிட்டிங். ( திரிஷாவுடனான பாடல்கள், மற்றும் அஜித்தின் திட்டமிடல்களின் போதான எடிட்டிங் தமிழிற்கு புதியது.
படத்திற்கு ஏற்ற பின்னனி இசை.
ஃப்லாஸ் பக்கில்... அனைத்திற்கும் விளக்கம் கொடுப்பது அருமை. கதையில் ஓட்டை இல்லாமல்  காட்டியுள்ளார்கள்.
நகைச்சுவைகள் படத்துடன் ஒன்றி இருப்பது அருமை.
நகைச்சுவைக்காக மட்டும் இல்லாமல், ஒரு டெக்னீஷியனாக பிரேம்ஜி காட்டப்பட்டது. அவர் கதைக்கு தேவை என்பதை காட்டுகிறது. வீண் செருகல் இல்லை.

படத்தின் - :
ஆங்கில படங்களில் அடிக்கடி பார்த்த காட்சிகள்.
4 ஹீரோயின்கள் வேஸ்டாக்கப்படது. (எனினும் திரைக்கதைக்கு போதும். )
காதல் தோல்வியின் பின் திரிஷாவை காட்டவில்லை. ஒரு ஃபோன் கோல் ஆவது போட்டு,; அஜித்துடன் சண்டை போடுவது போன்று காட்டி இருக்கலாம்.
சூட்டிங் ஃபைட்டின் போது, ஒரு புள்ளட் கூட அஜித்தை தாக்கவில்லை... ஆனால், நேராக நின்று சண்டை போடுகிறார்... அது லொஜிக் இல்லை.

அஜித்தின் 50 ஆவது படம் இது... நிச்சயம் வெற்றி பெறக்கூடிய படமாக அமைந்துள்ளது.
2h 38 நிமிடங்கள் விறுவிறுப்பாக பார்க்கலாம்.

அஜித் ரசிகன் :
வாவ் தலட படம்னா சும்மாவா... சுப்பரா இருக்கு.
அஜித் வெறியன் :
தலைவா, நீதான் ஒரே ஒரு நடிகன்... சேர்ட்ட மாத்திட்டு நடிக்றவன்ட 50 படமெல்லாம் ஒரு படமா.


விஜய் ரசிகன் :
நல்லாத்தான் இருக்கு.
விஜய் வெறியன் :
சா தூ.... நரைச்ச முடியும் தொந்திவயிறுமா இருக்கான்... ஆடுராராமாம் இதுக்கு பாக்கியராஜ்ட ஆட்டமே பெட்டர்.


திரைப்பட ரசிகன். :
அருமையான என்டர்டைன்மென்ட் மூவி... படமுடிவில் மனம் ரெலாக்ஷாகவே இருக்கிறது... எந்த விதப்பாதிப்பும் இல்லை. அஜித்திற்காகவும் அக்ஷன்காகவும் பார்க்கவேண்டிய படம்.
தரமான இயக்கம்.
-------------------------------------------------------------------------------------------

Wednesday 17 August 2011

ஃபேஸ்புக் தத்து பித்து கவிஞர்கள் :D ( நகைச்சுவை ) - 03




இது ஃபேஸ்புக் பதிவு...
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நான் பார்த்த ரசிக்கத்தக்க நகைச்சுவை ஸ்ரேட்டர்ஸ்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
நீங்களும் ரசித்து பகிரிந்துகொள்ளுங்கள்.
( இந்த வசங்களின் உருமையாளர்கள் நிச்சயமாக ஸ்ரேட்டர்ஸ் போட்டவர்களாக இருக்க மாட்டார்கள். :P Bz அவர்கள் என் நண்பர்கள் நிச்சயம் சுட்டுத்தான் போட்டு இருப்பார்கள் :P ஆகவே, உண்மையான உரிமையாளர்கள் பொறுத்துக்கொள்ளவும். )
-------------------------------------------------------------------------------------------
ஒரு பொண்ணோட life ''ball'' மாதிரி
16-18 வயசு rugger ball மாதிரி 30 பேர் துரத்துவாங்க
18-22 வயசு football மாதிரி 22 பேர் பின்னாலையே போவாங்க
22-25 வயசு basketball மாதிரி 10 பேர் பின்னாலையே போவாங்க
25-28 வயசு snowball மாதிரி 5 பேர் பின்னாலையே போவாங்க
28-31 வயசு golf ball மாதிரி ஒருத்தன் பின்னாலையே போவான்
31 வயசுக்கு மேல் volley ball மாதிரி ஒருத்தன் இன்னொருத்தனிட்ட தள்ளிவிட பாப்பான்.

தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள் ...
1.மச்சி நான் full steady டா..
2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா
3.நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா
4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி .
5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்..
6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா
7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா


(Last but not least...பசங்க சொல்லும் மெகா தத்துவம்
8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா.. 

ஒருவன் விசத்தை சாப்பிட்டு தற்கொலை பண்ண தயார் ஆகிறான்.
முதலில் அவன் தனது காதலிக்கு phone பண்ணி 'நான் போகிறேன் என்றான்'


உடனே அவள் "எங்க போற? யார் கூட போற? ஏன் போற? எப்ப திரும்பி வருவ? " என்று கேள்விகளை கேட்டு முடிக்க முன் phonai கட் பண்ணி விட்டு தன் நண்பணுக்கு phone பண்ணி.


நான் போறேண்டா என்ற உடனே நண்பன் சொன்னனா.
"இருடா மச்சான் நானும் வாறேண்டா "
நண்பேன்டா....


அழகான பெண் என நாம் 1 செகண்டில் முடிவுக்கு வருவதற்கு, பாவம் அவர்கள் 1 மணி நேரம் மெனக்கெட்டு மேக்கப் போடுகிறார்கள்...

ஒரு பிகரானது சுப்பர் பிகரா இல்லை சுமார் பிகரா எண்டு அதன் பின்னால் சுற்றும் ஆண்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடலாம்..!!!
**அப்பா ரௌடியாக அல்லது நிறைய ஆண் சகோதரங்கள் இருந்தால் இந்த விதி பொருந்தாது..:)


NIGHT தூக்கம் வரலைனு சோபா மேல படுத்தது தப்பா போய்டு..?
ஏன்?
சோபா புருஷன் சண்டைக்கு வந்துடான்.

Fb 'ல pickup ஆகுற பொண்ணும்.... Tea கடைல விக்குற bann'ணும்... நிச்சயமா பல பேரு கை மாறி தான் வந்திருக்கும் ... 
ஜாக்கிரதை மச்சி..

காதலி என்பவள் பாட்டி சுட்ட வடை மாதிரி ஒழுங்கா பாக்கலின்னா காக்கா கொண்டு போயிரும் ...

“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி



பேஸ்புக் வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் கொமெண்ட் பண்ணாமல் இருக்க வேண்டாம்
Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
கொமெண்ட் பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்.”
காலை எழுந்தவுடன் Facebook-பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல wall போஸ்ட்
மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..


-------------------------------------------------------------------------------------------



Son: அப்பா சின்ன வீடுன்னா என்னப்பா ?
Father: ஏண்டா?
Son: தெரிஞ்சு வச்சிக்கலாம்னு தான் பா
Father: தெரியாம வச்சிக்கிட்டா தாண்டா அது சின்ன வீடு.... !!! :-P



பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும் தெரியுமா .?
நாம அவல லவ் பண்றத பார்த்து அவ Friend நமளோட ஓடி வரணும்...



மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...!
!



சீதனம்.....!!
1960 - 10 சவரன் தங்கம்,
1970- கலர் ரீவி,
1980- பைக்,
1990- காணி அல்லது வீடு,
2000- ஏ.சி கார்,
2011- ஒண்ணுமே வேணாம்.
பொண்ணுக்கு Facebook லே எக்கவுண்ட் இல்லாம இருந்தாலே போதும்.


என் காதலை அவளிடம் சொல்லக் கூட நான் அவ்வளவு பயப்படவில்லை . ஆனால் என் நண்பனிடம் அதை சொல்லப் பயந்தேன்

காரணம்

அவளிடம் 4 ரூபாய்க்கு ROSE வாங்கிக் கொடுத்த விஷயத்தை சொன்னால் இவன் 400 ரூபாய்க்கு TREAT கேட்பான்.

நண்பேன்டா...

-------------------------------------------------------------------------------------------

பிடித்திருந்தாள் வோட் போடவும்... :)

இதே போன்ற முன்னைய ஃபேஸ்புக் பதிவுகள் :
ஃபேஸ்புக் தத்துவ ஞானிகளின் தத்து பித்துவங்கள்... :D

ஃபேஸ் புக் சிரிப்புக்கள் + தத்துபித்துவங்களும் :D

-------------------------------------------------------------------------------------------















Tuesday 16 August 2011

தமிழர். :) ( எந்திரன்+உத்தம புத்திரன்* )

மிகப்பிந்திய பதிவு இது...

எந்திரன் படத்தைப்பார்த்த பின்பு எழுதி இருக்க வேண்டியது...
------------------------------------------------------------------------------------------
எந்திரன் படம் பற்றி எனது விமர்சனம் எதிர் மறையாக இருந்தாலும்..; அதில் வந்த ரோபோ கரக்டரின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன.

முக்கியமாக.. தற்போது எம்மிடையே அரிதாகிக்கொண்டு இருக்கும் ஒரு முக்கிய விடையம் "மரியாதை".
பலரும் மரியாதையான பேசத்தகுந்த "தமிழ்" வார்த்தைகளை பாவிப்பதை தவிர்க்கிறார்கள்.
மரியாதையான சொற்களை ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதை வழமையாக்கிக்கொண்டுள்ளோம்.
( சிலர், தமிழில் பேசுகிறோம் என்றுவிட்டு... ஆங்கிலத்தை நேரடியாக தமிழ் பேசித்தெரிகிறார்கள்... அது வேறுவிடையம். )

எந்திரன் படத்தில் "சிட்டி றோபோ" பேசும் தமிழ் உண்மையிலேயே இனிமையானது.
மிகவும் தரமான தமிழ். ( சில சொற்களை ஆங்கிலத்தில் சொல்வது சரியே... காரணம் அந்த சொற்களுக்கு தமிழ் பதம் பாவணையற்றதாக அல்லது முரணானதாக இருக்கின்றது.)
சிட்டி பேசும் போது " நீங்கள்" என்பதையே அதிகமாக "முன்னிலையை" குறிக்க பயண்படுத்துகிறது.
ஆனால்,
பரவலாக... நாம் நீ என்ற சொல்லையே பயண்படுத்துகிறோம்.
இதில் என்ன தவறு என்றால்... நாம் சிறுவர்களையும் " நீ, வா, போ" என்றே பேசுகின்றோம்.
( இந்திய சினிமாக்கள் / நாடகங்களில் பார்த்தது. இலங்கையில்... வயது குறைந்தவர்களுடன் மரியாதையாக பேசுகையுல் " நீர், வாரும், உமது என்ற சொற்கள் பாவணைப்படுத்துவதுண்டு. )
மொழியை கற்றுக்கொள்ளும் அவர்களும் அதையே வழமையாக்கிகொள்கிறார்கள். பின்னர் வழர்ந்த பின்பு... ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் பொழுது, ஆங்கில வழக்கப்படி " நீ" என்பது தான் முன்னிலையை ( எந்த வயதினரானாலும் சரி) குறிக்கப்பயண்படும் சொல் என நினைத்து நடந்துகொள்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றி... தமிழர்களிடையே அன்பான அழகுத்தமிழை பேசப்பழகிக்கொள்ள வேண்டும்.
பேச்சுத்தமிழில் கூட... மரியாதை இருக்க வெண்டும். அப்போது தான், நாம் சொல்லிக்கொண்டு தெரிவது போன்று "தமிழ் இனிமையான மொழி" என்பதை தக்கவைக்கவும் நிரூபனமாக்கவும் முடியும்.
மரியாதை நிமிர்த்தம் பேசப்படும் சொற்களை ஆங்கிலத்தில் இருந்து எடுத்துப்பேசுவதை தவிர்க்க/ குறைக்க வேண்டும்.

இந்த விடையத்தில், வசனத்திற்கு பொறுப்பான சுயாத்தாவுக்கும் அதை அப்படியே படமாக்க நினைத்த சங்கருக்கும் நன்றி கூறவேண்டும்.
மேலும், பலதரப்பட்ட ரசிகர்களை கொண்ட ரஜனி அதை கச்சிதமாகவும் அழகாகவும் இலகுவான உரை நடையில் பேசியதும் வரவேற்க்கப்படவேண்டிய ஒரு விடையம்.
சில சிறுவர்கள் அதைப்பார்த்து பேசிக்கொள்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
எனினும் ரஜனி சிகரட் பிடித்தால் பிடிப்பவர்கள்... அவர் இனிய தமிழில் பேசினால்.. அதை கண்டுக்காம இருந்து... நாம் " அன்னம் - கெட்டதை மட்டும் எடுத்துக்கொள்ளும் அன்னம்" என்பதை நிரூபித்துக்கொள்கிறார்கள்.

பதிவு நீண்டுவிட்டது.. எனினும் இன்னொரு படத்தையும் குறிப்பிடவேண்டும்.

அது தனுஷ் நடித்த... "உத்தம புத்திரன்" 


குடும்பங்களிற்கு இடையில் தற்போது இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் உறவுகளை பற்றிய படம் என்றே சொல்லலாம் அதை. 
படத்தின் கதை என்னவோ பழசாக இருந்தாலும். உறவுகளுக்குள் மண்டிக்கிடக்கும் அடிப்படை பாச உணர்வுகளையும்..; கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தையும் எனக்கு விளங்கப்படுத்திய படம் அது.


வெளி நாட்டு கலாச்சாரம் என்கிற பெயரில்.. பலர் உறவுகளை மதிப்பதில்லை, பேணுவதில்லை. அதே நேரம், வெளி நாட்டவர்கள் எமது காலாசார முறையை போற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
நாம் வெளினாட்டு மல்டி கலாச்சாரத்திற்குட்பட்டு குறுகிய வட்டமாக்கிக்கொள்கிறோம் உறவுகளை. ஆனால், அதே மேற்கத்தைய கலாச்சாரத்தில் இருக்கும் நல்ல பண்புகளை விட்டு விடுகின்றோம்.
------------------------------------------------------------------------------------------
மொத்ததில் தனித்துவம் இழந்த கலாசாரத்துடன் இருப்பது எனக்கு வெறுப்பாக இருந்தது. இந்த பதிவை இட்டேன்.
( இதில் கூறி இருக்கும் குறைகள் அனைத்தையும் நானும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். குறைக்க நினைத்துக்கொண்டே:) )
------------------------------------------------------------------------------------------

Sunday 14 August 2011

பயணுள்ள 3 மென்பொருட்கள் :) ( இலவசமாக தரவிறக்க லிங்களுடன் )

Joboshare iPhone Ringtone Maker 1.2.1 build 0812

iPhone இக்கு றிங்டோன்களை சொந்தமாகவே தயாதித்துக்கொள்ள உதவக்கூடிய மென்பொருள் இது.
இதன் மூலம் இலகுவாக M4R file களை தயாரிக்க முடிகின்றமையால் iTunes Store இல் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அத்துடன் பல கோப்புக்களை M4R ஆக மாற்ற முடிகின்றமையும், மென்பொருள் சிறியதாக இருப்பதும் இதன் சிறப்பம்சம்.

அளவு : 6.39 Mb

ஏற்புடைய கோப்புக்கள் : AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/MPEG-4 AVC, MKV, RM, RMVB, FLV, MOV, XviD, 3GP, MP3, WMA, AAC, WAV, RA, M4A, and AC3, etc.

தரவிறக்க :
Download 1
Download 2
------------------------------------------------------------------------------------------
Bigasoft Total Video Converter 3.4.10.4239 ( Multilanguage )



வீடியோக்களை கென்வேர்ட் ( Convert) பண்ணிக்கொள்வதற்கு இலகுவான பயணுள்ள ஒரு மென்பொருள் இது.
சிறப்பம்சமாக Portable file ஆக கிடைப்பதனால் இன்ஸோடல் ( Install ) பண்ண வேண்டிய அவசியமும் இல்லை. அளவும் சிறியது.

வீடியோ ஃபைல்களை பல வகைகளில் Type மாற்றிக்கொள்வதற்கு முக்கியமாக உதவுகிறது.
அத்துடன் புதியவகை டிவைஸ்களுக்கு ஏற்புடையதாக மைந்துள்ளது.

வீடியோக்களில் இருந்து எமக்குப்பிட்த்தமான இசையை மட்டும் வெட்டிப்பெற்றுக்கொள்வதற்கும் காட்சிகளை மட்டும் வெட்டிப்பெற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது.
காட்சிகளை படங்களாக மாற்றிக்கொள்ளவும் துணை புரிகிறது.

அளவு : 10 MB

ஏற்புடைய வீடியொ கோப்புக்கள் : MP4, 3GP, AVI, Xvid, DivX, H.264, MKV, WMV, RM, FLV, MOV, etc

ஏற்புடைய ஓடியோ கோப்புக்கள் :  MP3, WMA, AAC, WAV, OGG, FLAC, APE, M4A, RA, AC3, MP2, AIFF, AMR

ஏற்புடைய டிவைஸ்கள் : PDA, PSP, iPod, iPhone, BlackBerry, Xbox, Xbox360, PS3, Archos, Creative Zen, iRiver, television, Apple TV & computers

தரவிறக்க :
Download 1
Download 2

------------------------------------------------------------------------------------------
CoolUtils Total Doc Converter 2.2.0.191 Multilingual Portable

பலருக்கு இந்த பிரச்சனை வரக்கூடும்... அதாவது, நாம் வீட்டில் இருந்து ஒரு வகையான கோப்புக்களை தயாரித்துக்கொண்டு போவோம்... போற இடத்தில் அந்த கோப்பை இயக்க கூடிய வகையில் கணனியுல் மென்பொருட்கள் இருப்பதில்லை.
அந்த குறையை நிவர்த்தி செய்ய சிறந்த ஒரு சிறிய portable மென் பொருள் இது.
உங்கள் பென் ட்ரைவ்களிலேயே கொண்டு சென்று இயக்கக்கூடியதாக இருப்பது சிறப்பு.

அளவு :  7.61 MB

ஏற்புடைய  கோப்புக்கள் : Doc, DocX, DocM, RTF or TXT files to HTML, PDF, XLS, JPG, TIFF, or Text. Besides &  Rvf to PDF, Excel, HTML, JPEG, TIFF, RTF, Text.

தரவிறக்க :
------------------------------------------------------------------------------------------
இந்த மென்பொருட் தரவிறக்க லிங்குகள் விரைவில் வெளியீட்டாளர்களால் நீக்கப்படக்கூடும்...
முடிந்த வரை விரைவாக தரவிறக்கிக்கொள்ளவும். :)

இந்த பதிவு உபயோகமானது எனின்... வோட் பண்ணி பலர் பார்வையிட உதவவும். :) ( அப்படியே எனக்கும் ஹிட்ஸ் கிடைக்கும் சந்தோசப்படலாம் :P )
------------------------------------------------------------------------------------------


Saturday 13 August 2011

சுப்பர் படங்கள் : ( ஃபோட்டோஷொப் ) :D


ஒண்டுக்க ஒண்டு என்று இதைத்தான் சொல்வாங்க...


வீட்டுக்க வந்தாத்தான்பா நிம்மபதியா சுய உருவத்தில இருக்கலாம்...


கோலா ஃபான்ஸ்னா இப்படித்தான்... சுத்தி சுத்தி எலாம் குடிப்பம்ல...


நல்ல ஐடியாவா இருக்கே அட்வைஸ் பண்ணிற பெருசுங்கள்கு...:P


கதவு போச்சே...


யூஸ் பண்ண வேண்டிய நேரத்தில யூஸ் பண்ணாட்டி இப்படித்தான் ஆகும் :P


ஒன்லைன சும்மா இருக்காம எல்லா இடத்திலையும் அட்ரஸ் கொடுத்தா இப்படித்தானாகும்...


நார்னியா...


கடுப்புனா இப்படியும் காட்டலாம்...


பெண்ணடிமை :P






நான் இணைய்த்தில் ரசித்த ஃபோட்டோஷொப் படங்கள்.... நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.. :)

Thursday 11 August 2011

தமிழ் தளங்களை அனைத்து கைத்தொழைபேசிகளிலும் தெளிவாக வாசிக்க!

யுனிக்கோட் சப்போர்ட் பண்ணாத பிரச்சனையால் பலரால் தமது கைத்தொழை பேசிகளில் இணைய வசதிகள் இருந்தும் "தமிழ்" தளங்களை பார்வையிட முடிவதில்லை.
அவர்களின் பிரச்சனைக்கு ஒரு சிறிய தீர்வாக இந்த பதிவை இடுகிறேன்.
-----------------------------------------------------------------------------------
1) முதலில் கைத்தொலை பேசியில் "miniOpera (மினி ஒபேரா" இணைய உலாவியை நிறுவிக்கொள்ள வேண்டும்.
அது சாதாரணமாக இணைய வசதி உள்ள அனைத்து கைத்தொலைபேசியின் அடிப்படை உலாவியின் உதவியுடனேயே.. தேடி நிறுவ முடியும்.
அல்லது...
இந்த லிங்கிற்கு சென்று தரவிறக்கி இன்ஸ்ரோல் பண்ணிக்கொள்ளவும்.

2) இன்ஸ்ரோல் பண்ணிய பின்னர்...
கைத்தொலை பேசியில் ஒபேரா உலாவியை (Opera browser)  இயக்கிக்கொள்ளவும்.

3) பின்னர், சேர்ச் பாரில்...
"about:config" என்ட டைப் செய்து என்டர் / சேர்ச் பண்ணவும்...
அது "Power-User Settings" பக்கத்திற்கு செல்லும்.

4) அங்கே... "Use bitmap fonts for complex scripts" ஐ தெரிவு செய்து "No" இற்கு பதிலாக "Yes" ஐ மாற்றவும்.
பின்னர கீழே இருக்கும் "Save" ஐ அழுத்தி பதிந்து கொள்ளவும்.

இனி உங்களால், தமிழ் எழுத்துக்களை பார்வையிட முடியும். :)
( கச்சிதமானதாக இல்லாவிடினும்... வாசிக்க கூடியவகையுல் அமைந்திருக்கும். :) )

-----------------------------------------------------------------------------------
பதிவு பயணுள்ளது என்றால் வோட் போடவும்.
இது போன்ற வேறு பதிவு எதாவது தேவைப்படின் கொமென்டில் குறிப்பிடவும்.
-----------------------------------------------------------------------------------

தமிழில் அனைத்து அறிவியல், கல்வித்தகவல்களை தருவதற்கான நாம் முயன்றுகொண்டு இருக்கிறோம்...
ஆர்வம் உள்ளவர்கள் எம்முடன் இணைந்து செயலாற்ற முடியும். :)

எமது இணையத்தள திட்டங்கள் பிடித்திருந்து எம்மை உலகறிய செய்ய நினைப்பவர்கள்... உங்கள் தளங்கள்/ புளொக்கில்..; இந்த HTML கோட்களை களை உபயோகிக்க எம்மைத்தொடர்பு கொள்ளவும் :)
-----------------------------------------------------------------------------------

Wednesday 10 August 2011

ஹனுமார் vs ஹியூம் (ESP மனிதர்) (மூளையும் அதிசய சக்திகளும். )

மிக மிக நீண்ட இடைவெளிக்கி பின்பு மீண்டும் பதிவு இடுகிறேன்... இனியாவது மாதாந்தம் 10 பதிவுகள் வரையாவது இட முடியும் என நம்பிக்கையுடன்.. :)
------------------------------------------------------------------------------------------
ESP மற்றிம் மூளையின் அதிசய சக்திகள் பற்றிய இறுதிப்பதிவில் "ஹனுமார்" ஒரு ESP மனிதராகத்தான் இருந்திருபார் என எழுதி இருந்தேன்... அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது, கூடவே சந்தேகங்களும்...
அதில் ஒருவர் கேட்ட சந்தேகத்திற்கான விடைப்பதிவாகவும்... ஆர்வலர்களுக்கான தகவல் பதிவாகவும் இது இருக்கும். :)
------------------------------------------------------------------------------------------
// ஹனுமார் மலையை தூக்கினார் என்றால் அவரால் எப்படி அவ்வள‌வு பெரிய உருவத்தை எப்படி எடுக்க முடிந்தது?
அதுவும் ESP ஆ? //

இந்த கேள்வியிற்கு விடை கொடுப்பதற்கு முன்னர்... விஞ்ஞான உலகினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமானுட ESP  மனிதரை பற்றி பார்ப்பது பொருத்தமானது...

டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume)
1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர், அப்பா இல்லாத இந்த சிறுவனின் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தான்.
சிறு வயதிலேயே வித்தியாசமான குணங்களுடன் வளர்ந்த இந்த சிறுவனுக்கு ஒரு சிறந்த நண்பனும் இருந்தான்...  கால ஓட்டத்தில் நண்பன் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்திருந்தான்.

ஒரு நாள் திடீரென 13 வயதேயான ஹியூம் தனது அத்தையிடம் "எனது நண்பன் "எட்வின்" இறந்து விட்டான் என தோன்றுகிறது" எனக்கூறினான்...  இதை நம்ப அத்தை நம்பவில்லை.
அடுத்த நாள் காலையில், எட்வின் ஒரு கார் விபத்தில் இறந்த தகவல் கிடைக்கிறது. அப்போது தான் முதல் முதலாக அபூர்வ ஆற்றல் இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் 4 வருடங்களில் பல ஆற்றல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன.
( இவரின் முளு விபரத்தை பார்க்கும் போது பல வியப்புக்கள் காத்திருக்கும்... நான் இங்கு அவை அனைத்தையும் குறிப்பிடவில்லை... ஆர்வமுள்ளவர்கள் வாசித்துக்கொள்ளவும். )

ஒரு முறை பல ஆள்மன சக்கிதி ஆராய்ச்சியாளர்களின் முண்ணிலையில் தனது சக்திகளை நிரூபித்துக்கொண்டிருந்தார்.
அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது, உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்... இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக் கணோடு பார்வையிட ; கடுப்பாகிப்போன ஹியூம்... ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு... தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.. சையாக 5 அடி 10 அங்குளம் அளவிடப்பட்டது.

பின்னர், கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக்கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்!!! பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக உயர்ந்திருந்தார்!!!
இதை கண்கூடாக கண்ட அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை  ஒப்புக்கொண்டிருந்தார்கள்.
இது நிவீன உலகில் நேரடியாக நிரூபனமான ஒரு உதாரணம்.

இதே போன்ற ESP சக்தியை பயண்படுத்தி ஹனுமாரும் தனது உடலை பெருப்பித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளன.
ஹியூமை விட அதிகபடியான  ESP தன்மையை கொண்டிருப்பின் உடலை இன்னும் பெருப்பிப்பது சாத்தியமே. :)

பறக்கும் சக்தியையும் ஹியூம் நிரூபித்துக்காட்டி இருந்தமை குறிப்பிட வேண்டிய விடையம்.

மேலும், தனக்கு ESP தவிர்ந்த சில ஆவிகள்(?) உம் தனக்கு துணை புரிவதாக கூறி இருந்தாராம் ஹியூம்.
வாணில் இருந்து சில(9) சக்திகள் தன்னை இயக்குவதாக குறிப்பிட்டு இருந்துள்ளார். ( இப்படியான பல சக்கிதகளைக்கொண்ட மனிதர்கள் குறிப்பிட்ட வாண் சக்திகள் பற்றி சொல்லி இருக்கிறார்கள்... அவற்றை தெளிவாக இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம் :) )

அதேவேளை, ஹனுமாரும் இவ்வொரு முறை பெளதீக விதி முறைகளை மீறும் போதும் ( ESP ஐ வெளிக்கொணரும் போதும்) வாணத்தை நோக்கி கண் மூடி தியானித்ததாகவே இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஹனுமார் ஒரு ESP  மனிதராக இருந்து பின்னர் வரலாற்றாலர்களால் கால ஓட்டத்தில் இறைப்புகள் எய்தி இருக்க கூடும்.
------------------------------------------------------------------------------------------
அடுத்து...
சிவனிற்கு நெற்றிக்கண் இருந்ததாக கூறப்பட்டுள்ளது எந்தளவுக்கு உண்மை... நெற்றிக்கண் என்றால் என்ன... இப்போது மனிதர்களிடம் அந்த 3ம் கண் எங்கே போனது? போன்ற சுவாரஷ்ய தகவல்களை அறிவியல் கண்ணோடு பார்ப்போம்.
மேலும்...
ஏன் இப்போது எம் அனைவரிடமும் புதைந்துள்ள இந்த சக்திகளை மூளையில் இருந்து வெள்ப்படுத்த முடியவில்லை என்பதையும் ஆராய்வோம். :)
------------------------------------------------------------------------------------------
பதிவில் நல்ல தகவல்கள் இருக்கின்றன என கடுதினால் வோட் போடவும்.
அல்லது, குறைகளை கொமென்டில் சுட்டிக்காட்டவும். + உங்கள் கருத்துக்களையும். :)


"daniel douglas hume"தகவல்கள் உறுதிக்கு :
The Encyclopedia of Witches and Witchcraft. , The hanuted museum.
மனிதரும் மர்மங்களும்.
- valaakam*-

------------------------------------------------------------------------------------------
தமிழில் அனைத்து அறிவியல், கல்வித்தகவல்களை தருவதற்கான நாம் முயன்றுகொண்டு இருக்கிறோம்...
ஆர்வம் உள்ளவர்கள் எம்முடன் இணைந்து செயலாற்ற முடியும். :)

எமது இணையத்தள திட்டங்கள் பிடித்திருந்து எம்மை உலகறிய செய்ய நினைப்பவர்கள்... உங்கள் தளங்கள்/ புளொக்கில்..; இந்த HTML கோட்களை களை உபயோகிக்க எம்மைத்தொடர்பு கொள்ளவும் :)
------------------------------------------------------------------------------------------

Friday 8 July 2011

சிப்புவும் அஜித்தும் - இலுமினேட்டி லிங்!!!



நீண்ட கால இடைவெளியின் பின்னர் மீண்டும் புளொக் பக்கம்.... :D
இடைவெளியில்...  "நான்" என்பது "நாம்"ஆக மாறிவிட்டது. அது என்ன என்பதை இதை கிளிக் பண்ணி பார்த்துக்கொள்ளுங்கள்!!!
-------------------------------------------------------------------------------------------
ஒரே ஒரு பதிவுடன் நிறுத்தப்பட்ட "இலுமினேடி - புதிய உலக கட்டளைகள்" என்ற பதிவின் இரண்டாம் பாகத்தை எழுதுகிறேன்.
முதல் பதிவிற்கு நினைத்ததை விட நல்ல எதிர்பார்ப்பும், சிறந்த பின்னூட்டங்களும் கிடைத்தன. தகவல்களை தந்தவர்களுக்கு நன்றி முதலில்.. :)
-------------------------------------------------------------------------------------------
இலுமினேடி... 
இந்த உலகை ஆளும் குழுமத்தின் மூலம்... எம்மை அடிமைகளாக்குவதற்கு எடுக்கப்படும் சில முயற்சிகளை இன்று முதலில் பார்ப்போம்.

அதற்கு முதல், நாம் நன்றாக அறிந்தவர்களாலேயே எப்படி மூளை சலவை செய்யப்பட்டு ஏமாற்றப்படுகின்றோம் என்பதை பார்ப்போம். ( இதற்கு எதிர்ப்பு வரக்கூடும் எனக்கு :P)

"சிம்பு" ஏன் "அஜித்" இக்கு சப்போர்ட் பண்ணுகிறார் என்பதை சற்று சிந்திக்க வேண்டும்...

"அஜித்" எந்த பின்புழ‌மும் இல்லாமல்.. சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர். அரசியலில் ஈடுபடும் நோக்கமும் அற்ற ஒரு நபர்.  தலை முறை நடிகர்களுள் முன்னிலையில் நிற்பவர்... அதிகபடியான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்.
"சிம்பு" இளைய தலைமுறையில் தனக்கென ஒரு  இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள ஒரு நடிகர்.
டி.ஆர். ராஜேந்தரால்... சினிமாவில் ஏற்படுத்திக்கொள்ள முடியாத "மாஸ் ஹீரோ" அந்தஸ்தை உருவாக்கி கொள்வதற்க்காக செதுக்கப்பட்ட ஒரு நடிகர். சமீப காலமாக அந்த அந்தஸ்தை எட்டியும் விட்டார்.

ஆனால், டி,ஆர் அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்து மேற்கொண்டு முன்னேற முடியாத நிலையில் இருக்கின்றார்.
தன்னால், அரசியலில் பிரகாசிக்க வாய்ப்பில்லை என்பதை சற்று உணர்ந்த டி.ஆரி இக்கு... சிம்புவை உருவாக்க முடியும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும்.
அதனடிப்படையிலேயே.... சிம்பு அஜித்திற்கு சப்போர்ட்டாகவும் ஃபானாகவும் இருப்பதனால், எதிர் காலத்தில் அஜித்தின் ரசிகரகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும்.
( இதை விஜயின் மூலம் எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே, விஜயும் அவர் தந்தை சந்திரசேகரும் அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள். )

இந்த மாயையின் படி..; இப்போதே பல அஜித் ரசிகர்கள் சிம்புவின் ரசிகர்களாகவும் ஆகிவிட்டார்கள். சிம்பி, டி.ஆர் தமது எதிர்காலத்திட்டங்களில் கச்சிதமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

முன்னொரு முறை,
"விஜய், விக்ரமை ஒரே மேடையில் பார்க்கும் போது... என்னையும் கமலையும் போல இருக்கிறது" என்று ரஜ்னி கூறி இருந்தார்.
தற்போது, அதே ரஜினி அஜித்தின் மேல் அதிகபடியான அக்கறையைக்காட்டி வருகின்றார். இதுவும் எதிர்கால அரசியலை நோக்காக கொண்டதாக இருக்கலாம்.

அதேவேளை, விஜய்... ரஜனியின் ரசிகராக படங்களில் காட்டிக்கொள்வதும் ரஜனியின் ரசிகர்களை கவர்ந்திழுப்பதற்காகத்தான்.
-------------------------------------------------------------------------------------------

Marilyn Manson
இலுமினேடி குழுமத்தால் வளர்க்கப்பட்ட ஒரு இசைத்தொகுப்பாளர். 
இவரின் இசை மற்றும் வீடியோக் காட்சி அமைப்புக்கள், வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருக்கும்.
70 ஆண்டுகளின் பின்னர்... பல தரமான இசைத்தொகுப்புக்கள் மிகப்பெரிய "இசை வெளியீட்டு நிறவனங்களால்" நிராகரிக்கப்படு... இவரை ஒத்த இசைத்தொகுப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இவ்வாறான இசைகள்... மனிதனின் மூளையை மண்ட செய்து கற்பணை உலகினுள் அவர்களை வியாப்பிக்க செய்வதாக விஞ்ஞான உலகு நிரூபித்துள்ளது. ( இந்த இசைக்கு அடிம்மை ஆக்கப்படவர்களின் சிந்தனைத்திறன் காலப்போக்கில் அற்றுப்போகும்."
"Gothic" எனும் கலாசாரம் நிலவவும் இவ்வகை இசை காரணமாக அமைந்துள்ளது.
எனினும் இவ்வகை இசைத்தொகுப்புக்கள் இன்றும் வெளிவரக்காரணம் 70 ஆண்டலவில் பல முண்ணனி நிறுவனங்களுடன் "இலுமினேடி" குழுமத்தினால் ஏற்பட்டுத்தப்பட்ட‌ உடன்பாடுகளினால் ஆகும். 


பதிவின் நீளம் கருதி மிகுதியை அடுத்த பதிவில் எழுதுகிறேன்...:)
-------------------------------------------------------------------------------------------

நொஸ்டர்டாமஸின் மறைக்கப்பட்ட புத்தகம் என கூறப்படும் புத்தகத்தின் பின்னனியில் இருப்பது என்ன...
ஐரோப்ப சமூகத்தினர் எவ்வாறு அடிமைகள் ஆக்கப்படுகின்றனர்...
ஆசிய சமூகத்தினர் ஏன் இலுமினேடிக்கு நெருக்கடியானவர்கள்...
மற்றும் மேலும் பல விடையங்களுடன் வரும் பதிவுகளில் சந்திப்போம்... :)
-------------------------------------------------------------------------------------------
பதிவி பிடித்திருந்தால் வோட் போடவும்...
அல்லது குறைகளை கூறவும் :)

Tuesday 24 May 2011

ஆண்களே!!! இந்த பெண்ணால் முடிந்தது உங்களால் முடியுமா? - Future News

இன்னும் சிறிது காலத்தில்... இணையத்தளங்களில் நாம் காணக்கூடிய செய்திகளின் தலைப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...
( படங்களுள், தடித்த தலைப்புக்களுக்கும்..  பதிவுக்கும் சம்பந்தமில்லை. )

-------------------------------------------------------------------------------------------
ஆண்களே... இந்த பெண்ணால் முடிந்தது  உங்களால் முடியுமா? (படங்கள் இணைப்பு)

சமீப காலமாக... பல தமிழ் இணையத்தளங்களை பார்க்கும் போது கடுப்புத்தான் எகிறுகிறது.
சுய சிந்தனை இல்லாமல்.. குறிப்பிட்ட ஒரு இணையத்தளத்தில் இருந்து அப்படியே செய்திகளை சுட்டுப்போடுவதை வழ‌க்கமாக கொண்டிருக்கிறார்கள். அதிலும்.. யார் முதலில் சுட்டுப்போடுவது என்று போட்டி வேறு...


வாசிப்பவர்களுக்கு... உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டிய இந்த இணையத்தளங்கள்... தமக்கு "ஹிட்ஸ்" அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் கருத்திற்கொண்டு... பழைய விளம்பரங்களைக்கூட நியூஸாக போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கோழி முட்டையில் இருந்து குஞ்சுவரும் அதிசயம்... (வீடியோ இணைப்பு)

இதில்... இன்னும் ஒரு படி மேலாக போய்...
கேவல‌மான தலைப்புக்களை வைத்து ஹிட்ஸ்களை பெறுகிறார்கள்...
அதிலும்... மருத்துவ‌ரீதியான கருத்துக்களை போடும் போது... அதன் உண்மைத்தன்மை பற்றிக்கருதாது...  ஏதோ ஒருவர் ஆதாரமில்லாமல் எழுதியதை கொப்பி பண்ணி போடுகிறார்கள். இதனால் ஏற்படும் சமூகத்தாக்கங்களை கருதுவதில்லை


பெரும் திருட்டு அம்பலம்...( கமராவில் சிக்கினார் )


இவர்களின் ஆக்கங்களை பார்த்தால்... ஏதோ தமிழ் இனத்திற்கே சேவை செய்து மாற்றத்தை கொண்டுவரப்போகிற போல இருக்கும். ஆனால், செய்யும் காரியங்கள் எல்லேமே... கீழ்த்தரமானவைதான்...
மக்களிடையே புதிய சமுதாய மாற்றக்கருத்துக்களை கொண்டு செல்வதில்லை... அறிவியல் என்ற பேச்சுக்கே பல தளங்களில் இடமில்லை.

புலி போன்ற ஆனால் உருவில் சிறிய உயிரினம்... (நகரப்பகுதியில் இனங்காண்பு)

தமிழுக்கு சேவை செய்யப்போவதாக சொல்பவர்கள்...
அனைத்து தரவுகளையும் தமிழில் பெற்றுக்கொள்வதற்கான படிமுறைகளை மேற்கொள்ளவேண்டும்... அதை செய்ய மாட்டார்கள். காரணம், அறிவியல்.. சமூகவியல் கருத்துக்களுக்கு ஹிட்ஸ் குறைவாக வருவதே... எனினும் வரும் அந்த கொஞ்சப்பேர்தான் மேம்பட்ட தமிழர்கள் என கருதக்கூடியவர்கள் என்பதை உணருவதில்லை.

முத்தமிடும் போது உதடு திறக்குமா மூடுமா? (ஆய்வுத்தகவல் )

புளொக்ஸிலிருந்து அப்படியே கொப்பி பேஸ்ட் செய்கிறார்கள்...
கஸ்டப்பட்டு தேடி எழுதுபவர்களின் லிங் கூட கொடுப்பதில்லை... அப்படி கொடுத்தால்... நேரடியாக சம்பந்தப்பட்ட தகவல்களை அந்த அந்த புளொக்களிலேயே சென்று பார்த்து விடுவார்கள் என்ற பயம் தான்.


மொத்ததில்... தமிழில் இயங்கும் பல இணையத்தளங்கள்...  உயர்வான ஹிட்ஸ்களைக்காட்டி, விளம்பரங்களை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே இயங்குகின்றன... சேவை, உண்மைத்தன்மை, சமுதாய முன்னேற்றம் என்ற எந்த குறிக்கோள்களுமில்லை.

-------------------------------------------------------------------------------------------

Sunday 22 May 2011

ரோயல் திருமணத்திற்கு வருகை தந்த ஏலியன்ஸ் யார்?

------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு முன்னரே எழுதி இருக்க வேண்டும்.. லேட்தான்... என்றாலும் ஒரு தெளிவிற்காக எழுதுகிறேன்.
பிரித்தானிய றோயல் திருமணத்தின் போது.... வான் பரப்பில் ஏலியன்ஸ் வருகைதந்து நோட்டமிட்டதாக வீடியோத்தகவல்கள் வந்திருந்தன.
அந்த தகவலின் உண்மைத்தன்மை.. மற்றும் சாத்தியக்கூறுகளைப்பார்ப்போம்...
------------------------------------------------------------------------------------------
குறிப்பிட்ட வீடியோப்பதிவை நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் தற்செயலாக  படம் பிடித்ததாக கூறுகிறார்கள்.

வீடியோ பதிவில்.. 3 வட்ட-தட்டையான வெண்ணிற உருவங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் நிற்பது போன்று காணப்படுகிறது. இந்த வீடியோ உண்மையாக இருப்பதற்கு சந்தர்ப்பம் குறைவே... "After effect" போன்ற மென் பொருட்கள் மூலம்.. இலகுவாக இவ்வகை வீடியோக்களை நாமே உருவாக்கிவிட முடியும்.

மேலும்... வானில் கால நிலை அவதானிப்புக்களுக்காக விடப்பட்ட பலூன்கள் அல்லது குறிப்பிட்ட கமெராவின் முன் கண்ணாடியில் இருந்திருக்க கூடிய வெண்ணிற துளிகளின் ( ஐஸ்கிறீம் துளி) அசைவாகவும் இருக்கலம்.

எனினும்... இது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. எல்லாமே... கிரபிக்ஷ் என்று ஒதுக்கிவிடவும் முடியாது.
காரணம், இதே போன்ற அவதானிப்புக்கள் லிபிய‌ யுத்தம், ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்பவற்றை அண்டிய பகுதிகளிலும் பதிவாகியுள்ளது.


உண்மையாக இருப்பின்...

வேற்றுகிரகத்தவர்கள்தான் ஏலியன்ஸ் என வைத்துக்கொண்டால்...
அவர்களுக்கு எப்படித்தெரிந்திருக்கும், அந்த நாளில் சுனாமி வரப்போகிறது... திருமணம் குறிப்பிட்ட நாளில் நடக்கின்றது என்பதெல்லாம்...
எம்மை தொடர்ந்து அவதானித்துக்கொண்டி இருந்தால்... பூகோல மாற்றத்தைக்கொண்டு சுனாமியை எதிர்வுகூறலாம்... எனினும்... திருமணம் நடக்கும் நாளில் வந்தது எப்படி? என்ற கேள்விக்கு தெளிவான விடை இதுவரை இல்லை.

எதிர்கால நாம்தான் ஏலியன்ஸ் என வைத்துக்கொண்டால்... இது சாத்தியமானதுதான்.
இறந்த காலத்தில் நடந்தவற்றை காண்பதற்கு நாம் ஆர்வமாக இருப்பது போல்...  எதிர்காலத்தவரும்.. இறந்த காலத்தை ( நமது நிகழ்காலம்) வந்து பார்வையிட்டிருக்கலாம்.
வில்லியம்ஸின் திருமணம், லிபிய யுத்தம், யப்பானிய சுனாமி என்பன முக்கிய சம்பவக்களாக வரலாற்றில் பதியப்படும். எனவே, அந்த பதிவுகளை நேரடியாக பார்வை இடுவதற்காக வந்திருக்கக்கூடும். இதே போன்ற அவதானிப்புக்கள் பல இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் நிகழந்திருக்கின்றன.
( ஏன் அவர்கள் நம்மை எச்சரிப்பதில்லை... என்ற கேள்விக்கு முன்னைய பதிவுகளில் விடை இருக்கின்றது. )

------------------------------------------------------------------------------------------

இது இருக்கட்டும் போன பதிவில் கேட்ட படி...
அவர்கள் ஏன் நேரடியாக வராமல்..."ரோப்போக்களை" அனுப்ப சந்தர்பம் உள்ளது என்பதை பார்ப்போம்...

பூமியின் தட்ப வெப்ப நிலைக்கும்... ஒட்சிசன் முதலான வாயுக்களின் விகிதாசாரங்களுக்கும் அமைய வாழ வேண்டுமென்றால்... அது பூமியில் தோன்றி இயைபாக்கம் அடைந்த உயிரினமாகவே இருக்க வேண்டும். இல்லையேல்...  பூமியை ஒத்த தட்பவெப்பமுள்ள கிரகத்தில் உருவாகிய உயிரினமாக இருக்கவேண்டும்.

எனவே.. வேற்றுக்கிரகத்தில் இருந்து வருபவர்களாக இருந்தால்... என்னதான் வருகைதரும் விண் ஓடங்களினுள் தமது கிரகத்தின் சூழ்னிலையை ஏற்படுத்தினாலும்.. மனிதர்களை ஆராய்வதற்கு வெளியே நடமாட வேண்டிய தேவை இருக்கிறது. மேலும், மனிதர்களை ஓடங்களினுள் கொண்டு செல்லும் போது... மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
எனவே... பூமியில் வாழும் உரினங்களை ஆராய்வதற்காக... ஏற்றவகையில் ரோபோக்களை தயாரித்து விண்ணொடங்களில் அனுப்பி ஆராயக்கூடும்.

இந்த விண்ணோடங்களினுள் கடத்தப்பட்டு... பரிசோதிக்கப்பட்ட ஆண்-பெண்களுக்கு என்ன நடந்தது? என்ன ஆய்வுகளை செய்தார்கள்?... என்பதை அடுத்த பதிவில் சம்பவங்கள் மூலம் பார்ப்போம். :)

------------------------------------------------------------------------------------------

Saturday 21 May 2011

ஒரு காதல்... ஒரு காமெடி... ஒரு உணர்வு... :)

நான் சமீபத்தில் ரசித்த கதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... + வீடியோவும்..
நீங்களும் ரசிப்பீர்கள் நிச்சயம்... :)

------------------------------------------------------------------------------------------
சுமாரான ஒரு பெண்... கண் தெரியாது, உலகத்தில் எதுவுமே பிடிக்காது... தன்னைத்தானே வெறுத்தால்...
ஆனால், காதலனை மட்டும் நேசித்தால்... அவன் எப்போதும் அவளோடே இருப்பான்.  அவளது எல்லாத்தேவையையும் நிறைவேற்றுவான்.
ஒரு நாள் அவள் சொன்னால்... என்னால் மட்டும் பார்க்க முடியுமாக இருந்தால்... உண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று.

சில மாதங்களின் பின்னர்...
அவளுக்கு கண் ஒப்பிறேஷன் செய்வதற்க்குத்தேவையான இரண்டு கண்கள் கிடைத்தன.
அவளால் உலகத்தைப்பார்க்க முடிந்தது... தனது காதலனையும் பார்த்தால்...
காதலன் கேட்டான்.. " இப்போது உண்ணால் உலகத்தை பார்க்க முடிகிறது.. என்னை திருமணம் செய்து கொள்வாயா ?" என்று...
அவனின் தடுமாற்றத்தின் போதுதான்.. அவள் உணர்ந்து கொண்டாள்... அவனுக்கும் கண் பார்வை இல்லை...
பார்வை இல்லாத உண்ணைத் திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டாள்.

அவன் ஒன்றும் பேசாமல் சென்றான்... போக முதல்.. ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி நீட்டினான்... அதில்...
"என் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்...  உண் நினைவுகளுடன் உண்ணை நான் எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்பேன்."

------------------------------------------------------------------------------------------
ஒரு அஃப்ரிக்கன் தனது 10 ஆவது குழந்தையின் பிறப்பிற்காக மனைவியுடன் ஹொஸ்பிட்டல் சென்றிருந்தார்.
10 குழந்தை பிறந்தது... ஆனால், வெள்ளையாக பிறந்திருந்தது... இதனால, செம கடுப்பான அஃப்ரிக்கன்.. அந்த ஊரைச்சேர்ந்த பாதிரியாரிடம் சென்றார்...

"எனக்கு ஏற்கனவே பிறந்த 9 குழந்தைகளும் கறுப்பாக என்னைப்போல் இருக்கிறார்கள்... இந்த குழந்தை மட்டும் வெள்ளையாக இருக்கிறது... இந்த சுற்று வட்டார கிராமங்களிலேயே இருக்கும் ஒரே ஒரு வெள்ளை இனத்தவர் நீங்கள் தான்... பதில் சொல்லனும் இபோ..." என்றார்...

பாதிரியார்...
"பக்கத்தில் நின்ற ஆட்டு மந்தையில்.. இருக்கும் அனைத்து ஆடுகளும் வெள்ளையாக இருக்கும் போது ஒன்று மட்டும் கறுப்பாக இருப்பதை சுட்டிக்காட்டி... இது தான் இறைவனின் படைப்பு...  இதே போன்றுதான் உங்கள் பிள்ளையும்... இதை சந்தேகக்கணோடு பார்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்... " என்றார்.

உடனே.. பாதிரியாரை அழைத்துக்கொண்டு ஒதுக்கு புறமாக சென்ற அஃப்ரிக்கன் சொன்னார்...
"வெள்ளை குழந்தை விசயத்தை நான் மறந்து விடுகிறேன்... கறுப்பு ஆட்டுக்குட்டி விசயம் வெளியே தெரிய வேண்டாம்." 
------------------------------------------------------------------------------------------


Tuesday 10 May 2011

இல்லுமினேடி - உலகின் புதிய கட்டளைகள் 01 ( அறிமுகம் )

------------------------------------------------------------------------------------------
எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்... அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்... பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம் என...
எம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு இந்த பதிவை எழுதுகிறேன்...
முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப்பற்றி பார்ப்போம்...

------------------------------------------------------------------------------------------

இலுமினேடி (Illuminati)...
பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
"உலகின் புதிய கட்டளை (New world order)" எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல... மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும்.  20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் "கிங் மேக்கர்"களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்... லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்... ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன... பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்...)

யார் இவர்கள்...
நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன. 13 குடும்பங்கள் என்பது... ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது... இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள். இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப்பேணுவதில்லை... காரணம், தமது Illuminati தன்மைக்குரிய மரபணுக்களைப்பேணுவதற்காகத்தான்.
மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.

இவர்களின் நோக்கம்தான் என்ன...

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்...
"ஒரு உலகம்.. ஒரு அரசு" என்பது தான் இவர்களின் நீண்டகாலத்திட்டம். இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்... சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரானவர்கள்... அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்...
இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்திவருகின்றனர்... அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
உதரணமாக...
சில வகை "இசை" வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்.... அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.
மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.
(என்ன என்ன முறைகளில் இது நடை முறைப்படுத்தப்படுகிறது என்பது வரும் பதிவுகளில் தெளிவாக பார்க்கலாம்... )

முடிவில்... இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு. அதாவது... அடிமைப்படுத்த வேண்டும் என்பது.. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்... மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத்தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு... நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்களின் மிகப்பெரிய தலையிடி...
ஏஸியாப்பகுதியை சேர்ந்தவர்களும்.... இப்படியான பதிவுகளை வாசிப்பவர்களும் தான்... இவர்களின் மிகப்பெரிய தலையிடியாக இருக்கிறார்கள். அது ஏன் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

இந்த தலைப்பை எடுத்தால்... பல்வேறு விதமாக எழுத வேண்டி இருக்கும்...
ஆரம்பத்தில் மிக சிம்பிளாக... எமது சினிமாவில் இருந்து ஆரம்பிப்போம்... நாம் எப்படி "கேனயர்கள்" ஆக்கப்படுகிறோம் என்பது விளங்கும். அடுத்த பகுதியில் அதைப்பார்ப்போம்.

நிச்சயம் இந்தப்பதிவிற்கு நான் மட்டும் போதாது... illuminati தொடர்பான எதிர் சுய கருத்துக்கள் உடையவர்கள் தங்கள் கருத்துக்களை கட்டாயம் சொல்ல வேண்டும்... பதிவராக இருந்தால்... தொடர்பதிவு எழுத வேண்டும்... :)

------------------------------------------------------------------------------------------

இந்த பதிவு பலரிடம் சென்றடைய வேண்டும் என கருதினால் வோட் போடவும்... :)
அல்லது ஏதோ, ஒரு களகத்துக்காக மூளைச்சலவை செய்வதற்காக எழுதப்படுகிறது என கருதினால் கொமென்டில் கூறவும்...

------------------------------------------------------------------------------------------

Monday 9 May 2011

"கோ" - பார்ட் 2 & 200* (நொட் அவுட்) :D

இருந்து ஜோசித்த போது தோன்றியது... ஏன் திரைப்படங்களின் அடுத்த பகுதிகளை நாங்கள் சிந்தித்து எழுதக்கூடாதென்று....  அப்போது எழுதியது தான் இது...
படித்துப்பிடிதால் வோட் போடவும்...
படம் பார்காதவர்களுக்கு புரியாது.... இந்த லிங்கில் டொரன்ட்ஸ் மூலம் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்... :)
------------------------------------------------------------------------------------------
முதல்வரின் மரணத்திற்கு 1 வருடங்களுக்கு பின்னர்...

கட்ச்சியை சேர்ந்த ஒரு நபரால் முதல்வரின் மரணம் மீது சந்தேகம் சுமத்தப்பட்டு கேஸ் ஃபைல் பண்ணப்படுகிறது.
இதற்காக விசேட அதிகாரியாக மிஸ்டர் X  நியமிக்கப்படுகிறார்.
முதல்வர் கொள்ளப்பட்ட பதிவுகளை உண்ணிப்பாக அவதானித்த X  இக்கு... இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
ஏன் முதல்வர் நேரடியாக திடீரென களத்திற்கு விஜயம் செய்தார்... குண்டு வெடிப்பிற்கு முதல் நடந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றது.

அடுத்த நாள் விடிந்ததும்...
முதல் வேலையாக முதல்வர் அலுவலகத்திற்கு செல்கிறார்... அங்கு சென்று முதல்வர் இறுதியாக பயண்படுத்திய தொலை பேசி நம்பரை பெற்றுக்கொண்டதுடன்... அவரை கடைசியாக சந்தித்த நபர்களின் பதிவுகளையும் பெற்றுக்கொள்கிறார்.
தகவலை பெற்றுக்கொண்டு வெளியேற முற்படுகையில்... இறுதியாக பதிவுகளை மேற்கொண்ட நபர் குறுக்கிட்டு...
" திடீரென ஒருவர் முதல்வரின் நெருங்கிய நண்பர் என சொல்லி... அத்து மீறி உள் நுழைந்து முதல்வரை சந்தித்தார்... பிறகு, முதல்வர் வெளியே சென்றுவிட்டார்... " என்று ஒரு துப்பை கொடுத்தார்.
உடனே அன்றைய நாளுக்கு உரிய வீடியோப்பதிவை பெற்றுக்கொண்டு தனது அலுவலகத்திற்கு சென்றார்.

வீடியோப்பதிவில் பார்த்து அஸ்வின் (ஜீவா) தொடர்பான தகவல்களைத்திரட்டிக்கொண்டு... அஸ்வின் மீது சந்தேக கண்ணோடு தனது விசாரனைகளை ஆரம்பித்தார்.

பத்திரிகையில் "சிறகுகள்" அமைப்பிற்காக அஸ்வின் தம்பதிகளால் எழுதப்பட்ட கட்டுரைகளை எல்லாம் அலசிஆராய்ந்ததில்... அஸ்வினுக்கும் முதல்வருக்கும் ஏதும் தொடர்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
மேலதிகமாக தேடிய தகவல்களின் மூலம்... இருவரும் ஒரே கல்லூரியில் கல்வி கற்றார்கள் என்பது மட்டும் தெளிவாகியது.   அஸ்வின் பிரபல பத்திரிகை படப்பிடிப்பாளர் என்பதால்... நேரடியாக அவரின் மீது நடவடிக்கை எடுத்து விசாரனை செய்ய விரும்பவில்லை மிஸ்டர் X.

நக்ஷ்லைட்டுக்கள் இருக்கும் இடம் முதல்வருக்கு எப்படி தெரிந்தது என்ற சந்தேகமும் ஏற்கனவே மனதில் இருந்தது. காரணம், முதல்வர் சொன்ன குறிப்பிட்ட இடத்திலேயே அந்த சுற்றிவளைப்பு நடந்திருந்தது.
சுற்றி வளைப்பின் போது என்ன நடந்தது என்று அறிந்துகொள்வதற்காக நடைபெற்ற சண்டையின் ஒஃபிஸியல் வீடியோவை பார்வையிட்டார்.
அதில்... அஸிவின் ஒரு டொக்டரை குறிப்பிட்ட நக்ஷலைட்டுக்கள் இருந்த இடத்திற்கு அழைத்து செல்வதை அவதானித்து உசாராகினவராக... அந்த டொக்டரின் படத்தை தனியே எடுத்துக்கொண்டார்.

டொக்டரின் படத்தைக்கொண்டு... சுற்றி வளைப்பு நடந்த ஏரியாவிற்கு சென்று சந்தித்தார்.
விசாரித்ததில்...  அஸ்வின் குறிப்பிட்ட அடிபட்ட ஒரு நக்ஷலைட்டுக்கு மருத்துவம் பார்க்க கூறியதுடன்... மூளையை ஜோசித்து இயங்க விடாமல் இருப்பதற்காக மருந்தையும் ஏற்றச்சொன்னதாக கூறினார்.
இந்த சாட்ச்சியத்தை பதிவு செய்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார் மிஸ்டர் X.

அடுத்த கட்டமாக... பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாடுகளை வேவு பார்க்கத்தொடங்கினார்.
முன்னைய பதிவுகளை ஆராய்ந்ததில் சம்பவம் நடந்த அன்று... அஸ்வினின் லவ்வர் நீண்ட நேரமாக ஒஃபிஸில் கடமையில் இருந்துள்ளது உறுதியாகியது. அவர் அச்சமையம் பாவித்த தொலைபேசி அட்டையில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்ளப்ப‌ட்ட அழைப்புக்கள் சம்பந்தமான தகவல்கள் திரட்டப்பட்டன.
முதல்வர் இறப்பதற்கு முன்னராக... அஸ்வினிடம் இருந்து 3G அழைப்பு வந்துள்ளது. பின்னர் எடிட்டருக்கு கோல் செய்யப்பட்டுள்ளது...  சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் பத்திரைகை நிறுவந்த்திறு ஆஜராகி உள்ளார்.
இதற்கு பின்னரே... முதல்வர் கொள்ளப்பட்டுள்ளார்...

இந்த தகவல்களை கட்சிதமாக பெற்றுக்கொண்டு அஸ்வினிடம்  விசாரணைக்காக சென்றார்.
தன்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து தகவல்களையும் காட்டி.... கைத்து செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன... என்ன நடந்தது என்ற உண்மையை  சொல்லுமாறு சற்று காட்ட மாக கூறிக்கொண்டிருக்க‌..
3G கோலில் பதியப்பட்ட வீடியோக்காட்சியை அஸ்வினின் மனைவி கொண்டுவந்து காட்டினார்....
வீடியோவை மிஸ்டர் X  பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே... ஏன் தாங்கள் இதை மறைத்தோம் என்ற உண்மையை கூறினார்கள்.
காட்ச்சியைப்பார்த்த மிஸ்டர் X...
உங்கள் தொடர்பான தகவல்கள் மேலிடத்திற்கு ஏற்கனவே அனுப்பபட்டு விட்டது...
இந்தக்காட்சியை வெளிவிடுவது தான் நல்லது என்றார். அவர்களும் நிலமையை உணர்ந்து சம்மதிக்க அடுத்த நாள் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் இந்த வாக்கு மூல நியூஸ் முதலிடம் பிடித்தது.

எதிர்கட்சிகள் ஒன்றினைந்து ஆட்ச்சியை கவிழ்த்தார்கள்...

மீண்டும் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது...
சிறகுகள் அமைப்பும் கழத்தில் தைரியமாக போட்டி இட்டது.

தேர்தல் நாள் அன்று... இறுதி அறிவிப்பு...

"மீண்டும்...  பெரும்பாண்மையுடன் சிறகுகள் கட்சி ஆட்சியைப்பிடித்துள்ளது.... போன முறையை விட அதிக படியான விழுக்காடுகளுடன் வெற்றி பெற்றது... இவை அனைத்தும் அந்த கட்சி உறுப்பினர்கள் கடந்த ஒரு வடுடத்தில் மக்களுக்கு ஆற்றிய சேவைக்கு கிடைத்த வெற்றியாகும்..."
------------------------------------------------------------------------------------------
மிஸ்டர் x  இக்கு பொருத்தமானவர்... மேலும் அவருக்கு உரிய லவ் ஸீன்களை... நீங்களே போட்டுக்கொள்ளுங்க.. 
( நான் ஆர்யாவை செட் பண்ணி இருக்கேன்... :P )
------------------------------------------------------------------------------------------
இது எனது 200 ஆவது பதிவு... என்னைப்பற்றி இதுவரை ஒன்றும் கூறவில்லை.. கூறவும் ஒன்றுமில்லை... வித்தியாசமாக இப்படி படங்களின் பகுதி 2 ஐ இனி மாதம் ஒரு முறையாவது எழுதலாம் என்று ஒரு ஐடியா...
"எந்திரன் 2" சுப்பரா எழுதிற ஐடியா இருக்கு.. :)
------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected