------------------------------------------------------------------------------------------
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை பற்றி பல இலங்கை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும்...
1860 ஆம் ஆண்டு மார்ச் 7ம் திகதி... வசாவிலானில் பிறந்தார்...
குறிப்பிட்ட ஈழத்து புலவர்களில் இவரும் ஒருவர்... இவரால் எழுதப்பட்ட "யாழ்ப்பாண வைபவ கெளமுதி" என்ற நூல்... யாழ்ப்பாணத்து உண்மை வரலாற்றை கூறுவதாக உள்ளது. மேலும், பல இலக்கிய படைப்புக்களையும்... உரை நடையிலான கவிகளையும் இயற்றியுள்ளார். இவரின் விகடமான கவிதைகள் இன்றளவிலும் பாவணையில் உள்ளது.
இவரைப்பற்றி பலர் ஏற்கனவே பல பதிவுகளை எழுதி இருப்பதால்.... இவர் தமிழின் நுட்பங்களை பயண்படுத்தி செய்த விகடகவித்தனங்களை மட்டும் எழுதுகின்றேன்...
இவரைப்பற்றி அறியவிரும்புபவர்கள் இந்த லிங்களில் பார்கலாம்... :)
விக்கிபீடியா
http://kanaga_sritharan.tripod.com/veluppillai.htm
http://www.thejaffna.com
PDF Book
------------------------------------------------------------------------------------------
சம்பவம் 01 :
ஒரு முறை ரெயில் கடவை அருகே சென்றுகொண்டுருந்த போது.... அங்கே இருந்த பலகையில், "கோச்சி வரும் கவணம்" என எழுதப்பட்டிருந்ததாம். ( சிங்களத்தில் இரயிலை கோச்சி என்று சொல்வார்கள். )
உடனே, அதன் கீழ் "கொப்பரும் வருவார் கவணம்" என்று எழுதிவிட்டு சென்று விட்டார்.
பின்னர், ரெயில்வே அதிகாரிகள் அதைப்பார்த்துவிட்டு.. அவர் மீது வழக்குத்தொடுத்துள்ளார்கள்...
நீதிபதி விசாரித்த போது...
கோச்சி என்றால் தமிழில் "அம்மா" என்றும் அர்த்தமுள்ளது... அதனால்த்தான் கொப்பரும் வருவார் என்று எழுதினேன்... பிழை எனதல்ல... தமிழை பயண்படுத்தாமல் தவறாக எழுதியதுதான் பிழை என சுட்டிகாட்டினார்.
( இலங்கை பேச்சு வழக்கில் கோத்தை /கொம்மா= அம்மா, கொப்பர் = அப்பா )
சம்பவம் 02 :
ஒரு முறை கொடுத்த கடனை வசூலிப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அங்கு கடனை வேண்ட செட்டியாரின் வீட்டிற்கு சென்ற போது... அவர் சாப்பிட்டுகொண்டிருப்பதாக சொல்லி தாமதப்படுத்தியுள்ளார்... உடனே பலரின் முன்னிலையில்... "தட்டி உண்ணும் செட்டி " என்று கூறிவிட்டார்.
இதனால் கடுப்பாகிப்போன செட்டியார்... வழக்குத்தொடுத்தார்....
நீதிபதி விசாரித்த போது...
யாழ்ப்பாணத்தில் தட்டிக்கு (வீட்டின் குறிப்பிட்ட ஓர் பகுதி) பின்னால் இருந்தே, சாப்பிடுவது வழக்கம்... அதைத்தான் தட்டிக்கு பின்னால் இருந்து உணவருந்தும் செட்டியார் என்பதை அப்படி சொன்னேன் என்று கூறி... வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தார்.
சம்பவம் 03 :
ஒரு கலை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது... அங்கு விளம்பர பலகையில்... "கதிரை 2 ரூபா"... எனப்போடப்பட்டிருந்ததாம்... இவர் அதைக்காட்டி இது தவறு "கதிரைக்கு 2 ரூபா" என்று வரவேண்டும் என்று போட சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இவரும் 2 ரூபா கொடுத்து டிக்கட் எடுத்துவிட்டு, பாதி நிகழ்ச்சியின் போதே கதிரையுடன் சென்றுவிட்டார்... பின்னர், வழமை போலவே வழக்கில் தவறு திருத்தப்பட்டது.
சம்பவம் 04 :
ஒரு முறை ஏதோ மனக்குழப்பத்தில் வந்துகொண்டிருந்தபோது... அவரின் முன்னால்... கிறிஸ்தவ சகோதரிகள் வந்திருக்கின்றனர்... அவர்களைப்பார்த்து "தேவடியாட்கள் போகிறார்கள்" என்று சொல்லிவிட்டார்.
உடனே இந்த சம்பவம்... நீதிமன்றத்துக்கு வந்தது...
நீதிபதி கேட்ட போது...
தான் தவறாக ஒன்றுமே சொல்லவில்லை... தேவனுக்கு அடியார்களாக இருப்பதால்... தேவ அடியாட்கள் என்றே சொன்னன் என்று கூறி நுட்பமாக வழக்கை திசை திருப்பினார்.
சம்பவம் 05 :
இவ்வாறு அடிக்கடி வழக்குக்களை திசை திருப்புவதால்... ஒரு முறை நீதிபதி... இனி உங்கட தலை கறுப்பு தெரியக்கூடாது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
அடுத்த முறை கோட்டுக்கு செல்லும் போது... தலையில் சிவப்பு மண் சட்டியை போட்டுகொண்டு போய்... நீதி பதிவிட்ட தமிழ் பிழையை சுட்டிக்காட்டினார்.
------------------------------------------------------------------------------------------
இவ்வாறு பல சுவாரஷ்யமான சம்பவங்கள் இருக்கின்றன.. நான் இங்கு எனக்கு உறுதியாக தெரிந்த 5 சம்பவங்களை குறிப்பிட்டுள்ளேன்.
இவரின் வசாவிலான் வேலுப்பிள்ளை வித்தியாசாலை மீண்டும் இயங்க ஆரம்பித்திருகிறதாம். :)
------------------------------------------------------------------------------------------
Total Pageviews
Saturday, 12 February 2011
Friday, 11 February 2011
மொழிகளும்... தமிழ் மொழிச்சிறப்பும்... :)
-------------------------------------------------------------------------------------------
உலகம் முழுவதும் தற்போது ஏறத்தாழ 6700 மொழிகள் பேசப்பட்டு வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இது 100% உண்மையான தகவல் என உறுதிப்படுத்த முடிவதில்லை... காரணம், எழுத்துருவற்ற பல மொழிப்பாவனைகள் இருக்கின்றமையாகும்.
உலகின் பல பாகங்களிலும் ஆங்கிலம் முதன்மையாக பேசப்படுகின்றது... அடுத்த இடத்தை பிரென்ச் பெற்றுள்ளது... இவை பல நாடுகளில் அரசகரும மொழியாக திகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. எனினும்... சீனமொழியே அதிகமானோரால் பேசப்படும் மொழியாக இருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையில்... இங்கில்ஸ், அரபு, சீனம் (மண்டரின்), ஸ்பானிஷ், ஃப்ரென்ச், ரஷய்ன் போன்ற 6 மொழிகளும் அலுவலக மொழிகளாக உள்ளன.
எனினும் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையை கணிப்பிடும் போது சில சிக்கல்கள் இருந்து வருகின்றன.
குறிப்பாக... பலர் பேசும் மொழிவேறாகவும்... தாய் மொழியை வேறாகவும் கொண்டிருப்பதால், எந்த வர்க்கத்தில் சேர்ப்பது என்பதில் குழப்பம் இருக்கிறது.
அதிகமானோரால் பேசப்படும் 20 மொழிகள் இவைதான்...
மாண்டரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்
ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்
ஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்
வங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்
ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்
போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்
ரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்
ஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்
ஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்
பிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்
வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்
ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்
கொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்
வியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்
தெலுங்கு - இந்தியா - 66+ மில்லியன்
யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்
மராட்டி - இந்தியா - 64+ மில்லியன்
தமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 63+ மில்லியன்
துருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்
உருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்
18வது மொழியாக எமது தமிழ் மொழியுள்ளது... இனி அதன் முக்கிய சிறப்புக்களை கொஞ்சம் பார்க்கலாம்...
தமிழ் திராவிட மொழிகளுள் முக்கியமான ஒரு மொழியாகும்... செம்மொழியாக்கப்பட்ட சிறப்பும் உடையது.
தென்னிந்தியா, இலங்கை, சிங்ப்பூர், மலேசியா, மொரிஸியஸ் நாடுகளில் வரலாற்று ரீதியாக பேசப்பட்டுவரும் மொழியாக உள்ளது. மேலும் தற்போது... உலகின் பல்வேறு நாடுகளில் கணிசமான அளவில் தமிழ்மொழி பேசப்படுகிறது. ( நாடு இல்லாததால் நாடு நாடாக அலைவதும் ஒரு காரணமாக இருக்கலாம்... lol :P )
சமஸ்கிரத எழுத்துக்கள் தமிழிலும் பயண்படுத்தப்படுவதனாலும்... வேறு சில காரணங்களாலும், தமிழ் மொழியானது சமஸ்கிரத மொழியிலிருந்தே தோன்றியது என்ற கருத்து உள்ளது. அது தவறான கருத்தாகும்... தமிழ்மொழியின் குழூகுக்குறியாகவே சமஸ்கிரதம் இருந்ததாக சான்றுகள் உள்ளன. ( லெமூரிய பதிவை பார்க்கவும் மேலதிக விளக்கத்துக்கு... )
2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளும், ஆத்தி சூடியும் கூட... இன்றும் புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளது மொழி நடை நீண்டகாலமாக குறிகிய மாற்றத்தையே அடைந்திருப்பதைக்காட்டுகின்றது.
இவ்வாறான இலக்கிய பேணல்கல் வேற்று மொழிகளில் குறைவானதாகவே உள்ளது.
( திருக்குறள் போன்றவை இலக்கிய நடையில் எழுதப்படாமல்... அக்கால பேச்சு நடையிலேயே எழுதப்பட்டும் இருக்கலாம்... அவை காலத்தால் இலக்கியமானதாகி இருக்க வாய்ப்புள்ளது.
எனினும், நீண்டகாலமாக குறுகிய மாற்றம் அடைந்ததாலோ என்னவோ... இன்று தமிழை தாய்மொழியாக கொண்டபோதும்.... அதை பேசுவதில் தயக்கம் காட்டுகின்றனர் பலர்... (இது ஒரு தனிப்பதிவாகவே எழுத வேண்டிய விசயம். ) )
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 100 000 கல்வெட்டுக்களில் 55 000 கல்வெட்டுக்களுக்குமேல் தமிழில் எழுதப்பட்டவை.
பிராக்மி எழுத்துக்களுடன் நெருக்கமான தொடர்பைக்கொண்டு எழுதப்பட்டுள்ளவையே அதிகம்.. :)
தமிழ் இலக்கியங்கள் நீண்டகாலமாக நிலைத்து நிண்டமைக்கு...
ஓலைச்சுவடிகளில் எழுதி... காலம் காலமாக பிரதியெடுத்து வந்தமையும்... வாய் மொழிமூலமாக அனைத்து இலக்கியங்களையும் கற்பித்ததுமே காரணமாகும்.
த்மிழ் இலக்கணங்களைக்கூறும் தொல்காப்பியமானது கி.மு.200 ம் ஆண்டளவில் எழுதப்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கியதென கருதப்படுகிறது.
இவ்வளவு சிறப்புக்களை கொண்டிருந்தும்... தமிழ் மொழி முன்னோக்கிய வழர்ச்சிப்பாதையில் செல்வதாக கொள்ளமுடியாது... இன்னும் காலம் செல்ல செல்ல... தேய்வடைந்தே செல்லும்... காரணம்... இன்றைய உலக முறைக்கேற்ற போல் நாம் மாறவில்லை...
பணத்தை நோக்கமாக கொண்டே இணையத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது பல தளங்கள்... ஆனால், தமிழ் கல்வியை கற்பிக்கும் நோக்கம் இருப்பதில்லை.
அந்த குறையை போக்க வேண்டும் முதலில்... அப்போது தான் தமிழ் அழிவை தாமதப்படுத்தலாம்... :)
உலகம் முழுவதும் தற்போது ஏறத்தாழ 6700 மொழிகள் பேசப்பட்டு வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இது 100% உண்மையான தகவல் என உறுதிப்படுத்த முடிவதில்லை... காரணம், எழுத்துருவற்ற பல மொழிப்பாவனைகள் இருக்கின்றமையாகும்.
உலகின் பல பாகங்களிலும் ஆங்கிலம் முதன்மையாக பேசப்படுகின்றது... அடுத்த இடத்தை பிரென்ச் பெற்றுள்ளது... இவை பல நாடுகளில் அரசகரும மொழியாக திகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. எனினும்... சீனமொழியே அதிகமானோரால் பேசப்படும் மொழியாக இருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையில்... இங்கில்ஸ், அரபு, சீனம் (மண்டரின்), ஸ்பானிஷ், ஃப்ரென்ச், ரஷய்ன் போன்ற 6 மொழிகளும் அலுவலக மொழிகளாக உள்ளன.
எனினும் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையை கணிப்பிடும் போது சில சிக்கல்கள் இருந்து வருகின்றன.
குறிப்பாக... பலர் பேசும் மொழிவேறாகவும்... தாய் மொழியை வேறாகவும் கொண்டிருப்பதால், எந்த வர்க்கத்தில் சேர்ப்பது என்பதில் குழப்பம் இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------
அதிகமானோரால் பேசப்படும் 20 மொழிகள் இவைதான்...
மாண்டரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்
ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்
ஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்
வங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்
ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்
போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்
ரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்
ஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்
ஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்
பிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்
வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்
ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்
கொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்
வியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்
தெலுங்கு - இந்தியா - 66+ மில்லியன்
யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்
மராட்டி - இந்தியா - 64+ மில்லியன்
தமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 63+ மில்லியன்
துருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்
உருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்
-------------------------------------------------------------------------------------------
18வது மொழியாக எமது தமிழ் மொழியுள்ளது... இனி அதன் முக்கிய சிறப்புக்களை கொஞ்சம் பார்க்கலாம்...
தமிழ் திராவிட மொழிகளுள் முக்கியமான ஒரு மொழியாகும்... செம்மொழியாக்கப்பட்ட சிறப்பும் உடையது.
தென்னிந்தியா, இலங்கை, சிங்ப்பூர், மலேசியா, மொரிஸியஸ் நாடுகளில் வரலாற்று ரீதியாக பேசப்பட்டுவரும் மொழியாக உள்ளது. மேலும் தற்போது... உலகின் பல்வேறு நாடுகளில் கணிசமான அளவில் தமிழ்மொழி பேசப்படுகிறது. ( நாடு இல்லாததால் நாடு நாடாக அலைவதும் ஒரு காரணமாக இருக்கலாம்... lol :P )
சமஸ்கிரத எழுத்துக்கள் தமிழிலும் பயண்படுத்தப்படுவதனாலும்... வேறு சில காரணங்களாலும், தமிழ் மொழியானது சமஸ்கிரத மொழியிலிருந்தே தோன்றியது என்ற கருத்து உள்ளது. அது தவறான கருத்தாகும்... தமிழ்மொழியின் குழூகுக்குறியாகவே சமஸ்கிரதம் இருந்ததாக சான்றுகள் உள்ளன. ( லெமூரிய பதிவை பார்க்கவும் மேலதிக விளக்கத்துக்கு... )
2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளும், ஆத்தி சூடியும் கூட... இன்றும் புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளது மொழி நடை நீண்டகாலமாக குறிகிய மாற்றத்தையே அடைந்திருப்பதைக்காட்டுகின்றது.
இவ்வாறான இலக்கிய பேணல்கல் வேற்று மொழிகளில் குறைவானதாகவே உள்ளது.
( திருக்குறள் போன்றவை இலக்கிய நடையில் எழுதப்படாமல்... அக்கால பேச்சு நடையிலேயே எழுதப்பட்டும் இருக்கலாம்... அவை காலத்தால் இலக்கியமானதாகி இருக்க வாய்ப்புள்ளது.
எனினும், நீண்டகாலமாக குறுகிய மாற்றம் அடைந்ததாலோ என்னவோ... இன்று தமிழை தாய்மொழியாக கொண்டபோதும்.... அதை பேசுவதில் தயக்கம் காட்டுகின்றனர் பலர்... (இது ஒரு தனிப்பதிவாகவே எழுத வேண்டிய விசயம். ) )
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 100 000 கல்வெட்டுக்களில் 55 000 கல்வெட்டுக்களுக்குமேல் தமிழில் எழுதப்பட்டவை.
பிராக்மி எழுத்துக்களுடன் நெருக்கமான தொடர்பைக்கொண்டு எழுதப்பட்டுள்ளவையே அதிகம்.. :)
தமிழ் இலக்கியங்கள் நீண்டகாலமாக நிலைத்து நிண்டமைக்கு...
ஓலைச்சுவடிகளில் எழுதி... காலம் காலமாக பிரதியெடுத்து வந்தமையும்... வாய் மொழிமூலமாக அனைத்து இலக்கியங்களையும் கற்பித்ததுமே காரணமாகும்.
த்மிழ் இலக்கணங்களைக்கூறும் தொல்காப்பியமானது கி.மு.200 ம் ஆண்டளவில் எழுதப்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கியதென கருதப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------
இவ்வளவு சிறப்புக்களை கொண்டிருந்தும்... தமிழ் மொழி முன்னோக்கிய வழர்ச்சிப்பாதையில் செல்வதாக கொள்ளமுடியாது... இன்னும் காலம் செல்ல செல்ல... தேய்வடைந்தே செல்லும்... காரணம்... இன்றைய உலக முறைக்கேற்ற போல் நாம் மாறவில்லை...
பணத்தை நோக்கமாக கொண்டே இணையத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது பல தளங்கள்... ஆனால், தமிழ் கல்வியை கற்பிக்கும் நோக்கம் இருப்பதில்லை.
அந்த குறையை போக்க வேண்டும் முதலில்... அப்போது தான் தமிழ் அழிவை தாமதப்படுத்தலாம்... :)
-------------------------------------------------------------------------------------------
Wednesday, 9 February 2011
பனி மனிதன்... (மர்ம குரங்கு மனிதர்கள்? ) (01)
-----------------------------------------------------------------------------------------
ஒரு மாத இடைவெளியின் பின்னர், மீண்டும் பதிவெழுதவுள்ளேன்... ஜனவரியில் 2 பதிவுகள் மட்டுமே இட முடிந்தது... இனி வழமைபோல் மாதாந்தம் 10 இக்கு மேற்பட்ட பதிவுகளை எழுத முடியும்.
ஏலியன்ஸ்,லெமூரியா, மார்ஸ் போன்ற பல குழப்பமான தலைப்புக்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்...
அதே போல் இன்று, நாம் அனைவருக்கும் பழக்கப்பட்ட "பனி மனிதன்" சம்பந்தமாக நான் அறிந்து கொண்ட தகவல்களையும் எனது ஊகங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... :)
சிறு வயதாக இருக்கும் போது... இந்த பனிமனிதர்கள் சம்பந்தமாக கேட்டு இருக்கிறேன்... இமைய மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும், சுமார் 9 அடி உயரமுள்ள இரண்டு கால்களில் நடக்கும் உருவங்கள் என அறிந்திருந்தேன்.
இவர்களை பெரிதாக எவரும் காணவில்லை எனவும். ஆனால், இந்த உருவங்களின் காலடையாலங்களை பலர் பார்த்திருப்பதாகவும் கூறினார்கள்.
அதேவேளை, காலடையாலங்கள் பெரிதாக இருப்பதற்கான காரணமாக நான் கருதியது, பனிப்படிவில் காலடையாலத்தை வைத்து செல்லும் போது... பனி உருகலால் பெரிதாகி இருக்கும் என பின்னர் நினத்தேன்.
இனி மேலதிகமா உறுதியாக அறிந்துகொண்ட தகவல்களையும் சம்பவங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்...
இந்த உருவங்கள் கட்டுக்கதையாக இருக்க முடியாது என்பதற்கு காரணம், இவை சம்பந்தமான தகவல்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் வரவில்லை. உலகின் பல பாகங்களில் இருந்தும் அந்த உருவங்களைப்பார்த்ததாக தகவல்கள் உள்ளனன்.
அந்த வகையில், இமையமலைப்பகுதியில் இந்த உருவங்களை எட்டி (yeti) அல்லது பனிமனிதன் என்றும் அடையாளப்படுத்துகிறார்கள். கனடாவில் ஷஸ்குவாட்ச் (Sasquatchi) என்றும் அமேசன் பகுதிகளில் மெப்பிங்குவாரி (Mapinguari) என்றும் கூறுகிறார்கள்.
1900 ஆண்டுகளிலேயே இந்த உருவங்கள் தொடர்பான முதலாவது அதிகார பூர்வமான பத்திரிகை வெளியீடு இடம் பெற்றது. கொலம்பியா விக்டோரியா நகரப்பத்திரிகை ஒன்று "குரங்கு மனிதன்" என்ற தலைப்பில்...
நேரடியாக அந்த உருவங்களைக்கண்டவர்கள் என கூறியவர்களிடம் இருந்து தகவல்களைப்பெற்று வெளியிட்டது.
அதன் படி சுமார் 8 அடிக்கு மேலான உயர்முள்ளதாகவும்... 225 KG நிறை இருக்குமெனவும்... உடல் முழுவதும் முடி உடையதாகவும் அந்த உருவம் வர்ணிக்கப்பட்டது.
1951 ஆம் ஆண்டு இமயமலையில் மலையேற சென்றிருந்த எரிக்ஹிப்டன் உறை பனியில் மிகப்பெரிய கால்த்தடங்களை அவதானித்து புகைப்படமெடுத்தார். அது "மர்மமான பனிமனிதனின் கால்த்தடங்கள்" என்ற பெயரில் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனினும் சில விஞ்ஞான உலகமும், அறிவியளாலர்களும்... இதை மறுக்கின்றனர்... அதற்கு அவர்கள் கூறும் காரணம்...
ஒரு உயிரினம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அவைகள் குடும்பமாக வாழ வேண்டும்... அப்படி வாழ்ந்தால்த்தான் நிலைக்க முடியும். எனினும், இதுவரை எவருமே.. பனிமனிதர்களின் குட்டிகளை கண்டதாக கூறியிருக்கவில்லை என்பது ஒரு வாதம்.
( எனினும் இதற்கு எனது கருத்துப்படி, அவ்வாறு சிறு பனிமனித குட்டிகளை கண்டிருப்பின்... காண்பவர்கள் மனிதக்குரங்கு அல்லது குரங்கினம் என அலட்சியம் செய்திருக்கக்கூடும்... காரணம், உடலமைப்பு ஒரே போன்றதாகவே வர்ணிக்கப்பட்டது கண்டவர்களால். :) )
அடுத்தது... எந்த உயிரினமும் ஒரு நாள் மரணத்தை சந்திக்கும்... அப்படி பனி மனிதர்களில் உடல்கள் இது வரை கிடைத்ததில்லை... எலும்புக்கூடுகள் கூட கிடைத்ததில்லை.
( சில வேளைகளில்... மனிதர்களைப்போல் புதைக்கும் அல்லது எரிக்கும் முறைகள் இருக்கலாம்.... ஆனால், அந்த உருவங்கள் அந்தளவுக்கு அறிவுள்ளதாக அறியப்படவில்லை. மேலும், பனிப்பகுதிகளில் இந்த உயிரினங்களைத்தேடும் பணிகள் பெரிய அளவில் இடம் பெறவில்லை... அதனாலும்... எலும்புகள் கிடைக்காமல் போய் இருக்கலாம்.:) )
அடுத்ததாக... எந்த உயிரினமும் தாம் நடமாடும் இடத்தில், கேசங்களையும் இறந்த செல்களையும் விட்டுச்செல்லும்... ஆனால், பனி மனிதர்களின் எந்த அடையாளங்களும் கிடைக்கவில்லை.
இக்காரணங்கள் அனைத்தும் நிராகரிக்க நியாயமானதுதான்... எனினும்... இந்த அனைத்து வாதங்களையும் முறியடிக்கும் முகமாக ஒரு ஆதாரம் சிக்கியது... அது என்ன என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன். :)
ஒரு மாத இடைவெளியின் பின்னர், மீண்டும் பதிவெழுதவுள்ளேன்... ஜனவரியில் 2 பதிவுகள் மட்டுமே இட முடிந்தது... இனி வழமைபோல் மாதாந்தம் 10 இக்கு மேற்பட்ட பதிவுகளை எழுத முடியும்.
ஏலியன்ஸ்,லெமூரியா, மார்ஸ் போன்ற பல குழப்பமான தலைப்புக்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்...
அதே போல் இன்று, நாம் அனைவருக்கும் பழக்கப்பட்ட "பனி மனிதன்" சம்பந்தமாக நான் அறிந்து கொண்ட தகவல்களையும் எனது ஊகங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... :)
-----------------------------------------------------------------------------------------
சிறு வயதாக இருக்கும் போது... இந்த பனிமனிதர்கள் சம்பந்தமாக கேட்டு இருக்கிறேன்... இமைய மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும், சுமார் 9 அடி உயரமுள்ள இரண்டு கால்களில் நடக்கும் உருவங்கள் என அறிந்திருந்தேன்.
இவர்களை பெரிதாக எவரும் காணவில்லை எனவும். ஆனால், இந்த உருவங்களின் காலடையாலங்களை பலர் பார்த்திருப்பதாகவும் கூறினார்கள்.
அதேவேளை, காலடையாலங்கள் பெரிதாக இருப்பதற்கான காரணமாக நான் கருதியது, பனிப்படிவில் காலடையாலத்தை வைத்து செல்லும் போது... பனி உருகலால் பெரிதாகி இருக்கும் என பின்னர் நினத்தேன்.
இனி மேலதிகமா உறுதியாக அறிந்துகொண்ட தகவல்களையும் சம்பவங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்...
இந்த உருவங்கள் கட்டுக்கதையாக இருக்க முடியாது என்பதற்கு காரணம், இவை சம்பந்தமான தகவல்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் வரவில்லை. உலகின் பல பாகங்களில் இருந்தும் அந்த உருவங்களைப்பார்த்ததாக தகவல்கள் உள்ளனன்.
அந்த வகையில், இமையமலைப்பகுதியில் இந்த உருவங்களை எட்டி (yeti) அல்லது பனிமனிதன் என்றும் அடையாளப்படுத்துகிறார்கள். கனடாவில் ஷஸ்குவாட்ச் (Sasquatchi) என்றும் அமேசன் பகுதிகளில் மெப்பிங்குவாரி (Mapinguari) என்றும் கூறுகிறார்கள்.
1900 ஆண்டுகளிலேயே இந்த உருவங்கள் தொடர்பான முதலாவது அதிகார பூர்வமான பத்திரிகை வெளியீடு இடம் பெற்றது. கொலம்பியா விக்டோரியா நகரப்பத்திரிகை ஒன்று "குரங்கு மனிதன்" என்ற தலைப்பில்...
நேரடியாக அந்த உருவங்களைக்கண்டவர்கள் என கூறியவர்களிடம் இருந்து தகவல்களைப்பெற்று வெளியிட்டது.
அதன் படி சுமார் 8 அடிக்கு மேலான உயர்முள்ளதாகவும்... 225 KG நிறை இருக்குமெனவும்... உடல் முழுவதும் முடி உடையதாகவும் அந்த உருவம் வர்ணிக்கப்பட்டது.
1951 ஆம் ஆண்டு இமயமலையில் மலையேற சென்றிருந்த எரிக்ஹிப்டன் உறை பனியில் மிகப்பெரிய கால்த்தடங்களை அவதானித்து புகைப்படமெடுத்தார். அது "மர்மமான பனிமனிதனின் கால்த்தடங்கள்" என்ற பெயரில் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
-----------------------------------------------------------------------------------------
எனினும் சில விஞ்ஞான உலகமும், அறிவியளாலர்களும்... இதை மறுக்கின்றனர்... அதற்கு அவர்கள் கூறும் காரணம்...
ஒரு உயிரினம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அவைகள் குடும்பமாக வாழ வேண்டும்... அப்படி வாழ்ந்தால்த்தான் நிலைக்க முடியும். எனினும், இதுவரை எவருமே.. பனிமனிதர்களின் குட்டிகளை கண்டதாக கூறியிருக்கவில்லை என்பது ஒரு வாதம்.
( எனினும் இதற்கு எனது கருத்துப்படி, அவ்வாறு சிறு பனிமனித குட்டிகளை கண்டிருப்பின்... காண்பவர்கள் மனிதக்குரங்கு அல்லது குரங்கினம் என அலட்சியம் செய்திருக்கக்கூடும்... காரணம், உடலமைப்பு ஒரே போன்றதாகவே வர்ணிக்கப்பட்டது கண்டவர்களால். :) )
அடுத்தது... எந்த உயிரினமும் ஒரு நாள் மரணத்தை சந்திக்கும்... அப்படி பனி மனிதர்களில் உடல்கள் இது வரை கிடைத்ததில்லை... எலும்புக்கூடுகள் கூட கிடைத்ததில்லை.
( சில வேளைகளில்... மனிதர்களைப்போல் புதைக்கும் அல்லது எரிக்கும் முறைகள் இருக்கலாம்.... ஆனால், அந்த உருவங்கள் அந்தளவுக்கு அறிவுள்ளதாக அறியப்படவில்லை. மேலும், பனிப்பகுதிகளில் இந்த உயிரினங்களைத்தேடும் பணிகள் பெரிய அளவில் இடம் பெறவில்லை... அதனாலும்... எலும்புகள் கிடைக்காமல் போய் இருக்கலாம்.:) )
அடுத்ததாக... எந்த உயிரினமும் தாம் நடமாடும் இடத்தில், கேசங்களையும் இறந்த செல்களையும் விட்டுச்செல்லும்... ஆனால், பனி மனிதர்களின் எந்த அடையாளங்களும் கிடைக்கவில்லை.
இக்காரணங்கள் அனைத்தும் நிராகரிக்க நியாயமானதுதான்... எனினும்... இந்த அனைத்து வாதங்களையும் முறியடிக்கும் முகமாக ஒரு ஆதாரம் சிக்கியது... அது என்ன என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன். :)
-----------------------------------------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)









