Total Pageviews

Friday 26 February 2010

ஆண் , பெண் (காரண) மொழிகள்...

BOYS VS GIRLS
-----------------------------------------------------------------------------------------



ஒரு ஆணை நிராகரிக்க, பெண்கள் சொல்லும் தலையாய பத்து காரணங்கள் (அதன் உண்மையான அர்த்தத்துடன்)



10) உன்னை என் சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்)



9) நமக்குள் ஒரளவுக்கு வயசு வித்தியாசம் இருக்கிறது (நீ என் அப்பா மாதிரி இருக்கிறாய், அல்லது உனக்கு வழுக்கை விழுந்துவிட்டது)



8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய்)



7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் (உன்னைப் பார்த்தால் என் வீட்டுப் பூனையும் அருண் ஐஸ்கிரீமுமே மேல்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு ஆளை காதலிப்பதை விரும்புவதில்லை (நீ உலகத்திலேயே, அல்லது இந்த பேரண்டத்திலேயே ஒரே ஒரு ஆண்மகனாக இருந்தாலும் உன்னை காதலிக்க மாட்டேன், ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம் என்பதற்காக காதலித்துவிடுவேனா ?)



4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் ( நீதான் காரணம்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (மகா அலுப்படிக்கும் என் வேலையே உன்னை விட பரவாயில்லை)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (உன்னைப் போன்ற ஆட்கள் இருப்பதால்தான்)


எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....

1) நாம் நண்பர்களாக இருப்போம்
(நான் உன் கூடவே இருந்து நான் சந்திக்கும் ஆண்களைப் பற்றி எல்லாம் புகழ்ந்து உன்னை வெறுப்பேற்றத்தான்)




-----------------------------------------------------------------------------------------




பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்களில் தலையாயவை

10) உன்னை என் சகோதரி போல நினைக்கிறேன் ( நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் சிறிதளவு வயது வித்தியாசம் இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)



8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு பெண் நண்பி இருக்கிறான் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு பெண்ணைக் காதலிப்பதை விரும்புவதில்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)


3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....


1) நாம் நண்பர்களாக இருப்போம்
(நீ உண்மையிலேயே படு அசிங்கமாக இருக்கிறாய் )

-----------------------------------------------------------------------------------------

Wednesday 24 February 2010

தோல்விகள்... (புகை படங்கள்)

-----------------------------------------------------------------------------------------
பொது வாழ்க்கையின் சில‌ தோல்விகள்.... நகைச்சுவை படங்கள்...
(பட்டவனுக்கு தான் தெரியும் வேதனை!!! )
-----------------------------------------------------------------------------------------




























































































































































































































































































































































































----------------------------------------------------------------------------------------
பதிவு எழுத முடியவில்லை... அதனால் இது...

Tuesday 23 February 2010

சுட்ட எண் ஜோதிடம்.03 (பகுதி 07)

**3**
---------------------------------------------------------------------------------------
இது 3 ம் நம்பர்காரங்களுக்காக....
---------------------------------------------------------------------------------------
3ம் திகதி...
நல்ல சிந்தனை சக்தியுடையவர்களாக இருப்பார்கள். தெய்வ பக்தியையும் சரீர பலத்தையும், போற்றி விருத்தி செய்ய வேண்டும். உணர்ச்சிகளை மேன்மையான முறையில் வெளியிட பழகிகொள்ளவேண்டும். கணிதத்தில் இவர்களது மூளையின் பலம் விருத்தியாகும். காவியங்கள், ஓவியங்கள் முதலியவற்றை ரசிக்க பழகிக்கொள்ள வேண்டும். வாழ்க்கைகெளரவமாகவும் உயர்வாகவும் அமையும். நடுவயதுக்கு மேற்பட்டு புகழ் உண்டாகும்.

12ம் திகதி...
இவர்கள் தன்னலங்கருதாத உழைப்பினாலும், தியாகத்தாலும் புகழடைவார்கள். வாழ்க்கையே உலகோருக்காக செய்யும் தவமாக முடியும். தியாகிக்கான குணங்கள் எல்லாம் பிறவியிலேயே அமைந்து இருக்கும். இளவயதிலேயே கவளைகளையும் பொறுப்புகளையும் உணரவேண்டியவர்கள் ஆதலால், இத்திகதியில் பிறப்பவர்களில் பெரும்பாலானோர் சிறு வயதிலேயே தந்தையை இழக்கின்றனர். தாயை மாத்திரம் சிலர் இழப்பதுண்டு. இதன் காரணம் எண்ணின் ஆதிக்கம் குறைந்து இருப்பது தான். பிரமிக்க தக்க பிரசங்கியாவார்கள்.

30ம் திகதி...
தீர்க்க சிந்தனையும் நுட்பமான மூளையுமுடையவர்கள். கம்பீரமாக வாழ்வதையே விரும்புவார்கள். தன்னிஸ்டப்படி நடக்கும் தீவிரவாதியாக இருப்பார்கள். எதையும் கூர்ந்து கவனித்து நுட்பமாக அறியக்கூடிய புத்திசாலிகள். துப்பறியக்கூடிய அளவுக்கு யோசனை கூடியவர்கள். மிகுந்த துணிச்சலும், நெஞ்சழுத்தமும் உடைய இவர்கள் தோல்வியைகண்டு கலங்க மாட்டார்கள். கலைகளில் சுலபமாகத் தேர்ச்சியடையக் கூடிய இவர்கள் தனிமையை ஓரளவு விரும்புவார்கள். இருக்கும் சக்தி எல்லாத்தையும் இப்பிறவியிலேயே உபயோகித்துப் பார்த்து விடுவார்கள்.

அதிர்ஸ்ட தினங்கள்:
3,9,12,18,21,27,30 திகதிகள் மிக்க நன்மையானவை.
விவாகம்,தொழில் என்பவற்றை கூட்டென் 3,9 வரும் தினங்களில் செய்தால் பலன் நீடித்து இருக்கும்.

துரதிஸ்ட தினங்கள்:
6,15,24 திகதிகள் சில சமயங்களில் சாதகமாகத்தோன்றி பின்னர் தீமை விளைவிக்கும்.
கூட்டெண் 6 ஐயும் தவிர்க்கவும்.

அதிர்ஸ்ட நிறங்கள்:
ஒரேஞ், றோஸ், மஞ்சள்,சிகப்பு, நீலம்
தாமரை பூவின் வர்ணம் மிக்க அதிஸ்டமானது.


துரதிர்ஸ்ட நிறங்கள்:
கருனீலம், கறுப்பு, ஆழ்ந்த பச்சை

இரத்தினம்:
செவ்வந்தி (Amethyst)

---------------------------------------------------------------------------------------
சொன்னது - வி.எ.சிவராசா BA (நன்றி)



Monday 22 February 2010

சிவாஜி (ஒரு பக்க வரலாறு)


ஒரு பக்க வரலாறு
-----------------------------------------------------------------------------------------
நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார். மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது
வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.

‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’
என்று மகன் கேட்க, ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என
நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’ என்றார் சிவாஜி.
‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா?’’ என மீண்டும் மகன்
சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு!

அதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.

பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ
வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.
‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து
இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை
நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,

‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத்
தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.

1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது
நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற
அவரது தாரக மந்திரம்தான்.
---------------------------------------------------------------------------------------
(நன்றி : எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன் ( அவர்களால் வெளியிடப்பட்ட (விகடன் பிரசுர ) புத்தகத்திலிருந்து எழுதப்படுகிறது)


Friday 19 February 2010

3ம் உலக யுத்தமும் நோஸ்ராடாமஸிம்... (பட விளக்கம்)


நோஸ்ராடாமஸ் நாளைய உலகம்.

---------------------------------------------------------------------------------------------------------------
இது நோஸ்ராடாமஸ் தொடர்பான 3ம் பதிவு...

போன பதிவில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் சம்பந்தமான விடையங்களை பார்த்தோம்...
படங்களுக்கு புதிய விளக்கம் தெரிந்தவர்கள் கூறுமாறு கேட்டிருந்தேன்... யாரும் கூறவில்லை...
ஆனால், எதிர் பார்த்த அளவு வரவேற்பு இருந்தமையால் இந்த அடுத்த பதிவினை இடுகிறேன்...‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
---------------------------------------------------------------------------------------------------------------

        இது தான் நோஸ்ராடாமஸ் ஆல் நேரடியாக எழுதப்பட்ட புத்தகத்தின் வடிவமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இத்தாலி லைப்ரரியில் தற்போது இருக்கிறதாம்.
--------------------------------------
இந்த படத்தை பாருங்கள்.
ஒரு கட்டிடம் எரிவது போன்று வரையப்பட்டுள்ளது.
இது தான் 2001.09.11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு நடந்த விபரீதத்தை விளக்குவதற்காக... நோஸ்ராடாமஸால் வரையப்பட்ட படம் என கருதப்படுகிறது. 
இது தொடர்பான அவரது குறிப்பிலும்... "ஒரு புதிய நகரத்தை... விண்னிலிருந்து வரும்  இயந்திர பறவைகள் தாக்கியழிக்கும்.." எனும் பொருள் பட எழுதியுள்ளாராம். அந்த புதிய நகரம் எனும் வார்த்தை நியுஜோர்க் கை குறிப்பதாக கருதப்படுகிறது. இயந்திர பறவைகள் என்பது... விமானம். (நோஸ்ராடாமஸ் காலம் 1600) 
ஆனால்... இன்னொரு குறிப்பில் "விண்ணிலிருந்து வரும் நெருப்பு கற்கல் புதிய நகரை நிலை குழைய செய்யும்..." அனும் பொருள் பட கூறியுள்ளார்.  அதுவும் இதே சம்பவத்தை குறிப்பதாக இருக்கலாம். அல்லது... 3ம் உலக யுத்தத்தின் போது நடக்க இருக்கும் அணுகுண்டு தாக்குதல்களை குறிப்பதாகவும் இருக்கலாம்.
--------------------------------------

இந்த படத்தை பாருங்கள்... 
பாம்பு இரத்தம் அல்லது விசம் கக்குவது போல்... வரையப்பட்டுள்ளது. 
இது 3ம் உலக யுத்தத்தை குறிக்கும் படம் என கருதப்படுகிறது. இங்கு இந்த 3 இரத்த துளிகளும், 3 தனிப்பட்ட மனிதர்களை குறிக்கும் என... ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 
முதல் துளி... ஜூலி கிறிஸ் (??? பேயர் நினைவில்லை... தெரிந்தவர்கள் கூறவும்...)
இரண்டாம் துளி...  ஹிட்லர்.
மூன்றாம் துளியாக... பெரும்பாலும்... பில்லேடன் கருதப்படுகிறார். மேலும் சில தெரிவுகளும் இருக்கின்றன... கடாஃபி, முல்லா உமர் என்போரும் இதில் அடங்குகின்றனர்...  கேனல் கடாஃபி தொடர்பான மேலும் பல குறிப்புகள் இருப்பதாக சந்தேகிக்க படுகிறது. ஆனால் உறுதியாக அவர்தான் என கூற முடியவில்லை.
( நோஸ்ராடாமஸின் குறிப்புகளில் ஒரே ஒரு குறிப்பில் மட்டும் தான் தெளிவாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும்... லூஜி பாஸ்டர் (??? அ அல்லது டாவினா என நினைவில்லை) உடையது.)

இந்த படத்தில்... 3 துளிகள் காட்டப்பட்டு உள்ள போதும். அவரின் குறிப்புகளின் படி... 7 உலக யுத்தம் நடை பெறும் என்பது திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளதாம். அதனால்... இப்படத்துக்கு வேற அரத்தமும் இருக்கலாம் என கருதப்படுகிறது. ( எனது கருத்தின் படி... முதல் 3 ம் மட்டும் தான் தனிப்பட்ட மனிதர்களின் முக்கிய பங்களிப்பால் ஏற்பட்ட, ஏற்படபோகும்... யுத்தம் என்பதை குறிப்பதாக இருக்கலாம்.

இன்னொரு முக்கிய மான விடையம்...
3ம் உலக யுத்தம் அடுத்தடுத்த நாடுகளின் மூலமே ஏற்படும் என கூறப்பட்டுள்ளது... (இந்தியா,சீனா???!!!... வடகொரியா, தென் கொரியா...???!!!)

காலம் ஒழுங்காக கூறமுடியவில்லை... 2012 தொடக்கம் 2023 வரைக்கும் இடையில் நடைபெறும் என கருதப்படுகிறது. ( 2016 ஆக இருக்குமோ???)
--------------------------------------

இப்படம் 3ம் உலக யுத்தத்தின் பின்னர், நாடுகளின் நிலையை குறிப்பது என கருதப்படுகிறது. இதன் விளக்கத்தையும்... 
(3ம் உலகயுத்தம் தொடர்பானதும்)
மேலும் பல விடையங்களையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

Tuesday 16 February 2010

மனதை நெருடியவை...(படங்கள்)

உலகின் வேற்றுமைகள் சில...
-----------------------------------------------------------------------------------------
ஜோசித்து வருத்த படுபவர்கள் பார்க்க வேண்டாம்...
பார்க்க சகிக்காத...பார்க்க வேண்டிய படங்கள்... 
-----------------------------------------------------------------------------------------













Sunday 14 February 2010

கெளதம புத்தர் (ஒரு பக்க வரலாறு)

ஒரு பக்க வரலாறு
------------------------------------------------------------------------------------------
துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு, இன்பமாக வாழேவண்டும் என்பதற்கான வழிதேடி, அரண்மைனையவிட்டு சித்தார்த்தன்
வெளியேறியபோது அவனுக்கு வயது 29. முதலில், யோக மந்திரமுறைகைள முழுமூச்சுடன் கற்று, தேடிப் பார்த்தான். தேடிய விடை கிடைக்கவில்லை. அடுத்ததாக, உணவு, உறக்கம், ஓய்வு என எல்லாவற்றையும் துறந்து, உட‌லை
வருத்தி தீவிர தியானத்தில் ஆழ்ந்தான். கிட்டத்தட்ட மரணத்தின் வாசைலத் தொட்டேபாதுதான், தன் தேடலுக்கான விடை, தியானத்திலும் இல்லை எனக்
கண்டுகொண்டான். தன் ஆறு வருட கால தியானத் தேடல் வீணாகிப்போனதே என்ற எண்ணத்தில் இருந்தபோது, பணிப் பெண் பால்சோறு கொண்டுவந்தாள். மிக நீண்ட நாட்கள் கழித்து உணைவ அனுபவித்துச் சாப்பிட்டேபாது, சித்தார்த்தன் மனதில் ஒரு மின்னல் மின்னியது. தன் தேடலுக்கான விடை கிடைத்ததுபோல் இருந்தது.

உடேன, அரண்மைனைய விட்டுக் கிளம்பிப் போய், போதி மரத்தடியில் அமர்ந்தான். இத்தைன நாட்களாக வெளியில் தேடிக்கொண்டு இருந்த விடையை தனக்குள் தேடத் தொடங்கினான். 49 நாட்கள் கடந்து ஒரு பொளர்ணமி தினத்தில் தேடலுக்கு விடை கிடைத்தது. மனிதகுலம் முழுவதுக்கும் இன்பம் தரக்கூடிய மந்திரச் சொல் ‘இக்கணத்தில் வாழு’ என்பதாக உதித்தது.


கி.மு.563‍ல் நேபாள நாட்டின் கபிலவாஸ்துவில், அரசன் சுத்தாதனனுக்கும் அரசி மாயாவதிக்கும் கெகௗதமன் மகனாகப் பிறந்தேபாதே, ஜோதிடர்கள், ‘இவன் அரசனாக அல்லது ஆன்மிக குருவாக உலைகயே ஆட்சி புரிவான்’ என
எதிர்காலத்தைக் கணித்துவிட்டார்கள். மகன் பேரரசனாக வேண்டும் என்பதற்காக அரண்மனைக்கு உள்ளேயே எல்லாக் கலைகளையும் கற்றுக் கொடுத்தான் சுத்தாதனன். 16 வயதிலேயே திருமணமும் முடித்து
வைத்தான். திகட்டத் திகட்ட இன்பம் அனுபவித்த சித்தார்த்தனுக்கு, ஒரே ஒருநாள் கிடைத்த வெளியுலக தரிசனம் அகக் கண்களை திறந்துவிட்டது. அரண்மனை, பதவி, செல்வாக்கு, புகழ், உணவு, உறக்கம், மனைவி, மகன், பணியாட்கள் என அத்தைனயும் உதறித் தள்ளி, வெளியேறினான் சித்தார்த்தன்.


35-வது வயதில் தன்னுடைய ஐந்தே ஐந்து சீடர்களுக்கு மட்டும், தான்
கண்டுணர்ந்த உண்மைகளை சாரநாத்மான் பூங்காவில் அறிவித்தார் புத்தர். ‘‘மனித வாழ்வு என்பது இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது. ஆசையே துன்பத்துக்குக் காரணம். வாழ்வு சுலபமாக இருக்க வேண்டுமானால் சரியான சிந்தனை, சரியான புரிதல், சரியான பேச்சு, சரியான நடவடிக்கை, சரியான வாழ்வுமுறை, சரியான முயற்சி, சரியான பராமரிப்பு மற்றும் சரியான செயல்பாடு ஆகியவை வேண்டும்! மனிதர்கள் நேற்றைய பயத்தினால், நாளைய வாழ்வை எண்ணி நடுங்குகிறார்கள்.

நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது, நாளை நடப்பைதத் தடுக்க
முடியாது. இன்றய பொழுதில், இக்கணத்தில் வாழுங்கள்! அதுதான் எல்லா
துன்பங்களுக்கும் ஒரே தீர்வு!’’ என்றார் புத்த பெருமான்.
அவரது 80-வது வயதில், இரும்புக் கொல்லன் ஒருவன் ஆசையோடு கொடுத்த
காளான் உணவைச் சாப்பிட்டதும், அதை உடம்பு ஏற்கவில்லை என்பைதயும், உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டது என்பைதயும் உணர்ந்துகொண்ட புத்தர், தம் பிரதம சீடர் ஆனந்தைனைஅழைத்து, மரத்தின் கீழே படுக்கை விரிக்கச் சொல்லி, நீட்டி நிமிர்ந்து படுத்து, ‘‘ஆனந்தா, இப்போது நான் மரண கணத்தில் வாழப்போகிறேன்’’என்று புன்னைகேயாடு சொல்லிவிட்டு, அமைதியாக உயிர் துறந்தார்.

வாழ்வின் எல்லா துன்பங்களையும் தீர்த்து, புது வழி காட்டும் அவரது
‘இக்கணத்தில் வாழு’ என்னும் மந்திரச் சொல்லின் மகத்துவம், வாழ்வின்
ஒளிவிளக்காக மனிதர்களுக்குக் காலெமல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.
------------------------------------------------------------------------------------------
மெல‌ புத்தர்ட வரலாறு... இது அவர பின்பற்றுறதா சொல்லுற சிலர்ட வரலாறு...
------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected