Total Pageviews

Saturday, 21 May 2011

ஒரு காதல்... ஒரு காமெடி... ஒரு உணர்வு... :)

நான் சமீபத்தில் ரசித்த கதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... + வீடியோவும்..
நீங்களும் ரசிப்பீர்கள் நிச்சயம்... :)

------------------------------------------------------------------------------------------
சுமாரான ஒரு பெண்... கண் தெரியாது, உலகத்தில் எதுவுமே பிடிக்காது... தன்னைத்தானே வெறுத்தால்...
ஆனால், காதலனை மட்டும் நேசித்தால்... அவன் எப்போதும் அவளோடே இருப்பான்.  அவளது எல்லாத்தேவையையும் நிறைவேற்றுவான்.
ஒரு நாள் அவள் சொன்னால்... என்னால் மட்டும் பார்க்க முடியுமாக இருந்தால்... உண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று.

சில மாதங்களின் பின்னர்...
அவளுக்கு கண் ஒப்பிறேஷன் செய்வதற்க்குத்தேவையான இரண்டு கண்கள் கிடைத்தன.
அவளால் உலகத்தைப்பார்க்க முடிந்தது... தனது காதலனையும் பார்த்தால்...
காதலன் கேட்டான்.. " இப்போது உண்ணால் உலகத்தை பார்க்க முடிகிறது.. என்னை திருமணம் செய்து கொள்வாயா ?" என்று...
அவனின் தடுமாற்றத்தின் போதுதான்.. அவள் உணர்ந்து கொண்டாள்... அவனுக்கும் கண் பார்வை இல்லை...
பார்வை இல்லாத உண்ணைத் திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டாள்.

அவன் ஒன்றும் பேசாமல் சென்றான்... போக முதல்.. ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி நீட்டினான்... அதில்...
"என் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்...  உண் நினைவுகளுடன் உண்ணை நான் எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்பேன்."

------------------------------------------------------------------------------------------
ஒரு அஃப்ரிக்கன் தனது 10 ஆவது குழந்தையின் பிறப்பிற்காக மனைவியுடன் ஹொஸ்பிட்டல் சென்றிருந்தார்.
10 குழந்தை பிறந்தது... ஆனால், வெள்ளையாக பிறந்திருந்தது... இதனால, செம கடுப்பான அஃப்ரிக்கன்.. அந்த ஊரைச்சேர்ந்த பாதிரியாரிடம் சென்றார்...

"எனக்கு ஏற்கனவே பிறந்த 9 குழந்தைகளும் கறுப்பாக என்னைப்போல் இருக்கிறார்கள்... இந்த குழந்தை மட்டும் வெள்ளையாக இருக்கிறது... இந்த சுற்று வட்டார கிராமங்களிலேயே இருக்கும் ஒரே ஒரு வெள்ளை இனத்தவர் நீங்கள் தான்... பதில் சொல்லனும் இபோ..." என்றார்...

பாதிரியார்...
"பக்கத்தில் நின்ற ஆட்டு மந்தையில்.. இருக்கும் அனைத்து ஆடுகளும் வெள்ளையாக இருக்கும் போது ஒன்று மட்டும் கறுப்பாக இருப்பதை சுட்டிக்காட்டி... இது தான் இறைவனின் படைப்பு...  இதே போன்றுதான் உங்கள் பிள்ளையும்... இதை சந்தேகக்கணோடு பார்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்... " என்றார்.

உடனே.. பாதிரியாரை அழைத்துக்கொண்டு ஒதுக்கு புறமாக சென்ற அஃப்ரிக்கன் சொன்னார்...
"வெள்ளை குழந்தை விசயத்தை நான் மறந்து விடுகிறேன்... கறுப்பு ஆட்டுக்குட்டி விசயம் வெளியே தெரிய வேண்டாம்." 
------------------------------------------------------------------------------------------


Tuesday, 10 May 2011

இல்லுமினேடி - உலகின் புதிய கட்டளைகள் 01 ( அறிமுகம் )

------------------------------------------------------------------------------------------
எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்... அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்... பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம் என...
எம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு இந்த பதிவை எழுதுகிறேன்...
முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப்பற்றி பார்ப்போம்...

------------------------------------------------------------------------------------------

இலுமினேடி (Illuminati)...
பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
"உலகின் புதிய கட்டளை (New world order)" எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல... மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும்.  20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் "கிங் மேக்கர்"களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்... லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்... ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன... பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்...)

யார் இவர்கள்...
நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன. 13 குடும்பங்கள் என்பது... ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது... இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள். இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப்பேணுவதில்லை... காரணம், தமது Illuminati தன்மைக்குரிய மரபணுக்களைப்பேணுவதற்காகத்தான்.
மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.

இவர்களின் நோக்கம்தான் என்ன...

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்...
"ஒரு உலகம்.. ஒரு அரசு" என்பது தான் இவர்களின் நீண்டகாலத்திட்டம். இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்... சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரானவர்கள்... அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்...
இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்திவருகின்றனர்... அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
உதரணமாக...
சில வகை "இசை" வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்.... அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.
மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.
(என்ன என்ன முறைகளில் இது நடை முறைப்படுத்தப்படுகிறது என்பது வரும் பதிவுகளில் தெளிவாக பார்க்கலாம்... )

முடிவில்... இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு. அதாவது... அடிமைப்படுத்த வேண்டும் என்பது.. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்... மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத்தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு... நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்களின் மிகப்பெரிய தலையிடி...
ஏஸியாப்பகுதியை சேர்ந்தவர்களும்.... இப்படியான பதிவுகளை வாசிப்பவர்களும் தான்... இவர்களின் மிகப்பெரிய தலையிடியாக இருக்கிறார்கள். அது ஏன் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

------------------------------------------------------------------------------------------

இந்த தலைப்பை எடுத்தால்... பல்வேறு விதமாக எழுத வேண்டி இருக்கும்...
ஆரம்பத்தில் மிக சிம்பிளாக... எமது சினிமாவில் இருந்து ஆரம்பிப்போம்... நாம் எப்படி "கேனயர்கள்" ஆக்கப்படுகிறோம் என்பது விளங்கும். அடுத்த பகுதியில் அதைப்பார்ப்போம்.

நிச்சயம் இந்தப்பதிவிற்கு நான் மட்டும் போதாது... illuminati தொடர்பான எதிர் சுய கருத்துக்கள் உடையவர்கள் தங்கள் கருத்துக்களை கட்டாயம் சொல்ல வேண்டும்... பதிவராக இருந்தால்... தொடர்பதிவு எழுத வேண்டும்... :)

------------------------------------------------------------------------------------------

இந்த பதிவு பலரிடம் சென்றடைய வேண்டும் என கருதினால் வோட் போடவும்... :)
அல்லது ஏதோ, ஒரு களகத்துக்காக மூளைச்சலவை செய்வதற்காக எழுதப்படுகிறது என கருதினால் கொமென்டில் கூறவும்...

------------------------------------------------------------------------------------------

Monday, 9 May 2011

"கோ" - பார்ட் 2 & 200* (நொட் அவுட்) :D

இருந்து ஜோசித்த போது தோன்றியது... ஏன் திரைப்படங்களின் அடுத்த பகுதிகளை நாங்கள் சிந்தித்து எழுதக்கூடாதென்று....  அப்போது எழுதியது தான் இது...
படித்துப்பிடிதால் வோட் போடவும்...
படம் பார்காதவர்களுக்கு புரியாது.... இந்த லிங்கில் டொரன்ட்ஸ் மூலம் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்... :)
------------------------------------------------------------------------------------------
முதல்வரின் மரணத்திற்கு 1 வருடங்களுக்கு பின்னர்...

கட்ச்சியை சேர்ந்த ஒரு நபரால் முதல்வரின் மரணம் மீது சந்தேகம் சுமத்தப்பட்டு கேஸ் ஃபைல் பண்ணப்படுகிறது.
இதற்காக விசேட அதிகாரியாக மிஸ்டர் X  நியமிக்கப்படுகிறார்.
முதல்வர் கொள்ளப்பட்ட பதிவுகளை உண்ணிப்பாக அவதானித்த X  இக்கு... இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
ஏன் முதல்வர் நேரடியாக திடீரென களத்திற்கு விஜயம் செய்தார்... குண்டு வெடிப்பிற்கு முதல் நடந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றது.

அடுத்த நாள் விடிந்ததும்...
முதல் வேலையாக முதல்வர் அலுவலகத்திற்கு செல்கிறார்... அங்கு சென்று முதல்வர் இறுதியாக பயண்படுத்திய தொலை பேசி நம்பரை பெற்றுக்கொண்டதுடன்... அவரை கடைசியாக சந்தித்த நபர்களின் பதிவுகளையும் பெற்றுக்கொள்கிறார்.
தகவலை பெற்றுக்கொண்டு வெளியேற முற்படுகையில்... இறுதியாக பதிவுகளை மேற்கொண்ட நபர் குறுக்கிட்டு...
" திடீரென ஒருவர் முதல்வரின் நெருங்கிய நண்பர் என சொல்லி... அத்து மீறி உள் நுழைந்து முதல்வரை சந்தித்தார்... பிறகு, முதல்வர் வெளியே சென்றுவிட்டார்... " என்று ஒரு துப்பை கொடுத்தார்.
உடனே அன்றைய நாளுக்கு உரிய வீடியோப்பதிவை பெற்றுக்கொண்டு தனது அலுவலகத்திற்கு சென்றார்.

வீடியோப்பதிவில் பார்த்து அஸ்வின் (ஜீவா) தொடர்பான தகவல்களைத்திரட்டிக்கொண்டு... அஸ்வின் மீது சந்தேக கண்ணோடு தனது விசாரனைகளை ஆரம்பித்தார்.

பத்திரிகையில் "சிறகுகள்" அமைப்பிற்காக அஸ்வின் தம்பதிகளால் எழுதப்பட்ட கட்டுரைகளை எல்லாம் அலசிஆராய்ந்ததில்... அஸ்வினுக்கும் முதல்வருக்கும் ஏதும் தொடர்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
மேலதிகமாக தேடிய தகவல்களின் மூலம்... இருவரும் ஒரே கல்லூரியில் கல்வி கற்றார்கள் என்பது மட்டும் தெளிவாகியது.   அஸ்வின் பிரபல பத்திரிகை படப்பிடிப்பாளர் என்பதால்... நேரடியாக அவரின் மீது நடவடிக்கை எடுத்து விசாரனை செய்ய விரும்பவில்லை மிஸ்டர் X.

நக்ஷ்லைட்டுக்கள் இருக்கும் இடம் முதல்வருக்கு எப்படி தெரிந்தது என்ற சந்தேகமும் ஏற்கனவே மனதில் இருந்தது. காரணம், முதல்வர் சொன்ன குறிப்பிட்ட இடத்திலேயே அந்த சுற்றிவளைப்பு நடந்திருந்தது.
சுற்றி வளைப்பின் போது என்ன நடந்தது என்று அறிந்துகொள்வதற்காக நடைபெற்ற சண்டையின் ஒஃபிஸியல் வீடியோவை பார்வையிட்டார்.
அதில்... அஸிவின் ஒரு டொக்டரை குறிப்பிட்ட நக்ஷலைட்டுக்கள் இருந்த இடத்திற்கு அழைத்து செல்வதை அவதானித்து உசாராகினவராக... அந்த டொக்டரின் படத்தை தனியே எடுத்துக்கொண்டார்.

டொக்டரின் படத்தைக்கொண்டு... சுற்றி வளைப்பு நடந்த ஏரியாவிற்கு சென்று சந்தித்தார்.
விசாரித்ததில்...  அஸ்வின் குறிப்பிட்ட அடிபட்ட ஒரு நக்ஷலைட்டுக்கு மருத்துவம் பார்க்க கூறியதுடன்... மூளையை ஜோசித்து இயங்க விடாமல் இருப்பதற்காக மருந்தையும் ஏற்றச்சொன்னதாக கூறினார்.
இந்த சாட்ச்சியத்தை பதிவு செய்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார் மிஸ்டர் X.

அடுத்த கட்டமாக... பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாடுகளை வேவு பார்க்கத்தொடங்கினார்.
முன்னைய பதிவுகளை ஆராய்ந்ததில் சம்பவம் நடந்த அன்று... அஸ்வினின் லவ்வர் நீண்ட நேரமாக ஒஃபிஸில் கடமையில் இருந்துள்ளது உறுதியாகியது. அவர் அச்சமையம் பாவித்த தொலைபேசி அட்டையில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொள்ளப்ப‌ட்ட அழைப்புக்கள் சம்பந்தமான தகவல்கள் திரட்டப்பட்டன.
முதல்வர் இறப்பதற்கு முன்னராக... அஸ்வினிடம் இருந்து 3G அழைப்பு வந்துள்ளது. பின்னர் எடிட்டருக்கு கோல் செய்யப்பட்டுள்ளது...  சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் பத்திரைகை நிறுவந்த்திறு ஆஜராகி உள்ளார்.
இதற்கு பின்னரே... முதல்வர் கொள்ளப்பட்டுள்ளார்...

இந்த தகவல்களை கட்சிதமாக பெற்றுக்கொண்டு அஸ்வினிடம்  விசாரணைக்காக சென்றார்.
தன்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து தகவல்களையும் காட்டி.... கைத்து செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன... என்ன நடந்தது என்ற உண்மையை  சொல்லுமாறு சற்று காட்ட மாக கூறிக்கொண்டிருக்க‌..
3G கோலில் பதியப்பட்ட வீடியோக்காட்சியை அஸ்வினின் மனைவி கொண்டுவந்து காட்டினார்....
வீடியோவை மிஸ்டர் X  பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே... ஏன் தாங்கள் இதை மறைத்தோம் என்ற உண்மையை கூறினார்கள்.
காட்ச்சியைப்பார்த்த மிஸ்டர் X...
உங்கள் தொடர்பான தகவல்கள் மேலிடத்திற்கு ஏற்கனவே அனுப்பபட்டு விட்டது...
இந்தக்காட்சியை வெளிவிடுவது தான் நல்லது என்றார். அவர்களும் நிலமையை உணர்ந்து சம்மதிக்க அடுத்த நாள் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் இந்த வாக்கு மூல நியூஸ் முதலிடம் பிடித்தது.

எதிர்கட்சிகள் ஒன்றினைந்து ஆட்ச்சியை கவிழ்த்தார்கள்...

மீண்டும் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது...
சிறகுகள் அமைப்பும் கழத்தில் தைரியமாக போட்டி இட்டது.

தேர்தல் நாள் அன்று... இறுதி அறிவிப்பு...

"மீண்டும்...  பெரும்பாண்மையுடன் சிறகுகள் கட்சி ஆட்சியைப்பிடித்துள்ளது.... போன முறையை விட அதிக படியான விழுக்காடுகளுடன் வெற்றி பெற்றது... இவை அனைத்தும் அந்த கட்சி உறுப்பினர்கள் கடந்த ஒரு வடுடத்தில் மக்களுக்கு ஆற்றிய சேவைக்கு கிடைத்த வெற்றியாகும்..."
------------------------------------------------------------------------------------------
மிஸ்டர் x  இக்கு பொருத்தமானவர்... மேலும் அவருக்கு உரிய லவ் ஸீன்களை... நீங்களே போட்டுக்கொள்ளுங்க.. 
( நான் ஆர்யாவை செட் பண்ணி இருக்கேன்... :P )
------------------------------------------------------------------------------------------
இது எனது 200 ஆவது பதிவு... என்னைப்பற்றி இதுவரை ஒன்றும் கூறவில்லை.. கூறவும் ஒன்றுமில்லை... வித்தியாசமாக இப்படி படங்களின் பகுதி 2 ஐ இனி மாதம் ஒரு முறையாவது எழுதலாம் என்று ஒரு ஐடியா...
"எந்திரன் 2" சுப்பரா எழுதிற ஐடியா இருக்கு.. :)
------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected