Total Pageviews

Tuesday, 24 May 2011

ஆண்களே!!! இந்த பெண்ணால் முடிந்தது உங்களால் முடியுமா? - Future News

இன்னும் சிறிது காலத்தில்... இணையத்தளங்களில் நாம் காணக்கூடிய செய்திகளின் தலைப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...
( படங்களுள், தடித்த தலைப்புக்களுக்கும்..  பதிவுக்கும் சம்பந்தமில்லை. )

-------------------------------------------------------------------------------------------
ஆண்களே... இந்த பெண்ணால் முடிந்தது  உங்களால் முடியுமா? (படங்கள் இணைப்பு)

சமீப காலமாக... பல தமிழ் இணையத்தளங்களை பார்க்கும் போது கடுப்புத்தான் எகிறுகிறது.
சுய சிந்தனை இல்லாமல்.. குறிப்பிட்ட ஒரு இணையத்தளத்தில் இருந்து அப்படியே செய்திகளை சுட்டுப்போடுவதை வழ‌க்கமாக கொண்டிருக்கிறார்கள். அதிலும்.. யார் முதலில் சுட்டுப்போடுவது என்று போட்டி வேறு...


வாசிப்பவர்களுக்கு... உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டிய இந்த இணையத்தளங்கள்... தமக்கு "ஹிட்ஸ்" அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் கருத்திற்கொண்டு... பழைய விளம்பரங்களைக்கூட நியூஸாக போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கோழி முட்டையில் இருந்து குஞ்சுவரும் அதிசயம்... (வீடியோ இணைப்பு)

இதில்... இன்னும் ஒரு படி மேலாக போய்...
கேவல‌மான தலைப்புக்களை வைத்து ஹிட்ஸ்களை பெறுகிறார்கள்...
அதிலும்... மருத்துவ‌ரீதியான கருத்துக்களை போடும் போது... அதன் உண்மைத்தன்மை பற்றிக்கருதாது...  ஏதோ ஒருவர் ஆதாரமில்லாமல் எழுதியதை கொப்பி பண்ணி போடுகிறார்கள். இதனால் ஏற்படும் சமூகத்தாக்கங்களை கருதுவதில்லை


பெரும் திருட்டு அம்பலம்...( கமராவில் சிக்கினார் )


இவர்களின் ஆக்கங்களை பார்த்தால்... ஏதோ தமிழ் இனத்திற்கே சேவை செய்து மாற்றத்தை கொண்டுவரப்போகிற போல இருக்கும். ஆனால், செய்யும் காரியங்கள் எல்லேமே... கீழ்த்தரமானவைதான்...
மக்களிடையே புதிய சமுதாய மாற்றக்கருத்துக்களை கொண்டு செல்வதில்லை... அறிவியல் என்ற பேச்சுக்கே பல தளங்களில் இடமில்லை.

புலி போன்ற ஆனால் உருவில் சிறிய உயிரினம்... (நகரப்பகுதியில் இனங்காண்பு)

தமிழுக்கு சேவை செய்யப்போவதாக சொல்பவர்கள்...
அனைத்து தரவுகளையும் தமிழில் பெற்றுக்கொள்வதற்கான படிமுறைகளை மேற்கொள்ளவேண்டும்... அதை செய்ய மாட்டார்கள். காரணம், அறிவியல்.. சமூகவியல் கருத்துக்களுக்கு ஹிட்ஸ் குறைவாக வருவதே... எனினும் வரும் அந்த கொஞ்சப்பேர்தான் மேம்பட்ட தமிழர்கள் என கருதக்கூடியவர்கள் என்பதை உணருவதில்லை.

முத்தமிடும் போது உதடு திறக்குமா மூடுமா? (ஆய்வுத்தகவல் )

புளொக்ஸிலிருந்து அப்படியே கொப்பி பேஸ்ட் செய்கிறார்கள்...
கஸ்டப்பட்டு தேடி எழுதுபவர்களின் லிங் கூட கொடுப்பதில்லை... அப்படி கொடுத்தால்... நேரடியாக சம்பந்தப்பட்ட தகவல்களை அந்த அந்த புளொக்களிலேயே சென்று பார்த்து விடுவார்கள் என்ற பயம் தான்.


மொத்ததில்... தமிழில் இயங்கும் பல இணையத்தளங்கள்...  உயர்வான ஹிட்ஸ்களைக்காட்டி, விளம்பரங்களை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே இயங்குகின்றன... சேவை, உண்மைத்தன்மை, சமுதாய முன்னேற்றம் என்ற எந்த குறிக்கோள்களுமில்லை.

-------------------------------------------------------------------------------------------

Sunday, 22 May 2011

ரோயல் திருமணத்திற்கு வருகை தந்த ஏலியன்ஸ் யார்?

------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு முன்னரே எழுதி இருக்க வேண்டும்.. லேட்தான்... என்றாலும் ஒரு தெளிவிற்காக எழுதுகிறேன்.
பிரித்தானிய றோயல் திருமணத்தின் போது.... வான் பரப்பில் ஏலியன்ஸ் வருகைதந்து நோட்டமிட்டதாக வீடியோத்தகவல்கள் வந்திருந்தன.
அந்த தகவலின் உண்மைத்தன்மை.. மற்றும் சாத்தியக்கூறுகளைப்பார்ப்போம்...
------------------------------------------------------------------------------------------
குறிப்பிட்ட வீடியோப்பதிவை நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் தற்செயலாக  படம் பிடித்ததாக கூறுகிறார்கள்.

வீடியோ பதிவில்.. 3 வட்ட-தட்டையான வெண்ணிற உருவங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் நிற்பது போன்று காணப்படுகிறது. இந்த வீடியோ உண்மையாக இருப்பதற்கு சந்தர்ப்பம் குறைவே... "After effect" போன்ற மென் பொருட்கள் மூலம்.. இலகுவாக இவ்வகை வீடியோக்களை நாமே உருவாக்கிவிட முடியும்.

மேலும்... வானில் கால நிலை அவதானிப்புக்களுக்காக விடப்பட்ட பலூன்கள் அல்லது குறிப்பிட்ட கமெராவின் முன் கண்ணாடியில் இருந்திருக்க கூடிய வெண்ணிற துளிகளின் ( ஐஸ்கிறீம் துளி) அசைவாகவும் இருக்கலம்.

எனினும்... இது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. எல்லாமே... கிரபிக்ஷ் என்று ஒதுக்கிவிடவும் முடியாது.
காரணம், இதே போன்ற அவதானிப்புக்கள் லிபிய‌ யுத்தம், ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்பவற்றை அண்டிய பகுதிகளிலும் பதிவாகியுள்ளது.


உண்மையாக இருப்பின்...

வேற்றுகிரகத்தவர்கள்தான் ஏலியன்ஸ் என வைத்துக்கொண்டால்...
அவர்களுக்கு எப்படித்தெரிந்திருக்கும், அந்த நாளில் சுனாமி வரப்போகிறது... திருமணம் குறிப்பிட்ட நாளில் நடக்கின்றது என்பதெல்லாம்...
எம்மை தொடர்ந்து அவதானித்துக்கொண்டி இருந்தால்... பூகோல மாற்றத்தைக்கொண்டு சுனாமியை எதிர்வுகூறலாம்... எனினும்... திருமணம் நடக்கும் நாளில் வந்தது எப்படி? என்ற கேள்விக்கு தெளிவான விடை இதுவரை இல்லை.

எதிர்கால நாம்தான் ஏலியன்ஸ் என வைத்துக்கொண்டால்... இது சாத்தியமானதுதான்.
இறந்த காலத்தில் நடந்தவற்றை காண்பதற்கு நாம் ஆர்வமாக இருப்பது போல்...  எதிர்காலத்தவரும்.. இறந்த காலத்தை ( நமது நிகழ்காலம்) வந்து பார்வையிட்டிருக்கலாம்.
வில்லியம்ஸின் திருமணம், லிபிய யுத்தம், யப்பானிய சுனாமி என்பன முக்கிய சம்பவக்களாக வரலாற்றில் பதியப்படும். எனவே, அந்த பதிவுகளை நேரடியாக பார்வை இடுவதற்காக வந்திருக்கக்கூடும். இதே போன்ற அவதானிப்புக்கள் பல இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் நிகழந்திருக்கின்றன.
( ஏன் அவர்கள் நம்மை எச்சரிப்பதில்லை... என்ற கேள்விக்கு முன்னைய பதிவுகளில் விடை இருக்கின்றது. )

------------------------------------------------------------------------------------------

இது இருக்கட்டும் போன பதிவில் கேட்ட படி...
அவர்கள் ஏன் நேரடியாக வராமல்..."ரோப்போக்களை" அனுப்ப சந்தர்பம் உள்ளது என்பதை பார்ப்போம்...

பூமியின் தட்ப வெப்ப நிலைக்கும்... ஒட்சிசன் முதலான வாயுக்களின் விகிதாசாரங்களுக்கும் அமைய வாழ வேண்டுமென்றால்... அது பூமியில் தோன்றி இயைபாக்கம் அடைந்த உயிரினமாகவே இருக்க வேண்டும். இல்லையேல்...  பூமியை ஒத்த தட்பவெப்பமுள்ள கிரகத்தில் உருவாகிய உயிரினமாக இருக்கவேண்டும்.

எனவே.. வேற்றுக்கிரகத்தில் இருந்து வருபவர்களாக இருந்தால்... என்னதான் வருகைதரும் விண் ஓடங்களினுள் தமது கிரகத்தின் சூழ்னிலையை ஏற்படுத்தினாலும்.. மனிதர்களை ஆராய்வதற்கு வெளியே நடமாட வேண்டிய தேவை இருக்கிறது. மேலும், மனிதர்களை ஓடங்களினுள் கொண்டு செல்லும் போது... மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
எனவே... பூமியில் வாழும் உரினங்களை ஆராய்வதற்காக... ஏற்றவகையில் ரோபோக்களை தயாரித்து விண்ணொடங்களில் அனுப்பி ஆராயக்கூடும்.

இந்த விண்ணோடங்களினுள் கடத்தப்பட்டு... பரிசோதிக்கப்பட்ட ஆண்-பெண்களுக்கு என்ன நடந்தது? என்ன ஆய்வுகளை செய்தார்கள்?... என்பதை அடுத்த பதிவில் சம்பவங்கள் மூலம் பார்ப்போம். :)

------------------------------------------------------------------------------------------

Saturday, 21 May 2011

ஒரு காதல்... ஒரு காமெடி... ஒரு உணர்வு... :)

நான் சமீபத்தில் ரசித்த கதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... + வீடியோவும்..
நீங்களும் ரசிப்பீர்கள் நிச்சயம்... :)

------------------------------------------------------------------------------------------
சுமாரான ஒரு பெண்... கண் தெரியாது, உலகத்தில் எதுவுமே பிடிக்காது... தன்னைத்தானே வெறுத்தால்...
ஆனால், காதலனை மட்டும் நேசித்தால்... அவன் எப்போதும் அவளோடே இருப்பான்.  அவளது எல்லாத்தேவையையும் நிறைவேற்றுவான்.
ஒரு நாள் அவள் சொன்னால்... என்னால் மட்டும் பார்க்க முடியுமாக இருந்தால்... உண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று.

சில மாதங்களின் பின்னர்...
அவளுக்கு கண் ஒப்பிறேஷன் செய்வதற்க்குத்தேவையான இரண்டு கண்கள் கிடைத்தன.
அவளால் உலகத்தைப்பார்க்க முடிந்தது... தனது காதலனையும் பார்த்தால்...
காதலன் கேட்டான்.. " இப்போது உண்ணால் உலகத்தை பார்க்க முடிகிறது.. என்னை திருமணம் செய்து கொள்வாயா ?" என்று...
அவனின் தடுமாற்றத்தின் போதுதான்.. அவள் உணர்ந்து கொண்டாள்... அவனுக்கும் கண் பார்வை இல்லை...
பார்வை இல்லாத உண்ணைத் திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டாள்.

அவன் ஒன்றும் பேசாமல் சென்றான்... போக முதல்.. ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி நீட்டினான்... அதில்...
"என் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்...  உண் நினைவுகளுடன் உண்ணை நான் எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்பேன்."

------------------------------------------------------------------------------------------
ஒரு அஃப்ரிக்கன் தனது 10 ஆவது குழந்தையின் பிறப்பிற்காக மனைவியுடன் ஹொஸ்பிட்டல் சென்றிருந்தார்.
10 குழந்தை பிறந்தது... ஆனால், வெள்ளையாக பிறந்திருந்தது... இதனால, செம கடுப்பான அஃப்ரிக்கன்.. அந்த ஊரைச்சேர்ந்த பாதிரியாரிடம் சென்றார்...

"எனக்கு ஏற்கனவே பிறந்த 9 குழந்தைகளும் கறுப்பாக என்னைப்போல் இருக்கிறார்கள்... இந்த குழந்தை மட்டும் வெள்ளையாக இருக்கிறது... இந்த சுற்று வட்டார கிராமங்களிலேயே இருக்கும் ஒரே ஒரு வெள்ளை இனத்தவர் நீங்கள் தான்... பதில் சொல்லனும் இபோ..." என்றார்...

பாதிரியார்...
"பக்கத்தில் நின்ற ஆட்டு மந்தையில்.. இருக்கும் அனைத்து ஆடுகளும் வெள்ளையாக இருக்கும் போது ஒன்று மட்டும் கறுப்பாக இருப்பதை சுட்டிக்காட்டி... இது தான் இறைவனின் படைப்பு...  இதே போன்றுதான் உங்கள் பிள்ளையும்... இதை சந்தேகக்கணோடு பார்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்... " என்றார்.

உடனே.. பாதிரியாரை அழைத்துக்கொண்டு ஒதுக்கு புறமாக சென்ற அஃப்ரிக்கன் சொன்னார்...
"வெள்ளை குழந்தை விசயத்தை நான் மறந்து விடுகிறேன்... கறுப்பு ஆட்டுக்குட்டி விசயம் வெளியே தெரிய வேண்டாம்." 
------------------------------------------------------------------------------------------


LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected