Total Pageviews

Thursday 15 July 2010

நடந்தது இதுதான்... குருதி...

குருதி
-------------------------------------------------------------------------------------
இது நடந்தது 400 வருடங்களுக்கு முன்னர்... ஆனால், இன்று உலகம் இயங்கிக்கொண்டிருப்பதற்கு இதுவும் ஒருவகையில் காரணமாக இருக்கிறது.

1578 ம் ஆண்டு...
இங்கிலாந்தில் பிறந்தார் ஹார்வே... தனது ஆரம்ப படிப்பை ஒக்ஷ்ஃபோர்ட் பல்கலைக்களகத்தில் பயின்றுவந்தார்.
ஈரோப் மத்திய‌ மருத்துவ அமைப்பின் பரிந்துரையினால் இவரை இத்தாலியில் புகழ்பெற்ற "பாடோ" யூனிவெர்சிட்டி அழைத்தது. அங்கு தனது மேற்படிப்பைத்தொடர்ந்தார் ஹார்வே.

1602 ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பிய ஹார்வே... எலிசபெத் மகாராணியின் தனிப்பட்ட மருத்துவராக பணியாற்றிய மருத்துவரின் மகளை திருமணம்செய்துகொண்டார். 1618 ம் ஆண்டு கிங்ஸ் சார்ல்ஸ் 1 இன் பிரதான மருத்துவராக நியமனம் கிடைத்தது. ( அதற்கு முன்னரே கிங் ஜெம்ஸின் ஃபிஸிசியனாக பணியாற்றினார்.)

அரச மருத்துவராக நியமனம் கிடைத்தமையினால் ஹார்வே தனது ஆராச்சிகளை இலகுவாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
அவரை நீண்ட நாட்களாக குழப்பிவந்த மனிதனின் குருதிசுற்றோட்டம் தொடர்பான ஆராச்சிகளில் நேரடியாக இறங்கினார்....

-------------------------------------------------------------------------------------

அதுவரைகாலமும்...

1500 வருடங்களுக்கு முன்னர் கிரேக்க ஃபிஸிஸியன் கலனால் எழுதப்பட்ட நூலிற்கமையவே மனிதனின் குருதிசுற்றோட்டம் இருக்கிறது என நம்பப்பட்டது...
கலானின் கருத்துப்படி... உணவு ஈரலிலினால் குருதியாக மாற்றப்பட்டு உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது. இதற்கு தசை துணையாக இருக்கிறது என்பதேயாகும். ( நரம்புகலில் காற்றுமட்டுமே இருப்பதாக நம்ப்பட்டதாம்... )

இந்த கொள்கை நீண்டகாலமாக வில்லியம்ஸ் ஹார்வேயை குழப்பத்துக்குள்ளாக்கியிருந்தது.
அதனால்... அவர் தனது ஆராச்சியில் மும்முரமாக ஈடுபட்டார்... இதற்காக அவர் சில விலங்குகளை ஆராச்சிக்குட்படுத்தினார்.

அப்போது... விலங்குகளில் இரண்டுவிதமான நரம்புகள் இருப்பதை கண்டுகொண்டார்.
அந்த இரண்டு நரம்புக்கலங்களையும் பார்க்கும் போது...  ஒன்றில் இரத்தம் அதிகமாக பீச்சியடிக்கப்படுவதையும் மற்றதில் குறைவாக இருப்பதையும் அவதானித்தார்.... அதேவேளை... இரண்டினது செயற்பாடும் ஒரே நேரத்தில் இருப்பதைக்கண்டு கொண்டார்.
இதிலிருந்து, இரண்டுவகை நரம்புகளுமே பொதுவான ஒரு அமைப்புடன் தொடர்பு பட்டிருக்கும் என்பதையும்... அது பம்பி போல் தொழிற்படும் என்பதையும் உணர்ந்துகொண்டார்.

அவர் கண்டு கொண்ட நரம்புகள் இவைதான்...
1> நாளம் ( இது அசுத்த ரெத்தத்தை... அதாவது... உடலெங்கும் கொண்டுசெல்லப்பட்டு ஒட்சிசனின் செறிவு குறைக்கப்பட்ட ரெத்தத்தினை கொண்டுசெல்லும் நரம்புக்கலம் (??) )
2> நாடி ( இது சுத்தரெத்ததை கொண்டு செல்லும்... அதாவது... நுறையீரலினுதவியுடன் ஒட்சிசனேற்றப்பட்டு இதயத்திலிருந்து புறப்படும் புது ரெத்தத்தி கொண்டுசெல்லும்... )

( இந்த நரம்புகளை முதலில் கண்டுகொண்டது இவரில்லை... ஆனால், அவற்றின் விளக்கங்களை தெளிவாக கூறியது இவர்தான்.... அதற்கு முன்னர் அவை ஒன்றுடனொன்று தொடர்பற்றதென்றும்.... ஒன்று ஈரலை மையமாகவும்... மற்றையது மூளையை மையமாகவும் வைத்து இயங்குவதாக கருதப்பட்டது. )

1625 ஆண்டு வில்லியம்ஸ் ஹார்வே தனது பல கட்ட ஆராச்சிகளின் பின்னர்...  மனிதனின் முதலாவது விஞ்ஞான பூர்வமான குருதிசுற்றோட்ட தொகுதியை வரைந்தார்.
தனது இந்த கண்டுபிடிப்பை வெளியிட நினைத்த போதுதான் பெரிய பிரசனையே எழுந்தது...

சேர்ச்சிலிருந்து இவரின் இந்த கண்டுபிடிப்பிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.... காரணம், இதையத்தை வெறும் பம்பி என்று இவர் தனது அறிக்கையில் எழுதி இருந்தமைதான்.
இதனால் இவரின் அரச மருத்துவர் பதவி பறிக்கப்பட்டது. இவர் வரைந்த குருதி சுற்றோட்டத்தொகுதியினை கண்ட மக்களும் இவரிடம் மருத்துவம் பெற முன்வரவில்லை...

இவளவு நெருக்கடிகளுக்கு மத்திவிலும்... 1628 ம் ஆண்டு... ஒரு சிறிய பப்ளிஸரின் உதவியுடன் தனது கண்டு பிடிப்பினை 78 பக்கங்கள் கொண்ட ஒரு மெல்லிய புத்தகமாக வெளியிட்டார். இது லத்தீன் மொழியில் வெளியிடப்படது... விஞ்ஞான மொழி அது என்பது ஒரு புறமிருக்க... இங்கிலாந்தவர்களிடம் இருந்து தன்னைப்பாதுகாப்பதும் ஒரு காரணமாக இருந்தது.

22 வருடங்கள் கழித்து ஈரோப்பிய மருத்துவ அமைப்பினால்... அவர் வெளியிட்ட உண்மை... ஏற்றுக்கொள்ளப்படது.

வில்லியம்ஸின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட முடியாமல் போன சில விடையங்களை 1670 ம் ஆண்டில் இத்தாலியை சேர்ந்த மார்ஸிலோ என்பவர் நிறைவு செய்தார்...
( ஹேர்வியின் காலத்தில் மைக்ரோஸ்கோப் இல்லாமையே இதற்கு காரணம்... அவர் இறந்து 3 வருடங்களின் பின்னர் அக்குறைகள் நிவர்த்திசெய்யப்பட்டன.)

-------------------------------------------------------------------------------------

இந்தப்பதிவு... ஆருக்காவது பிரஜோசனப்படும் என்று நினைத்தால் வோட்போடுங்க...
தவறுகள் இருந்தால் மறக்காம கொமென்டில் பொடுங்கோ...

-------------------------------------------------------------------------------------

2 comments:

  1. தமிழ் செய்திகள்,விளையாட்டு,சினிமா,பொழுதுபோக்கு.

    ur phone supported tamil font then
    join this channel u will get tamil SMS.

    ON ETAMILMINT to 09870807070

    (Indian Mobile user only)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected