Total Pageviews

Sunday 7 March 2010

சுட்ட எண் ஜோதிடம்.02 (பகுதி 08)

**2**
------------------------------------------------------------------------------------------
இது 2 ம் நம்பர் காரங்களுக்கு... + 21
------------------------------------------------------------------------------------------

2 ம் திகதி...
மிதமிஞ்சிய கற்பனை சக்தியுடையவர்கள். உயர்ந்த இலட்சியங்கள் உடையவர்களாக இருப்பார்கள். 11,20,29 திகதிகளில் பிறந்தவர்களை விட பயந்த சுபாவம் உடையவர்களாயும், சாந்தமானவர்களாயும் காணப்படுவார்கள். ம்னோ சக்திகளே  மிகுந்தவர்களாக இருப்பதனால் தீவிர கற்பனை, ஆராச்சிகளில் ஈடுபடுவார்கள். சமூகத்தைதிருத்தி அமைப்பதைப்பற்றி புரட்சிகரமான எண்ணங்களுண்டு. ஆனாலும், இவர்கள் சண்டைகளை விரும்புகிறவர்கள் அல்ல. ஏமாற்றப்பட்டபோதிலும் இவர்களுக்கு கோபம் உண்டாகாது. எழுத்து மூலமும் வாயாலும் சண்டை போடுவதில் வீரர்கள்.

11ம் திகதி...
2,20,29 ஐ விட தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். நம்பிக்கையாலேயே எந்த காரியத்தையும் மிக எளிதாக சாதித்து விடுவார்கள். இந்த திகதியில் பிறப்பவர்களை தெய்வனம்பிக்கை உடையவர்களாக வளர்ப்பது பெற்றோரின் கடமையாகும். படிப்பு, செல்வம் இல்லத போதும்... நம்பிக்கை ஒன்றைக்கொண்டு மிக எளிய நிலையிலிருந்து மிக யுர்ந்த நிலையை அடைவார்கள். சாந்தியை விரும்புவார்கள்.  மற்றவர்களுக்கு தீங்கு புரிய நினைக்க மாட்டார்கள். சமாதானத்தில் நாட்டமுடையவர்கள். சினேகிதத்துக்கு கட்டு படுவார்கள்.

20ம் திகதி...
மிக மிஞ்சிய கற்பனை சக்தியும்.. தெய்வ அருளும் உடையவர்கள். சுலபமாக உலகம் இவர்களை வழிகாட்டியாக எண்ணி வழிபடும். சுயனலமின்றி வாழ்ந்தாரானால் மனிதருள் தேவராகலாம்.  சுயனலம் வளரின் தான்னையும், சுற்றத்தாரையும் கஷ்டப்படுத்திவிடுவார்கள்.  தெய்வ சக்தியை இலாபம் கருதி சிதறடிப்பார்கள். பேராசை நீங்கினால் மிக கண்ணியமான வாழ்க்கை அமையும். அனேகருக்கு சிறந்த வாழ்க்கை வழிகாட்டியாக அமைவார்கள்.

29ம் திகதி...
சாந்தியையும் சமாதானத்தையும் விரும்புகிறவர்களல்ல.  இவர்கள் மற்றவர்களை சிரம படுத்த பிறந்த வர்கள் என்று தோன்றுகிறது. சதா வீண் சண்டை போட்டபடியே இருப்பார்கள். ஏன் சண்டை போடுகிறோம் என நினைக்காமலே சண்டை போடுவார்கள். நண்பர்கள் அனைவரும் தன்னை ஏமாற்றுகிறார்கள் என கூறுவார்கள். பிறருக்கு உதவ மனம் வராது. எவரிடமும் சமாதானமாக இருக்கார். மிக நல்லவர் போல நடிப்பார். வீராப்பு அதிகம் பேசுவார்... ஆனால் கோழையுள்ளம் படைத்தவர்கள். பயம் உள்ளூர இருக்கும். எதிரி மிஞ்சினால் பயந்து விடுவார்கள். சிறிய வயதில் பெற்றோர்கள் இவர்களை நல்வழிப்படுத்தாவிடின்... உலகிற்கே தீங்களைக்கத்தக்கவர்களாக வளர்வார்கள். துஷ்ட சினேகிதர்களை அடையாமல் பாதுகாக்க வேண்டும்.

அதிஸ்ட காலம்...
7,16,25 மிக அதிஸ்டமானவை.
கூட்டென் 7 வரினும் நன்று.
25 ம் திகதி மிக்க வலிமையானது.
1,10,19 நன்று.

துரதிஸ்ட காலம்...
2,11,20,29 ல் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்று.
8,9,18,26 நன்மை தராது.
கூட்டெண் 8,9 ம் மிக தீமை.

அதிஸ்ட நிறம்...
இலேசான பச்சை மிக அதிஸ்டமானது.
வெளிர்மஞ்சள், வெள்ளை நன்மை.

துரதிஸ்ட நிறம்...
கறுப்பு, சிவப்பு, ஆழ் நீலம்

இரத்தினம்...
முத்து... பச்சைகல் ()
வைடூரியம் மிக்க அதிஸ்டம்.

விடுபட்ட... 21...

தீவிர சுயனலகாரர்களாக இருப்பார்கள். தியாகம் செய்துவிட்டு கூலியை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் பத்திரிகை பார்ப்பது அவசியம். எவளவுக்கு எவளவு உலக அறிவு அதிகரிக்கிறதோ.. அவளவுக்கு வாழ்க்கை உயர்வடையும். காரிய வாதிகள். செய்தி நிருபர்களாயும்... உலக அபிப்பிராயங்களையும் மாற்ற வல்லவர்கள். கடும் போராட்டம் நிறந்ததாக வாழ்க்கை அமையும். திட சித்தத்தால் முன்னேறி வெற்றியை பூரணமாக அனுபவிப்பார்கள்.

------------------------------------------------------------------------------------------

3 comments:

  1. நல்லாருக்கு எழுத்து பிழை அதிகம்.கவனிங்க

    ReplyDelete
  2. tnx ஆர்.கே.சதீஷ்குமார்...
    unmaikkum thaan kooda eluththu pilai kooda irukku... kuraikka try pannuran..

    ReplyDelete
  3. athu thaan eluthittingale piraku enna????????????? gud job

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected