Total Pageviews

Tuesday 24 August 2010

அம்மா பகவான் சொன்னா சரியாத்தானிருக்கும்... (நேரடி அனுபவம்)

------------------------------------------------------------------------------------------
ஹக்கர்ஸ் பிரச்சனைகளால் கொஞ்ச நாள் பதிவுகள் இட முடியவில்லை...
தொடர்ந்து அடிக்கடி மெயில் ஐடி ஹக் ஆச்சு... இப்போ சரியா வேலை செய்யுது என்று நம்பிறன்...
------------------------------------------------------------------------------------------
இன்றைக்கு... பிரபலமாக தங்களை தாங்களே கல்கி அவதாரம் என்று சொல்லிகிட்டு இயங்கிக்கொண்டிருக்கும் அம்மா பகவானின் பூசையில் நான் பெற்ற அனுபவங்களையும்... அதன் உண்மைத்தன்மையையும் கொஞ்சம் எழுதபோறேன்...

அட்வான்ஸ் லெவல்... எக்ஸாம் முடிச்சிட்டு சும்மா இருந்த நேரத்தில நடந்ததுதான் இது...

நானும் எனது 3 நண்பர்களும் அன்று நடந்துகொண்டிருந்த மச்சைக்கூட பார்க்காமல் அம்மா பகவானின் பக்தர்களால் (சங்கத்தினரால்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு போனோம்...

ஹோலின் வாசலில்...

ஒரு சிறு கடை போல்... அம்மா பகவானின் முத்திரை பதிக்கப்பட்ட மாலை, படங்கள் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்...  மறு புறம்... தரிசிக்க வருபவர்கள் பால் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி... பால் போத்தில்கள், பக்கற்றுக்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன...

ஹொலுக்குள்ளே....

அதிகமான பாடசாலை மாணவர்கள் ( முக்கியமாக மாணவிகள் ) ஓடியாடி வேலை செய்துகிட்டிருந்தார்கள்...
காரணம், அம்மா பகவானின் பிர்ச்சாரம் முக்கியமா பாடசாலைகளை குறிவைத்தே இலங்கையில் நடக்கிறது. பாடசாலை ஆசிரியர்களும்... அவரின் புகழ்பாட்டிக்கொண்டிருப்பார்கள்...

தாங்கள் தான் நாசமா போறம் என்றால்... சும்மா இருக்கிற பிள்ளைகளுக்கும் இந்த நச்சு விதையை விதைத்து... அவர்களையும் நாசமாக்கிறாங்க... ( நாசமா போறது என்று சொன்னது.... இந்த மாதிரி போலிகளை கடவுள், கடவுளின் அவதாரங்கள் என்று சொல்வதை மட்டும்தான் குறிப்பிட்டுள்ளேன்... )

( உதாரணமாக, எமது பாடசாலையில்... முக்கியமான பொறுப்பிலுள்ளவருக்கு... ஒரு சம்பவம் நிகழ்ந்தது... அது அம்மா பகவானை கும்பிட்டதால் தான் நிகழ்ந்ததாக நினைத்துக்கொண்டு... காலைக்கூட்டங்களின் போதும் அம்மா பகவானின் புகழ்பாடி மாணவர்களையும் அவரை கும்பிடும்படி கூறிவருகின்றார்... சில நேரங்களில் சற்சங்கங்களின் போதான...  கதிரைகள் அடுக்கும் வேலை முதல் கொண்டு... பனரடிக்கும் வேலை வரை மாணவர்களை கட்டாயப்படுத்தவும் செய்கின்றாராம். )
------------------------------------------------------------------------------------------
சரி... நாங்கள் ஹோலுக்குள் போய் அமர்ந்தோம்...  இந்து முறைப்படி தேவாரத்தோடு ஆரம்பமானது கூத்து... ஸொறி... பூசை...

தேவாரம் எல்லாம் முடிய... அம்மா பகவானிற்கு என வடிவமைக்கப்பட்ட புகழ்பாடும் மந்திரம்/ பாடல் பாடப்பட்டது...
எமக்கு முன்னுக்கு... அம்மா பகவானின் உருவத்தை வைத்து... கைகளால் ஒருவர் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்... பக்கத்திலிருப்பவர் பூ போட்டுக்கொண்டிருந்தார்...
இவர்கள்தான் எங்களது ஏரியாவுக்கு பொறுப்பானவர்களாம்... அம்மா பகவானின் நேரடி அருள் பெற்ற ஆத்மாக்களாமாம்....

அடுத்து... அம்மா பகவானை கும்பிட்டு...  அருள் பெற்றவர்கள் எழும்புங்கோ... என்று ஒரு குரல்...
கொஞ்ச பேர் எழும்பினார்கள்...

சம்பவம் 01
காசு கஸ்டத்தில இருந்தப்ப... அம்மா பகவானை கும்பிட்டாவாம் ஒரால்... அடுத்த நாள் காலைல கடைக்கு போனப்ப... றோட்டில... இவா நினைத்ததுக்கும் மேலதிகமாக காசு கிடந்திச்சாம்...
உடனே...  ஹோலில ஒரு அமைதி... பின்ன காசெல்லாம் கொடுக்கிறா என்றா சும்மாவா... ( காசை தொலைத்தவன பற்றி ஏன் நாங்க ஜோசிக்கனு... அவன் அம்மா பகவானிட பக்தன் இல்ல போல... அதுதான் தொலைச்சிருப்பான்... )

சம்பவம் 02
கடுமையான வாத நோயால் பீடிக்கப்பட்டிந்தவா ஒரால்... அம்மா பகவானிட அருளால இப்போ பூரண குணமடைந்திட்டாவாம்... ( இவா பீடிக்கப்பட்டிருந்தது உண்மை... ஆனால்... பிரபல வைத்திய சாலைகளில் கடுமையாக சிக்கிச்சை எடுத்துக்கொண்டவா... ஆனால், காரணம் அம்மா பகவான் மட்டும்தானாம்... டொக்டர்ஸ் இல்லையாம்...)

சம்பவம் 03
மாணவி ஒரால்... ஓர்டினெறி எக்ஸாமில் 5 ஏ கிடைக்கனும் என்று கும்பிட்டாவாம்... கிடைச்சிட்டுதாம்...

இப்படி ஆளாலுக்கு... அம்மா பகவானிட மகிமையை அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்கள்...
------------------------------------------------------------------------------------------
சரி... இவர்கள்... எப்படி கும்பிட்டார்கள்... என்பதையும் அந்த புண்ணிய ஆத்மாக்களே சொல்லினார்கள்...

இவர்களின் இந்த மந்திரத்தை... 108 நாட்களுக்கு... நாளுக்கு 3 முறைப்படி... மச்சம் சாப்பிடாமல் சொல்லி வரனுமாம்... நேரம்... அதிகாலை 5 மணி, பின்னேரம் 6 மணி, இரவு 12 மணி... சொல்லும் போது... நாம் வேண்டிக்கொள்ளப்போவதை... மனதில் நினைத்துக்கொள்ள வேண்டுமாம்... ( 3 நினைக்கலாம் 2 ஆவது நிறைவேறும்... எக்ஸ்ரா அட்வைஸ் இது....)

( இதற்கு இடையில ஒரு சாத்திரி ஓவரா பில்டப் கொடுத்தார்...  நாங்கள் நடுவில இருந்துகொண்டு... எங்களை சுற்றி... 8 திசைகளிலும்... எள் விளக்கேற்றி... கும்பிடனுமாம்... அதற்கு தேவையான தூய்மையான எள்ளு தன்னட்ட இருக்காமாம்...  இந்த கொசுவைப்பற்றி தனிப்பதிவே போடலாம்... செம காமெடி பீஸ் இது... )

இவர்கள் செய்யசொல்லும் இந்த முறையைத்தானே ஏற்கனவே விஞ்ஞான உலகமும் சொல்லிக்கொண்டிருக்கிறது...
அதாவது...

நாம் எண்ணத்தில் நினைப்பதுதான் நடைபெறும்... நாம்... ஆழ்மனதில் ஆழமாக பதிவும் அழவுக்கு ஒரு சம்பவத்தி நினைத்தோமானால்... அது எப்படியாவது நிறைவேறுமாம்... ( ஐன்ஸ்ரைன் கூட சொல்லி இருககார்...)
108 நாளுக்கும் இவர்கள் சொல்வதுப்படி 3 நேரமும் அதை நாம் நினைத்து வந்தால்... எமது ஆழ்மனதில் நேர்மலாகவே சம்பவம் பதிந்துவிடும்... ( அதுவும் 5,6,12 போன்ற நேரங்கள் பொதுவாக சத்தமற்ற மைதியான நேரங்கள்... இலகுவாக பதியும்... (காலைல பாடங்களை படிக்கனும் என்று சொல்லுற அதே டெக்னிக்தான்... ) பிறகென்னத்துக்கு இவர்களின் புகழ்பாடும் மந்திரமும்... இந்த ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்களின் படங்களும்... ???
------------------------------------------------------------------------------------------
பிறகு... கொண்டுவந்த பாலை... அங்கு ஒரு செருப்பு வைத்திருந்தார்கள்... அதில... ஊத்தி தொட்டு கும்பிடனுமாம்...
இப்படி கேவலமா பிளைப்பு நடத்திறவங்களிட செருப்புக்கு பால் ஊத்தினதுதான் நாங்கள் மினெக்கெட்டு போனதிட மிச்சம்... இந்த பாலை... கேவில் வாசல்ல பிச்சைகேக்கிற சின்ன பிள்ளைகளுக்கு கொடுத்திருக்கலாம்...

அதை விட கேவலமா...
பூசை முடியும் தறுவாயில் கரண்ட் கட்டாகிச்சு... உடனே அந்த புண்ணிய ஆதமா சொல்லிச்சு... அனைவரும் கண்ணை மூடி கும்பிட்டால்... கரண்ட் திரும்பி வந்திடுமாமாம்...
இதுகளும் ( நாங்களும்) கும்பிட்டா... என்ன ஆச்சரியம் சொன்ன மாதிரி கரண் வந்திட்டுது...
பிறகு வெளில வந்து... ஃப்ரென்ட்ஸ் மச்ஃபுள்ளா பார்த்தம்டா என்று சொன்னப்பதான் தெரிஞ்சுது... கறன்ட் நின்றது... அந்த ஹோலில மட்டும்தான் என்று....
இதே போன்றுதான்... கொழும்பு, திருகோனமலை பிரதேசங்களிலும் நடந்திச்சு என்று பிறகுதான் தெரிந்தது...
புளொக்கர்ஸ் கூட இதை எழுதி இருக்காங்க...

பதிவு பெருசாகுது... நிறுத்த முதல் இன்னொன்று...

இப்படி பூசையை முன்னின்று நடத்தும் இந்த புண்ணிய ஜீவன்களில ஒன்று... கொழும்பில்... நகை அடகுவைப்பதற்கு பொறுப்பாக நின்று... முழுவதையும் சுறுட்டிக்கொண்டு இந்தியாவுக்கு ஓடிட்டுது...

அம்மா பகவானிட மகன் செய்யிற கூத்தை பற்றி நான் சொல்லிதெரியதேவையில்லை...
------------------------------------------------------------------------------------------
இங்கு நான் எழுதி இருக்கிற எல்லாமே நேரடியாக பார்த்தது...
தேவை என்றால்... ஆக்கள்ட பெயர்... அட்றஸ் எல்லாம் இருக்கு...
------------------------------------------------------------------------------------------
இதே மாதிரித்தான்... தியான வகுப்பு என்கிற பேர்ல... பிரம குமாரிகள் என்ற அமைப்பும் இயங்குது... அதுக்கும் போனமில்ல நாங்க... அங்க என்ன நடந்துது என்று பிறகு சொல்லுறேன்...

அடுத்தது... புளொக்கர்ஸை கேவலமா சொன்ன... சாரு நிவெதிகாட மறுபக்கம்... வெளி நாடுகளில் அவர் என்ன செய்தார் என்பது தொடர்பான தகவல்களும் இருக்கிறது... வரும் பதிவுகளில் எழுதுகிறேன்...

கூடவே... ஏலியஸ்... , லெமூரியா... பதிவுகளுடன் அடிக்கடி வெருவேன் இனி...
------------------------------------------------------------------------------------------

10 comments:

  1. என்னாது இவனுங்க இலங்கையையும் விடலையா?

    அங்க எப்ப வந்தானுங்க?

    நடந்த விசயங்கள் நல்ல காமெடி. இப்படியெல்லாம் இந்தியா போல அங்கயும் ஏமாறுகிறார்களா?

    செருப்புக்கு பால் எல்லாம் ரொம்ப ஓவர்...

    ReplyDelete
  2. நீங்கள் அம்மா பகவனை பட்டி குறை சொல்லும் முன்பு, ஏன் அங்கு சென்றீர்கள் 2 வது இப்ப chiristian ல இதைவிட கேவலமான கட்டுக்கதை விட்ட மட்டும் ஏன் கண்டுக்க மடீங்க நித்தியானந்த-க்கு அதரவு இல்ல அனா அவன் 180 லிட்டர் மனன்னை வச்சிருந்தான் அது ஒரு கேஸ் அன்ன நம்ம சென்ட்ரல் மின்ஸ்டர் 65௦௦௦ கோடி அடித்த அது பத்தி வாய் திறக்க மடீங்க இல்ல..
    சன் டிவி இந்துக்களை எப்படி கேவல படுத்துகிறான் ஏன் chiristian பத்தி போட மடீங்கிரன் . யோசிங்க ..இந்த லிங்க் கிளிக் பண்ணி பாருங்க அப்ப புரியும்

    http://bibleunmaikal.blogspot.com/

    ReplyDelete
  3. கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.
    நோய் நொடியினால் பாதிக்கபட்டிருப்பவர்கள், சிறையில் வாடுபவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.

    ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது..


    ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்


    ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.

    மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை.

    தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன.

    பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.

    பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது.

    பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.

    மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628
    ....................................


    எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே.

    ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.
    நோய் நொடியினால் பாதிக்கபட்டிருப்பவர்கள், சிறையில் வாடுபவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.

    ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது..


    ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்


    ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.

    மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை.

    தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன.

    பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.

    பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது.

    பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.

    மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628
    ....................................


    எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே.

    ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. நன்றி...ஆகில் Aaqil αακιλ... யாசவி......
    ஹீ...ஹீ... இங்க கனக்க இலிச்சவாயர்கள் இருக்காங்கள்... சிம்பிளா ஏமாத்தலாம் என்கிற விசையம் அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சு... :P
    -------------------------------------------
    நன்றி...Amirtha...
    நீங்கள் சொன்னதும் சரிதான்...
    நாங்கள் என்ன என்று பாக்கத்தான் போனோம்... கடவுள் நம்பிக்கை இருக்குத்தானே எனக்கும்... அவங்கட அவதாரம் என்று சொல்லும் போது பார்க்கத்தானே செய்வோம்...
    நான் இந்துக்களைத்தானே எழுத முடியும்... நான் இந்துதானே... மற்ற மதம் எழுதினால்... நான் இந்துதுவா ஆகிடுவேன்...
    மிச்சத்துக்கு... அடுத்த கிழமை கட்டாயம் பதில் தாறேன்... :)

    ReplyDelete
  6. நீங்க சொல்வது சரிதான் ஆன, திரு பதங்கள செருப்புன்னு சொல்ல கொடாது.சும்மா ஒரு குருவாக பார்க்கலாம் அவங்க யாரையும் கம்பால் பண்ணல பெத்த அம்மா அப்பா வை பார்த்துக்கோ எல்லோர்கிட்டயும் நல்ல அன்பா இர்ருகனும் ,அதை ஒரு குரு வார்த்தை யாக எடுத்துக்கலாமே இப்ப நமக்கு படம் சொல்லிகொடிக்கிற வாத்தியார் சரியில்ல அப்படின்னா அது நம்மக்கு தேவை இல்லை அவர் என்ன சொல்லிகுகிற படம் பத்தி தான் நம்ம கவனம் இர்ருக்கணும் வரியல் எவுளவு அள்ளுக்க இர்ருந்தலும் அது பெருக்கிற இடம் சுத்தமா இறுகனும் ,அது மாதிரி எண்ணிபர்க்க வேண்டும் நாம மத்தவங்களை குறை சொன்னா அப்பா நம்ம கிட்ட ஏதோ குறை இற்ருகிறது கெட்டவன் துரியோதனன் கண்ணுக்கு எல்லோரும் கேட்டவனங்கள தெறிச்சது போல் அல்லாமல் தர்மரை போல் அவன் கண்ணுக்கு எல்லோரும் நல்லவங்காள தெரிஞ்ச மாதிரி எனி எல்லோரயும் நல்லவங்களா பார்ப்போமே .....

    ReplyDelete
  7. இந்த மாதிரி பதிவுகள் தேவை. நீங்கள் நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  8. நீங்கள் நம்பும் கடவுளைவிட அம்மா பகவான் குறந்தவரில்லை.எல்லாமே பிராடு.ஒரு பிராடு கடவுளை நம்பும் நீங்கள் இதுபோன்று எழுதலாமா?
    கடவுள் என்பதே கற்பனை.

    ReplyDelete
  9. கோணசுந்தரம்3 August 2011 at 13:48

    நம்பியவர்களுக்கு கல்கூட கடவுள்தான். நம்பாதவர்களுக்கு கடவுல்கூட கல்தான்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected