Total Pageviews

Monday 26 July 2010

றொம்ப நல்லவன்டா இவன்... ( நகைக்க‌ மட்டும்...)

--------------------------------------------------------------------------------------
நான் கேள்விப்பட்ட கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... சும்மா (ஜோசித்து) சிரிக்கத்தான்...
--------------------------------------------------------------------------------------
அது கலியுகத்தின் ஆரம்ப பகுதி...

கர்ணனும், துரியோதனனின் மனைவியும் பகடை(?) விளையாடிட்டு இருந்தாங்க... அப்போது அலுவலாக வெளியே சென்றிருந்த துரியோதனன் அரண்மனைக்குள் நுழைகின்றான்.
கணவனை கண்டதும் மரியாதை நிமிர்த்தம் எழுகின்றால் மனைவி...
துரியோதனன் வந்ததை கவனிக்காத கர்ணன், துரியோதனனின் மனைவியின் இடையை பிடித்து அமர்ந்து விளையாடும் படி சொல்லும் பொது... அவள் இடுப்பில் கட்டி இருந்த முத்துமாலை உதிர்கிறது.
உடனே... முத்து மாலைகளை பொறுக்கிய படி, துரியோதனன் கேட்கிறான்... அவற்றை மீண்டும் நூலில் கோர்க்கவா... வைக்கவா என்று...

இது அவர்களின் நட்பின் தூய்மையை கூறுவதற்காக கூறப்பட்ட கதை (?) ...

2010...

இதை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டிருந்த சுஜி இனி தானும் இப்படி தூய்மையாக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்துக்கொண்டான்...

மறு நாள்...

காலை வழமை மாதிரி வேலைக்கு புறப்பட்டு போனான் சுஜி...
அன்று அலுவலர்களின் பணிபகிஷ்கரிப்பு என்பதால்... 10 மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட்டான்...

வீட்டுக்கு வந்து மனைவியை ஹோலிலோ, கிச்சனிலோ கானாததால்... நேராக றூமுக்குள் சென்றான்...
அங்கே...
மனைவி உடைகலைந்த‌ படி இருந்தால்... என்ன நடந்தது என்று விசாரித்தான் சுஜி... மனைவி கடுமையான வயிற்று வலி எனக்கூறிக்கொண்டிருக்கும் போதே... அலுமாரிக்குள் சத்தம் கேட்டது...
உடனே... அலுமாரியை திறந்து பார்த்தான் சுஜி...
அங்கு அவன‌து நண்பன் ஹரி ஒழித்திருந்தான்...

சட்டென்று சுவந்து கோரமாக மாறியது சுஜியின் முகம்... அடக்க முடியாத ஆத்திரத்துடன் ஹரியை பார்த்து கேட்டான்...
" நீ எல்லாம் ஒரு நண்பனா??? உனக்கு நான் எத்தனை உதவி செய்திருப்பேன்... என்ற மனைவி வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள்... நீ என்னென்றா... இங்கு வந்து ஒழித்து பிடித்து விளையாடிட்டு இருக்கிறாய்...???? "
--------------------------------------------------------------------------------------

7 comments:

  1. சபாஷ்....சரியான காமெடி...எங்கிருந்து இதெல்லாம் எடுக்கிறீங்க..? எனது இன்றைய பதிவையும் பாருங்கோவன்...

    ReplyDelete
  2. ஹீ...ஹீ... ஃப்ரென்ட்ஸ் கூட கதைக்கும் போது வாறதைதான் மாத்தி இருக்கேன்...
    பார்த்தேன்... சுப்பர்... :) இன்னும் பப்ளிஸ் பன்னலயே ஏன்... பண்ணுங்க... முக்கியமான/மாறுபட்ட ஐடியா... ஆக்களுக்கு காட்டித்தான் பாருங்களேன்...

    ReplyDelete
  3. இப்படி எல்லாம் நண்பர்கள் இருக்கிறார்களா?

    ReplyDelete
  4. யாரோ...2 August 2010 at 12:12

    அடடா... சும்மா இருந்த என்னை சொறிஞ்சு போட்டியளே! இனி மனைவிக்கு வயித்து வலி என்றால் அலமாரியை எல்லா துறக்கவேனும் போலிருக்கு கிளிஞ்சுது.......!

    ReplyDelete
  5. நன்றி... kala...
    ஹீ...ஹீ... ஆமா.. நண்பர்கள்னா அப்டி இப்படித்தான் இருக்கும்... விடுங்க... விடுங்க... :)
    ------------------------------------------
    நன்றி...யாரோ...
    ஹீ...ஹீ... நோ... நோ... நீங்க றொம்ப நல்லவனா இருக்கனும்... :D

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்.... நானும் வளாகதுக்குள்ள நுழைஞ்சுட்டேன்... ஆமா இந்த வார்த்தைக்கு "பணிபகிஷ்கரிப்பு" என்ன அர்த்தம்...?

    ReplyDelete
  7. நன்றி...philosophy prabhakaran...
    வேற என்ன... வேலை நிறுத்தம் (strike)... தான்.. :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected