Total Pageviews

Sunday 22 May 2011

ரோயல் திருமணத்திற்கு வருகை தந்த ஏலியன்ஸ் யார்?

------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு முன்னரே எழுதி இருக்க வேண்டும்.. லேட்தான்... என்றாலும் ஒரு தெளிவிற்காக எழுதுகிறேன்.
பிரித்தானிய றோயல் திருமணத்தின் போது.... வான் பரப்பில் ஏலியன்ஸ் வருகைதந்து நோட்டமிட்டதாக வீடியோத்தகவல்கள் வந்திருந்தன.
அந்த தகவலின் உண்மைத்தன்மை.. மற்றும் சாத்தியக்கூறுகளைப்பார்ப்போம்...
------------------------------------------------------------------------------------------
குறிப்பிட்ட வீடியோப்பதிவை நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் தற்செயலாக  படம் பிடித்ததாக கூறுகிறார்கள்.

வீடியோ பதிவில்.. 3 வட்ட-தட்டையான வெண்ணிற உருவங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் நிற்பது போன்று காணப்படுகிறது. இந்த வீடியோ உண்மையாக இருப்பதற்கு சந்தர்ப்பம் குறைவே... "After effect" போன்ற மென் பொருட்கள் மூலம்.. இலகுவாக இவ்வகை வீடியோக்களை நாமே உருவாக்கிவிட முடியும்.

மேலும்... வானில் கால நிலை அவதானிப்புக்களுக்காக விடப்பட்ட பலூன்கள் அல்லது குறிப்பிட்ட கமெராவின் முன் கண்ணாடியில் இருந்திருக்க கூடிய வெண்ணிற துளிகளின் ( ஐஸ்கிறீம் துளி) அசைவாகவும் இருக்கலம்.

எனினும்... இது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. எல்லாமே... கிரபிக்ஷ் என்று ஒதுக்கிவிடவும் முடியாது.
காரணம், இதே போன்ற அவதானிப்புக்கள் லிபிய‌ யுத்தம், ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்பவற்றை அண்டிய பகுதிகளிலும் பதிவாகியுள்ளது.


உண்மையாக இருப்பின்...

வேற்றுகிரகத்தவர்கள்தான் ஏலியன்ஸ் என வைத்துக்கொண்டால்...
அவர்களுக்கு எப்படித்தெரிந்திருக்கும், அந்த நாளில் சுனாமி வரப்போகிறது... திருமணம் குறிப்பிட்ட நாளில் நடக்கின்றது என்பதெல்லாம்...
எம்மை தொடர்ந்து அவதானித்துக்கொண்டி இருந்தால்... பூகோல மாற்றத்தைக்கொண்டு சுனாமியை எதிர்வுகூறலாம்... எனினும்... திருமணம் நடக்கும் நாளில் வந்தது எப்படி? என்ற கேள்விக்கு தெளிவான விடை இதுவரை இல்லை.

எதிர்கால நாம்தான் ஏலியன்ஸ் என வைத்துக்கொண்டால்... இது சாத்தியமானதுதான்.
இறந்த காலத்தில் நடந்தவற்றை காண்பதற்கு நாம் ஆர்வமாக இருப்பது போல்...  எதிர்காலத்தவரும்.. இறந்த காலத்தை ( நமது நிகழ்காலம்) வந்து பார்வையிட்டிருக்கலாம்.
வில்லியம்ஸின் திருமணம், லிபிய யுத்தம், யப்பானிய சுனாமி என்பன முக்கிய சம்பவக்களாக வரலாற்றில் பதியப்படும். எனவே, அந்த பதிவுகளை நேரடியாக பார்வை இடுவதற்காக வந்திருக்கக்கூடும். இதே போன்ற அவதானிப்புக்கள் பல இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் நிகழந்திருக்கின்றன.
( ஏன் அவர்கள் நம்மை எச்சரிப்பதில்லை... என்ற கேள்விக்கு முன்னைய பதிவுகளில் விடை இருக்கின்றது. )

------------------------------------------------------------------------------------------

இது இருக்கட்டும் போன பதிவில் கேட்ட படி...
அவர்கள் ஏன் நேரடியாக வராமல்..."ரோப்போக்களை" அனுப்ப சந்தர்பம் உள்ளது என்பதை பார்ப்போம்...

பூமியின் தட்ப வெப்ப நிலைக்கும்... ஒட்சிசன் முதலான வாயுக்களின் விகிதாசாரங்களுக்கும் அமைய வாழ வேண்டுமென்றால்... அது பூமியில் தோன்றி இயைபாக்கம் அடைந்த உயிரினமாகவே இருக்க வேண்டும். இல்லையேல்...  பூமியை ஒத்த தட்பவெப்பமுள்ள கிரகத்தில் உருவாகிய உயிரினமாக இருக்கவேண்டும்.

எனவே.. வேற்றுக்கிரகத்தில் இருந்து வருபவர்களாக இருந்தால்... என்னதான் வருகைதரும் விண் ஓடங்களினுள் தமது கிரகத்தின் சூழ்னிலையை ஏற்படுத்தினாலும்.. மனிதர்களை ஆராய்வதற்கு வெளியே நடமாட வேண்டிய தேவை இருக்கிறது. மேலும், மனிதர்களை ஓடங்களினுள் கொண்டு செல்லும் போது... மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
எனவே... பூமியில் வாழும் உரினங்களை ஆராய்வதற்காக... ஏற்றவகையில் ரோபோக்களை தயாரித்து விண்ணொடங்களில் அனுப்பி ஆராயக்கூடும்.

இந்த விண்ணோடங்களினுள் கடத்தப்பட்டு... பரிசோதிக்கப்பட்ட ஆண்-பெண்களுக்கு என்ன நடந்தது? என்ன ஆய்வுகளை செய்தார்கள்?... என்பதை அடுத்த பதிவில் சம்பவங்கள் மூலம் பார்ப்போம். :)

------------------------------------------------------------------------------------------

3 comments:

  1. நன்றி மதுரை சரவணன் :)

    ReplyDelete
  2. எதிர்கால ஏலியன்ஸ் நாம்தான், அனால் நமக்கு இல்லை வேற்று கிரக உயிரிகளுக்கு ....

    ஒன்று மட்டும் நிச்சயம் , மனிதன் வேற்று உயிரிகளை கண்டு பிடித்தால் அழித்து விடுவான்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected