Total Pageviews

Tuesday, 10 August 2010

"கை"... என்றால் இது தான் "கை"... (படங்கள் :) )


------------------------------------------------------------------------------

இதை பாராட்டாம வேற எதை பாராட்டுறது.... சுப்பர்...
------------------------------------------------------------------------------




















































































































































































































------------------------------------------------------------------------------

Thursday, 5 August 2010

ஏலியன்ஸ்... பேய்... கடவுள்... (தியரி ஒஃப் ரிலேட்டிவிடி??? )... 08)

தவறை திருத்திட்டேன்... :)
---------------------------------------------------------------------------------------
நீண்ட காலமாக எனக்கு குழப்பமாக இருந்துவந்த... ஒளியின் வேகத்திலான காலப்பயணம் (தியரி ஒஃப் ரிலேட்டிவிடி சார்பானது.) தொடர்பான சில தகவல்களை வாசித்தேன்... கொஞ்சம் தெளிவாகி இருக்கு...
ஏற்கனவே, நான் இந்த வேகம் சம்பந்தமாக எழுதிய போது... எஸ்.எம்.எஸ் என்பவர்... எனதும், சந்துரு என்பவரது கருத்துக்கு மாற்றாக ஒரு கருத்து சொல்லி இருந்தார். அவர் சொன்னது சரியானதாக பட்டதால்... பிறகு அவருக்கு பதில் தருவதாக கூறியிருந்தேன்... இன்று அந்த வேகம் தொடர்பாக நான் விளங்கியதை இயன்ற வரை விளக்கமாக எழுத ட்ரை பண்ணுறேன்...
---------------------------------------------------------------------------------------
நான் முதல் கூறியதன் படி...
ஒளியின் வேகத்தை தாண்டும் போது இறந்த காலத்தை அடையலாம் என்று கூறியிருந்தேன். அது உண்மை. ஆனால், ஒளியின் வேகத்தை தாண்டாமல் அண்மிப்பது தொடர்பாக ஒன்றும் தெளிவாக எழுதி இருக்க வில்லை... ( காரணம், அப்போது எனக்கு அது தெரிந்திருக்க வில்லை...)
எஸ்.எம்.எஸ் என்பவரின் கருத்துப்படி... நாம் ஒளியின் வேகத்தில் பயணித்தால் எதிர்காலத்துக்குத்தான் செல்ல முடியும் என கூறியிருந்தார்... அதுவும் சரிதான்...
---------------------------------------------------------------------------------------
தியரி ஒஃப் ரிலேட்டிவிடி படி...

நாம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் போது... அதாவது... 3*10^8 ( 299 792 458 ) ஐ அண்மிக்கையில் நாம் எதிர்காலத்துக்கே போவோம்...

உதாரணத்துக்கு...
கால இயந்திரத்தில் (?) ஒரு லட்சம் மீற்றர்/செக்கன் வேகத்தில் நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்...
எமக்கு காலம் மெதுவாக நடை பெறும்... அதாவது... வெளியே இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் கடக்கின்றன என்றால், இயந்திரத்தினுள் இருக்கும் எமக்கு அது 1 ஆண்டாகவோ அல்லது 2 ஆண்டாகவோ இருக்கும். ( குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் கணித்துப்போடல )

அப்படி என்றால்... 2010 இல் நாம் பயணிக்கத்தொடங்கினால்... வெளியாட்களின்( பூமியின் கணக்குப்படி/கலண்டர் படி) ஆண்டுபடி 10 ஆண்டுகள் பயணித்தால் அவர்கள் 2020 ம் ஆண்டில் இருப்பார்கள். அப்போது எமக்கு 2012 ஆம் ஆண்டுதான். இப்போது நாங்கள் வாகனத்திலிருந்து இறங்கினால், நாம் 2020 இல் இறங்குவோம்... ( ஆனால், எமக்கு இரண்டு வருடங்கள்தான் ஓடி இருக்கும்... 21 வயதில் வெளிக்கிட்டிருந்தால் 23 வயது... வெளியாளுக்கு 31 வயது).
அதாவது... அது நமது எதிர்காலத்தில் நாம் இறங்கி இருப்போம்...
அப்போது நாம் காணும் வெளித்தோற்றம் அனைத்துமே... நமது எதிர்காலத்துக்குரியது...

( இங்கு நாம் அதிக வேகத்தில் பயணிக்கும் போது... எமது உருவம் வெளியாட்களுக்குத்தெரியாமல் போகும். காரணம்... அவர்களின் நிகழ்காலத்தில் நாங்கள் இல்லாமல் இருப்போம். அதாவது, காலம் ஓடிக்கொண்டிருக்கும்... நாங்கள் காலத்துடன் ஓடாது சற்று மெதுவாக ஓடிட்டிருப்போம்....
ஏற்கனவே, நான் சொன்னதில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது... இலத்திரன்,புரோத்திரன் போன்ற இயல்பை பெறுவதால் துணிக்கைத்தன்மையாகி மறைவோம் என்று சொல்லி இருந்தேன்... அதுவும் சரிதானே???? :) )
---------------------------------------------------------------------------------------
 சரி...
அப்ப இறந்த காலத்துக்கு போவது எப்படி...

அதுவும் இதே போன்ற கால இயந்திரத்தில்தான்... ஆனால், அந்த இயந்திரத்தின் வேகம் ஒளியின் வேகத்தை கட்டாயம் மிஞ்சியிருக்க வேண்டும்.
அப்படி மிஞ்சும் பட்சத்தில் நாங்கள் இறந்தகாலத்துக்கு போகலாம்...
உதாரணமாக...
நாம் 400 000 000 மீற்றர்/செக்கனில் 2010 பயணிக்க ஆரம்பிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்... ஒரு 10 ஆண்டுகளில்...
பயணிக்கும் நாங்கள் 2008,2009 அப்பிடி நாம் ஆரம்பித்த காலத்தை விட குறைவான காலத்துக்கு சென்றிருப்போம்... வெளியாட்கள் 2020 க்கு போயிருப்பார்கள்.

நாம் வேகத்தை எவ்வ‌ளவு கூட்டினாலும்... எம்மால் இறந்த காலத்துக்கு உடனடியாக பாய்ந்து செல்ல முடியாது... ஒவ்வொரு ஆண்டுகளாக/ நாட்களாக/செக்கன்களாகத்தான் பின்னோக்கி போக முடியும்...
ஒவ்வொரு சம்பவமும் இயந்திரத்தின் யன்னலூடாக ஒரு திரையில் ஓடும் காட்சிபோல் ஓடுமாம்...
இந்த பின்னோக்கி போகும் வேகம்... இயந்திரத்தின் வேகத்தில் சார்ந்திருக்கும்...

( ஒவ்வொரு சம்பவமும் காட்சி போல் மாறும்... என்பது சரியா இருக்கலாம்... ஆனால், எங்களால் உணர முடியும் என்று நினைக்கவில்லை... காரணம்... வேகமாக காட்சிகள் மாறும்... காட்சிகள் என்பது நிறங்களால் காணக்கூடியது... நிறங்கள் வேகமாம மாறும் போது வெள்ளையாகவே தோன்றும்... ஆகவே, நமக்கு வெள்ளையாகத்தான் வெளியே தெரியும்... :) )

இதெல்லாம் சரி...  நாம் இந்த வேகத்தை பயண்படுத்தி பயணித்தோமென்றால்... இறந்தகாலத்துக்கு சென்று பார்க்க முடியும்... நம்ம தாத்தா... கொள்ளுத்தாத்தா... அப்டினு எல்லாரையும் பார்த்துட்டு வரலாம்...
ஆனால்...
ஜோசித்து பாருங்கள்... இது சாத்தியமானால்... பல குழப்பங்கள் ஏற்படும்...

இன்று பதிவில் முக்கியமான கொள்கையை பார்தததாலும் (?)... பதிவு நீள்வதாலும்... நிறித்திடுறேன்...
---------------------------------------------------------------------------------------
அப்படி வேகத்தை அடைந்தால்... என்ன என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பார்ப்போம்...
இப்போது பலருக்கு விளங்கி இருக்கும்.., ஏற்கனவே போன பதிவி குறிப்பிட்ட சம்பவத்தில்... விமானத்தை ஏன் பிந்தொடர்ந்தார்கள் என்பதும்... அந்த டுவின்ஸ்டவர்ஸின் பின் புலத்தில் ஏன் அந்த பறக்கும்தட்டு (இது உண்மை என்று உறிதியில்லை) இருந்தது என்பதும் விளங்கி இருக்கும்... விளங்காதவர்கள்... அடுத்த பதிவில் விளங்கிகொள்ளலாம்... :)
---------------------------------------------------------------------------------------

Monday, 2 August 2010

தொப்பி வியாபாரியும் முயல் ஆமையும்... 2010 ( நகைக்க... )

---------------------------------------------------------------------------------------
இன்டைக்கு நான் உங்களுக்கு கதை சொல்லப்போறேன்... ஒழுங்கா ஃபுல்லா கேக்கனும் ஓ.கே வா?

ஓ.கே ... :D
---------------------------------------------------------------------------------------
ஒரு தொப்பி வியாபாரி...
ஊரெல்லாம் தொப்பி வித்திட்டு வந்தார்... நீண்ட நேரமா வெயில் இல்லாத நேரத்தில கூவி...கூவி... தொப்பி வித்ததால கழைப்படைந்துவிட்டார்... இளைப்பாறுவதற்காக ஒரு இடம் தேடினார்... வழமை மாதிரியே வயல் வெளியில தூரத்தில ஒரு பெரீரீரீய மரம்... உடனே இளைப்பாறுவதற்காக அந்த மரத்தை நோக்கி சென்றார்... தூரத்திலிருந்து பார்க்கும் போதே... அந்த மரத்தில கனக்க குரங்கு தாவி... தாவி... விளையாடிட்டு இருக்கிறதை கண்டார்...
ஹீ...ஹீ... இவருக்கு தன்ர தாத்தா சொன்னது நினைவுக்கு வந்துட்டுது... அதை நினைத்து சிரிச்சுக்கொண்டே மரத்தடியை அடைந்தார்.
அங்கு எதுக்கும் அலேர்ட்டா இருக்கனும் என்கிறதுக்காக... தான் கொண்டுவந்த தொப்பி மூட்டைகளை அடுக்கி விட்டு அதுக்கு மேலே ஏறிப்படுத்துக்கொண்டார்.

அதுவரைக்கும் கணக்கெடுகாம இருந்த குரங்குகளுக்கு இப்படி இவர் செய்தது செம கடுப்பு...
உடனே ஒரு குரங்கு எங்கேயோ ஓடிப்போச்சு....

இவர் நல்லா தூங்கிட்டு இருந்தார்... அதுக்குள்ள மனைவிகூட கனவுவேற...
இப்போது... " மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க.... மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க...." என்று ஒரு சத்தம்...
"இங்கதான்டி இருக்கன் தங்கம்... நீ எங்கம்மா இருக்க??? " என்றுகிட்டே எழும்பிவயலை நோக்கி போனார்...

எங்க தங்கத்தை காணமே என்று ஜோசிச்சப்பதான்... தான் தொப்பி மூட்டையை விட்டுட்டு வந்தது நினைவுக்கு வந்தது...
திரும்பி பார்க்க கப்ல எல்லா தொப்பிகளையும் குரங்குகள் ஆட்டையை போட்டுட்டுதுகள்...

இவருக்கு அதிர்ச்சி... ஆனால், இது ஏற்கனவே தாத்தாக்கு நடந்த ஸீன்தானே... சோ... தன்ர தொப்பியை கழட்டி குரங்குகளை நோக்கி எறிந்தார்...
உடனே ஒரு குட்டி குரங்கு இறங்கி வந்து... தொப்பியை எடுத்துக்கொண்டு வியாபாரிட தோள்ள பாஞ்சு ஏறி... காதை பிடித்து... "எங்களுக்கும் தாத்தா இருக்கு... :) " என்று சொல்லிட்டு... "பாவமா இருக்கு... இந்த தொப்பியை வச்சுக்கோ..." என்று சொல்லிட்டு...
இறங்கி டீக்கடையை நோக்கி போச்சு... ஏற்கனவே, அங்க ஆட்டையப்போட்ட டெலிஃபோன்னை கொண்டுபோய் வைக்க...
போகும் போது..." மாமோய்... நீங்க எங்க இருக்கிங்க..." என்ற ரிங்டோன் வேற...

---------------------------------------------------------------------------------------

Anonymous  : டேய் இந்த கதை ஏற்கனவே வந்துட்டுது... :@

வளாகம் : இன்னொன்று இருக்குங்க ஐயா... :P
---------------------------------------------------------------------------------------

நாட்டுலதான் இந்த கூத்து என்றால்....

---------------------------------------------------------------------------------------


காட்டுல...
முயலுக்கும் ஆமைக்கும் கேமாகி... முடிவா... ரேஸ்ல ஜெயிக்கிறவன் தான் வெற்றியாளர் என்கிற முடிவுக்கு வந்துதுகள்...

போட்டி ஆரம்பமாச்சு...
போட்டி மத்தியஸ்தர் நெட்டி முறத்தார்...
முயல் பாஞ்சடித்துக்கொண்டு ஓடிச்சு... ஆமையால முடியல மெல்லமா ஊர்ந்து...ஊர்ந்து... போச்சு... மனதுக்குள்ள தன்ர தாத்தா சொன்ன ஃபிலாஸ்பாக்கை நினைத்துக்கொண்டு....
கன நேரமா ஆமையும் நிமிர்ந்து பார்க்கிது... முயல காணவே இல்லை...
நீண்ட நேரத்துக்கு பின்னுக்கு... முயல் மரத்தடில படுத்துக்கிடக்கிற மாதிரி தெரிந்துது ஆமைக்கு...

உடனே... புத்துயிர் வந்த மாதிரி..." இந்த கேன முயல் கூட்டம் இன்னுமா மாறல... " என்று சொல்லிக்கொண்டு மரத்துக்கு கிட்ட வந்திச்சு...
முயலை நைஸா முந்திக்கொண்டு திரும்பி பார்த்தது... முயல், அடக்க முடியாத சிரிப்போட...
"அட கேனயனே... கழுத வயசாகியும்... இதெல்லாம் ஒரு கதைனு மினக்கட்டு வாசிச்சிட்டு இருக்காங்களே... அதை நினைக்கவே எனக்கு சிப்பு சிப்பா வருது.... எப்பிடிடா தூக்கம் வரும்..." :P என்று சொல்லிக்கொண்டே ஓடிப்போய் எல்லையைத்தொட்டு வெற்றி பெற்றது.

ஆமை : பார்த்திங்களா... இந்த முயல்கிட்ட நான் உங்களாலதான் தோத்தேன்... எனக்காக ஒரு வோட்டு போட்டுட்டு போங்க... என்ன... :D

---------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected